Sunday, August 30, 2026

காஞ்சிபுரம் மணிகண்டீசுவரர் கோயில் (மணிகண்டீசம்) #காஞ்சிபுரம்நவக்கிரகத்தலம் காஞ்சிபுரத்திலுள்ள நவகிரகங்கள் வழிபட்ட (சனி) சிவன் கோயில் 16.8.26

#காஞ்சிபுரம் 
மணிகண்டீசுவரர் கோயில் (மணிகண்டீசம்) 
#காஞ்சிபுரம்நவக்கிரகத்தலம் 
 காஞ்சிபுரத்திலுள்ள நவகிரகங்கள் வழிபட்ட (சனி) சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும் பிரம்மன், திருமால் உள்ளிட்ட அனைத்து தேவர்களும் இவ்விறைவனை வழிபட்ட இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.
சிவலிங்கம் நிறுவி அனந்த தீர்த்தம் தொட்டுப் பண(பணம்- படம்)த்தில் உள்ள இரத்தின மணிகளால் பூசித்து உமையம்மை மணாளனார் திருமேனியில் அணிகலனாகும் பேறு பெற்றனன். மணிகண்டேசரை வணங்கி முத்தியை அடைந்தவர் அளப்பிலர்.
அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில் விஷ்ணுகாஞ்சி என்றழைக்கப்படும், சிறிய காஞ்சிபுரத்தின் கிழக்கு பிராந்திய , வரதராசபெருமாள் கோயிலின் மேற்கே இக்கோயில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் பிரதான சாலையில் சுமார் 4-வது கிலோமீட்டர் தொலைவில் திருக்கச்சி நம்பி தெருவில் இத்தலமுள்ளது.

ஆலய அமைப்பு
1200 வருடம் முன் பல்லவர்களால் கட்டப்பட்ட ஆலயம். தெற்கு நோக்கிய நுழைவு வாயில் மேற்கு நோக்கிய இறைவன். பெரிய விசாலமான ஏகப்பிரகாரம்  
இறைவர்: மணிகண்டீசுவரர் மேற்கு நோக்கிய கருவரையில் உள்ளார் அர்த்த மண்டபம் முன் மண்டபம் உள்ளது
முன்மன்டபத்தில் சனிஸ்வரர், அவரின் காக வாகனம் எதிரில் உள்ளது.
மேலும் சூரியன் உள்ளார்.

மேல் பிரகாரத்தில் தனி விநாயகர் மற்றும் பலிபீடம் அடுத்து பெரிய நந்தி ஈசணை பார்த்தவாறு மன்டபத்தில் உள்ளார்.
கோயிலின் உள்ளே மேற்புறத்தில், வாசுகி தன்னால் விடமெழுந்த குற்றம் தீரச் சிவலிங்கம் நிறுவி அனந்த தீர்த்தம் தொட்டுப் பண(பணம்- படம்)த்தில் உள்ள இரத்தின மணிகளால் பூசித்து உமையம்மை மணாளனார் திருமேனியில் அணிகலனாகும் பேறு பெற்றனன். மணிகண்டேசரை வணங்கி முத்தியை அடைந்தவர் அளப்பிலர்.
வடபுறத்தில் வள்ளி தெய்வாணையுடன் முருகர் சன்னதி, 3 சிவலிங்க சன்னதிகள் -
மார்க்கண்டேஸ்வரர், பானமுடீஸ்வரர், கணிகண்டீஸ்வரர் இணைந்துள்ளது.
வன்னி மரம் சுற்றி நாகர்கள் மற்றும் படவேட்டம்மன் வைத்துள்ளனர்

கோஷ்ட்டத்தில் துர்க்கை பிரும்மா சன்டிகேஸ்வரர் பெருமாள் மற்றும் தட்சினாமூர்த்தி உள்ளனர்
எதிரில் தனிமன்டபத்தில் நவகிரகங்கள் அமைந்துள்ளது.

ஈசான பாகத்தில் புதிய அமைப்பாக வடக்கு நோக்கிய ஸ்ரீ சுந்தராம்பாள் சன்னதி ஒன்று தனியார் முயற்சியில் கட்டப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகிறது.
கீழ்பகுதியில் குளம் ஒன்றும் உள்ளது

தல வரலாறு
திருப்பாற்கடலை கடைந்தபோது தோன்றிய நஞ்சுவால் துயருற்று, தங்களைக் காத்துக்கொள்ளும் பொருட்டு அந்நஞ்சை இறைவனுக்கு கொடுத்துண்ணுமாறு செய்த பாவம் நீங்கும்படி பிரமன், திருமால் முதலியோர் காஞ்சிக்கு வந்து தங்களை காத்த இறைவனின் மணிகண்டத்திற்கு (கண்டம்-கழுத்து) போற்றி செய்யும் வகையில் "மணிகண்டம்" எனும் பெயரிலேயே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களின் பாவத்தை போக்கிக் கொண்டனரென்பது தல வரலாறாகும். எனவே இக்கோயில், மணிகண்டீசம் என்றும், சுவாமி மணிகண்டீசுவரர் என்றும் திருநாமம் பெற்று விளங்குகிறது.

மூலாதாரம் அறியப்படாத, தொன்மையான நூலொன்று, இக்கோயில் "விஷகண்டீஸ்வரர்" சந்நிதியாக இருந்ததென்று தெரிவிக்கிறது.
ஈசனை விடமுண்டு செய்த பாவத்தை போக்க பிரம்மன் பிரதிட்டை செய்து திருமால் வழிபட்டது. சனி கிரக பரிகார தலமாக அறியப்படுகிறது.

தல விளக்கம்
மணிகண்டேசம் கூறும் தல விளக்கம் யாதெனில், தேவரும், அசுரரும் பிரமனொடும் சூழ்ந்து திருமாலை வணங்கி இறப்பினை வெல்லும் வழியை அருளவேண்டினர். திருப்பாற் கடலினின்றும் அமுதம் பெற்றுண்டலே உபாயமென மதித்து மந்தரத்தை மத்தாகவும், வாசுகியைக் கயிறாகவும் கொண்டு சுராசுரர் கடைந்தபொழுது அங்கு வந்த வாலி, இயலாத அவரை விலக்கி மலை கடலில் அழுந்தாதபடி திருமால் ஆமையாய்த் தாங்கக் கடைந்தனன். வாசுகி வலிபொறாது வாய்நுரையைக் கக்கிப் பெருமூச்செறிந்தனன். அக்கலப்பினால் ஆலாலம் என்னும் கொடியவிட மெழுந்து உலகைக் கனற்றுவதாயிற்று.

வாலி ஓட்டெடுப்பப் பொன்னிறம் போய்ப் புகைநிறமுற்ற பிரமனும், வெண்ணிற மிழந்து கரிய நிறமுற்ற மேலும் நிறமாறிய பிறர் பிறரும் கயிலையைச் சரணடைந்தனர். ‘அஞ்சலீர்’ என்றருள் செய்த சிவபிரானார் திருவுளக் குறிப்பின்படிவிடம் யாண்டும் பரவிச் செறிந்து நின்றநிலை நீங்கி நீட்டிய மலர்க் கரத்தில் மலரில் வண்டுபோலத் தங்கித் திருக் கண்ணோக்குற்றுச் சிற்றுருவாய் மெய்யன்பர் திருமனம் இறைவன் ? திருவடிக்கீழ் ஒடுங்குமாறுபோல அடங்கியது. திருவடித் தொண்டராகிய தமிழ் முனிவர் திருக்கரத்தில் உழுந்தளவாகக் கடல்நீர் சுருங்குமேல் இந்நிகழ்ச்சி புகழ்ந்துரைக்கும் பொருளதோ? இறைவன் சங்கற்பப்படி அம்மையார் திருக்கண்களால் ஆலமுண்டு அமுதம்பொழிந்த அந்தவிடத்தைப் பிறரால் நிறுத்தலாகாத கண்டத்தில் நிறுத்தித் திருநீலகண்டர் ஆயினர். அருளைப்பெற்று மீண்டு எழுந்த விடத்தை இறைவனுக்காக்கிய பிழைதீரக் காஞ்சியில் சிவலிங்கம் தாபித்துத் திருமால் முதலானோர் தொழுது நீலமணியை ஒக்கும் கண்டம் உபகரித்த செய்ந் நன்றியை நினைந்து மணிகண்டேசர் என வழங்கினர். பின்பு கடலைக் கடைந்து அருளாற்பெற்ற அமுதத்தை அசுரரை வஞ்சித்துத் தேவர் உண்டு நோய் நீங்கி இறவாமையை எய்தினர். அமுதம் விடமும் போல அனைத்திலும் விரவி நிற்கும் இன்பம் தலைதூக்கித் துன்பம் தொலைய மணிகண்டேசர் வழிபடற் பாலர் ஆவர். இத்தலம் திருக்கச்சிநம்பி தெருவில் மணிகண்டேசர் ஆலயம் எனச் சிறப்புற்று விளங்கும்.
நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

காஞ்சிபுரம்பணாமணீசுவரர் கோயில் (பணாமணீசம்)#காஞ்சிபுரம்நவக்கிரகஸ்தலம்அருள்மிகு பணாமுடிஸ்வரர் (பணாமணீசுவரர்) திருக்கோயில் ராகுகேது பரிகாரம் 16.8.2026

#காஞ்சிபுரம்
பணாமணீசுவரர் கோயில் (பணாமணீசம்)
#காஞ்சிபுரம்நவக்கிரகஸ்தலம்
அருள்மிகு பணாமுடிஸ்வரர் (பணாமணீசுவரர்) திருக்கோயில் பல்லவ மற்றும் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பழமையான சிவத்தலமாகும். சிறப்பம்சங்கள்: ராகு-கேது பரிகாரம்: காஞ்சிபுரத்தில் உள்ள நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகும். இது நாக தோஷம் நீக்கும் ராகு-கேது பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
கிழக்கு நோக்கிய ஆலயம் பிரதான சாலையில் 3 நிலை ராஜகோபுரத்துடன் ஆலயம் அமைந்துள்ளது. உள்ளே ஒரு சிறிய வளைவுடன் மதில் சுவரும் உடையது அடுத்து பலிபீடம் மற்றும் மண்டபத்துடன் நந்தி உள்ளது 
சுவாமி கருவரை உள்நுழைவு தென்புறம் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே மகா மண்டபம் உள் மண்டபம் அர்த்தமன்டபத்துடன் கிழக்கு நோக்கிய கருவரையில் ஈசன் உள்ளர்
பிரகாரத்தில் மேற்குபுரத்தில் வரசித்தி விநாயகர் சித்தீஸ்வர் தனித்தனியான சன்னதிகள் மற்றும் கோஷ்ட்டத்தில் நடனவிநாயகர், தட்சினாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர்

தல வரலாறு
திருப்பாற்கடலைக் கடைந்தபொழுது வாசுகிப் பாம்பு விஷத்தைக் கக்கி உலகைத் துன்புறுத்திய தன் தோசத்தைப் போக்கிக் கொள்ள, அனந்த தீர்த்தத்தை உண்டாக்கி, அதன் கரையில் சிவலிங்கத்தை நிறுவி, தன்னிடத்துள்ள மாணிக்கத்தைச் சுவாமிக்குச் சார்த்தி வழிபட்டு தன் தோசத்தைப் போக்கிப், பேறு பெற்றது. பாம்பின் மணியாகிய மாணிக்கத்தை கொண்டு வழிபட்டமையால், இவ்விறைவர் "பணாமணீசர்" என்று பெயர் பெற்றாரென்பது இத்தல வரலாறாக அறியப்பட்டது.
தல பதிகம்
பாடல்: (1) (பணாமணீச வரலாறு)
அத்த லத்திடைத் தன்பிழை அகலவா சுகியும்
பத்தி யிற்பணா மணீசனைப் பண்புற இருத்திச்
சுத்த நீர்நிறை அனந்ததீர்த் தத்தடந் தொட்டு
நித்தம் அக்கரைக் கண்இருந் தருச்சனை நிரப்பி.
பொழிப்புரை: (1)
அத்தவத்தின்கண் தனது பிழைதீர வாசுகி என்னும் பெரும் பாம்பும்
பேரன்பிற் பணாமணீசனை விதிப்படி தாபித்துத் தூயநீர் நிறைந்த அனந்த
தீர்த்தத் தடம் வகுத்து நாடொறும் அக்கரையிலிருந்து அருச்சனை முற்றுறச் செய்து,
பாடல்: (2)
பணாம ணீசனைத் தன்பண மணிகளாற் பரவி
நணாவ கத்தமர் நம்பனே நலிவுசெய் விடத்தை
உணாவெ னக்கொளும் உத்தமா எனத்துதித் துமையாள்
மணாளன் மேனியில் இழையெனப் பயில்வரம் பெற்றான்.
பொழிப்புரை: (2)
பணாமணீசப் பெருமானைத் தன்னுடைய படத்தின் இரத்தினங்களால்
பூசனை செய்து திருநணா என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள
விரும்பியடையத்தக்கவனே! வருத்தம் செய்த விடத்தை உணவு போலக்
கொண்டு பருகும் தலைவனே! எனத் துதி செய்து உமையம்மை மணவாளன்
திருமேனியில் அணிகலமாகத் தங்குகின்ற வரத்தினைப் பெற்றனன்.
வாசுகி பாலில் விடம் பெய்த பிழையுந் தவிர்ந்து அணிகலனாக
இறைவன் திருமேனியில் விளங்கவும் பேறு பெற்றனன்.
அமைவிடம்
தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் தென்கிழக்கு பகுதியில் (சிறிய காஞ்சிபுரம் (விஷ்ணுகாஞ்சி) திருவள்ளுவர் தெருவருகே உள்ள ஐயங்கார்பாளையத் தெருவில் கிழக்கு பார்த்த சந்நிதியாக இச்சந்நிதி உள்ளது. மேலும், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குத் தெற்கே சுமார் 3 கி.மீ தொலைவில், உத்திரமேரூர் செல்லும் சாலையில் ஆலடி பிள்ளையார் கோயில் தெருவில் அமைந்துள்ளது.

மிக மிகப் பழமையான ஆலயம் முழுதும் புனரமைக்கப்பட்டுவருகிறது சுவாமிமட்டும் தனி சன்னதி அமைப்பில் தென்மேற்குப் பகுதியில் பூசைகளுடன் உள்ளார்.
நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

காஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் (காயாரோகணம்)#காஞ்சிபுரம் நவக்கிரகத்தலம் (குரு) 16.8.2026

#காஞ்சிபுரம் காயாரோகணேசுவரர் கோயில் (காயாரோகணம்)
#காஞ்சிபுரம்நவக்கிரகத்தலம்
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பழமையான நவகிரக தலங்களில் குரு பரிகார தலமாக விளங்குவது, அருள்மிகு கமலாம்பிகை உடனுறை ஸ்ரீ காயாரோகணேசுவரர்
கும்பகோணம், நாகப்பட்டிணம் அடுத்து இங்கு காஞ்சியில் மட்டுமே காயாரோகணர் உள்ளார் என்பது சிறப்பு.
மேலும் வியாழ(குரு)பகவான் இங்கு இறைவனை வழிபட்டு, சிவபெருமானின் திருவடியில் மாறாத அன்பு வாய்க்கப் பெற்ற இக்கோயில் பற்றிய குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.
இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்
அமைவிடம்
 காஞ்சிபுரத்தின் தென்மேற்கு பகுதியில் பிள்ளையார்பாளையத்தில் தாயார் குளம் தெருவில் வேகவதி ஆற்றங்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. 
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புலத்தில் இத்தலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
தல விளக்கம்
காயாரோகணம்: காஞ்சியில் மிகப் பெருஞ் சிறப்பினவாய இடங்கள் மூன்றென்று போற்றப்பெறும். அவை திருவேகம்பம், கச்சபேசம், காயாரோகணம் எனப் பெற்று முறையே உமையம்மையார், சரசுவதி, இலக்குமி என்னும் முச்சத்திகளால் வழிபடப்படுவன. காஞ்சிக்கு உயிராய் விளங்கும் இத்தலத்தில் சிவபிரானார் திருமால் பிரமர் இறக்கவரும் காலத்தில் அவர்களை ஒடுக்கி அவர்கள் சரீரத்தைத் தன் தோள்மேல் தாங்கி நடனம் புரிவர், ஆகலின், அவ்விடம் காயாரோகணம் எனப் பெற்றது.

இலக்குமி வில்வத்தால் காயாரோகணேசுவரரை அருச்சித்துத் திருமாலைத் தனக்குக் கணவனாகப் பெற்றனள். வியாழபகவான் அங்கு வழிபாடு செய்து ‘எமது பெருமானே, தேவரீரே தேவர்களுள் பிராமணராவீர்! ஏனையோர்களுள் பிராமணன் அடியேன். பிராமணனுக்குப் பிராமணனே புகலிடம். பிராமணன் பிராமணராகிய தங்களைத் தொழாது பிறரை வணங்கில் நலமுமுறான்; நரகமும் புகுவன் என்றிங்ஙனம் மறைகள் விரித்துரைக்கும். பிராமணனாகிய எனக்குத் தங்கள் திருவடிகளே கதி’ என்று கூறிய பிருகற்பதிக்கு பெருமான் முன்னின்று ‘வேண்டுவகேள் அருளுதும்’ என்றனர். ‘திருவடியில் இடையறா அன்பும் எனக்குரிய வியாழக் கிழமையில் காயாரோகண (தாயார்குளம்) தீர்த்தத்தில் மூழ்கி இங்கு வழிபடுவார்க்கு விரும்பியவும், வழங்கி மேலும் முத்தியையும் அளித்தருள வேண்டுமென வேண்டினர். ‘என்றென்றும் இவ்விலிங்கத்தே அம்மையொடும் விளங்கி அவரவர் விரும்பிய அனைத்தும் அருளுவோம்’ என வாய்மலர்ந்து தேவர்களுக்குக் குருவாகும் வரத்தை வழங்கி இலிங்கத்தே மறைந்தருளினார்.

இயமன் அங்கு வந்து பூசனை புரியத் ‘தென் திசைக்குத் தலைவனாக்கி நம்மை வணங்குவோரைத் தண்டம் செய்யின் அன்று இப்பதவி உனக்கு நீங்கும்’ என்றருளி விடுத்தனர். இயமனும் பூசித்த இங்குப் பிதிரர்க்கு நீர்க்கடனைச் செய்வோர் வீடு பெறுவர். வேகவதி நதிக்கரையில் உள்ள இத்தலம் அறிவு பெறவும் செல்வம் பெறவும் ஒருங்கு சிறப்புடைய தலமாகும்.
தல வரலாறு
பிரம்மனுக்கும், திருமாலுக்கும் தத்தம் காலப்பதம் முடிவுற்றதும் நிலையின்றிப்போக, சிவபெருமான் தோன்றி அவர்களின் திருமேனிகளைத் தம் தோளில் தாங்கி இவ்விடத்து நடனமாடி அருள்செய்தார். அவர்களின் காயத்தை (காயம் - உடம்பு) தம்முள் ஆரோகணித்துக் கொண்டமையால் இத்தலம் "காயாரோகணம்" எனப் பெயர்பெற்றது. மேலும் மகாலட்சுமி இத்தலத்து இவ்விறைவனை வில்வத்தால் அருச்சித்துத் திருமாலைத் தன் கணவனாகப் பெற்றதும். மற்றும் குரு, மகாலட்சுமி வழிபாடுகளால் வழிபடுவோருக்கு முறையே ஞானமும், செல்வமும் காயாரோகணப் பெருமானின் அருளால் வாய்க்கப்பெறும் என்பது தல வரலாறாக விளங்குகிறது.
இறைவர், வழிபட்டோர்
இறைவர்: காயாரோகணேசுவரர்.
வழிபட்டோர்: குரு பகவான் (வியாழன்), மகாலட்சுமி.
ஆலய அமைப்பு
முதல் பிரகாரம்
கட்டமைப்பு பெயர் - பிற்கால பல்லவர் மற்றும் சோழன் காலம் வரஅரசன் பெயர் - பிற்கால பல்லவர் மற்றும் சோழன் காலம்
நூற்றாண்டு - 5th நூற்றாண்டு
கட்டமைப்பு விவரம் - இத்திருக்கோயில் மாடக்கோயில் எனவும் தூங்கானை மாடம் எனவும் வழங்கப்படும் அமைப்பில் உள்ளது கஜபிருஷ்ட்ட கருவரை அமைப்பு உடையது.
தேவகுரு, பிரகஸ்பதி, வியாழன் என்று கூறப்படுபவரும்,. நவக்கிரகங்களில் ஒருவருமான குருபகவான் தனிச்சன்னதியில் கைகளை கூப்பி யிறைவனை வழிபடும் நிலையில் அமர்த்த திருக்கோலத்தில் இங்கு எழுந்தருளி உள்ளார்
கிழக்கு நோக்கிய ஆலயம் மூன்று நிலை ராஜகோபுரம் கொண்டது.
முன்புறம் மிகப்பெரிய சுதை நந்தி மண்டபத்துடன் உள்ளது
ராஜகோபுரம் முன்னாக ஒரு நுழைவு வளைவு அமைக்கப்பட்டு அதில் தல குறிப்பு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்துள்ள ராஜகோபுரம் கடந்தால், பிரகாரத்தில் பலிபீடம் அடுத்து,
கல்நந்தி மண்டபத்துடன் உள்ளார்.
நந்தி மண்டபம் அடுத்து வடபுறம் தனி சன்னதியில் குரு உள்ளார்.
 தென்புறம் வழியாக ஈசன் சன்னதிக்கு உள்ளே செல்ல முடியும்
உள்ள உள்ள முன் மண்டபத்தில் நடராஜர் மற்றும் ஒரு சிறிய நந்தி கிழக்குப்புறத்தில்
நிருதி மண்டபம் அர்த்த மண்டபம் தாண்டி கருவறையில் கிழக்கு நோக்கி ஈசனார் காயாரோகணா ஸ்வாமி அருள் தருகிறார்.

சுவாமி ஆலயம் அடுத்துள்ள தென்புறத்தில் தனி சோமஸ்கந்தர் கமலாம்பாள் சன்னதியும் உண்டு.
பிரகாரத்தில் நால்வர் மற்றும் வழிபட்ட நாகங்கள், மாவிரத லிங்கங்கள், பாலமுருகன், கஜபிருஷ்ட அமைப்பில் கருவரை இதன் கோஷ்ட்டத்தில் நர்த்தன விநாயகர் அமைப்புடன் தனி தட்சினாமூர்த்தி, பிரகாரத்தில் தென்மேற்கில் நாகத்துடன் விநாயகர் தனி சன்னதி கோஷ்ட்ட மேல் பகுதியில் ஸ்ரீவிஷ்ணு உள்ளார். வடக்கில் பிரும்மா அடுத்து துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர்
மேல் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மற்றும் மகாலட்சுமி தனி சன்னதிகள்,
வடக்கில் பைரவர், நவகிரகங்கள், கிழக்கில் சூரியன் மற்றும் தனி சுதை அமைப்பில் குரு சன்னதிகள் உள்ளன.
ஆலயம் அடுத்து வடபுறத்தில் சித்தர் வழிபட்ட லிங்கபேஸ்வர் தனி சன்னதி ஆலயத்தில் உள்ளார்.
மேலும், காயாரோகணேஸ்வரர் கோவிலின் தீர்த்த குளம் முற்றிலும் வித்தியாசமாக ஐந்து மூலைகளுடன் ஐங்கோண வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆலயத்தின் பிற பகுதிகள் பெரிய இடமாகக் காணப்படுகிறது. ஆலயம் மீண்டும் புனரமைப்பு செய்யப்பட்டு 2013ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு ஆலயம் நல்ல பராமரிப்பில் தூய்மையாக உள்ளது சிறப்பு
நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

காஞ்சிபுரம்சந்திரேசுவரர் கோயில் (#காஞ்சிபுரம்நவகிரகத்தலம்)சந்திரன் வழிபட்ட தலம் 16.8.2026

#காஞ்சிபுரம்
சந்திரேசுவரர் கோயில் 
(#காஞ்சிபுரம்நவகிரகத்தலம்)
சந்திரன் வழிபட்ட தலம்

காஞ்சிபுரம் சந்திரேசுவரர் கோயில் (சந்திரேசம்) என்றறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக்கோயில்களில் அமைந்துள்ள நவகிரக பரிகார தலங்களில் சந்திரன் வழிபட்டது

மேலும், சந்திரனுக்கு சோமன்
என்ற மற்றொரு பெயருடனும் விளங்குவதால்; காஞ்சிப் புராணத்தில் இக்கோயில் சோமேச்சரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. திங்கள் பரிகார தலமாக உள்ள இக்கோயில் பற்றிய குறிப்புகள் காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.

