Tuesday, September 15, 2026

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் 5.9.26

ப ழ னி
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் 
🏵️முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இக்கோயில் இயங்குகிறது.

🏵️இங்குள்ள முருகன் சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது. இது முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றாகும்.

🏵️புராணம்
ஒருநாள் நாரதர் மிக அரிதாகக் கிடைத்த ஞானப்பழத்தைப் பரமசிவனுக்கு படைப்பதற்காகக் கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தைத் தன் குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தைப் பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறித் தன் மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கே அந்த ஞானப்பழம் பரிசாகக் கிடைக்கும் என அறிவித்தார். குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறிச் சுழலும் உலகத்தைச் சுற்றி வந்தார். விநாயகனோ தன் பெற்றோரை உலகமாகக் கருதி அவர்களைச் சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவர் நின்ற இடம் "பழம் நீ " (பழனி) என அழைக்கப்படுகிறது.
பழனிமலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன். அவர் ஒரு பெரிய தராசின் உதவிகொண்டு பழனிமலையையும் இடும்பமலையையும் தூக்கிக்கொண்டு வந்து வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

🏵️புராணங்களில் இப்படியான பெயர்க் காரணங்கள் வழங்கப்பட்டாலும் பழனம் என்ற பழந்தமிழ்ச் சொல்லின் அடிப்படையில் உருவான பெயரே பழனி. பழனம் என்ற சொல் விளைச்சலைத் தருகின்ற நிலத்தைக் குறிக்கும். அப்படிப்பட்ட நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் உருவானது.
🏵️முருகன் சிலையின் சிறப்பு
முருகனின் சிலை நவபாசாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாசாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாசாண சிலை மீன்களைப் போன்ற செதில்களைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்பொழுது இந்தச் சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்தச் சிலையின் மீது முழுவதுமாகச் சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் காணும் அனைத்து அடியவர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது.
🏵️போகர் வரலாறு 
போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். இவர் நவபாஷாண முருகன் சிலையைச் செய்ததே மிகச்சுவையான தகவலாகும். அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம், வில்லை போன்ற மருந்துகள் அளித்து நோயைக் குணப்படுத்தி வந்தார். போகரோ நவபாஷாணம் கொண்டு செய்த வில்லைகளைத் தன்னை நாடி வருவோர்க்கு அளித்து வந்தார்.

அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து அதன் மீது சந்தனத்தைப் பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாகத் தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்பது பழனியில் வழங்கி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.
காவடி
கேரள மாநிலம் எழபெத்தவீடு என்ற ஊரைச் சேர்ந்த அடியவர் ஒருவர் சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு காவடியைச் சுமந்து வந்தார். மரம் மற்றும் அலுமினியக் கலவையால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் காவடியின் ஒரு பக்கத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகரும், மற்றொரு பக்கத்தில் சித்தி, புத்தி சமேத விநாயகரும் பொறிக்கப்பட்டுள்ளனர்.

