அர்த்தநாரீஸ்வரர் கோயில்
🛕தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகியநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.
🛕அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோவில்
அமைவிடம்: கள்ளக்குறிச்சி மாவட்டம்,
கள்ளக்குறிச்சி வட்டம் , உலகியநல்லூர்.
கோயில் தகவல்
🛕மூலவர்: அர்த்தநாரீஸ்வரர்
இறைவன்:ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்
இறைவி: ஸ்ரீபிரஹன்நாயகி, பெரிய நாயகி
பதினான்காம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டது.
🛕2003ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ளது.
🛕கோயில் அமைப்பு
🙇முதலில் இந்த ஆலயம் மூன்றாம் குலோத்துங்கன்- வீரராஜேந்திர சோழ மன்னாரால் கி.பி.1184 லில் கட்டப்பட்டது. செழியத் தாரையர்கள் மரபில் வந்த அந்தால தீர்த்த செழியன் ராஜகோபுரம் கட்டினான்
🛕 அர்த்தநாரிஸ்வரர் ஆலயத்தின் கருவரை மற்றும் அர்த்த மண்டபம் கி.பி 1184-ல் மூன்றாம் குலோத்துங்கன் என்று பெயர் பெற்ற வீரராஜேந்திரன் சோழர் காலத்தில் கட்டப்பட்டது.
🛕 ஆலய ஏழு நிலைக் கோபுரம், மதில்கள் மற்றும் பிற பகுதிகள் சோழ மன்னர்கள் ஆட்சிப் பிறகு வந்த குறுநில மன்னன் அந்தாலந்தீர்த்த செழியன் காலத்தில் கட்டப்பட்டது..
⚡இக்கோயிலில் அர்த்தநாரீஸ்வரர், அம்பாள் சன்னதிகளும், விநாயகர், முருகர், நவகிரகம், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் உபசன்னதிகளும் உள்ளன.
⚡இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது.
⚡இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகின்றது.
🌟மிகப்பெரிய கற்றளி ஆலயம்.
🌟கிழக்குப் பார்த்த ஆலயங்கள்
🌟சுவாமி வலது புறம் அம்பாள் தனி சன்னதி
🌟சிவாலயவிதிகள்படி மற்ற தெய்வ சிலைகளும் பிரகாரத்தில் அமைந்துள்ளன.
🌟அம்பாள் சன்னதி முன் ராகு கேது சன்னதி புதிதாக அமைக்கப்பட்டுள்ளது
🌟ஆலயவளாகத்தில் வடகிழக்கில் குளம் ஒன்றும் உள்ளது.
மக்களின் விழிப்பு
🛕சின்னசேலம் அருகே உலகியநல்லூர் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது.
🛕இந்த கோவிலில் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
அதன் பிறகு முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், இந்த கோவில் சிதிலமடைந்தது. இதனால் கோவிலில் அன்றாட பூஜைகள் கூட நடத்தப்படவில்லை.
கல் வெட்டில் உள்ள கோயிலுக்குரிய 4 வேலி நிலம் முதலியவை இப்போது யாரிடம் உள்ளது என்று தெரியவில்லையாம்!
🍀இந்த நிலையில் கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதி பக்தர்கள் முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள், திருப்பணி உபயதாரர்கள், பொதுமக்கள், நன்கொடையாளர்கள் ஒன்று சேர்ந்து கோவிலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
2023ல் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.
(வலைதள - தகவல்கள்)
⛳ #பயண அனுபவகுறிப்புகள்🕊️
🪴மிகப்பழமையான ஆலயம் மீட்கப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டு பராமரிப்பில் உள்ளது.
💦குருக்களுக்கு முன் தகவல் தந்து தரிசித்தோம்.
💦ஆலயம் வரை சாலைவசதிகளும் நல்ல நிலையில் உள்ளது.
💦சிறிய கிராமம் பெரிய கடைகள், வசதிகள் இல்லை.
💦ஆலயம் நித்திய கால பூசையுடன், வழிபாட்டில் உள்ளது.
🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻
⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா
🛕#ஆன்மீகதலயாத்திரை:
சேலம் 8, 9 நவம்பர், 2025.
நன்றி🙏 9.11.2025
🔱🧘🏼♻️😂⛳🙏🛕🏘️💐⛳🛐
No comments:
Post a Comment