அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனுறை உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம் (திருத்துருத்தி).
அமைவிடம்: மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் குத்தாலம் உள்ளது.
குத்தாலம் (திருத்துருத்தி) உத்தவேதீஸ்வரர் கோயில், திருமணத் தடைகளை நீக்கும் புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலமாகும் (காவிரி தென்கரை 37-வது தலம்). சிவபெருமான் பார்வதியை மணந்த தலம், இங்கு சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவர் உத்தவேதீஸ்வரர் (சொன்னவாறு அறிவார்) என்றும், அம்மன் அரும்பன்ன வனமுலைநாயகி (பரிமள சுகந்தநாயகி) என்றும் அழைக்கப்படுகின்றனர்.
கோயில் சிறப்பம்சங்கள்:
திருமணத்தடை நீங்கும் தலம்: பார்வதி தேவி சிவனை மணக்க வேண்டி, இங்கு மணலில் லிங்கம் அமைத்து தவம் செய்த இடம்..திருமணத் தடைகள் நீங்க இங்கு வந்து வழிபடுவது சிறப்பு.
கோயில் அமைப்பு
ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால் அம்மன் சன்னதி முன் உத்தால மரம் தனி அமைப்புடன் அமைந்துள்ளது.
கொடிமரம், பலிபீடம், நந்தியைக் காணலாம். கொடிமரத்தில் கொடிமர விநாயகர் உள்ளார். நந்தியைக் கடந்து உள்ளே செல்லும்போது இடப்புறம் அம்மன் சன்னிதி உள்ளது. அதற்கடுத்து உள்ளே மகாலட்சுமி சன்னிதி, சபாநாயகர் சன்னிதிகள் உள்ளன. எதிரில் உற்சவமூர்த்திகள் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் அடிமுடிகாணா அண்ணலும், தட்சிணாமூர்த்தியும் உள்ளனர். கருவறை வெளிச்சுற்றில் நவக்கிரகம், மங்களசனீஸ்வரர், பைரவர், விசுவநாதர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், சூரியன் ஆகியோர் உள்ளனர். அருகே லிங்கத் திருமேனிகள் உள்ளன. அடுத்து 63 நாயன்மார்கள் உள்ளனர். திருச்சுற்றில் வலம் வரும்போது சண்டிகேஸ்வரர் சன்னிதி காணப்படுகிறது.
சுந்தரர் தோல் நோய் நீக்கியத்தலம்.
ஆலயம் வாயு மூலையில், அம்மன் சன்னதி பின்புறம், சுந்தரருக்கு மண்டபத்துடன் தனி சன்னதி உள்ளது. எதிரில் சிறிய தீர்த்தக்குளம் உள்ளது.
சிறப்பு பெயர்கள்: முற்காலத்தில் 'திருத்துருத்தி' என்று அழைக்கப்பட்டது. 'துருத்தி' என்றால் ஆற்றுக்கு நடுவில் உள்ள மேடான பகுதி.
வழிபாடு: இங்குள்ள விநாயகர் 'துணை வந்த விநாயகர்' என அழைக்கப்படுகிறார்.
இந்த ஆலயம் 1000 ஆண்டுகள் பழமையானது மற்றும் சோழர் காலத்தைச் சேர்ந்தது. இத்திருக்கோயில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர்ச் சோழ மன்னர்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.
தலபுராணம் வரலாறு: சிவபெருமான் பார்வதியை மணக்க கைலாயத்திலிருந்து புறப்படும்போது, உத்தால மர நிழலில் வந்ததாகவும், இங்கிருந்தே கைலாயம் சென்றதாகவும் வனமாக இருந்த காரணத்தினால் `உத்தாலம்’ என்று அழைக்கப்பட்ட பகுதி தற்போது குத்தாலம் என வழங்கப்படுகிறது. பூவுலகில் - பரத முனிவரின் தவச்சாலையில் வேள்வித் தீயிலிருந்து அவதரித்தாள். சிவச் சிந்தனையிலேயே வளர்ந்துஅவளின் பூஜையால் மகிழ்ந்த சிவப்பரம்பொருள், காலம் கனிந்ததும் உத்தால மரத்தின் கீழ் தோன்றி அவளுக்கு அருள்புரிந்தார். அம்பிகையைத் திருக்கரம் பற்றினார். `அமிர்த முகிழாம்பிகை’ என்ற அரும்பன்ன வனமுலையாளுக்கும், உத்தவேதீஸ்வர சுவாமிக்கும் திருக்கல்யாணம் நிகழ்ந்தது இந்தத் தலத்தில்தான்.
அம்பிகைக்குத் தான் அளித்த வாக்கின்படி, சொன்னவண்ணம் செய்து காட்டிய இறைவன் ‘சொன்னவாறு அறிவார்’ என்கிற திரு நாமத்துடன் இத்தலத்தில் நிலைத்திருக்கிறார். இதுதான் இவ்வூருக்கு பிரதான சிவாலயம்.
இத்தலத்தில் ஸ்ரீ சௌந்திர நாயகி ’ஸ்ரீ சக்கர பீட நிலையாய நம’ என்று ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம வடிவில் அமைந்துள்ளார். ஸ்ரீபரிமளசுகந்த நாயகி ’பிந்து தர்பண விந்துஷ்டாயின நமஹ’ என்ற வடிவிலும் அமைந்துள்ளார். பரத மகரிஷி தமக்குக் குழந்தைப்பேறு வேண்டி செய்த யாகத்தில் தோன்றியவர் ஸ்ரீ பரிமள சுகந்த நாயகி.
பெயர்க்காரணம்
தல விருட்சம் உத்தால மரம். இதைக் கொண்டு உத்தால வனம் எனப்பட்டது மருவி குத்தாலம் ஆயிற்று.
வழிபட்டோர்
அம்பாள், சிவபெருமானை வழிபட்டுத் திருமணம் செய்த திருத்தலம்
அக்கினி, வருணர், காளி, சூரியன், மன்மதன், காசிபர் உட்பட ஏழு முனிவர்கள் (காசிபர், ஆங்கிரசன், கவுதமர், மார்க்கண்டேயர், வசிட்டர், புலத்தியர், அகத்தியர்)
பரிகாரத் திருத்தலம், தல விருட்சம் & தீர்த்தம்: உத்தால மரம் மற்றும் காவிரி.
குடமுழுக்கு : இக்கோவிலில் கடந்த 1960 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடந்தது. அதன் பின்பு 62 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் மே மாதம் 8 ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்..
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment