Wednesday, January 13, 2021

இலங்கை பயணம் 2018 - பதிவு - 28 திருக்கேதீஸ்வரம்

_இலங்கை பயண பதிவு : 28_ 
 *திருகேதிஸ்வரம்*

தேவரா பாடல் பெற்ற திருத்தலம் திருஞானசம்பந்தராலும்  சுந்தரமூர்த்தி சுவாமிகளாலும் பதிகம் பெற்ற தலம்.
கேது வழிபாடு செய்ததால் கேதீஸ்வரர்  ஆலயம் புராண காலத்திலிருந்து புகழ் பெற்றிருந்தது.
முன்பு இருந்த கோவிலை முழுவதுமாக மாற்றி சுமார் 35 கோடிக்கு கற்றளியாக மாற்றி கும்பாபிஷேகம் 2020ல் நடைபெற உத்தேசித்து பணிகள் நடைபெறுகின்றன. கோவிலில் முன் மண்டபம் அமைத்து அணைத்து விக்கிரகங்களுக்கும் முறையாக பூசை நடைபெற்று வருகிறது. 

நாங்கள் சென்ற போது 
வவுனியா என்ற ஊரிலிருந்து ஒரு சிவனடியார், திருவாசகம் முற்றோதல் செய்து பூர்த்தி செய்தார். இவர் தம்முடைய 75வது வயதில் திருக்கைலாயம் சென்ற போது திருவாசகம் முற்றோதல்  அங்கேயே செய்துள்ளார். மேலும் இந்தியா இலங்கை பகுதிகளில் சுமார் 1500 முறை திருவாசகம் முற்றோதல் செய்துள்ளார் என்று தெரிந்த போது அனைவரும் வியந்தோம். 1959 ல் இலங்கை வந்து தற்போது வரை அங்கேயே இருக்கிறார். நல்ல நிலமைக்கு அவருடைய விடாமுயற்சி உழைப்பும் என்று அறிந்து கொண்டோம். இந்தியா இன்னமும் உதவி செய்யலாம் என்று கூறுகிறார். போருக்கு தாங்களே - தமிழர்களே - காரணம் என்று மனம் வெதும்பினார். 

அடுத்து அநுராதபுரம் சென்று தங்கினோம்.

No comments:

Post a Comment

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி -பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி திருஆவினன்குடி - குழந்தைவேலாயுத சுவாமி திரு என்ற இலக்குமி தேவியும், ஆ என்ற காமதேனுவும், இனன் என்ற சூ...