தாரமங்கலம் கைலாசநாதர் கோயில்
🛕தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ளது. இக்கோயில் சேலம் தொடருந்து நிலையத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
🪷பெயர்:தாரமங்கலம் கைலாசநாதர் கோவில்
புராண பெயர்: தாரை மங்கலம்
அமைவிடம் ஊர்:தாரமங்கலம் மாவட்டம்: சேலம்
மூலவர்: கைலாசநாதர்
அம்பாள் : கற்பகாம்பாள்
தேவார வைப்புத்தலம்
🛕மேற்கு பார்த்து அமைந்த பழமையான சிவன் கோவில்
🪷இது ஒரே நேரத்தில் கட்டப்பட்ட கோயில் அல்ல. பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில பகுதிகள் இருந்தன. பொ.ஊ. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கெட்டி முதலிய அரச பரம்பரையினர் இந்தக் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பிற்காலத்தில் மும்முடிச் சோழனும், சீயாழி மன்னனும் இந்தக் கோயிலைப் புதுப்பித்து திருவிழாக்களைக் கொண்டாடி வந்துள்ளனர். வணங்காமுடி மன்னர் காலத்தில்தான், இந்தக் கோயில் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
🪷கோவிலின் பெயர்க்காரணம் சிறப்பு:
🛕திருமண வரம் அருளும் தாரமங்கலம் கோவில்
♻️சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மணவிழாவினை நடத்தியதால் 'தாரமங்கலம்' என்ற பெயர் வந்ததென்றும் கூறுவர்.
♻️சூரிய பூசை :
🪷இக்கோவிலிலுள்ள இறைவனை சந்திரனும், சூரியனும் வந்து தொழுது செல்வதாகக் கூறப்படுகிறது.
🪷சந்திரனுக்கும், சூரியனுக்கும் தாரகாபதி, தாரகன் என்ற பெயர்கள் இருப்பதால் தாரமங்கலம் என்ற பெயர் உண்டாயிற்று என்றும் கூறுவார்கள்.
🪷ஆண்டுதோறும் உத்தராயண, தட்சணயான புண்ணிய காலங்களில் மாலை வேளையில் சூரியன் கதிர்களும், சந்திரன் ஒளியும் சிவலிங்கத்தின் மீது படுகின்றன. அதாவது, சூரிய ஒளி மூலஸ்தான சிவலிங்க மூர்த்தி மேல் விழுவதை சூரிய பூஜை என்று கூறுவர். சூரியனுடைய கதிர்கள் ராஜகோபுர வாயிலின் வழியே வந்து, நந்தி மண்டபத்தின் ஊடே புகுந்து, பின் மூன்று உள் வாயிலையும் கடந்து சிவலிங்கத்தின் மேல்படுவது அபூர்வமாக கருதப்படுகிறது.
♻️மாசி 9, 10, 11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை போல் விழுகிறது. இதைக்காண அன்றைய தேதிகளில் அடியவர்கள் ஏராளமானோர் வருகின்றனர்.
🛕ஆயிரம் கதைகள் சொல்லும் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் சிற்பங்கள்!
இக்கோயில் சிற்ப கலைக்கு மிகவும் புகழ் பெற்றது.
♻️கோவில் என்பது இறைவனின் இருப்பிடம் என்பதை தாண்டி மக்களின் பாதுகாப்பு அறன் என்னும் கொள்கையில் இந்த கோவில் அமைந்துள்ளது.
⚡எதிரி நாட்டு படை தாக்க வரும்போது பொன் பொருள் மக்களை பாதுகாக்கும் பொருட்டு இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது.
⚡இந்தக் கோயிலைச் சுற்றி 306 × 164 அடி அளவுக்கு மிகப்பெரிய கல்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது பொ.ஊ. 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
🔰இந்த கோவில் சிற்பக்கலைக்கு புகழ் பெற்றது. சிங்கமுகமும் மனித தலையும் கொண்ட யாழியின் வாயில் உள்ள கல் உருண்டையை நாம் எவ்வாறு வேண்டுமானாலும் உருட்டலாம் ஆனால் கல்லை வெளியே எடுக்க முடியாது.
🔰உலகத்திலேயே மிகச்சிறிய உயிரினமான எறும்புகள் நுழைவதற்காக துளைகளை விட்டு செதுக்கிய சிலை இந்த கோவிலில் மட்டும்தான் உள்ளது. எறும்புகள் நுழைந்து வரும் அளவுக்கு மட்டுமே துவாரம் உள்ள ஒரு மனிதனின் முகம் அமைக்கப்பட்டுள்ளது. ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புகள் அந்த சிற்பத்தின் காது வழியாக உள்ளே சென்று பின்னர் மூக்கு வழியாக வெளியே வரலாம். பிறகு தாடியில் உள்ள துவாரங்கள் வழியே உள்ளே நுழைந்து மறுபக்கம் சென்று மற்றொரு காது வழியாக வெளியே செல்லும் வகையில் நுண்ணியதான துவாரங்களைக் கொண்டதாகக் கல்லில் சிலை செதுக்கியுள்ளனர்.
🔰வளைந்த வாளுடனும், நீண்ட தாடி, தலைப்பாகையுடனும் படை எடுத்துவரும் மாலிக்கபூரின் வீரர்கள், அதை எதிர்த்து குறுவாள், கேடயத்துடன் எதிர்கொள்ளும் தமிழக மன்னர்களின் போர்க்காட்சிகள் பல இங்கு செதுக்கப்பட்டுள்ளது.
🔰சோழ, பாண்டிய நாடுகளில் இருந்த செல்வங்களை எல்லாம் கொள்ளையிட்ட பின்னர் அவற்றைத் தன்னுடன் வந்திருந்த யானை மற்றும் ஒட்டகங்களின் மீது பொதி மூட்டையாய் ஏற்றிக்கொண்டு திரும்பிச் செல்லும் காட்சியும் சித்திரங்களாக உள்ளது.
🔰கோவில் தெப்பகுளம் எண்கோண வடிவில் அமைந்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால் ஒரு மூலையில் நாம் கல் எரிந்தால் அதன் எட்டு பக்கமும் மோதி மீண்டும் பழைய இடத்தை வந்தடையும்.
⚡இந்தக் கோவிலின் நுழைவாயிலில் சுமார் 20 அடி அகலம் கொண்ட வேங்கை மரத்தால் செய்யப்பட்ட மரக்கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதவுகளிலும் 60 கூர்மையான உலோக குமிழ்கள் வீதம் மொத்தம் 120 கூரிய உலோக குமிழ்கள் அமைக்கப்பட்டுள்ளது. யானை வைத்து கதவுகளை உடைக்கும் அந்த காலத்தில் யானை முட்டி மோதி உடைக்கும்போது குத்தி கிழித்துவிடும்படி நுணுக்கமாக அமைக்கப்பட்டுள்ளது.
⚡ஆலயத்தின் ராஜகோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது. உச்சியில் 7 கலசங்களுடன் மேற்கு திசை நோக்கி மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கும் இந்த தாரமங்கலம் சிவன் கோயில் ஒரு தேர் போன்ற வடிவிலும், அதனை யானை மற்றும் குதிரைப் படைகள் கட்டி இழுத்துக் கொண்டு செல்வது போலவும், அந்தத் தேரின் ஒரு பகுதியில் அச்சு முறிந்திருப்பது போலவும் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.
⚡கோபுரத்தை அடுத்துள்ள நுழைவாயிலில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் பவளக்கல் படிக்கல்லாக உள்ளது. சிவப்பு பவளக்கல் படிகளில் 5 நிமிடம் அமர்ந்தாலே போதும் நம் உடலில் உள்ள வெப்பம் தணிந்து விடும். இந்த சிறப்புகள் தமிழ்நாட்டில் எங்கேயும் கிடையாது.
⚡யாழிக்கு நடுவில் நான்கு தூண்களில் குதிரை மற்றும் யானையில் சென்று வீரர்கள் போர் புரிவது போன்ற சிற்பங்கள் மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன.
⚡இங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல், இராமன் வாலியை வதைக்கும் சிற்பம் ஆகியவை வியப்புக்குரியவை.
♻️இக்கோவிலில் மையத்தில் சுமார் 20 பிரம்மாண்ட தூண்களுடன் மகாமண்டபம் அமைந்துள்ளது.
கோவிலில் உட்பிரகார தூண்கள் எல்லாவற்றிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடு அமைந்த திருவுருவங்கள் காணப்படுகின்றன.
♻️ராமாயண கதைகள்:
⚡கோவிலில் முன் மண்டபத்தில் ராமாயணத்தில் இடம்பெறும் ராமர் வில் எடுத்து அம்பு விடுவது போன்று சிற்பம் மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
⚡இன்னொரு இடத்தில் சுக்ரீவனும் வாலியும் சண்டை போடுவது போன்று சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
⚡இதில் என்ன சிறப்பு அம்சம் என்றால் ராமர் அம்பு விடுவது போன்று அமைக்கப்பட்டுள்ள சிற்பத்தின் அருகே நின்று பார்த்தால் சுக்ரீவன், வாலி சண்டையிடுவது போன்ற அமைக்கப்பட்ட சிற்பத்தை பார்க்க முடியும். ஆனால் வாலி, சுக்ரீவன் சண்டை போடும் சிற்பத்திற்கு அருகில் நின்று பார்த்தால் ராமன் அம்பு விடுவது போன்ற சிற்பத்தை பார்க்க முடியாது.
⚡ராமாயண கதையின்படி ராமன் மறைவாக நின்று வாலி மீது அம்பு எய்துவார் என்பதை மிகவும் தத்ரூபமாக விளக்கும் வகையில் இந்த இரண்டு சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
♻️மன்மதனும் ரதியும்:
⚡மன்மதன் கிளியின் மீது அமர்ந்து மலர் அம்பை எடுத்து ரதி மீது விடுவது போன்றும், ரதி மறைவாக நின்று மன்மதனை காண்பது போலவும் மிகவும் தத்ரூபமாக சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன .
🔰இந்த பழமையான சிவன் கோவில் தமிழர்களின் சிற்பக்கலைகளுக்கு மேலும் ஒரு சான்று:
⚡பெண்ணிற்கு பெரியது மானமா…. தர்மமா… என்பதை விளக்கும் வகையில் இங்கு உள்ள சிற்பம் ஒன்றை அமைத்துள்ளனர்.
⚡ சிவபெருமான் வயதானவர் போன்று மாறு வேடத்தில் வந்து ஒரு குடியானப் பெண்ணிடம் "பிச்சை" கேட்கிறார். அப்போது அந்தப்பெண், அன்னத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியே வரும்போது, காற்று வேகமாக வீசியதால் அந்த பெண்ணின் மார்புச் சேலை விலகி விடுகிறது. தானத்தைவிட "மானமே" பெரிதெனக் கருதிய அந்தப்பெண், தன்னுடைய இடக்கையால் மார்புச் சேலையை இழுத்து மூடுகிறார், அப்போது பறந்து வந்த ஒரு கிளி, பெண்ணின் வலது கையிலிருக்கும் சாதத்தை எச்சம் செய்து விடுகிறது. அந்த பெண் இறைவனுக்கு உணவு எடுத்துக்கொண்டு செல்லும் காட்சி மிகுந்த முக மலர்ச்சியோடும், கிளி சாப்பிட்டு எச்சமாகி விட்டதால், அந்த பெண் கோபத்தில் முகம் வாடியுள்ள காட்சியும் இரண்டு சிலைகளில் மிக அழகாக வடித்துள்ளனர்.
🔰மற்றொரு குறிப்பிடத்தக்க சிற்பம் 18 ஆயுதமேந்திய சிவன் நடனம். சிவபெருமான் விழுந்த தனது காதணியை தரையில் இருந்து காலால் எடுத்து மீண்டும் காதுகளுக்கு வைக்கும் காட்சி அழகாக செதுக்கப்பட்டுள்ளது.
🔰சிறப்பு விநாயகர் சிலையை கொண்டுள்ளது, அதில் நீங்கள் தண்ணீரை ஊற்றினால் அது கீழே ஒரு கிணற்றுக்குச்வீழ்ச்சியைக் செல்லும், மேலும் நீர் எந்த வழியாகப் பயணிக்கிறது என்பதை நீங்கள் பார்க்க முடியாது, மேலும் நீரின் கேட்கலாம்..
🔰மேலும் பார்க்க வேண்டிய தூண்களில் உள்ள சிற்பங்கள், ரிஷி பதினி, பார்வதி, பிக்ஷாதனர், மோகினி அவதாரத்தில் மகாவிஷ்ணு, பதஞ்சலி, வியக்ரபதர், ஜெயமுனி, ஹயக்ரீவர், ஊர்த்துவ தண்டவர், சிவன் மற்றும் மன்மதலீலை, ஷிவா விஷ்ணு, அகோர வீரபத்திரர், அக்னி வீரபத்திரர், பிரதோஷ நாயகர், தட்சிணமூர்த்தி, துவாரபாலகர், ஸ்ரீ காளி, மாணிக்கவாசகர், பிரம்மா, காஞ்சி காமாட்சி, மன்மதன், ரதி. முதலியவைகள்.
