Wednesday, September 24, 2025

துடியலூர் - விருந்தீஸ்வரர் ஆலயம் கோவை - பிரதோஷக்குழு யாத்ரா 13.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

துடியலூர் - விருந்தீஸ்வரர் ஆலயம்
கோவை

துடியலூர் - விருந்தீஸ்வரர், விஸ்வநாயகியம்மன் ஆலயம்.

சுவாமி, சன்னதி அடுத்து, சுப்ரமணியர், அம்பாள், லெட்சுமி நாராயணர் சன்னதிகள் தனித்தனியாக உள்ளன.
அனைத்தும் கிழக்கு நோக்கியது.

தவிர, வீர ஆஞ்சநேயர், கால பைரவர், நவகிரகம், சனிஸ்வரர் சன்னதிகளும் தனித்தனியே உண்டு.

சுந்தரமூர்த்தி நாயனார் பசிபினியுடன் இவ்வாலயம் வந்து இறைவனை தரிசிக்க வந்தபோது, வேடன் வடிவில், சுவாமி அம்பாள் வந்து, அங்குள்ள முருங்கை மரத்தின் இலை பறித்து சமைத்து விருந்து அளித்ததால், சுவாமிக்கு இந்த பெயர். என்பது கல்வெட்டில் காணப்படுகிறது.

இரவு 8 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.
நல்ல பராமரிப்பில் உள்ள ஆலயம்

பிரதான சாலையில் நுழைவு வாயில் வழியில் உங்க சிறிய பாதையில், உள் நுழைந்து, ஆலய வளாகம் வந்தால், ஆலயம் முன் பகுதியில் . வாகன நிறுத்தும் பெரிய வளாகம் உண்டு.

13.9.25 #சுப்ராம்ஆலயதரிசனம்
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

திருப்புகழூர் அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர் நாயன்மார்தலம் திருமுறைத்தலம், திருப்புகழ்த்தலம்

திருப்புகழூர் அருள்மிகு கருந்தாள் குழலியம்மை உடனுறை அக்கினிபுரீஸ்வரர் நாயன்மார்தலம் திருமுறைத்தலம்,  திருப்புகழ்த்தலம் தலம்: சோழவள நாட்டில் ...