இக்கோவிலுக்கு வி.வி.சி.ஆர். முருகேச முதலியார் என்பவர் தேவஸ்தான கல்லூரிக்கு இலவச இடம், தங்கத் தேர், வைரவேல், தங்க மயில் வாகனம், விஞ்ச் - மின் இழுவை வாகனம் - ஆகியவற்றை நன்கொடையாகச் செய்து கொடுத்தார்
பழனிமலை குன்றின் உச்சியை அடைவதற்கு இரண்டு வழிகள் உள்ளன:
யானைப் பாதை (ஏறுவதற்கு இதைப் பயன்படுத்தினால் எளிதாக இருக்கும்)
நோ் பாதை இதை இறங்குவதற்கு பயன்படுத்தலாம்
படிப்பாதையில் துவக்கத்தில் விநாயகர் உள்ளார். படிப்பாதை முடிவதற்கு முன் இடும்பன் ஆலயமும் முடிவில் வண்ணி மரவிநாயகரும் உள்ளார்.
உச்சியில் கொடிமரம், கல் விளக்குத்தூன் அடுத்து மயில் உள்ளது. வடக்கு நோக்கிய தனி விநாயகர் சன்னதியும் உள்ளது.
தண்டபானி ஆலயம் மேற்கு நோக்கியது.
முன்மண்டபம் நடு மற்றும் உள் மண்டபம் கடந்தால் அருள்தரும் தண்டபாணி தெய்வத்தை தரிசிக்கலாம்.
கருவரை மேல் தங்கவிமான கூரை அமைக்கப்பட்டுள்ளது.
கோஷ்ட்டம் அடுத்து ஒரு பிரகாரம் தென் பகுதியில் நந்தி மற்றும் தனி சன்னதியில் கைலாசநாதர் கிழக்குப் பார்த்து உள்ளார். சுற்றில் சண்டிகேஸ்வரர் உள்ளார். 
தென் மேற்கு மூலையில் போகர் சன்னதி உள்ளது மேற்கில் பிரகதீஸ்வரர், மீனாட்சி சொக்கநாதர் சன்னதியும் இணைந்து உள்ளது
வெளிப்பிரகாரத்தில் கிழக்குப்பார்த்த பெரிய விநாயகர் மற்றும் புதிய அமைப்பாக 18 சித்தர்கள் சன்னதியும் உள்ளன.
பக்தர்கள் தரிசன (இலவச, ரூ.10 மற்றும் ரூ 100 கட்டன) வரிசைகளும் இழுவை ரயில் கேபிள்கார் ஷெட் மற்றும் அன்னதான கூடம் உள்ளன.
தங்கத் தேர் வழிபாடு மாலை 6 மணிக்கு மலைக்கோவிலில் தினமும் நடைபெறுகிறது
ஆலய வளாகத்தில், பஞ்சாமிர்தம் சுவாமி படங்கள் முதலியன விற்பனைக்கடைகள் உள்ளன.
மலை அடி வரத்தில் கைப்பேசி வைக்குமிடம் இலவச காலனிகள் வைக்குமிடம் பத்தர்கள் கூடம் இலவச கழிப்பிடங்கள் முதலியவை உள்ளன.
கார் வேன் பேருந்துகள் தனி நிறுத்துமிடம் உள்ளது. மலை சுற்றி எங்கும் செல்ல இலவச மின் ஊர்திகள் நிறைய உள்ளன.

கோவில் திருவிழாக்கள்
பழனி திருவிழாக்களுக்குப் பெயர்பெற்ற ஊராகும். இங்கு நடக்கும் குறிப்பிடத்தக்க திருவிழாக்கள்:
தைப்பூசம் பங்குனி உத்திரம் சூரசம்ஹாரம் 
பஞ்சாமிர்தம் - மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பிரசாதம்.
🏵️ மலை அடிவாரம் படிப்பாதை எதிரில் கிழக்கு நோக்கிய, மீனாட்சிசுந்தரேஸ்வரர் தனி ஆலயம் சிறப்பாக உள்ளது

இங்கிருந்து திரு ஆவினன்குடி நடந்தே செல்லலாம். 
5.09.2026 மீள் தரிசனம்
5.9.26 #சுப்ராம்தரிசனம் மீள்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

https://www.facebook.com/share/p/19kGoZEvCD/https://www.facebook.com/share/p/19kGoZEvCD/
Check out this review of Palani Dhandayudhapani Temple on Google Maps
https://goo.gl/maps/5eLV9nohjW2UMdXs8?g_st=ac

No comments:

Post a Comment

தாராபுரம் அகத்தீஸ்வரர் ஆலயம் - தாராபுரம் அகத்தீஸ்வரர் ஆலயம்விடாராபுரம் - தாராபுரம் - வைப்புத்தலம்தாராபுரம் அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் 5.06 9

தாராபுரம்  அகத்தீஸ்வரர் ஆலயம் விடாராபுரம் - தாராபுரம் - வைப்புத்தலம் தாராபுரம் அகஸ்தீஸ்வர சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட...