Thursday, June 27, 2024

Pithoragarhபதிவு : 7நாள்: 4️⃣29.05.24- புதன் பித்தோர்கார் to தார்ச்சுலா (96 kms. 4-5 hrs.)

#Pithoragarh
பதிவு : 7
நாள்: 4️⃣
29.05.24- புதன்
பித்தோர்கார்  to தார்ச்சுலா (96 kms. 4-5 hrs.)
- காலை 7.00 மணி உணவு முடித்து,  தர்ச்சுலா  புறப்படுதல்.
 
- மதியம் 1.00 Dharchula  KMVN TRH வில் உணவு மற்றும் Hospital சென்று Medical Checkup. Inner Line Certificate பெறுதல்.
- Eve. Tea, Dinner, 
-யாத்திரா பற்றிய Briefing meeting. 
உணவு முடித்து இரவு தங்குதல்)

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

#பித்தோராகார் ( #Pithoragarh)

🏵️பித்தோராகர் என்பது இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள இமயமலை நகரமாகும். இது குமாவுன் பிரிவில் உள்ள மிகப்பெரிய மலை நகரமாகும். 

🏵️தேசிய நெடுஞ்சாலை 9 பித்தோராகர் வழியாக செல்கிறது.

🏵️ஹல்த்வானி மற்றும் தனக்பூர் ஆகியவை பித்தோராகருக்கு சாலை வழியாக நுழைவதற்கான இரண்டு நுழைவுப் புள்ளிகளாகும்.

🏵️இரண்டும் இரயில் சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளன, அருகிலுள்ள இரயில் நிலையங்கள் தனக்பூர் (151 கிமீ) மற்றும் கத்கோடம் (212 கிமீ) ஆகும்.

🏵️பித்தோராகர் உத்தரகாண்டின் மற்ற பகுதிகளுடன் அனைத்து வானிலையிலும் மோட்டார் வாகனங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது.

🏵️பித்தோராகர் எந்த நேரடி ரயில் சேவைகளாலும் இணைக்கப்படவில்லை; இருப்பினும், இது சாலை மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இது ஒரு விமான நிலையத்தையும் கொண்டுள்ளது. 

🏵️நைனி சைனி விமான நிலையம் என்றும் அழைக்கப்படும் பித்தோராகர் விமான நிலையம் நகரின் வடகிழக்கில் 5 கிலோமீட்டர் (3.1 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. 

🏵️நிலச்சரிவுகள் மற்றும் மேக வெடிப்புகள், கோடை மழைக்காலத்தில் பெய்யும் கனமழையால் ஏற்படும், அடிக்கடி போக்குவரத்து நெட்வொர்க்குகள் குறுக்கிடுகின்றன.

🏵️இது சௌர் பள்ளத்தாக்கின் மேற்குப் பாதியின் மையத்தில் அமைந்துள்ளது.    
பள்ளத்தாக்கு சுமார் 50 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது.

🏵️பித்தோராகர் பருவமழையால் பாதிக்கப்படும் காலநிலையைக் கொண்டுள்ளது. 

🏵️ஏப்ரல் முதல் ஜூன் நடுப்பகுதி வரையிலான கோடைக்காலம் மிதமான வெப்பமாக இருக்கும், அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும், அதே சமயம் ஜூன் நடுப்பகுதியிலிருந்து செப்டம்பர் நடுப்பகுதி வரையிலான பருவமழை கிட்டத்தட்ட தினமும் கனமழையுடன் ஈரப்பதமாக இருக்கும்

🏵️ஸ்கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வடக்கே கைலாஷ் மலையிலிருந்து தெற்கே பாபர் & தேராய் வரை பரவியிருந்த மனஸ்கண்ட் பகுதியின் ஒரு பகுதியாக பித்தோராகர் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் இருந்தன.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

நாங்கள் தங்கியிருந்த KMVN hotel  Garden னில் உள்ள போர்டு:
(தமிழாக்கம்) :
"இமயமலையைக் காணவிட்டாலும், இமயமலையை சிந்திப்பவர்:
காசியில் பூரணவழிபாடு செய்தவரை விட பெரியவர்.

காலை சூரியனின் கதிர்களால்,
பணித்துளிகள் ஆவியாகி விடுவது போல
இமயமலையைப் பார்க்க, தரிசிக்க, மனிதகுலம் அறிந்தோ, அறியாமலோ செய்தபாவம் மறைந்துவிடும். "

💙❤️💜🤎💚
" காற்று எங்கே வீசுகிறது, 
தீர்மானங்களை எடுங்கள், 
மலைகள் பெருமை கற்பிக்கின்றன. 
ஏற்ற தாழ்வுகளும் வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளும் பக்தியின் தாளத்தில் பாடும் அந்த திவ்ய தேசத்தில் தியானம் செய்வதன் மூலம் நான் எப்பொழுதும் ஆசீர்வதிக்கப்படுகிறேன். இது என் தலைவிதி, என் அதிர்ஷ்டம்,

