#காஞ்சிபுரம்
மகாகாளேஸ்வரர் ஆலயம்
காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயம் மேல் புறம் இந்த ஆலயம் உள்ளது. காஞ்சிபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளின் படி, ஸ்ரீகாளகஸ்த்தியில் வசித்த மகாகாளன் என்ற பாம்பரசன் ஈசன் இட்ட சாபம் நீங்க இங்கு வந்து வழிபட்டு இடர் நீங்கி சென்றார் என்பது புராணம்
முன் மண்டபம் அடுத்து உள்ள கருவரையில் நடுத்தர அளவில் லிங்க அமைப்பில் ஈசன் மகாகாளேஸ்வரர் உள்ளார். கருவறையின் சுவாமியுடன் ராகுவும் கேதுவும் சேர்ந்துள்ளது;
கருவரை சுற்றி நவகிரகங்களும் தங்கள் துணைவியர்களுடன் தனித்தனி சிற்றாலய சன்னதியுடன் சூழ்ந்து உள்ள அமைப்பு, வேறு எங்குமில்லாத அமைப்பு.
இத்துடன் விநாயகர் சண்டிகேஸ்வரர், வள்ளி தெய்வாணயுடன் சுப்பிரமணியர், திருமண தடையை நீக்கும், கல்யாணதுர்க்கை மற்றும் பைரவர்
தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.
சிறப்பு நாட்களில் ஹோமம் பரிகார பூசைகள் நடைபெறுகின்றன.
அருகில் ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் (ஆதி காமாட்சி) மற்றும் குமரக்கோட்டம் அமைந்துள்ளது.
நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment