Monday, November 24, 2025

ஸ்கந்தாஸ்ரமம் முருகன் கோவில், உடையபட்டி, சேலம் , தமிழ்நாடு. - பிரதோஷக்குழு யாத்ரா - 8.11.25

ஸ்கந்தாஸ்ரமம் முருகன் கோவில், உடையபட்டி, சேலம்

🍁ஸ்கந்தாஸ்ரமம் முருகன் கோவில், உடையபட்டி, சேலம் , தமிழ்நாடு.

சேலம் ஆத்தூர் சாலையில் உடையபட்டியில் இறங்கி இங்கிருந்து ஆட்டோ மூலம் 2 கி.மீ தொலைவில் உள்ள ஆசிரமத்திற்கு செல்லலாம்

 🍁ஸ்கந்தாஸ்ரமம் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சாந்தானந்த சுவாமிகளால் நிறுவப்பட்டது. சாந்தானந்த ஸ்வாமி - ஸ்வயம்பிரகாசாவின் சீடர் - குஜராத்தின் அவதூத தத்தாத்ரேய சம்பிரதாயாவுடன் - மற்றும் பல பரோபகார நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்.

🍁இங்குள்ள மூலவர்கள் ஸ்கந்தரும் அஷ்டதசபுஜ மகாலட்சுமியும் ஆவர். மகா மண்டபத்தில், ஸ்கந்தமாதா என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ அஷ்டதசபுஜ மகாலட்சுமி துர்கா பரமேஸ்வரியைக் காணலாம், துர்க்கைக்கு எதிரே, ஞானஸ்கந்தன் (பால தண்டாயுத பாணி) என்ற பிரமாண்டமான, கவர்ச்சிகரமான மற்றும் புன்னகைக்கும் சிலை உள்ளது. இருவரும் நின்ற நிலையில் உள்ளனர்.
 
🍁மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியின் வெளிப்புற வளாகத்தில் 16 அடி ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் சிலைகள் உள்ளன. தத்தாத்ரேய பகவான், தன்வந்திரி, ஸ்வர்ணகர்ஷண பைரவர், பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர், ஞான ஸ்கந்த குருநாதன், ஸ்கந்தமாதா, யாகங்கள் மண்டபம் மற்றும் ஸ்கந்த ஜோதி ஆகிய ஒன்பது முக்கிய புள்ளிகள் கோவில் வடிவில் லிங்கத்தில் உள்ளன.

🍁லிங்க வடிவத்தின் உச்சியில் உள்ள இந்த ஒன்பது புள்ளிகளைத் தவிர, இது கங்கையின் அடோப் என்று கணிக்கப்பட்டுள்ளது, 3வது மற்றும் 5வது புள்ளிகளுக்கு இடையில் கோமுகி உள்ளது. கங்கையின் வலது மற்றும் இடது பக்கத்தில் முறையே சந்திரனும் சூரியனும் உள்ளனர். கோயிலின் கிழக்குப் பகுதியில், கன்னிமார் ஓடை (ஓடை) ஓடுகிறது. இது வடக்கு நோக்கிப் பாயும் போது, ​​இது உத்தரவாஹினி என்றும் அழைக்கப்படுகிறது. ஓடையின் ஓரத்தில் கன்னிமார் அம்மன் தெய்வம் உள்ளது.

🍁 இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு புகழ்பெற்ற முனிவர்கள் மற்றும் துறவிகளின் சிலைகளுக்கு இங்கு ஒரு சிறப்பு மண்டபமும் உள்ளது. துர்க்கை தேவி 'சாந்தம்' தருகிறார், ஸ்கந்த பகவான் 'ஆனந்தம்' தருகிறார். சாந்தமும் ஆனந்தமும் ஒன்றாக இணைந்து பக்தர்களுக்கு சாந்தானந்தத்தை அருளுகின்றன, இது ஸ்தாபகர் ஓம் ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளின் பெயருடன் ஒத்துப்போகிறது. 

🍁கோயில் நேரங்கள்: காலை 7 மணி முதல் அதிகாலை 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

🌻சேலம், உடையப்பட்டி என்ற பகுதியில் உள்ளது.

🌻ஸ்ரீ கந்தாஸ்ரமம், உடையாபட்டி, சேலம்
மூலவர் : ஞானஸ்கந்தர், குருநாதர்
அம்மன்/தாயார் : ஸ்கந்தமாதா, பராசக்தி
தல விருட்சம் : கடம்ப மரம். காலை 6 மணி முதல் 12 மணி வரை மாலை மணி 4 முதல் இரவு 9.30 மணி வரை திறந்திருக்கும்.

🌻பஞ்ச முக ஆஞ்சநேயர், பஞ்ச முக கணபதியுடன் (திருவருள்)எதிரெதிர் சன்னதிகளில் உள்ளனர். 6 அடி உயர தன்வந்திரி பகவான் நோயற்ற வாழ்வை தருகிறார். 

🌻இத்தலத்தில் வழிபட்டால் கல்யாணபாக்கியம், குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. இத்தலத்தில் வணங்கினால் குருவருள் கிடைக்கும் நோயற்ற வாழ்வு(தன்வந்திரி பகவான்) குறைவற்ற செல்வம் (ஸ்வர்ணாகர்ஷன பைரவர்) சங்கடங்கள் தீர (சங்கட ஹர கணபதி) பக்தர்கள் வழிபடலாம்.

