Wednesday, January 13, 2021

இலங்கை பயணம் - 2018 - பதிவு - 15 கண்டி - மாத்தளை, மாத்தளை முத்துமாரியம்மன்.

_இலங்கை பயண பதிவு : 15_ (16-12-2018)
 *கண்டி - மாத்தளை*

கண்டி இலங்கையின் முக்கிய நகரங்களில் ஒன்று இலங்கையின் நடுப்பகுதியில் இருப்பதால் எல்லா நகரங்களுக்கும் இங்கிருந்து செல்லலாம். 
நாங்கள் தங்கியிருந்த 
Hotel Ganga Addara
மகா வேலி கங்கா என்ற ஒரு ஆற்றின் கரையில் இருந்தது. 
வழியில் Ganesananda என்ற சைவ ஹோட்டல் சென்று காலை உணவு

 பக்கத்தில் உள்ள *மாணிக்க விநாயகர் ஆலயம்* தரிசனம்
கோவில் செட்டியார்கள் திருப்பணி பாணியில் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி மாணிக்க விநாயகர் மற்றும் சோமசுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன் தெற்கு நோக்கி அமைக்கப்பட்ட முழுவதும் கற்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. துர்க்கை, சரஸ்வதி, லெட்சுமி, நவ கிரகங்கள் தனித்தனி சன்னதிகளில் வைத்திருக்கிறார்கள். பூசை முறைகள் மிகவும் நேர்த்தியானமுறையில் செய்யப்படுகிறது. இது மார்கழி மாதம் என்பதால் மாணிக்கவாசகரை எடுத்து நடராஜர் சன்னதிக்கு முன் வைத்து பூசை செய்து திருவெம்பாவை விடியலில் முறையாக ஒதுகிறார்கள். கோவில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. 

 **மாத்தளை முத்து மாரியம்மன்* 
வடக்கு பார்த்த மாரியம்மன், சுந்தரேஸ்வரர் மீனாட்சி அம்மன் எல்லோருக்கும் தனி தனி சன்னதி . மெயின் ரோட்டிலேயே கோவில் இருக்கிறது. கோவில் உள்ளே பார்க்கிங் வைத்துள்ளனர்.
கிழக்கு கோபுர வாசல் எதிரில் மிகச் சிறிய தெப்பக்குளம் . கோவில் முழுதும் புதிய தோற்றத்தில் உள்ளது.
வடக்கு கோபுரம் உயரம் நல்ல பராமரிப்பு . 
நல்ல தரிசனம் கிடைத்தது. 

அங்கிருந்து *தம்புளா* சென்றோம்.

https://m.facebook.com/story.php?story_fbid=2447985821943327&id=100001957991710

No comments:

Post a Comment

திருவோத்தூர்வேதபுரீசுவரர் கோயில் 16.8.26

#திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும். தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ...