Monday, November 24, 2025

பஞ்சபூத தலங்களும் சப்ததுறை தலங்களும்சேலம் - நிவா நதி - பஞ்சபூத - தலங்கள். (9.11.2025)

பஞ்சபூத தலங்களும் சப்ததுறை தலங்களும்

சேலம் - நிவா நதி - பஞ்சபூத - தலங்கள்.

🏵️சிவபெருமானை மதிக்காமல் யாகம் நடத்தினான் தட்சன். அவன் நடத்திய யாகத்தில் தேவர்கள், சப்த ரிஷிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனால் இறைவனின் கோபத்திற்கு ஆளான ரிஷிகள் அனைவரும், தங்கள் ரிஷி பதவியை இழந்து, வேதங்களை மறந்து நைமிசாரண்யத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பிறகு
சுக பிரம்ம ரிஷியின் அறிவுரைப்படி, அவர்கள் அனைவரும் இந்தப் பகுதிக்கு வந்து தவம் செய்தனர்.

🌟ராமரின் குல குருவான வசிஷ்ட முனிவர் சிவபெருமானுக்கு தவம் மற்றும் பூஜைகள் செய்ய இங்கு வந்தார். 

🌟அவரது தவத்திற்கு அசுரர்களால் பல இடையூறுகள் வந்தன அவர் பல தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நல்ல தண்ணீர் மற்றும் பூக்களால்  சிவனை வணங்க சோதனைகளைக் கடக்கலாம் என 
மகரிஷி நாரதர் முனிவர் கூறியதன் அடிப்படையில், வசிட்டர், தமது தவவலிமையால்
கல்வராயன் மலையிலிருந்து (வெள்ளி மலை)
 🌟‘வசிஷ்டநதி’ என்ற தீர்த்தத்தை உருவாக்கினார். வசிஷ்ட நதியை உருவாக்கி, நதிக்கரையில் பஞ்ச பூத மூர்த்திகளாக ஐந்து இடங்களில் சிவபெருமானை நோக்கி தவம் செய்தனர். 

🏵️மேலும் அதன் கரையில் பல்வேறு சிவாலயங்களை வழிபடுவதற்காக நதியை ஓட அழைத்ததாகக் கூறப்படுகிறது - இதனால் இந்த நதி நீவா - நிவா நதி எனப்பட்டது.

🪷1) தான்தோன்றீஸ்வரர் சிவன் கோவில், பேலூர், சேலம் (நிலம்) 
🪷2) சாம்பமூர்த்திஸ்வரர் கோவில், ஏத்தாப்பூர் (நீர்) 
🪷3) கோட்டை காயநிர்மலேஸ்வரர் கோவில், ஆத்தூர் கோட்டை (அக்னி - தீ) 
🪷4) ஸ்ரீ காமநாதர் கோவில்,அரகளூர்.
🪷5) ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், கூகையூர் (வானம்)

🌟சிவபெருமானின் 5 பஞ்ச பூத தலங்களை வழிபடுவதாக உறுதிமொழி எடுப்பவர்கள் இங்கு வந்து ஒரே நாளில் 5 கோயில்களையும் வழிபட்டு தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.
🌟மேலும், ஒரு நாளில்  தரிசிப்பது மிகவும் புண்ணியம் என்று கருதப்படுகிறது.

சப்ததுறை தலங்கள்
⛳மேற்கண்ட 5 கோயில்களைத் தவிர, இந்த நதியின் கரையில் அமைந்துள்ள சப்த ரிஷிகளால் வழிபடப்படும் மற்ற கோயில்கள்
சப்த துறை தலங்கள் எனப்படுகின்றன.

💦6) ஆதித்துறை (காரியனூர்) 
💦7) திருவாளந்துறை
💦8) திருமாந்துறை
💦9) சு.ஆடுதுறை 
💦10) திருவத்துறை (திட்டக்குடி)
💦11) திருநெல்வாயில் அறத்துறை மற்றும் 
💦12) திருக்கைத்துறை. - முடவன் துறை & பெலான் துறை 

🌟நிவா நதியை அப்பர், சுந்தரர், சம்பந்தர் மற்றும் சேக்கிழார் ஆகியோர் பல்வேறு பாடல்களில் போற்றியுள்ளனர். 

🌟சுந்தரர் தனது 'திருநெல்வயல் அரத்துறை' தேவார பதிகத்தில் இந்த நதியின் முக்கியத்துவத்தைப் பற்றி 11 பதிகங்களைப் பாடியுள்ளார். 

பஞ்சபூத தலங்களும் சப்ததுறை தலங்களும்

🌟இந்தக் கோயில்கள் 'துறை கோயில்கள்' (தமிழில் துறை என்றால் ஆற்றங்கரை என்று பொருள்) என்றும் அழைக்கப்படுகின்றன.

 🌟இவற்றுடன் முக்தி தலங்களான விருத்தாசலம், சிதம்பரம் தலங்களையும் இணைந்து தரிசித்து வர வருடத்தில் ஒருமுறை ஒரே நாளில் அனைத்து ஆலயங்களையும் சென்று குழுவாக தரிசிக்க  ஶ்ரீ அஷ்ட்ட பைரவர் வழிபாட்டுக் குழுவினர் ஆத்தூர் திரு மு.தேவராஜ் (9626746789) மற்றும் திரு D. ராஜா ( 9842740750) அவர்கள் ஏற்பாடு செய்து வருவதாக விளம்பரம் ஆலயத்தில் உள்ளது.

