சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி கோயில்
தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம், சென்னிமலை என்னும் ஊரில் அமைந்துள்ள மலை மீதுள்ள முருகன் கோயிலாகும்.
இந்தியப் புகழ்பெற்ற இந்த கோவிலில் முருகனுக்கு அபிஷேகம் செய்தபின் தயிர் புளிப்பதில்லை என்ற அதிசயமும் நிகழ்கிறது
ஈரோடு - பெருந்துறை சாலையில் அமைந்த இக்கோயில், ஈரோட்டிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும், பெருந்துறையிலிருந்து 13 கி.மீ. தொலைவிலும், ஈங்கூர் தொடருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் உள்ள சென்னிமலை அருகே உள்ள இச்சிப்பாளையத்தின் மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது.
மலைக்கு சென்றுவர ஆலய பேருந்து வசதி உள்ளது
மலைப்படி ஆரம்பம் முதல், மலை உச்சிவரை கடம்பனேசுவரர், இடும்பன், வள்ளியம்மன் பாதம், முத்துக்குமாரவாசர் என்ற மலைக்காவலர், ஆற்றுமலை விநாயகர் என்று சிறுசிறு சன்னதிகள் உள்ளன. நீண்ட இலைகளுடன் கூடிய துரட்டி மரம் என்ற மிகப் பழைய மரம் ஒன்று இங்கு மலைப்படி வழியில் உள்ளது. சென்னிமலை முருகன் கோவில் கிபி 9ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டது. சென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்ல 1,320 படிகள் உள்ளன.
ஆலயம் ராஜகோபுரம் முன் கல் விளக்குத்தூண், வேம்பு விநாயகர் பக்தர்கள் தங்கும் கூடம் உள்ளன.
ஆலயம் உட்புறம் பலிபீடம், கொடிமரம் உள்ளது. உயரமான முன் மன்டபம்
உன்மன்டபம் அடுத்து தண்டாயுதபாணி கருவரையில் உள்ளார் கோஷ்ட்டத்தில் நவகிரகங்கள் தனித்தனியே சுற்றிலும் உள்ளார்கள்
சென்னிமலை ஆண்டவர் மூலவர் சிலை சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிலை இந்த சென்னிமலை முருகன்.
பிரதான முருகன் சன்னதி பிரகாரத்தில் கைலாசநாதர் மற்றும் உமையவள்ளி சன்னதிகள் உண்டு.
மலைக் கோவிலின் பின்புறம் உள்ள படிக்கட்டுகளின் (300 படிகள்) வழியாக சென்றால், தனி ஆலயமாக அமிர்தவள்ளி சுந்தரவள்ளி ( இவர்கள் தவம் செய்து சென்னிமலை ஆண்டவரை மணம் செய்தவர்கள்) கிழக்கு நோக்கி ஒரே கருவரையில் உள்ளனர்
அதற்குப்பின்னால் சிறிது தூரம் சென்றால், பிண்ணாக்கீசர் சித்தர் குகை உள்ளது. அங்கே பிண்ணாக்கீசர் சித்தர் தவம் செய்த குகையும், பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான அரச மரமும் உள்ளது. இந்த மரத்தடியில் தான் சித்தர் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது.
முழுதும் எளிதாக எறிவர சரிவான படிகளும் கூரையும் அமைக்கப்பட்டுள்ளது எளிதாக சென்று தரிசித்தும் வரலாம்.
பகலில் மட்டுமே 5.30 வரை திறந்திருக்கும்
சிறப்புகள்
தேவராய சாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய கந்தர் சஷ்டிக்கவசம் என்ற என்ற கவசமாலை இத்தலத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
இத்தலத்தின் குன்றில் இரண்டு காளை மாடுகளைப் பூட்டிய மாட்டு வண்டி ஒன்று இந்த மலைப்படிக்கட்டுகள் வழியே ஏறிச்சென்று மலை உச்சி அடைந்த சம்பவம் இங்கு சமீபத்தில் நடந்துள்ளது.
விழாக்கள்
தைப்பூசத் தேர்த்திருவிழா மற்றும் பங்குனி தேர்த்திருவிழா
செவ்வாய் கிழமை, சஷ்டி திதி, கார்த்திகை நட்சத்திரம், அமாவாசை மற்றும் பௌர்ணமி சிறப்பு பூசை நாட்கள்
இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
6.09.2026
6.9.26 #சுப்ராம்தரிசனம் மீள்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
Check out this review of Chennimalai Murugan Temple on Google Maps
https://goo.gl/maps/TZck43YgrYeytMca6?g_st=ac
பின்னாக்குசித்தர்
Check out this review of Pinnaku Siddhar Cave (Jeeva Samathi) on Google Maps
https://goo.gl/maps/QqKPwD8YX1K2j74R9?g_st=ac
No comments:
Post a Comment