 நான் இந்த திவ்ய தேசத்தில் பிறந்தேன், இது என் கடமை, 
பூமி அன்னையின் பெயரில் ஒரு செடியை நட்டு, நான் உங்களுக்கு தலை வணங்கி ஆசீர்வதிக்கிறேன். 
இமயமலையை காப்பாற்ற உறுதிமொழி எடுப்போம்."
-தினேஷ் குஸ்னி
மேலாளர்
💚🤎💜❤️💙
KMVN  Tourist Rest House (Hotel) 
ULKA DEVI hotel -
அருகில் உள்ள இடங்கள்: 
மலைப்பிரதேசம் என்பதாலும், இந்த Hotel உயரமான இடத்தில் இருப்பதாலும், அற்புதமான உள்ளது. மேலும், அழகிய பூங்கள், தாவரங்கள் வைத்து நல்ல பாரமாரிப்பில் வைத்துள்ளனர்.

🌟காலையில் எழுந்து KMVN  Tourist Home 
அருகில் உள்ள சிற்றாலயங்கள் இரண்டும், பாரத ராணுவ வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த இடத்தையும் கண்டு வணங்கினோம்.

🛕Maa Ulka Devi Temple :

சிறிய ஆலயம்,  பராமரிப்பில் உள்ளது.  கருவரையில் அம்மன் சிலை. மலைப்பகுதியிலிருந்து இவ்வாலயம் வர படிகள் உள்ளன. இரண்டு பக்கங்களும் சிங்க சிலைகள் உள்ளன.  கருவரை சுற்றி வர வெளிப்பி, காரத்தில் தனியாக ஒரு மணி கட்டி வைத்திருக்கின்றனர்.  
இங்கிருந்து நகரின் தோற்றம் அருமையாக உள்ளது.  பக்தியுடன் வழிபட்டு செல்கிறார்கள்.
இந்த ஆலயத்தினை ஒட்டியே பாரத ராணுவ வீரர்கள் நினைவிடம் அமைந்துள்ளது.

🛕Hingla Maa Temple :

🌼சிறிய ஆலயம் ஆலயம். அரசு விருந்தினர் இல்லங்கள், Hotel கள் அருகில் உள்ளது. ஒரே ஒரு அம்மன் சிலை மிகச்சிறிய மண்டபம். அமைந்துள்ளது.
மலைப்பகுதியாக இருப்பதால், இங்கிருந்து கீழே உள்ள நகரம். அருமையான காட்சி

🌟காலையில் எல்லோரும் இணைந்து இந்த புனித யாத்திரை சிறப்பாக அமைய, இறை உணர்வுடன் நீண்ட வழிபாடுகள் செய்தோம்.
💥அற்புதமான, இறைவன் உறைவிடமான இமாலய மலையின் புனிதம் காக்க வேண்டி உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். மலையின் சுற்றுப்புறத்தை காக்க இமயமலையில், ஆதிகைலாஷ், மற்றும், ஓம்பர்வத் இடங்களில் மரக்கன்றுகள் நட வேண்டி, மரக்கன்றுகள் தந்தார்கள். 

🌟காலை உணவுக்கு பின், எங்கள் சிற்றுந்தில் புறப்பட்டு  #தார்ச்சுலா என்ற நகருக்குப் புறப்பட்டு சென்றோம்.

#JAULIJIBI
💥வழியில்,JAULIJIBI என்ற இடத்தில், கோரி கங்கா + காளி என்ற SARADA River சங்கமம்  பார்த்தோம். இது ஒரு முக்கிய இடமாகக் கருதப்படுகிறது.   

💥காளி அல்லது SARADA RIVER மிக முக்கியமான ஆறு. இது தேசிய எல்லையாகும். பாரதம் -நேப்பாளம்  எல்லை கோடாக கருதப்படுகிறது.

🌼இந்தப் பகுதியில் இருநாடுகளிலும் உள்ள மக்கள்  வருடத்தில் நவம்பர் மாதத்தில் வியாபார சந்தையில் ஒன்றாகக் கூடுகிறார்கள்.

🛕பிரமானந்த மகாராஜி என்ற சுவாமிகள் மூலம், ஜெளல்ஜிபி என்ற இந்த இடத்தில் உள்ள ஜ்வலேஸ்வர் மகாதேவ் என்ற ஆலயத்தின் புராதனத்தின் சிறப்பை உணர்த்தியுள்ளார்.

💥DARCHULA செல்லும் முன்  அருகில் vechicle செல்லும் அளவிற்கு பெரிய இரும்பு பாலம் SARADA (காளி) River மேல் போடப்பட்டு வருகிறது. இது அக்கரையில் உள்ள நேப்பாளத்தை பாரதத்துடன் இணைக்கிறது. கட்டுமான வேலைகள் முடியும் தருவாயில் உள்ளது.

பயணம் தொடருகிறது...... .....
#Uttarakhand   #ADIKAILASH  #OMPARVAT_YATRA_2024
#ஆதிகைலாஷ்  #ஓம்பர்வத்யாத்திரை
26.05.2024 முதல் 6.06.24 வரை 
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
🙏🏻🕉️🙏🏻🛐🙇🏻🕉️🙏🏻🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻🕉️🙇🏻🛐🙏🏻

No comments:

Post a Comment