கொங்குவடுகநாதர் ஆலயம்
எட்டு பிராகாரங்களுடன், எட்டுத் தெப்பக்குளங்களுடன் பிரமாண்டமாக இந்தக் குண்டடம் ஆலயம் அமைந்திருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. அவையெல்லாம் எங்கே போயின என்பது காலச்சக்கரத்தைச் சுழற்றும் கால பைரவருக்கே வெளிச்சம்!
வடுகபைரவர், சுவாமி விடங்தீஸ்வரர், அம்பாள் விசாலாட்சி கிழக்கு நோக்கிய ஆலயம்
ஆலயத்தின் எதிரில் அழகுற அமைந்திருக்கிறது திருக்குளம். நடுவில் அழகிய மண்டபம். அங்கே ஒரு நந்தி. கொஞ்சம் நடந்தால் பழமையான விளக்குத்தூண் காட்சியளிக்கிறது. அதில் விநாயகர், திரிசூலம், லிங்கத்தின் மேல் பால் சுரக்கும் பசு போன்ற வடிவங்கள் பளி்ச்சிடுகிறது.
ராஜகோபுரத்திற்குத் தலைவணங்கி உள்ளே நுழைந்து பிராகாரத்தை வலம் வரலாம். சூரியன், சந்திரன், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பட்டக்காரர், வரதராஜ பெருமாள், சனீஸ்வரர், நவகிரக நாயகர்கள் ஆகியோரைக் காணலாம். நந்தவனத்தில் மரங்கள் அசைந்தாடுகின்றன.
இக்கோயிலில் மூலவராக விடங்கீஸ்வரர்கிழக்கு நோக்கியும் அவருக்கு முன், உபசன்னதியாக கால பைரவரும் (வடுகநாத சுவாமி) தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர்.
இங்கே முருகப் பெருமானின் வாகனமான மயிலின் தலை, வழக்கத்துக்கு மாறாக, இடதுபக்கம் நோக்கி அமைந்திருக்கிறது. சூரசம்ஹாரத்திற்கு முன்பு, இந்திரன் மயிலாக இருந்து போருக்குச் சென்ற வடிவம்.
தனித்தனி கோயில்களில் விசாலாட்சி அம்மனும், விடங்கீஸ்வரரும் அருள்பாலிக்கிறார்கள். காசி விசாலாட்சியும், காசி விஸ்வநாதருமே இவர்கள். முனிவருக்காக பைரவரை அனுப்பியவர்கள் இவர்கள்தான் என்று நினைக்கும்போது நெஞ்சம் நெகிழ்கிறது.
அடுத்ததாய், இந்த ஆலயத்தின் கதாநாயகனான கால பைரவ வடுகநாதரின் சன்னதி. காசியிலிருந்து வந்தவர் இங்கேயே தங்கி, இங்கே லீலைகளைப் புரிந்து கொண்டிருக்கிறார். தேய்பிறை அஷ்டமி தினங்களில் கால பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் மிகச் சிறப்பாக நடைபெறுகினறன.
பைரவர், சுவாமி கருவரை முன் மண்டபத் தூணில் கருவில் உள்ள குழந்தை வளர்ச்சியை படிப்படியாகக் காட்டும் சிற்பம் கவனிக்கத்தக்கது
வெளி நுழைவு மண்டபத்தில் ஆலயதல வரலாற்றை விளக்கும் ஓவியங்கள் மிகவும் அழகாக வைத்துள்ளனர்.
சமீபத்தில் குடமுழுக்கு செய்யப்பட்டிருப்பதால், ஆலயம் மிகவும் சுத்தமாகவும் மிக அழகாகவும் உள்ளது
அமைவிடம்
குண்டடத்தில் உள்ள கால பைரவர் கோயில் (கொங்கு வடுகநாத சுவாமி கோயில்) தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் உள்ள குண்டடம் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
கோவை - மதுரை நெடுஞ்சாலையில் பல்லடத்திற்கும் தாராபுரத்திற்கும் நடுவில் அமைந்துள்ளது.
5.09.2026
5.9.26 #சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
Check out this review of Kongu Vadukanatha Swamy Temple, Kundadam on Google Maps
https://goo.gl/maps/SXVRM96EQMRBY8vJA?g_st=ac
No comments:
Post a Comment