Saturday, January 30, 2021

திருத்தலங்கள் தரிசனம் 2021 கடுவெளி

கடுவெளி : திருவையாறு காவிரி வடகரையில் தில்லைஸ்தானம் பாடல் தலம் கடந்து
 (திருக்காட்டுப்பள்ளி) - கல்லணை சாலை 4 கி.மீ. தூரத்தில் உள்ள கடுவெளி யில் உள்ள
புகழ்பெற்ற கடுவெளி சித்தர் அமைத்த
ஸ்ரீ ஆசாசபுரீஸ்வரர் ஸ்ரீமங்களாம்பிகை
ஆலயம் உள்ளது.
ஆலயம் முன்பும் ஒரு நந்தி மற்றும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் தரிசித்து, பின் 5 நிலை இராஜகோபுரம் கடந்தால்,
வரும் நந்தியை வணங்கி ஆலயம்
முன் முன் மண்டபம் அழகுற அமையப்பெற்றிருக்கிறது.
2013 ல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. நல்ல பராமரிப்பில் உள்ளது. முன்மண்டபம் கடந்தால் .உள் மண்டபம் தெற்கு நோக்கிய அம்பாள், கிழக்கு நோக்கிய சிவனும் உள்ளார்கள். அம்பாளுக்கு தனி நந்தியும் தென்புறம் உள்ளது.
பெரிய அளவில் ஏகப்பிரகாரமாக இருந்தாலும், வினாயகர், முருகன், தனி சன்டிகேஸ்வரர்  சன்னதிகள் சுற்றி அமைந்துள்ளது.  ஆலயம் வடபுறத்தில் கிழக்குப் பார்த்து கடுவெளி சித்தருக்கு தனி சன்னதியும் அருமையான சூழலில் அமைந்துள்ளது.
ஆலயம் இராஜகோபுரம் அருகில் இவ்வாலயம் உபய குறிப்புகள் உள்ள தனிகல்லில் பொறித்துள்ளது.

ஆலயம் முன்புறத்தில் ஆலயக் காப்பாளரிடம் சாவி வாங்கி உடன் தரிசனம் செய்யலாம்.
#அற்புதத்திருத்தலங்கள் 
#சிற்றூர்_ஆலய_தரிசனம் 
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்

No comments:

Post a Comment

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு. ⛳தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி ...