Wednesday, September 24, 2025

குமரன் குன்று - சுப்பிரமணிய சுவாமி ஆலயம், பிரதோஷக்குழு யாத்ரா 13.0925 - கொங்குநாட்டுத்தலங்கள்

குமரன் குன்று - சுப்பிரமணிய சுவாமி ஆலயம்

அன்னியூர் - மேட்டுப்பாளையம் சாலையில் சாலையின் தென்புறம் 1 கி.மீ. சிறிய குன்று, வாகனங்களில் மேல ஆலயம் வரை செல்லலாம்.

கிழக்குப் பார்த்த ஆலயம்.

3 அடுக்குகளில் பெரிய அகலமான மண்டபங்கள் உள்ளன. வீரபாகுமற்றும் அருணகிரிநாதர் சிறிய சன்னதிகளும் முன்மண்டபத்தில் உள்ளார்கள்.

அகலமான முன்மண்டபங்கள் அழகான படிக்கட்டுகள்.
மேல் மண்டபத்தில்
முருகன் ஆலயம். சிறிய குன்றின் மீது தனி கருவரையில், ஆலய மூலவர், கல்யாண சுப்ரமணிய சுவாமி வள்ளிதெய்வானையுடன் உள்ளார்
அடுத்து தென்புறம் வைத்தியநாதர் வடபுறம் தையல் நாயகி தனி தனி சன்னதிகளில் உள்ளனர்.
சிறிய அளவிலானுக்குன்றில், இயற்கை யாகக் கிடைத்த தண்டபாணி சிலையை கண்ட எடுத்து, ஆலயம் அமைத்து வழிபட்டார்கள்.
சித்திரை மாதம் முதல் நாளில் சூரிய பூசை
தைப்பூசத்தில் ரத உற்சவம்

கல்யாண பிரார்த்தனைத்தலமாக வணங்கப்பட்டு வருகிறது.

பஞசதரு விநாயகர்
ஆலயம் வடக்குப் புறத்தில் 5 மரங்கள் வில்வம், வேம்பு, அரசன், காட்டுமல்லி, காரை மரங்கள் கொண்ட பஞ்ச தரு விநாயகர் இடம் சற்று இரக்கத்தில் உள்ளது. படிகள் அமைக்கப்பட்டுள்ளது அங்கு ஒரு விநாயகர் - பஞ்ச தரு விநாயகர் - அமைக்கப்பட்டுள்ளது.
மிகவும் விஷேசம்

ஆலயம் அமைதியான சூழலில் சுற்றுப்புற சூழ்நிலை அழகுடன் உள்ளதே மன அமைதி தரும்
நல்ல பராமரிப்பில் உள்ளது. முன்வெளி மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

அன்னூர் ஆலயம் தரிசித்து இந்த ஆலயம் வந்து தரிசித்தோம்.

13.09.25 சனிக்கிழமை
#சுப்ராம்தரிசனம்.
#என்றும்அன்புடன் 
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால் 
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா 13.9.25

No comments:

Post a Comment

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி -பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி திருஆவினன்குடி - குழந்தைவேலாயுத சுவாமி திரு என்ற இலக்குமி தேவியும், ஆ என்ற காமதேனுவும், இனன் என்ற சூ...