Wednesday, September 24, 2025

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி -பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி

திருஆவினன்குடி - குழந்தைவேலாயுத சுவாமி
திரு என்ற இலக்குமி தேவியும், ஆ என்ற காமதேனுவும், இனன் என்ற சூரிய பகவானும், இத்தலத்து முருகப்பெருமானை வழிபட்டமையால் திருஆஇனன்குடி என்று பெயா் பெற்றதாக சொல்லப்படுகிறது.

சங்க காலத்தில் இந்த ஊர் திருவாவினன்குடி என்றே அழைக்கப்பட்டதாகவும், மாம்பழத்திற்காக கோபம் கொண்டு வந்தமர்ந்த முருகப்பெருமானை சிவனும், பார்வதியும், இத்திருத்தலத்திற்கு வந்து ஞானப் "பழம் நீ" என்று முருகனுக்கு சூட்டிய பெயரே, நாளடைவில் மருவி பழநி என்று ஊர் பெயர் வர காரணமானதாக தல புராணம் கூறுகின்றது.

அமைவிடம்

இத்திருத்தலம் பழநி மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில், பழநி மலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் வடகிழக்கு திசையில் சரவணப் பொய்கை உள்ளது. இத்தலத்தில் உள்ள பெருமானை வழிபட்ட பின்னரே, மலைக்கோவிலுக்கு சென்று தண்டாயுதபாணித் தெய்வத்தை வழிபடுவது மரபு.

மூன்றாம் படைவீடு விளக்கம்

மூன்றாம் படைவீடு என்பது பழநி மலைக்கோவிலா அல்லது திருவாவினன்குடி திருத்தலமா என்பதில் பலருக்கும் மிகப்பெரிய சந்தேகம் உள்ளது.

திருவாவினன்குடி கோவிலையே நக்கீரர் பெருமான், திருமுருகாற்றுப்படையிலே முருகனின் மூன்றாம் படைவீடாக

"தாஇல் கொள்கை மடந்தையொடு சில்நாள் ஆவி னன்குடி அசைதலும் உரியன்: அதாஅன்று"

அதாவது, குற்றம் இல்லாத கோட்பாடுடன், யாவர்க்கும் நன்மையே விளைவிக்கும் உயர்ந்த கொள்கை உடைய தன் துணைவியோடு சிலகாலம் ஆவினன்குடியில் தங்கியிருப்பதற்கு உரிமை உடையவன் என்று போற்றி பாடியுள்ளார் என்பதாக சொல்லப்படுகிறது.

கோபம் கொண்டு வந்து அமர்ந்த இடமான பழநி மலைக்கோவிலில் தண்டாயுதபாணித் தெய்வமாகவும், திருவாவினன்குடி திருத்தலத்தில் மயில் மீது அமர்ந்த குழந்தை வேலாயுத சுவாமியாகவும் காட்சியளிக்கிறார். சங்க காலத்தில் இந்த இரண்டு திருத்தலங்களையும் சேர்த்தே இந்த ஊரின் பெயர் திருவாவினன்குடி என்று இருந்ததாக புராணங்கள் சொல்கின்றன.

ஆக நக்கீரர் பெருமகனார் பாடிய திருத்தலம் பழநி மலைக்கோவில் மற்றும் திருவாவினன்குடி கோவில் இரண்டையும் உள்ளடக்கிய ஒரு தலமாகவே கொள்ளலாம். எனவே மலைக்கோவில் மற்றும் திருவாவினன்குடி திருத்தலம் இரண்டையுமே மூன்றாம் படைவீடாகக் கொள்ள வேண்டும்.

ஆனால் சிலகாலம் முன்பு வரை இக்கோவிலின் சன்னதிக்கு வெளியே மூன்றாம் படைவீடு என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் அப்பெயர்ப்பலகை நீக்கப்பட்டுவிட்டது. இன்றும் பழநி மலை அடிவாரத்தில் படிக்கட்டு நடைபாதை முடிந்து வெளியே வரும் இடத்தில் அரசாங்கத்தால் மூன்றாம் படைவீடு திருவாவினன்குடி செல்லும் வழி என்று வழிகாட்டும் பலகை வைக்கப்பட்டுள்ளது

அறுபடை வீடுகளில் சிறப்பாக கொண்டாடப்படும் பங்குனி உத்திரத் திருவிழா, திருவாவினன்குடி திருத்தலத்திலே கொடியேற்றத்துடன், திருக்கல்யாணம் மற்றும் தேர் வடம் பிடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தால் நடத்தப்படுகின்றன

பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோவிலை நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் மறு கட்டுமானம் செய்தும், புதிதாக மண்டபங்கள், பிரகாரம், ராஜ கோபுரம் அமைத்தும் பெரிய கற்றளியாக எழுப்பியுள்ளனர். 1919 சூன் 26 இல் குடமுழுக்கு இடம்பெற்றது.

அருணகிரியால் திருப்புகழ்பாடப்பெற்றதலம்

பழனி மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முதலில் திருஆவினன்குடி கோயிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

இது பழமையான கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு முன்பே தோன்றியதாக நம்பப்படுகிறது.

இங்குள்ள முருகப்பெருமான் குழந்தை வேலாயுதசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

 பழனி மலைக்கோயிலின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

சங்க காலத்தில் இந்த ஊர் திருஆவினன்குடி என்று அழைக்கப்பட்டது.

 அகத்தியர் இங்கு தவம் செய்து முருகனிடம் தமிழ் இலக்கணம் கற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த தகவல்கள் திருஆவினன்குடி கோயிலின் முக்கியத்துவத்தையும் வரலாற்று சிறப்பையும் விளக்குகின்றன.

நன்றி 🙏வலைதளம்🌐
#மீள் தரிசனம் 14.09.25 #சுப்ராம்தரிசனம்
#பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மிகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி -பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி திருஆவினன்குடி - குழந்தைவேலாயுத சுவாமி திரு என்ற இலக்குமி தேவியும், ஆ என்ற காமதேனுவும், இனன் என்ற சூ...