Wednesday, January 13, 2021

இலங்கை பயணம் - 2018 பதிவு - 30 முன்னீஸ்வரம்

_இலங்கை பயண பதிவு : 30_ 
 *முன்னீஸ்வரம்*
இலங்கையில் தரிசிக்க வேண்டிய முக்கிய சிவஸ்தலங்களில் இது முக்கியமானது வட மத்திய மேற்கு கடற்கரைக்கு கொழும்புக்கு அருகில் உள்ளது. புராதானமான மிகச்சிறந்த பராமரிப்பில் உள்ள ஸ்தலம் தமிழர்கள் பராமரிப்பில் உள்ளது. பெரும்பாலும் இலங்கையில்  அர்ச்சனை என்பது வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் வைப்பதில்லை. ஓரு தட்டில் மிக அழகாக பழங்களை அடுக்கி வைத்து அர்ச்கர்களிடம் கொடுக்க அதை சுவாமியிடம் வைத்து திருப்பிக் கொடுக்கிறார்கள். மந்திர உபாசனைகளும் சுவாமிக்கு குருக்கள் முறையாக செய்கிறார்கள். இலங்கையின் 5 ஈஸ்ரத்தில்
முன்னிஸ்வரர் முதன்மையான ஈஸ்வரராக உள்ளவர் அம்பாள் வடிவழகி அம்மன் . கருவரையிலேயே சிவன அம்பாள் வழிபடுவதால் சிவ லிங்கம் முன்பு அம்பாளின் அற்புத ( உலோக) சிலை வைக்கப்பட்டுள்ளது. அம்மனுக்கு தனியாக சிலா ரூப சிலை வைத்து தனி கருவரை தெற்கு பார்த்து உள்ளது. ஒரு பெரிய மண்டபத்திலிருந்து சிவன் அம்பாள் ஒரு சேர தரிசிக்குமாறு அமைப்பில் உள்ளது. சிவலிங்க பூசனை முடிந்ததும் அம்மபnள் கருவரை திரையிட்டு விடுகிறார்கள். சுவாமி எப்போதும் காட்சி கொடுத்துக் கொண்டிருகிறார். விநாயகர் தட்சினா மூர்த்தி லிங்கோத்பவர் துர்க்கை சன்டிகேஸ்வரர், பிரம்மா என்ற முறையில் வித்தியாசமான முறையில் இக்கோவில் உள்ளது. லிங்கோத்பவர் உச்சியில் அன்னபட்சி உள்ளது. புராணபடி சிவபக்தராகிய இராவணனை அழித்ததால் இராமர் இலங்கையை தாண்ட முடியாமல் பிரம்மகத்தியால் பிடிபட்டு இருக்கையில் முனிவரின் ஆலோசணை படி லிங்க வடிபாடு செய்ய அவசரமாக மனலால் செய்யப்பட்ட லிங்கத்தை மனல்வாரி என்ற மானவாரியில் வழிபட்டு பின் இராமர் இங்கு வந்து முறையாக பூசை செய்கிறார்.
இராமர் வழிபட்ட இடம் . காலத்தால் அழிக்கப்பட தற்போது உள்ள லிங்கம் மறைந்து பின் வெளிப்படும் போது லிங்கத்தின் முன்பகுதி வெட்டு பட்டு விடுகிறது முன் பகுதி மட்டும் வெளிப்பட்டதால் முன்னேஸ்வரர் . காலத்தால் பழமையானது.
மூல லிங்கமே இப்போது கோஷ்ட்டத்தில் லிங்கோத்பவராக உள்ளார். லிங்கத்தின் முன்பகுதி வெட்டு பட்டு விட்டதால் லிங்கோதபவர் இடத்தில் வைத்து வழிபடுகிறது.
துர்க்கை கோமுகத்தில் உள்ளதும் மிகக் கடுமையான முக அமைப்பும் கொண்டுள்ளார். பின் சன்டிகேஸ்வரர் அடுத்து பிரம்மன் இருப்பது விசேடம். பழங்காலத்திலிருந்து எல்லா விழாக்களும் மிகச் சிறப்பாக நடைபெற தமிழர்கள் மிகவும் ஒற்றுமையாக செயல்படுகிறார்கள்.  அருகில் நாட்டுக் கோட்டை செட்டியார் மடம் ஓன்றும் ஒரு பெரிய தனி விநாயகர் ஆலயம் வடக்கு பார்த்து பக்கத்தில் இருக்கிறது. ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். வாகனங்கள் நிறுத்த நிறைய இடம் உள்ளது. எடுத்து சென்ற மதிய உணவுகளை மடத்தில் வைத்து உண்டு Rest எடுத்து கொழும்பு புறப்பட்டோம். வழியில் மிகப் பெரிய முருகன் சிலை கொண்ட புதிய ஆலயம் சாலையிலேயே கண்டு வழிபட்டு 
*கொழும்பு* Metro Port City Hotel அடைந்தோம். City க்குள் கதிரேசன் சாலையில் இருந்தது. அதே சாலையில் உள்ள ஆலயங்களையும் கண்டு தரிசித்தோம்.  மாலையில்  கொழும்பிவில் Shopping walking.

அருகில் உள்ள சரஸ்வதி கபேயில் இரவு உணவு உண்டதற்கு ஆன சிலவு பணம்  SUJANA TOUR   திரு பால கப்ரமணியன் அவர்கள் ஒவ்வொருவருக்கும் திருப்பிக் கொடுத்தார்.  இரவு தங்கல்.

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...