🛕பாதாள லிங்கம்
⚡இத்தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி இது. மகா மண்டபத்தின் வடமேற்கு மூலையில், தலத்தின் கீழ்ப்பகுதியில் காற்று புக முடியாத ஒரு அறைக்குள் இருக்கும் இந்த பாதாள லிங்கத்திற்குப் பச்சைக் கற்பூரம் வைத்து செவ்வாய்க்கிழமை தோறும் அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம் மற்றும் தொழில் விருத்தி ஆகியவை கை கூடும் என்பது நம்பிக்கை.
🛕சுரகேசுவரர்
⚡இத்தலத்தில் உள்ள சுரகேசுவரர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு. இவருக்கு மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து, வடைமாலை சாற்றி வழிபாடு செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத நோய்கள் குணமடைவதாக நம்பப்படுகிறது
#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
🌟பேருந்து நிலையம் அருகில் உள்ளது.
🌟ஆலயம் முன்பு வாகனங்கள் நிறுத்தலாம்.
ஆலயம் ராஜகோபுரம் முன் கல்தூன் உள்ளது.
ஆலயம் ராஜகோபுரம் தாண்டியதும், கொடிமரம், நந்தி மண்டபத்துடன் உள்ளது. ஆலயம் உள்ள வெளி மண்டப தூண்களில் உள்ள அற்புத சிற்பங்கள் முறையாக கம்பி வேலி பாதுகாப்புடன் உள்ளது.
🌟 சுவாமி மேற்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அமைத்துள்ளார். சுப்ரமணியர் சன்னதியும் தெற்கு நோக்கி உள்ளது. தனித்தனி கருவரைகள்.
🌟 சுவாமி அம்பாள், முருகன் சன்னதி விதானத்தில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள், சுழலும் பீடங்கள், கல் வலையங்கள் அற்புதமான அமைப்பில் உள்ளன. சுவாமி அம்பாள், முருகன் சன்னதிகளுடன் உள்ள பிரகாரத்தில் உள்ள அனைத்து தூன்களிலும் தனித்தனி சிறப்பு சிற்பங்கள்.
🌟வடமேற்கு மூலையில் பாதாள லிங்கம் நீர்வரத்து உள்ள காலங்களில் பாதுகாப்புக் கருதி பூட்டி வைத்துள்ளனர். உள்ளே சில குறுகியபடிகள் வழியாக இறங்க வேண்டும். தனி கட்டணம் உண்டு.
🌟 ஆலயக் குளம், பேருந்து நிலையம் அருகில் உள்ளது.
🌟 பக்தர்கள், வருகை உள்ளதால், பராமரிப்பில் உள்ள ஆலயம்.
🛕கோவிலுக்கு செல்வது எப்படி:
🔰தமிழகத்தின் எல்லா ஊர்களிலிருந்தும், சேலத்துக்கு பேருந்துகள் மற்றும் ரெயில் போக்குவரத்து வசதி உள்ளது. சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும், ரெயில் நிலையத்திலிருந்தும், பத்து நிமிடங்களுக்கு ஒரு நகரப்பேருந்து வீதம் தாரமங்கலத்துக்கு இயக்கப்படுகிறது.
🔰கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை,7.00 மணி முதல் நண்பகல் 12.30 வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 8.30 மணிவரை கோயில் நடை திறந்திருக்கும். முக்கியச் சிறப்பு தினங்களில் முழு நேரமும் நடை திறந்திருக்கும்.
⛳வாழ்வில் ஒரு முறையாவது சென்று தரிசிக்க வேண்டிய தமிழர் பெருமை கொள்ளும் ஆலயங்களில் ஒன்று.
🙇நன்றி🙏
🛕#சுப்ராம்ஆலயதரிசனம் 8.11.2025🛐
# என்றும்அன்புடன்💟
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று🙇🛕
#ஆன்மிகபரதம்அகிலத்தின்சிகரம்🇮🇳🗻
⛳ #பிரதோஷேக்குழுயாத்ரா - சேலம் 8, 9 நவம்பர், 2025.
🛕 #ஆன்மீகதலயாத்திரை:
No comments:
Post a Comment