🌻இவை தவிர பஞ்சமுக அனுமானை வணங்கி பக்தி, பலம், தைரியம், பூமி செழிப்பு, கல்வி செல்வம் ஆகியவற்றை பெறலாம்.

🌻முருகனும் தாயும் எதிரெதிர் சன்னதிகளில் இருப்பதை இங்கு தவிர வேறெங்கும் பார்க்க முடியாது. அம்பாள் உயிராகவும் (இதயம்), முருகன் அறிவாகவும்(மூளை) அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த சன்னதிகளை வணங்குவதால் உயிருக்கும் அறிவுக்கும் பலம் உண்டாகிறது. அதனின் பயனாக உயிரான தாயார் சாந்தத்தையும் அறிவான முருகன் ஆனந்தத்தையும் அளிக்கிறார்கள். 

🌻முருகனை சுற்றிவந்தால் நவகிரக தோஷம் விலகும் எனஜோதிட சாஸ்திரப்படி முருகனைச் சுற்றி மனைவியுடன் சேர்ந்த நவகிரகங்களை பிரதிஷ்டை செய்துள்ளார். 

🌻பிரதோஷத்தன்று பூஜை செய்வதற்காக நர்மதா நதியிலிருந்து கொண்டு வந்துள்ள பாணலிங்கமான புவனேஸ்வரர் புவனேஸ்வரி முருகன் சன்னிதானத்தில் உள்ளது.

🌻வேத விநாயகர், ஆதி சங்கரர் உட்பட பல விக்ரகங்கள் அழகுற மொத்தமாக ஒரே இடத்தில் அமைந்துள்ளது இங்கு மட்டுமே. 1965 ல் இந்த ஆஸ்ரமத்தை நிறுவிய ஸ்ரீ மத் ஸத்குரு சாந்தானந்த சுவாமிகளின் கனவில் வந்த முருகப்பெருமான் தன்னை குறிப்பிட்ட இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யும்படி அருளினார். கனவில் வந்த முருகப்பெருமான் சொன்ன இடத்தை தேடியலைந்த இவர் கடைசியாக இப்போது கந்தாஸ்ரமம் இருக்கும் இடத்தை அடைந்தவுடன் தான் கனவில் கண்ட இடம் இதுதான் என்று கூறி இங்கு முருகனை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தினார்.

 🌻காலப்போக்கில் பெரிய அளவில் எண்ணற்ற கண்கவர் சிற்பங்களுடன் கூடிய கோயிலாக இந்த ஆஸ்ரமம் கட்டப்பட்டுள்ளது. 

🌻சேலம் நகருக்கு மிக அருகில் மலைப்பாங்கான இடத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் இந்த கந்தாஸ்ரமம் அமைந்துள்ளது.

🌻இத்தலத்தில் உள்ள சங்கடஹர பைரவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். 4 வேதங்களுக்குரிய உருவங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 

🌻ஜோதிட சாஸ்திரப்படி முருகனை சுற்றி மனைவியுடன் கூடிய நவகிரகங்கள் இங்குதான் உள்ளது.

🌻16 அடி உயர தத்ராத்ரேய பகவான் (குருவருள்) உள்ளார். சொர்ண ஆகர்ஷண பைரவர் இத்தலத்தில் உள்ளார். இத்தலத்தில் உள்ள சங்கடஹர பைரவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். நான்கு வேதங்களுக்குரிய உருவங்கள் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. 

🌻தனித்தனிஅர்ச்சனை முதலியவைகள் பொதுவாக இங்கு கிடையாது. 
ஹோமம் முதலியவைகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். அனைவருக்கும் பொதுவான ஆலயம் என்றாலும், முருகனுக்காக சிறப்பு யாகங்கள் முதலியன நடத்தி தருகின்றனர்.

🌻வாகனங்கள் நிறுத்த வசதிகள் உள்ளன.

🌻நாங்கள் ஏற்கனவே சில முறைகள் இந்த ஆலயம் வந்து தரிசித்துள்ளோம். தற்போதும் பூசையுடன் தரிசிக்கும் வாய்ப்புக் கிட்டியது.

🌻ஆலயம் மலை மீதுள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இடமாக விளங்குகிறது.

🌻கந்தகுரு கவசம் இயற்றிய இடம் முருக பக்தி செழித்து ஓங்கும் இவ்வாலயம் முருகன் ஆலயங்களுள் மிக முக்கியமானது.

🌻இங்கு வேறு எந்த வனிக வளாகம், முதலிய பிற கட்டிடங்கள் கிடையாது. அமைதியும் பக்தியும் மட்டுமே.

🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 8.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻

⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா - 
சேலம் 8, 9 நவம்பர், 2025.
🛕 #ஆன்மீகதலயாத்திரை:
நன்றி🙏
8.11.2025
🕊️🔱🛐🙏🇮🇳🙇⛳🛕🌏🗻

No comments:

Post a Comment

உலகியநல்லூர் -அர்த்தநாரீஸ்வரர் கோயில் - சேலம் - பஞ்சபூத தலங்கள் அருகில் - பிரதோஷக் குழு யாத்ரா - 9.11.2025

உலகியநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில்  🛕தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகியநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். 🛕அ...