Monday, June 22, 2020

#திருமுறைக்காட்சி: #சேக்கிழார்அமுதம் பகுதி - 5.

#திருமுறைக்காட்சி:
#சேக்கிழார்அமுதம்
பகுதி - 5.
(30. காரைக்காலம்மையார் புராணம்
- பாடல் 1774.)

#அன்னையர் தினம்:

வரும்இவள் நம்மைப் பேணும் அம்மை காண்   உமையே  மற்றிப்

பெருமைசேர்  வடிவம் வேண்டிப்  பெற்றனள்  என்று   பின்றை

அருகுவந் தணைய  நோக்கி  அம்மையே
என்னுஞ் செம்மை

ஒரு மொழி உலகம்  எல்லாம்  உய்யவே 
அருளிச் செய்தார்.

(எம்பெருமான், "உமையே வரும் இவள் நம்மைப் பேணும் அம்மையே ஆவாள்.
இந்தப் பேய் வடிவத்தை நம்மை வேண்டிப் பெற்றாள்"
நெருங்கி வந்த அம்மையைப் பார்த்து,
"நம் அம்மையே" என்ற செம்மை தரும்
ஒப்பிலா ஒரு சொல்லை உலகம் எல்லாம் உய்யும் பொருட்டு அருளினார்.
- தெய்வச்சேக்கிழார்
- திருத்தொண்டர் புராணம்
- முதற் காண்டம்
- 5. திருநின்ற சருக்கம்
- 30. காரைக்காலம்மையார் புராணம்
- பாடல் 1774.
               (அன்னையர் தினம்)
நன்றியுடன்
சுப்ராம் அருணாசலம்

No comments:

Post a Comment

கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - (குலசேகரமுடையார்) - பிரதோஷக்குழு யாத்ரா 17.8.2025

#கல்லிடைக்குறிச்சி -  குலசேகரமுடையார் ஆலயம் 17.8.25 #கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - குலசேகரமுடையார் அம்பாள் = தர்மசவர்த்தினி (அறம...