பெரியவுடையார் ஆலயம்
🌺#திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு அருகில் சண்முக நதிக்கரையில் அமைந்துள்ள கோதைமங்கலம் அருள்மிகு பெரிய ஆவுடையார் (பெருவுடையார்) திருக்கோவில் மிகவும் தொன்மை வாய்ந்த சிவத்தலமாகும்.🌺
🌺#அமைவிடம் & பஸ் வசதி
அமைவிடம்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோவிலில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில், சண்முக நதிக்கரையில் கோதைமங்கலம் பகுதியில் இயற்கை சூழலில் அமைந்துள்ளது 🌺
🌺#தலவரலாறு & சிறப்புகள்
சுயம்பு லிங்கம்: மூலவர்
#பெரியஆவுடையார் (பிரகதீஸ்வரர்/பெருவுடையார்) ஒரு சுயம்பு லிங்க மூர்த்தியாக வழிபடப்படுகிறார். 🌺
🌺#போகர் காலத்திற்கு முந்தைய தலம்: நவபாஷாண முருகர் சிலையை பிரதிஷ்டை செய்த போகர் சித்தரின் காலத்திற்கும் முற்பட்ட பழமையான வரலாற்றைக் கொண்ட தலமாக இது கருதப்படுகிறது. 🌺
🌺#பழனி தேவஸ்தான நிர்வாகம்: இக்கோவில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. 🌺
🌺#கல்வெட்டுகள் & சிற்பங்கள்: சோழர் மற்றும் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 16-க்கும் மேற்பட்ட பழமையான கல்வெட்டுகளும்,
கோஷ்ட்டத்தில் தனி பிரும்மா பெருமாள் தட்சிணாமூர்த்தி சிற்பம் குருந்தமரம் அழகிய அமைப்பு, தனி ருத்ரன் உள்ளிட்ட அழகிய மிக அழகிய கற்சிற்பங்களும் இங்கு அமையப்பெற்றுள்ளன. 🌺
மேற்குப்பார்த்த ஆலயம்
🌺நடராஜர் பெருமானின் சிற்ப அழகு சிறப்புகள் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு நடராஜர் பெருமான், சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஆனந்த தாண்டவக் கோலத்தில் காட்சியளிக்கிறார். 🌺
🌺#ஆருத்ரா தரிசனம், மார்கழி திருவாதிரை மற்றும் மகா சிவராத்திரி நாட்களில் நடராஜர் பெருமானுக்கு 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் வெகு விமரிசையாக நடைபெறும். 🌺
🌺இத்தல #நடராஜரை வணங்கினால் கலைகள் சிறக்கும், மன அமைதியும் குடும்பத்தில் சுபிட்சமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 🌺
🌺(#பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம் போன்ற விசேஷ நாட்களில் நடை கூடுதல் நேரம் திறந்திருக்கும்).🌺
🌺பஸ் வசதி: #பழனி பேருந்து 🌺நிலையத்திலிருந்து பழைய தாராபுரம் / மானூர் செல்லும் நகரப் பேருந்துகளில் (Town Bus) ஏறி 3 கி.மீ பயணித்து, கோவில் நுழைவு வளைவில் இறங்கி 1 கி.மீ நடைபயணமாகவோ அல்லது ஆட்டோ மூலமாகவோ கோவிலை அடையலாம். பழனி பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ/டாக்ஸி வசதிகள் நேரடியாக உள்ளன.🌺
🌺தரிசன & நடை திறப்பு நேரம் 🌺
🌺#காலை: 8 முதல் மாலை 6 🌺 வரை🌺
இறைவன் / இறைவி: இங்குள்ள இறைவன் பெருவுடையார் (பெரிய ஆவுடையார்) என்றும், இறைவி அண்ணாமலை உண்ணாமுலை நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். அமைப்பு: இது சண்முக நதிக்கரையின் இயற்கைச் சூழலில் அமைந்த ஒரு சிறப்பான சிவாலயமாகும்
5.09.2026 மீள் தரிசனம்
5.9.26 #சுப்ராம்தரிசனம் மீள்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
Check out this review of Periya Aavudayaar Temple on Google Maps
https://goo.gl/maps/E9XpRGjvUjNatBRC8
No comments:
Post a Comment