Wednesday, January 13, 2021

இலங்கை பயணம் - 2018 பதிவு 33 கொழும்பு - 3 - கெளனியா பெளத்தர் ஆலயம்

_இலங்கை பயன பதிவு :_ 33  ( *20.12.2018)*
 *கொழும்பு: ( 3 )* *கெளனியா பெளத்தர் கோவில்*.

கொழும்பு நகரத்தின் வடகிழக்கு புறத்தில்  கெளனியா என்ற நதி ஓரம் ஒரு மிகப் பெரிய புத்தர் கோவில் உள்ளது. இதை விபூஷணர் கோவில் என்று கூறுகிறார்கள். 
இந்த இடம் புராதானத்தில் இராமாயணத்தில் விபூஷணனுக்கு இலட்குமணன் முடிசூட்டிய இடம். 

இராமர்  தந்தை சொல் காப்பாற்ற 14 ஆண்டு வனவாசம் முடிந்து அயோத்தி சென்றதால் இலக்கு மணனே விபூஷணனுக்கு முடிசூட்டினார். 
இந்த காட்சி கோவிலின் வடக்கு பகுதியில் சிற்பமாக உள்ளது.
கிழக்கு புற சுற்றில் அழகான விநாயகர் சிற்பம் கவணிக்கத்தக்கது. 

இந்த இடத்திற்கு கெளதம புத்தர் வந்ததாகவும் இரண்டு நாகங்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டை தீர்த்ததாகவும் புராணம்

கோவிலின் உள் அருமையான ஓவியங்களால் புத்தரின் வரலாற்றுக் காட்சிகள் இருக்கின்றன. 
இன்னும் போதுமான பராமரிப்பு Care எடுத்தால் நல்லது.

 புறச் சுற்றுகளில் இலங்கை அரசர், அரசிகள் சிலைகளும் மிகப் பெரிய ஸ்தூபியும் உள்ளன. பெளத்தர்களின் புனித இட மானதால் ஏராளமான பெளத்தர்கள் வருகின்றனர்.

 கருவரையில் தற்போது புத்தர் வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறார். வெளிச் சுற்றில் ஆலய மணிமண்டபம் நீர் ஊற்று நிலை அழகாக உள்ளது. பார்க்கத்தக்க இடம் .
இத்துடன் மாலை சூரியன் மயங்கும் வேலை வந்தது. பயணம் இனிது நிறைவுற்று இலங்கையின் விமான நிலையம் வந்து கையில் கொண்டு வந்த உணவை சாப்பிட்டு 20.12.2018 இரவு 10.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்து அங்கிருந்து 21.12.2018 காலை அவரவர் வீடு வந்து இறையருளால் நலமுடன் சேர்ந்தோம்.
🙏🙏💐💐💐🙏🙏
கெளனியா கோவில் மேலும் படங்கள் நிறைவுப் பதிவில் ....

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024 பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் பதிவு - 15. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 11.08.2024 / குலசேகரபுரம். 18 திருக...