Sunday, August 30, 2026

காஞ்சிபுரம்கைலாசநாதர் ஆலயம் 15.08.26

#காஞ்சிபுரம்
கைலாசநாதர் ஆலயம்
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் 8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மனால் (ராஜசிம்மன்) மணற்கற்களால் கட்டப்பட்ட பழமையான சிவன் கோயிலாகும். இது திராவிடக் கலைப்பாணியின் மிகச்சிறந்த தொடக்ககால வடிவமாகவும், சுற்றுச்சுவர்களில் பல சிறிய சன்னதிகள் மற்றும் அற்புதமான சிற்பங்களைக் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தலமாகவும் விளங்குகிறது. 
கோயிலின் சிறப்புகள்
காலம்: கி.பி. 700-ஆம் ஆண்டு வாக்கில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டது.
கட்டடக் கலை: முழுக்க முழுக்க மணற்கற்களாலும், அடித்தளம் மட்டும் கருங்கல்லாலும் ஆன தனித்துவமான அமைப்பு.
சிற்பங்கள்: சிவபெருமானின் பல்வேறு வடிவங்கள் மற்றும் சோமஸ்கந்தர் திருமேனி சுவர்களில் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.
அதிசயப் பாதை: மனித பிறப்பு மற்றும் இறப்புச் சுழற்சியைக் குறிக்கும் வகையில் சிறியதாக ஒரு சுற்றுப்பாதை உள்ளது.
 புனர் ஜனனி
கருவறையில் மூலவர் பதினாறு பட்டைகளுடன் லிங்கத்திருமேனியாக உள்ளார். கருவறையைச் சுற்றி அமைந்துள்ள குறுகிய திருச்சுற்று புனர்ஜனனி என்றழைக்கப்படுகிறது. அதன் உள் மற்றும் வெளி வாயில்கள் குறுகலாக இருந்து தரையில் படுத்தபடியே ஊர்ந்து சென்று மீளும்போது புனர்ஜென்மம் எடுத்த நினைவு மேலோங்கி நிற்கும். இதனைச் சுற்றி வந்தால் மறு பிறவி இல்லை என்று பொருளாகும். மூலவர் சன்னதி கிழக்கு பார்த்த நிலையில் உள்ளது.
பல்லவர் கால ஓவியங்கள்
பிரதான கோயிலிலும், அதைச் சுற்றிலும் உள்ள துணைக் கோயில்களிலும் சுமார் 1300 வருடங்களுக்கு மேற்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் உள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று சிவனுக்கும் பார்வதிக்கும் நடுவில் கந்தர் உள்ள காட்சியாகும். பொ.ஊ. 14 ஆம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசர் குமார கம்பணர் காலத்தில், பல்லவர் ஓவியங்கள் மீது புதிய ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவை ’இரு அடுக்கு ஓவியங்கள்’ எனப்படுகின்றன.
பட்டடக்கல்
இரண்டாம் விக்ரமாதித்தன் என்ற சாளுக்கிய மன்னன் பல்லவர்களை வென்று காஞ்சியைப் பிடித்தபொழுது (பொ.ஊ. 740) காஞ்சி நகரின் சிறந்த கலைஞர்களைப் கர்நாடகாவில் உள்ள பட்டடக்கலுக்கு கொண்டு சென்றார். அங்கு விருப்பாட்ஷா கோயிலைக் கட்டினார். அரசி லோகமாதேவியின் தெய்வமான விருப்பாட்ஷாவை அங்கு அமைத்தார். அக்கோயில், கைலாசநாதர் கோயிலுக்கும், அதைக்கட்டிய ராஜசிம்மனுக்கு அவருடைய எதிரி உருவாக்கிய நினைவுச்சின்னமாக இப்போதும் திகழ்கிறது. அக்கோயில் லோகமாதேவிசபுரம் என்றும் விருபார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

விழாக்கள்
தொல்பொருள் ஆய்வுத்துறையின் நிர்வாகத்தில் உள்ள இக்கோயிலில் தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன. மகாசிவராத்திரி இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
பல்லவ நாட்டின் பண்டைய தலைநகரம் என்ற சிறப்பைப் பெற்ற, சென்னையில் இருந்து சுமார் 45 மைல்கள் தூரத்தில் அமைந்துள்ள, காஞ்சிபுரத்தில், நகர மத்தியிலிருந்து ஏறத்தாழ ஒரு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. பெரிய காஞ்சிபுரம் புத்தேரி தெரு வழியாக சென்று சற்றுத் தொலைவிலுள்ள இக்கோயிலை அடையலாம்.

இக்கோயில் காலை 8.30 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தகவல் வலை தளங்கள் & விக்கிபீடியா 
நன்றி🙏
#மீள்தரிசனம்
15.08.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம் தொழுவது சாலவும் நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

திருவோத்தூர்வேதபுரீசுவரர் கோயில் 16.8.26

#திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும். தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ...