திருவிசைப்பா, கருவூர் தேவரால் பாடல் பெற்ற வைப்புத்தலம்.
3 நிலை இராஜ கோபுரம் கிழக்கு நோக்கியது. ஆதியில் அகழி அமைப்பு உடைய ஆலயம்.
சுவாமி சுந்தரேஸ்வரர் கிழக்கு நோக்கிய அமைப்பில்.
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கிய கருவரை.
கருவரை முன்மண்டபத்தில்,
ரதிமன்மதனுடன் நின்ற கோலம் காட்சி கோலத்தில் தனி சன்னதி அமைப்பில் உள்ளனர், கொற்கையில் மன்மதன் பேறுபட்டு இத்தலத்தில், அருள் பெற்ற புராணம்.
ரிஷபாரூடர் நந்திமேல் சுவாமி அம்பாள் கற்சிலை அமைப்பு வேறு எங்கும் இல்லாத அமைப்பில் உள்ளது
பிரகாரத்தில், தனி தெட்சினாமூர்த்தி விநாயகர், வள்ளிதெய்வானையுடன் சுப்பிரமணியர், லிங்கோத்பவர், பிரும்மா, துர்க்கை சன்டிகேஸ்வரர் உள்ளனர்.
பிரதோஷத்தில் தரிசனம் மிக சிறப்பாக எண்ணப்படுவதால், பக்தர்கள் வசதிக்காக தனியாக தெற்கு பிரகாரத்தில் தனி சன்னதி அமைப்பில் மாற்றி அமைத்துள்ளனர்.
மிகப் பழமையான ஆலயம்
#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment