Monday, June 22, 2020

#திருமுறைக்காட்சி: #சம்பந்தர்அமுதம் பகுதி - 2

#திருமுறைக்காட்சி:
#சம்பந்தர்அமுதம்
பகுதி - 2
🙏🙏🙏🧘🛐🙏🙏🙏
அழகிய நீர் நிறைந்த சுனை ஒன்று அதில் சிறு சிறு பறவைகள் கூட்டம் கூடி  நிற்கும்.

அடுத்திருக்கும் மாஞ்சோலை அதில்
மாங்கனிகள் கொத்துக் கொத்தாய் தொங்கி நிற்கும் அதன் வழியெங்கும்
மலர் கொம்பில் மனம் வீசும் மலர்கள்

அது வழி சென்ற தவம் கொண்ட பக்தர் தம் பூசைக்கு ஏற்ற அம்மலர் கண்டார்.

நீண்ட அந்த மலர்க்கொம்பு வளைத்து அதன் தலை நிறைந்த மலர் பறித்து அம்மலர் கொம்பை விட்டுவிட அதுமீண்டு நிமிர்ந்து அங்கிருந்த மாஞ்சோலையில் கனிந்து நின்ற மாங்கனிகள் மேல் பட
அவை கவண் எறிகல் போல் அந்த சுனைக்கரையில் போய் வீழ,
அங்கிருந்த பறவைகள் அஞ்சி அகலும்.

இந்தக் காட்சியைக் கண்டு தம்தேவாரப்  பதிகத்தில் வைத்து அருளுரைத்தார்
நம் தமிழ்ஞானசம்பந்தர் :
🙏🙏🙏🧘🛐🙏🙏🙏
அப்பாடல்:
புவி முதல் ஐம் பூதமாய்ப் புலன் ஐந்தாய்
நிலன் ஐந்தாய்க்  கரண நான்காய்
அவையவை சேர் பயனுருவாய் அல்லவுரு
வாய்நின்றான் அமரும் கோயில்

தவ முயல்வோர் மலர் பறிப்பத் தாழ விடு
கொம்புதைப்பக் கொக்கின் காய்கள்
கவண் எறிகல் போல்சுனையிற் கரை சேரப்
புள்ளிரியும் கழுமலமே.
🙏🙏🙏🧘🛐🙏🙏🙏
கொக்கின் காய்கள்= மாங்காய்கள்
புள் இரியும்= பறவை அஞ்சி விலகும்

மேலும் சில பொருள் உரைகள்:
ஐம்பூதம் : நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்
ஐம்புலன் : மெய், வாய் கண் மூக்கு செவி
ஐ நிலங்கள்: குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல், பாலை
அந்தக்கரணங்கள்: மனம், புத்தி, அகங்காரம், சித்தம்
🙏🙏🙏🧘🛐🙏🙏🙏
பொருள் குறிப்புரை :
ஐந்து பூதங்களாய், நிலங்களாய், கரணங்களாய், அவ்வவற்றின்  பயனாய் அரு உரு வாய் அல்லாதாய் நின்ற ஈசன் அமரும் கோவில்   கழுமலம் என்ற சீர்காழி தலமே.
🙏🙏🙏🧘🛐🙏🙏🙏
- தேவாரம் - முதல் திருமுறை
- பதிகம்: 129 - திருக்கழுமலம் (சீர்காழி)
- பாடல்: 7
🙏🙏🙏🧘🛐🙏🙏🙏
சிந்தனையாக்கம்:
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்
🙏🙏🙏🧘🛐🙏🙏🙏

No comments:

Post a Comment

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு. ⛳தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி ...