கொங்கனேஸ்வரர் ஆலயம் - குருவன் வலசு, கடத்தூர் (அருகில்)
கொங்கு மண்டலம் வரலாற்று சிறப்பு, கலை, பண்பாடு, நாகரிகம், இறையுணர்வு ஆகியவற்றைக் தன்னகத்தே கொண்ட வளம் கொழிக்கும் பழம் பெருமை வாய்ந்த பகுதியாகும். வைணவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் நெல்லை மாவட்டத்தில் ஒன்பது இடங்களில் பெருமாளுக்கென அமைக்கப்பட்ட கோவில்கள் நவதிருப்பதி என அழைக்கப்படுகிறது. அதே போல்
கொங்கு மண்டலத்தில் சைவத்தின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் அமராவதி ஆற்றின் கரையோரம் கொழுமம் முதல் கரூர் வரை 11 சிவாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பயண அனுபவ குறிப்புகள்:
கடத்தூரில் உள்ள கொங்கனேஸ்வரர்
ஆலயம் கிழக்குநோக்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது.
அமராவதி ஆறு அருகில் உள்ளது.
மிகவும் சிதலமடைந்து விட்டது.
கருவரை மட்டுமே மீதி உள்ளது. கற்றளியாக இருந்திருந்த ஆலயம், பெரிய வளாகத்தில் பெரிய ஆலயமாக இருந்திருக்க வேண்டும்.
ஆலயம் மீட்டெடுக்க / பராமரிக்க பக்தர்கள் பொதுமக்கள் உதவி அவசியம் தேவை. மிகப் பழமையான ஆலயம். சிதலமடைந்து விட்டாலும், குருக்களின் முயற்சியால் ஒரு காலம் நடைபெறுகிறது.
உள்ளூர் பக்தர்களும், சிவாலய மீட்பவர்களும் இணைந்து விட்டால், இந்த புராதான ஆலயத்தை மீட்டு விடலாம்.
இறையருள் துணையிருக்க வேண்டினோம்.
14.09.25 ஞாயிறு
#சுப்ராம்தரிசனம்
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம் தொழுவது சாலவும் நன்று
#ஆன்மிகபாரதம்அகிலத்தின்சிகரம்
No comments:
Post a Comment