Wednesday, January 13, 2021

இலங்கை பயணம் - 2018 - பதிவு - 3 கதிர்காமம்

இலங்கை பயண பதிவு 3
14.12.2018 வெள்ளிக்கிழமை காலை : 
புகழ் பெற்ற 
புராதனமான கதிர்காமம் முருகன் ஆலயம் தரிசனம். 
கோவில் செல்லும் முன் புனித நதி ஒன்று செல்கிறது. அதற்கு பிறகு நடந்து தான் செல்ல வேண்டும். சிறிய பாலம் உண்டு. 200 மீட்டர் இருக்கும். பெரிய காட்டு/தோட்டத்தில் அமைந்துள்ளது. மிகப் பெரிய இடம் பல இடங்களில் சிறிய ஆலய சன்னதிகள் பெளத்தர் வழிபாட்டு முறை தான் தென் மற்றும் மத்திய இலங்கைப் பகுதிகளில் . பழங்களை மிக நேர்த்தியாக தட்டுகளில் வைத்து சுவாமிக்கு நிவேதனம் செய்து பிரசாதமாக எடுத்துச் செல்கிறார்கள். 
கோவிலுக்கு கிழக்கு, மேற்கு புறத்தில் அழகான புராதானமான Arch 2ள்ளது. 
கருவரையில் திரைச்சீலை தான் உள்ளது. பெரும்பாலும் எல்லா கருவரையிலும் திரைச்சீலை யில் சுவாமி வரைந்து உள்ளார்கள் அதையே தான் வணங்க வேண்டும். திரைக்குள்ளே சென்று பூசை நேரம் மட்டும் மந்திரம் சொல்லப்பட்டு வருகிறது திரைச்சீலை விலகக் கப்படுவதேயில்லை. 
கதிர்காமம் கோவில் சுற்றி நான்கு திசைகளிலும் சிறிய சன்னதிகள் இருக்கிறது. பொதுவாக எல்லா கருவரையின் 
பின்னே ஒரு தனி அரச மரம் புத்தர் சிலை ஸ்துபி கண்டிப்பாக உண்டு இந்து மற்றும் பெளத்தர்கள் இணைந்தே அமைதியாக வழிபாடு செய்கிறார்கள்.
https://m.facebook.com/story.php?story_fbid=2445325185542724&id=100001957991710

No comments:

Post a Comment

திண்டல் திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் 6.09.26

திண்டல்  திண்டல் வேலாயுதசாமி முருகன் கோயில் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொ...