Wednesday, January 13, 2021

இலங்கை பயணம் - 2018 - பதிவு - 8 *சீதா தேவி அக்னி பிரவேசம் செய்த புராதான இடம்.* Divurumwela, Welimada, Sri Lanka.

இலங்கை பயண பதிவு - 8
 *சீதா தேவி அக்னி பிரவேசம் செய்த புராதான இடம்.* 
Divurumwela, Welimada, Sri Lanka.
இராவணனால் சிறைபிடிக்கப்பட்டு வந்த சீதா பிராட்டியார் மூன்று இடங்களில் வைத்திருந்ததாகவும் அதில் இந்த இடத்தில்தான் ராமர் இலங்கையை வென்று அயோத்தி செல்வதற்கு முன் சீதா அம்மாள் அக்னி பிரவேசம் செய்த இடம். இங்கு அசோக மரம் மலருடன் இருந்ததை அங்குள்ள கைடு சுட்டிக் காட்டினார். 
இந்த இடம் மிக மிக புராதானமான இடம் என்றும், அங்குள்ள அரச மரம் ஓட்டி உள்ள கட்டிடங்கள் மிக பழமையானவையாகும். அதை ஒட்டி ஒர் கட்டிடமும் கட்டப்பட்டு சீதை வரலாற்றையும், அக்னி பிரவேசம் செய்த புராண காட்சிகளை ஓவியமாகவும் வைத்து இருக்கிறார்கள். சுற்றி புத்தர் சிலைகள் இருக்கின்றது. ஒருபுறம் தனி சன்னதி போன்ற அறையில் சீதா தேவிக்கு அக்னி பகவான் அருள் புரிந்த காட்சி வைக்கப்பட்டுள்ளது. பெளத்த விகாரம் பெரிய புத்தர் சிலையும் அமைந்துள்ளது. ஒரு சிறிய கட்டிடத்தில் (கோயில்) சிவன் மற்றும் சில தெய்வங்களின் சிலை களும் வைக்கப்பட்டு வழிபடுகிறார்கள். அந்த பகுதியில் தமிழர்கள் மிக மிக குறைவு என்பதால் பெளத்தர்கள் ஆளுமையில் இந்தக் கோவில் இருக்கிறது. அருகில் வசிக்கும் முதியவர் ஒருவர் இந்தக் கோயில் வருபவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து அற்புதமான முறையில் விளக்கி கூறுகிறார்.
நுழைவுக் கட்டணம் உண்டு. இந்தியா ௹ 120 இலங்கை ரூ250. ராவணனின் ஒரு புகைப்படம் வைத்திருக்கிறார்கள் அதில் உள்ளது போன்ற பெரிய சிலை லண்டனில் இருக்கிறதாம். அந்த சிலையும் இங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டதே. அருகில் ஒரு பெளத்த மடத்தின் கட்டுப்பாடில் இந்தப் பகுதி உள்ளது. ராவணன் அருவியிலிருந்து நுவரெலியா செல்லும் வழியில் இந்த இடம் உள்ளது. இராமாயண சுவடுகள் இந்தப் பகுதியில் மிக அதிகம்.
https://m.facebook.com/story.php?story_fbid=2447149752026934&id=100001957991710

No comments:

Post a Comment

வேலங்குடி பெருமாள் ஆலயம் 28.9.25

வேலங்குடி பெருமாள் ஆலயம் #வேலங்குடிபெருமாள் ஆலயம் 🛕  பெருமாள் ஆலயமும் அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரம், பிரகாரம்,  உள்ளே பெரிய மண்டபம். கருடன...