Monday, June 22, 2020

#திருமுறைகாட்சி: #சம்பந்தர்அமுதம் பகுதி - 4 (தேவாரம் : 3:80:07)

#திருமுறைகாட்சி:
#சம்பந்தர்அமுதம்
பகுதி - 4
(தேவாரம் : 3:80:07)

7ம் நூற்றாண்டில் ஒரு லேசர் ஒளிவிளக்கா!!!

தேவார பதிகத்தில் ஒரு காட்சி:

திருவீழிமிழலை:

7ம் நூற்றாண்டு

அந்நகர்  ஆகாயத்தின் மேலே எங்கும் கரும்புகை கவிழ்ந்து  மனம் கலந்து மிக இருள்  சூழ்ந்து அடர்ந்து பரவியிருந்தது.

அவ்விருளில் கதிர் விட்ட ஒளி போல் விளக்கு ஒன்று எரிவது போன்ற ஒளி காட்சி ஒன்றும் அற்புதமாக இருந்தது.

(இக்காலத்தில் லேசர் ஒளி போலக் கொள்வோம்)

 அந்தப்புகை எங்கிருந்து வருகிறது என்று நெருங்கி பார்க்கும் போது
வேத மந்திரங்கள் ஓதி வேதியர்கள் செய்யும் யாக வேள்வியிலிருந்து வரும் புகை என்று புரிந்தது.

சரி நீண்ட விளக்கொளி எப்படி என்று ஆராய்ந்தால்

அம்மாநகரில் உள்ள உயர்ந்த மாடமாளிகையில் பதித்து வைக்கப்பட்ட இரத்தினம் முதலிய கற்களின் மிளிரும் ஒளியானது இந்த புகை இருளைப் போக்கி வீசுகிறது.

 இந்த ஒளிக்கதிர் தான்  தழலில் ஏற்றிய விளக்குப் போன்று தோன்றுகிறது.

இந்த அரிய காட்சியைக் கண்ட அங்கு வரும் ஞானசம்பந்த பெருமான் தம் பதிகத்தில் குறித்துள்ள பாடல் இது:

மந்திர நன்  மாமறையி னோடு வளர்
வேள்விமிசை  மிக்கபுகை போய்

அந்தர விசும்பணவி   அற்புதம்
எனப்படரும்   ஆழியிருள்வாய்

மந்தரநன்    மாளிகை    நிலாவுமணி
நீடு கதிர்  விட்ட  ஒளி போய்

வெந்தழல் விளக்கு என   விரும்பினர்
திருந்து பதி   வீழிநகரே.

- தேவாரம்  பதிகம் (338)
- மூன்றாம் திருமுறை
- பதிகம்: 80 - திருவீழிமிழலை
- பாடல் - 7.

பொருள்.
இத்திருப்பாட்டு திருவீழிமிழலை நகரின் அக்கால  சிறப்பை உணர்த்தியது.
தெய்வீக அருள் நலமும் செல்வ நலமும் இணைந்து இப்பதி விளங்கிற்று என்று உணரலாம்.
திருஞானசம்பந்தர் : கி.பி. 609 - 642 வரையுள்ள காலத்தில் 16 ஆண்டுகள் நிலவுலகில் வாழ்ந்திருந்தார் என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐

திருவீழிமிழலை - தலம் பற்றிய சில குறிப்புகள்:

நாச்சியார் கோவில் - பூந்தோட்டம் செல்லும் பாதையில் உள்ள தேவார மூவரால் பாடல் பெற்ற திருத்தலம்.

திருமால் தனது கண்ணை இடந்து  அருச்சித்துச் சக்கராயுதம் பெற்ற திருத்தலம்.
வீழிநாதர்
அம்பாள் கார்த்தியாயினியாக அவதரித்து தவமிருந்து மணம் கொண்ட கல்யாணசுந்தரர்
விண்ணிலிருந்து திருமாலால்
கொண்டுவரப்பட்ட விண்ணிழி விமானம் தாங்கிய கருவரை
திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் படிக்காசு பெற்று அமுது அளித்த பதியிது.
🙏🙏🙏🙏🙏
சிந்தனை ஆக்கம்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
 🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏🛐🙏

No comments:

Post a Comment

கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - (குலசேகரமுடையார்) - பிரதோஷக்குழு யாத்ரா 17.8.2025

#கல்லிடைக்குறிச்சி -  குலசேகரமுடையார் ஆலயம் 17.8.25 #கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - குலசேகரமுடையார் அம்பாள் = தர்மசவர்த்தினி (அறம...