⛳#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️

 🌻பஞ்சபூத தலங்கள் அனைத்தும் சில கி.மீ. தூரத்தில் அடுத்தடுத்து  நல்ல பாதை வசதிகளுடன் அமைத்திருப்பதால், ஒரு நாளில் 5 ஆலயங்களையும் தரிசித்துவிட முடியும்.

🌻பேளூர், ஏத்தாப்பூர், ஆத்தூர், ஆரகளூர்
மற்றும் கூகையூர் என்பன இவ்வூர்கள். இந்த வரிசைப்படியே தரிசிக்க இயலும்.

🌻ஒவ்வொரு ஊரிலும், மேலும் சில பழமையான சிவ ஆலயங்கள், பெருமைமிகு பெருமாள் ஆலயங்கள் அருகருகே அமைந்துள்ளது, 

🌻மேலும், வட சென்னிமலை, முத்துமலை முதலிய புகழ் பெற்ற முருகன் தலங்கள், இன்னும் பல சிறப்பான ஆலயங்களும் உண்டு, என்பதால் அவற்றையும் தரிசிக்க,  சரியாகத்திட்டமிடுதலும், வாகன வசதிகளும் இருத்தல் அவசியம்.

🌻சில ஆரகளுர், கூகையூர் பழமையான சிற்றூர் என்பதாலும், நிறைய புராதானமான ஆலயங்கள் இங்கு இருப்பதாலும் நடை திறக்கும் நேரம், மற்ற வசதிகள் ஏற்பாடுகள் சற்று சிரமம் ஏற்படலாம்,

🌻இறையருள் கூட்டி வைத்தால், நிச்சயம் பயணம் வெற்றியாக நிறைவேறும்,

🌻2017 ம் ஆண்டும், மீண்டும் 9.11.2025 அன்றும்
இந்த பயணம் வெற்றிகரமாக இறையருள்  கூட்டிவைத்தது.

🌻இந்த பயணம் - ஆலய விபரங்கள் குறித்த எமது அனுபவபதிவுகளையும் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
மேலும் கீழ்கண்ட எமது வலைதளங்கள் தங்களுக்கு உதவலாம். அதன் விபரங்கள் இணைப்புகள் கீழே குறிப்பிட்டுள்ளேன். 

நன்றி🙏

🙏🏼🛕🛐🔱🙏🏼🛕🙇🏻🔱🙏🏼🛕🙇🏻🔱🙏🏼🛕🙇🏻🔱🙏🏼🛕🛐🔱
🛕ஆலயங்கள் சென்று ஆலய விழாக்களில்  சிறப்புடன் நேரில் சென்று அவசியம் கலந்து  கொண்டு தரிசித்து ஆலயம் வளர, உதவி செய்து, இறையருளும் ஞானமும், அருளும் பெற அன்புடன் வாழ்த்துகிறோம்.
🔱🙏🏼❤️🔱🙏🏼💜🔱🙏🏼💛🔱🙏🏼💙🔱🙏🏼🧡🔱
எமது வலைதள பதிவுகளைப் பின்தொடர்ந்து வரும் தங்களுக்கு மிகவும் நன்றி🇮🇳🙏
தொடருங்கள்....தொடர்பில் இருப்போம்......
🔱🙏🏼❤️🔱🙏🏼💜🔱🙏🏼💛🔱🙏🏼💙🔱🙏🏼🧡🔱
நன்றி🙏🏼
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
🔱🙏🏼❤️🔱🙏🏼💜🔱🙏🏼💛🔱🙏🏼💙🔱🙏🏼🧡🔱
💟ARATTAI - CHANNEL..
*_சுப்ராம். அருணாசலம்_* 
https://aratt.ai/@subbram_arunachalam

 *_சுப்ராம். அருணாசலம்*_ 
💟WHATSAPP CHANNEL....
ஆன்மீக பாரதம்
https://whatsapp.com/channel/0029Va5eOh59Bb67425WOR1A

💟FACE Book
ஆன்மீக பாரதம்
https://www.facebook.com/groups/1396741377679271/?ref=share&mibextid=NSMWBT


💟ஆலயம் தொழுவது சாலவும் நன்று
https://www.facebook.com/share/15XJLTLk9K/
https://whatsapp.com/channel/0029VbArVSVBA1f5tVIAiM04



💟Subbram Arunachalam :
https://www.facebook.com/share/15oHkTYQYm/

✅*_SUBBRAM_* 
https://subbramarunachalam.blogspot.com/?m=1

🔱🙏🏼🛕🛐🔱🙏🏼🛕🙇🏻🔱🙏🏼🛕🙇🏻🔱🙏🏼🛕🙇🏻🔱🙏🏼🛕🛐🔱

No comments:

Post a Comment

உலகியநல்லூர் -அர்த்தநாரீஸ்வரர் கோயில் - சேலம் - பஞ்சபூத தலங்கள் அருகில் - பிரதோஷக் குழு யாத்ரா - 9.11.2025

உலகியநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில்  🛕தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகியநல்லூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். 🛕அ...