மயிலாடுதுறை மாவட்டம்,
குத்தாலம் அருகில் காவிரி நதி பாயும் வடகரையில், பந்தநல்லூர் செல்லும் பாதையில் சிற்றூரின் ஈசான பாகத்தில் உள்ளது.5.வில்லியநல்லூர் ஸ்ரீ காளீஸ்வர ஸ்வாமி, ஸ்ரீ சிவகாமிசுந்தரியம்மன் ஆலயம்.
ஆலயம் எதிரில் குளம் உள்ளது.
கிழக்குப்பார்த்த ஆலயம். காட்சி கோபுரம் மற்றும் சுற்று சுவற்றுடன் இருக்கிறது.
முன்மண்டபத்தில் நந்தி ஆலய கருவரை மண்டபத்தின் நுழைவில் உள்ளது.
சுவாமி கிழக்குப் பார்த்தும், அம்பாள் தெற்கு நோக்கியும் தனித்தனி கருவரைகளுடன் வெளவால் நெற்றி முன் மண்டபத்துடன் இணைந்துள்ளது.
முன் மண்டபத்தில் ஈசான பாகத்தில் சதுர்முக சண்டிகேஸ்வரர் தெற்கு பார்த்து உள்ளார். மற்றும் பைரவர், சூரியன், நாகர்
வைக்கப்பட்டுள்ளனர்.
பெரிய நந்தி வாகனம் ஒன்றும் உள்ளது.
சோமஸ்கந்தர் சன்னதி மட்டும் உள்ளது. விக்ரகங்கள் இல்லை.
பிரகாரத்தில், தனி தட்சினாமூர்த்தி தெற்கு பார்த்த அமைப்பில்.
தென்மேற்கு மூலையில் விநாயகர், அடுத்து முருகர், சன்னதிகளும் உண்டு.
கோஷ்ட்ட துர்க்கை. சன்டிகேஸ்வரர் ஆலய முன்மன்டபத்தில் உள்ளார்.
முன்புறம் சுற்று சுவரில் உள்ள கல்வெட்டுகள் மூலம் 1.07. 1993 ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளதை அறியலாம்.
பராமரிப்பில் வழிபாட்டில் உள்ள ஆலயம்.
#தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🌼
No comments:
Post a Comment