🪷கள்ளக்குறிச்சி மாவட்டம் ,சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி கிராமத்தில் அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
🪷இச்சிவாலயத்தின் மூலவர் சொர்ணபுரீசுவரர் என்றும், அம்பிகை உமையாள் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலம் 1300 ஆண்டுகள் பழமையானதாகும்.
தல வரலாறு
🛐காகபுஜண்டர் 18 சித்தர்களின் தலைவராக கருதப்படுகிறார். அவர் இத்தலத்தில் 16 ஆண்டுகள் கடும்தவமிருந்து அதன் பயனாக 16 முகங்கள் கொண்ட சோடச லிங்கத்தின் தரிசனம் பெற்றார். அதைப் போன்ற சிவலிங்கத்தினை உருவாக்கி தென் பொன்பரப்பி பகுதியை ஆட்சி செய்த வானகோவராயன் எனும் மன்னனிடம் அளித்தார். மன்னர் இந்த லிங்கத்தினை வைத்து கோயில் அமைத்தார்.
தல சிறப்பு
⛳இச்சிவாலயத்தின் மூலவரான சொர்ணபுரீசுவரர் லிங்க வடிவில் காட்சிதருகிறார். இந்த லிங்கம் சோடச லிங்கம் எனப்படும் 16 பட்டைகளுடன் கூடியதாகும்.
⛳இங்கு 1300 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களின் தலைமை குருவாக கருதப்படும் காகபுஜண்டர், 16 ஆண்டுகால தவத்தின் பலனாக 16 முகங்களுடன் கூடிய சிவலிங்கத்தை தரிசனம் செய்தார்.அதேபோல் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, எதிர்காலத்தில் பக்தர்கள் வணங்க வேண்டும் என கருதினார். அப்போது, தென்பொன்பரப்பி பகுதியை ஆட்சி செய்த, வானகோவராயன் என்ற மன்னன் மற்ற சிவாலயங்களில் இல்லாத சிறப்புகளுடன் இந்த லிங்கத்தை உருவாக்கினார் என்பது வரலாறு.இக்கோவிலில், சிவலிங்கம் 16 பட்டைகளுடன் அருள்பாலிக்கிறார்.
ஆலய அமைப்பு
🛕மிகப்பெரிய கற்றளி ஆலயமாக இருந்து காலவெள்ளத்தில் சிதைக்கப்பட்டு, தற்போது மீட்கப்பட்டு வருகிறது.
🛕கிழக்குப் பார்த்த ஆலயம். கருவரை விமானம் தஞ்சாவூர் விமான அமைப்பை ஒத்து இருக்கிறது.
🛕ராஜகோபுரம் இல்லை. ரிஷபத்தில் சுவாமி அம்பாள் காட்சிக் கோபுரம் உள்ளது. ஆலயம் புதிய சுற்றுச் சுவற்றுடன் உள்ளது.
🌼மிக மிகப்பழமையான ஆலயம் சிதைந்து விட்டிருந்து தற்போது திருப்பணிகள் தொடங்கி நடை பெற்று வருகின்றன.
🌼ஏகப்பிரகாரம், தனி விநாயகர் மற்றும் முருகன் மயில்மீதமர்ந்து, வள்ளிதெய்வானையுடன்,
விநாயகர், தட்சினாமூர்த்தி, விஷ்ணு, பிரும்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர், கருவரைக் கோஷ்ட்டத்தில் அற்புதமான கல்சிலைகள்.
⛳கருவரை, அர்த்தமண்டபம், முன்மண்டபத்துடன் உள்ளது. நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம் இது. இந்த கல்லை கையால் தட்டிபார்த்தால், வெண்கலச் சத்தம் எழுவது பிரத்யேக சிறப்பிற்குச் சான்று.
🛕கருவறை வாசலில் துவாரபாலகர்களுக்கு பதிலாக, இரு லிங்கங்கள் ,. மூலஸ்தானத்தில் காகபுஜண்டரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
🌼சுமார் 5.5 அடி உயரத்திற்கு, பிரம்மா மற்றும் விஷ்ணு பீடங்கள் மீது கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளது. உலகையே கட்டியாளும் மும்மூர்த்திகளும் இவ்வாறு ஒரே வடிவமைப்பில் இணைந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும்.
🌼அதேபோல், காகபுஜண்டர் இந்த கோவிலின் அருகில் சமாதி அடைந்ததை ஒட்டி சமாதி பீடம் அமைக்கப்பட்டு விளக்கு ஏற்றப்பட்டு வருகிறது.
🍀எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் தனி மண்டபத்தில் உள்ளார். தன் தலையை ஒரு பக்கமாக சாய்த்திருப்பதைக் காணலாம். ஆனால், இக்கோவிலில் பால நந்தியாக வீற்றிருப்பதுதால், கொம்புகளின் இடையூறின்றி பிரதோஷ காலங்களில் நேரடியாக சிவதரிசனம் கிடைக்கிறது.
🌼சுவாமி இடது புறம் அம்பாள் தனி சன்னதி கிழக்கு நோக்கிய அமைப்பு. முன்புறம் தனி நந்தி.
🛕இத்தலத்து அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இவள் கிழக்கு பார்த்து நின்றிருந்தாலும், இவளது முகம் சிவன் இருக்கும் திசைநோக்கி சற்று திரும்பியுள்ளது.
சூரிய பூசை
🏵️ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குனி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் பாலநந்தியின் இரு இளம் கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவதைக் காணலாம். (பாலநந்திக்கும் கருவறைக்கும் உள்ள தூரம் 70 அடியாகும்).
🌼இந்த லிங்கம் நவபாசாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை உடையது. மேலும் 5.5 அடி உயரம் கொண்டது.
🌼காகபுஜண்டரின் சமாதி இக்கோயிலின் வடகிழக்கில் உள்ளது.
🌼மேலும், ராகு கால வேளையில் தேன், தயிர், பால் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடக்கிறது. சிவனுக்கு பின்னால் மகாவிஷ்ணு ருத்ராட்சம் அணிந்து காட்சி தருகிறார். சிவனும் தானும் ஒன்றே என்பதை காகபுஜண்டருக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு காட்சி தருகிறார்.
விழாக்கள்
🌼ஆவணி பவுர்ணமி, பங்குனி உத்திரம், பிரதோஷம், சிவராத்திரி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டும்
மகிமைகள்
🌼திருமணத்தடையின் காரணமாக நீண்ட காலமாக திருமணமாகாதவர்கள், 16 பிரதோஷ தினங்களில் தொடர்ந்து ஈசனை தரிசித்து வந்தால் திருமணத்தடை நீங்கும். ராகு, கேது, செவ்வாய் மற்றும் களத்திரதோஷம் உள்ளவர்கள் மற்றும் பலவித கிரக தோஷங்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், மனபாரம் உள்ளவர்கள், நிலத்தகராறு, பில்லிசூனியம் ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சொர்ணபுரீஸ்வரரை தொடர்ந்து பிரதோஷ காலங்களில் வழிபட்டு வந்தால் பிரச்சனைகள் தீருவதோடு, கைவிட்டுப் போன சொத்துக்கள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு தேன் அபிஷேகம் செய்தால் சுப பலன்கள் கிடைக்கும்.
🌼செவ்வாய், வெள்ளி ஞாயிறு, ராகு காலங்களும் மற்றும் திங்கட்கிழமை, பெளர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களும், தேன் அபிஷேகம் செய்ய உகந்த நாட்களாகும். தோஷமுடையவர்கள் தேன் அபிஷேகம் செய்த தேனை 16 தினங்களுக்கு காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சுப பலன்கள் கிடைக்கும்.
🏵️எல்லா சிவாலயங்களிலும் நந்திதேவர் தன் தலையை ஒருபக்கமாகசாய்த்திருப்பதைக் காணலாம். ஆனால், இக்கோயிலில் பால நந்தியாக வீற்றிருப்பதால், கொம்புகளின் இடையூறின்றி பிரதோஷ காலங்களில் நேரடியாக சிவதரிசனம் கிடைக்கிறது.
🛕இக்கோயிலானது வாயு ஸ்தலத்திற்கும், பஞ்சபூத ஸ்தலத்திற்கும் இணையாக இருப்பதால் இதன் கருவறையானது மிகவும் உக்கிரமானதாக இருக்கும். இதன் கருவறையில் ஏற்படும் தீபமானது துடித்துக்கொண்டே இருக்கும் என்று காகபுஜண்டர் நாடி சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
🌼இதனால் கருவறையின் மையத்தில் அமைந்த தீபம் மட்டும் இன்றும் துடிப்புடன் எரிந்து கொண்டிருப்பது நாடி சுவடியின் பூரணத்துவத்தை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.
🌼மேலும் ராகு கால வேளையில், தேன், பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், விபூதி, சந்தனம், திருமஞ்சனம், கரும்புச்சாறு, எலுமிச்சம்பழ சாறு, பஞ்சாமிர்தம், நெய், அரிசிமாவு, நல்லெண்ணெய், புண்ணிய நீர் தீர்த்தம் போன்ற 16 வகை அபிஷேகம் சிவலிங்கத்தின் உச்சியில் அபிஷேகம் ஆரம்பித்ததும் அவைகள் தானாகவே சிறிது பிசிறு கூட இல்லாமல் தனித்தனியாக 16 கோடுகளாக லிங்கத்தின் அடிபாகம் வரை வந்து லிங்கத்தின் பீடத்தில் ஐக்கியமாவதைக் காணலாம்.
🌟ராகு தோஷ நிவர்த்திக்காக இந்த நந்திக்கு பால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்போது அபிஷேகப்பால் நீல நிறமாக மாறுகிறது. சிவனுக்கு பின்னால் மகாவிஷ்ணு ருத்ராட்சம் அணிந்து காட்சி தருகிறார்.
🌼 சிவனும் தானும் ஒன்றே என்பதை காகபுஜண்டருக்கு உணர்த்துவதற்காக இவ்வாறு காட்சி தருகிறார்.காகபுஜண்டர் இந்த கோயிலின் அருகில் சமாதி அடைந்ததை ஒட்டி சமாதி பீடம் அமைக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றப்பட்டு வருகிறது.
⛳ #பயண அனுபவகுறிப்புகள்🕊️
🪴மிகப்பழமையான ஆலயம் மீட்கப்பட்டு வருகிறது.
💦ஆலயம் வரை சாலைவசதிகளும் நல்ல நிலையில் உள்ளது.
💦சிறிய கிராமம் பெரிய கடைகள், வசதிகள் இல்லை.
💦ஆலயம் நித்திய கால பூசையுடன், வழிபாட்டில் உள்ளது.
💦திருப்பணி வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
💦காகபுஜண்டர் மற்றும் அனைத்து சன்னதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றது.
💦பிரதோஷம் மிகவும் விஷேசம்.
💦ஒரு முறையாவது இந்த பழமையான புராதான ஆலயம் சென்று தரிசிக்கலாம்.
🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 9.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻
No comments:
Post a Comment