இறைவர்: சந்திரேஸ்வரர்.
வழிபட்டோர்: சந்திரன் (திங்கள்)
தல வரலாறு
சந்திர தீர்த்தக் கரையிலிருந்த சந்திரன் வழிபட்ட இச்சிவலிங்க மூர்த்தம் தற்போது அருகிலுள்ள சந்தவெளியம்மன் கோயிலில் பின்புறம் தனி ஆலயத்தில் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. இதன் அருகில் சந்திரன் திருமேனியுள்ளது.
இவ்விறைவரை சந்திரன் வழிபட்ட மூர்த்தியாகும். ஆதலின் இக்கோயில் சந்திரேசம் என்று வழங்குகிறது.
சந்திரதீர்த்தம் என்பது தற்போது வெள்ளைக்குளம் என்றழைக்கப்படுகிறது.
தல பதிகம்
பாடல்: (சந்திர தீர்த்தம்)
வீங்கிருள்சீத் தொளிபரப்பிப் பைங்கூழ் புரக்கும் வெண்கதிரோன்
தேங்கமல முகைஅவிழ்க்குஞ் சருவ தீர்த்தத் தென்திசையின்
ஆங்கண் நறுஞ்சுவைத்தெள்ளாரமுதத்தடந்தொட்ட தன்கோட்டி
பாங்குபெறப்பிஞ்ஞகன் தாள் அருச்சித் தேத்திப்பயன்பெற்றான்.
பொழிப்புரை:
பேரிருளை நீக்கி ஒளியைப் பரப்பிப் பயிரை வளர்க்கும் சந்திரன்
தேன் மருவிய தாமரை அரும்பை மலர்த்துஞ் சருவ தீர்த்தத்திற்குத் தெற்கில்
நறிய சுவையையுடைய தெள்ளிய அரிய அமுத மயமான நீர் நிலையை
அகழ்ந்ததன் கரையில் நற்பண்பமையச் சிவபிரான் திருவடிகளை அருச்சனை
செய்து பயனைப் பெற்றனன்.
ஆலய அமைப்பு 
காஞ்சி மடத்தார்கள் அருளினால்
புராதனமான ஆலயம் புனருத்திரானம் செய்யப்பட்டு நூதனமாக அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு நோக்கி
 ஆலயம் உள்ளது. முன்புறம் நீண்ட மன்டபம் அமைத்துள்ளனர் கருவரை முன் நந்தி உள்ளது. விநாயகர் மற்றும் சந்திரன் தனி சன்னதியும் கட்டப்பட்டுள்ளது கருவரை கோபுரத்தில் பழங்காலத்தில் இருந்தவாரே முனிவர்கள் சிலைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சந்திராஷ்ட்டம தினங்களில் பௌர்னமி தினங்களில் வழிபடுவது மிகச்சிறப்பு என்று குறிப்பிட்டுள்ளனர்.
2019ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
அமைவிடம்
காஞ்சிபுரத்தின் மேற்குப் பகுதியில் பெரிய காஞ்சிபுரம் சாலைத் தெருவிற்கு அருகிலுள்ள சந்தவெளியம்மன் கோயிலுக்கு அருகில் பின்புரம் உள்ள சிறிய தெருவில் உள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தின் மேற்கு திசையில், சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயிலுக்கு செல்லும் பாதையில் சென்றால் இக்கோயிலை அடையலாம்.
நன்றி🙏
#சுப்ராம்தரிசனம் 16.08.2026
#என்றும்அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று

திருவோத்தூர்வேதபுரீசுவரர் கோயில் 16.8.26

#திருவோத்தூர் வேதபுரீசுவரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 240 வது தேவாரத்தலம் ஆகும். தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். ...