Monday, June 22, 2020

#திருமுறைக்காட்சி: #சம்பந்தர்அமுதம் தேவாரம்:02:184:04 பகுதி: 3

#திருமுறைக்காட்சி:
#சம்பந்தர்அமுதம்
தேவாரம்:02:184:04
பகுதி: 3
திருவெண்காடு:
குளிர்ந்த முல்லை நிலம். அதில்
ஓர் அழகிய மலர்ச்சோலையில்
ஒரு சிறிய நீர் நிலை. அருகில் கடல் முத்துக்கள்.

மடல் அவிழ்த்த தாழையின் நிழல் அந்த நீர்நிலையில் மீது விழுகின்றது.
அதில் வாழும் கெண்டை மீன்
தாழையின் நிழலை தம்மைக் கொத்திச் செல்ல வந்த பறவைகள் என்று எண்ணி அஞ்சி மிக வேகமாக அருகில் உள்ள தாமரைப்பூவின் இடையில் சென்று ஒளிந்து கொள்கிறது.
அங்கு கிடக்கும் கடல் முத்துக்கள் 
மீன் செய்யும் இந்த செய்கையைக் கண்டு நகைக்கின்றது.

இவ்வரிய காட்சியைக் கண்ட அங்கு வந்த நமது ஞானப்பிள்ளையார் தமது பாடலை இவ்வாறு அமைக்கிறார்.

விட முண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்

மடல் விண்ட முடத்தாழை  மலர் நிழலைக் குருகென்று

தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூ மறையக்

கடல் விண்ட கதிர் முத்த நகைகாட்டும்
காட்சியதே.

விளங்கு பொருள் :

மனதில் ஏற்படும் மன அயற்சி யன்றி உண்மையான அச்சம் ஒன்றுமில்லை என்று உணர்த்துகிறது

தன் புற = குளிர்ந்த முல்லைநிலம்
தடம் = குளம்

இயற்கையும் தமிழும் தேவாரப் பதிகத்தில் இணைந்த இந்த பாடல்

திருஞானசம்பந்தர் இயற்றியருளியது.

- தேவாரம் இரண்டாம் திருமுறை
- பதிகம் 184. திருவெண்காடு
- பாடல் - 4

சிந்தனையும் பகிர்வும்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024 பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் பதிவு - 15. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 11.08.2024 / குலசேகரபுரம். 18 திருக...