Sunday, July 4, 2021

வழிமொழி திருவிராகம் - சம்பந்தர் அமுதம் - பதிவு: 9 பாடல்: 9

#வழிமொழி_திருவிராகம், 
 பதிவு:9
மூன்றம் திருமுறை பதிகம்: 325
பாடல்:9.
 🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.
🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.
📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🙇‍♂️நன்றி🙏

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

#தமிழரின்பொக்கிஷம்:

#திருவிராகம்,# வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம்,#முடுக்கியல்,#அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
தொடர்ந்து
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடல் விளக்கங்களயும், சிறப்புகளையும்
தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

📕மூன்றாம் திருமுறையில் வரும்
பாடல்கள்:  714 - 725
பதிகம் 325    தலம் திருப்பிரமபுரம்.
'சுரர் உலகு நரர்கள்பயில் தரணிதல'
எனத் தொடங்கும் பதிகப் பாடல்கள்.

⚜️வழிமொழி திருவிராகம் என்னும் வகை சேர்ந்தது.

🅾️#வழிமொழிதிருவிராகம்:

⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன  தனனதன  தனனதன  
              தனனதன    தனனதனனா

என அமைகிறது.

இப்பதிகத்தின் 1, 2, 3, 4 பாடல்கள் பற்றி நான்காவது முன்பதிவிலும்

இப்பதிகத்தின் 5, 6, 7, 8 பற்றி ஐந்தாவது பதிகத்திலும்  

இப்பதிவில்,
இப்பதிகத்தின் 9,  வது பாடல் விளக்கங்களையும் சிறப்புகளையும் பற்றி தொடர்ந்து சிந்திக்கலாம்.

🔵 இதில் திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.

🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு பாடல்கள் செய்துள்ளார். 

✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.

🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

⏺️இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

⏹️சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை -  வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🔹சாதாரி என்ற பண் வகையினது.

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

பாடல். 9.
💠சண்பை:
சண்பை என்னும் கோரையால் உண்டான புண்கள் தீருமாறும் கண்ணபிரான் போற்றி வழிபட்டுச் சாபத்தை நீக்கியதால், சண்பை என்னும் பெயர் பெற்ற திருத்தலமாகும்.

✳️'ண' சீர் அமைப்புள்ளது.

பாடல். 722

விண்பயில  மண்பகிரி   வண்பிரமன் எண்பெரிய  பண்படைகொள்  மால்

கண்பரியும்  ஒண்பொழிய நுண்பொருள்கள் 
தண்புகழ்   கொள்  கண்டன் இடமாம்

மண்பரியும்  ஒண்பொழிய   நுண்புசகர் 
புண்பயில  விண்படரஅச்

சண்பைமொழி  பண்பமுனி கண்பழிசெய் 
பண்புகளை சண்பை நகரே.
         
                                               - 3:325:9 (722)
பொருள் :
பெருமை மிகுந்த பிரமன் விண்ணில் உயர்ந்து சென்றும், எண்ணுவதற்கு அரியதாகிய வலிமை மிகுந்த சக்கரப் படையுடடைய திருமால், மண்ணில் குடைந்து சென்றும், தேடியும், ஒளியின் தன்மையினையும் கரந்து நுண்ணிய பொருளாக விளங்கி, அத்தகைய இரு மூர்த்திகளாலும் காணப் பெறாது புகழ் கொண்டு மேவிய நீலகண்டர், சிவபெருமான். அப்பெருமான் வீற்றிருக்கும் இடமாவது, மண்ணுலகத்தில் தமது பெருமையை அழித்துக் கொள்ளும் தன்மையில், முனிவரை இழிவு  செய்து பழி கொண்ட தனது இனத்தவர்களுக்கு, நற்கதி உண்டாகுமாறும், சண்பை என்னும் கோரையால் உண்டான புண்கள் தீருமாறும், கண்ணபிரான் போற்றி ஏத்தப் பெயர் பெற்ற சண்பை நகரே.

 விளக்கம்:
மண்பகிரி - மண்ணைப்பிளக்கும் பன்றி ( யாகி ). 
எண் பெரிய - மிக்க மதிப்புடைய. 
பண் - தகுதியான, 
படைகொள் - சக்கராயுதத்தைக் கொண்ட. மால் - திருமால் ( பூமியிற் சென்றும் )

வண் பிரமன் - சிறந்த பிரமன். விண்பயில - ஆகாயத்தில் சென்றும்,

கண்புரியும் - கண்ணாற் பற்றக்கூடிய. 
ஒண்பு - ஒளி. 
ஒழிய - நீங்க. 
நுண் பொருள்கள் - அவற்றிற்கு எட்டாததாகிய நுண்ணிய பொருள்களாக. தண்புகழ்கொள் - இனிய கீர்த்தியைக்கொண்ட. 
கண்டன் இடமாம் - அகண்டனாகிய சிவபெருமானின் இடமாகும்.  

மண்பரியும் - உலகத்தைக் காக்கின்ற, ஒண்பு ஒழிய - ஆண்மை நீங்க. 
நுண்பு - அற்பர்களாகிய. 
சகர் - யாதவர்கள். 
புண்பயில - ஒருவரோடு ஒருவர் அடித்துக் கொண்டு செத்து. 
விண்படர - விண்ணுலகை அடைய. 

பண்பமுனி தவப்பண்பையுடைய துருவாசமுனிவர். 
கண்பழி செய் - கருதத்தக்க பழியைச் செய்த. 
பண்பு - சாபத்தை. 
களை - நீக்கியதனால். 
சண்பை மொழி - சண்பையென்று மொழியப்படும் சண்பைநகர்
🎶மிக அற்புதமான பாடல். மிக மிக முக்கியமானது. 

🌟இப்பாடலை திரும்பத் திரும்ப ஒதிக்கொண்டுவந்தால் நாவிற்கும் உள்ளத்திற்கும் அருமருந்து. 

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.
⏺️ ஒவ்வொறு பாடலிலும் சீர்காழி பதியின் பெயரில் வரும் ஒரு தமிழ் எழுத்தை  பாடல் முழுதும் சிறப்புடன் சீர்  அமைத்துள்ளது மிகவும் அற்புதமானது. 

🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு தம்பாடல்களில் சிறப்பு செய்துள்ளார். 

✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.

💠பிற்கால இசைத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாக அமைந்தப் பாடல்கள்

♦️அருட் செல்வர் தமிழ் விரகனார், திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற இப் பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

📚பாடல்,பொருள்,விளக்கம் பல நூல், தரவுகளிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

🛡️சிந்தனைக்கும் எட்டாத ஞானசம்பந்தரின் அற்புதத் தமிழின் இசைப்பாடல் சிறப்பை உணருவோம். இதுவே,  தமிழரின்பொக்கிஷம்.

🙇‍♂️நன்றி🙏
🛐💚🕉️🧡☸️💜⚛️💙🔯💛🙏🙆🏼🙇🏼‍♂️
என்னமும் தகவல் ஆக்கமும், தொகுத்து வழங்குவது:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்

முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=5825331274208748&id=100001957991710

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...