குத்தாலத்திலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் குத்தாலத்திலிருந்து 3 கி.மீ.தூரத்தில் உள்ளது மாதிரிமங்கலம் ஸ்ரீ கைலாசநாதர் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம்.
பிரதான சாலைக்குத் தென்புறம் செல்லும் சிறிய சாலையில், ரயிலே லைன் கடந்து செல்ல வேண்டும்.
சிற்றூர் தென்புறத்தில் கிழக்கு நோக்கியவாறு ஆலயம் அமைந்துள்ளது. தென்புறம் உள்ள சாலையில் வாசல் உள்ளது. உயர அமைப்பில் கட்டப்பட்ட ஆலயம்.
தலபுராணம்:
தேரழந்தூரில் சொக்கட்டான் ஆடிய சிவன் பெருமாள் ஆட்டத்தில், அம்பாள், சார்புற்றதால், பசு சாபமாகப்பெற்ற அம்பிகையும், கோ மேய்க்கும் பேறு பெற்ற விஷ்ணுவும் ஆவூர், கோவிந்தக்குடி, கூடலூர், மேய்கரை மங்கலம், முதலிய பலதலங்கள் இருந்து, முடிவில், திருவாடுதுறையில் காட்சியளித்தார். அவ்வூருக்கு, ஈசானிய பாகத்தில் உள்ள இவ்வூரில், திருமகளைப் பிரிந்து வந்த பெருமாளுக்குத் திருமணம் செய்துவித்தார், ஈசன் என்பதால், இது மா+ திரு + மங்கலம் எனப்பட்டதாக புராணம் ஆலயத்தில் உள்ளது.
திருமணம் தடை நீக்கும் ஆலயம்.
ஆலய அமைப்பு:
கிழக்குப்புறத்தில் நுழைவில், காட்சி கோபுரம் அடுத்து, ஆலய முன்மண்டபம் உயரமாக இணைக்கப்பட்டுள்ளது. முன்மண்டபத்தில், நந்தியம் பெருமாளுக்கு தனி மண்டபம்.
சுவாமி கிழக்கு நோக்கி கருவரை, அர்த்த மண்டபம், உள் மண்டபத்தில் சிறிய நந்தி மற்றும், அம்பாள் கருவரையும், அர்த்த மண்டபத்துடன் உள்ளது. சுவாமி, அம்பாள் இரு கருவரை மண்டபங்கள் இணைப்புடன் கூடிய நடு மண்டபம் கல்யாணக்கூட அமைப்பில் நடுவில் உயர்த்தி பலகனிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
மண்டபத்தின் தென்பகுதியில், திருஞானசம்பந்தர், இயற்பகை நாயனார் சிறிய உருவ சிலைகள், சுவாமி முன் இடத்தில் பெரிய விநாயகர் சன்னதி வலப்புறத்தில் சுப்பிரமணியர் அமைத்துள்ளனர்.
பிரகாரத்தில், கோஷ்ட்ட தட்சிணமூர்த்தி உயரமான மாட அமைப்பு; படிகள் உள்ளன.
மேற்கில், சிறிய லிங்கம், அம்பாள், சுற்று சுவற்றில் இணைந்துள்ளது.
துர்க்கை தனி சன்னதி. கிழக்குப்புறத்தில், பைரவர், சனி, சூரியன் அமைந்துள்ளார்கள்.
நல்ல பராமரிப்பில் வழிபாடுகளில் உள்ள ஆலயம்.
1987, 2002 ல்குடமுழுக்கு நடைபெற்ற குறிப்பு உள்ளது.
#மீள்தரிசனம் - #ரதசப்தமி
25.01.2026 #சுப்ராம்தரிசனம்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🪷
No comments:
Post a Comment