Saturday, July 24, 2021

வினாவுரை - சம்பந்தர் அமுதம் - திருத்தெளிச்சேரி - பதிவு 8 பாடல் 8

#சம்பந்தர்அமுதம்
#தலப்பெருமை #பேரருட்திறன்
#வினாவுரை
    
🌈#அமுதப்பதிகங்கள்   
              அமைப்புச்சிறப்புகள்

பதிவு: 8
வினாவுரை அமைப்பு என்றால் என்ன?
♻️இறைவன் சிறப்புகளை வினவுதல் போல கேள்வி எழுப்பி அதன் விடையை உட்பொருளாக உணர்த்தும் அமைப்பில் பாடல் அமைந்து வருவது. 
🛐8️⃣
8.கொத்தாக உள்ள மலர்கள் இரைந்தது போன்ற அடர்ந்த மென்மையான கூந்தலும், குயில் போன்று இனிமையான இசைக் குரலும், சித்திரக்கொடி போன்ற நுண்மையான இடையும் கொண்ட மகளிர் விளங்கும், மாளிகைகள் கொண்ட தலம் எது?

இரவணனின்,  இருபது கரங்களையும் நெறித்தது ஏன்?

விளக்கம்: 
இரண்டாம் திருமுறை 
பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி:  'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
வினாவுரைப் பதிகம்
பாடல் : 8
கொத்தி ரைத்த மலர்க்குழ லாள்குயில் கோலஞ்சேர்
சித்தி ரக்கொடி மாளிகை சூழ்தெளிச்சேரியீர்

வித்த கப்படை வல்ல அரக்கன் விறற்றலை
பத்தி ரட்டிக் கரநெரித் திட்டதும் பாதமே

பொருள் :
கொத்தாக உள்ள மலர்கள் இரைந்தது போன்ற அடர்ந்த மென்மையான கூந்தலும், குயில் போன்று இனிமையான இசைக் குரலும், சித்திரக்கொடி போன்ற நுண்மையான இடையும் கொண்ட மகளிர் விளங்கும், மாளிகைகள் கொண்ட தெளிச்சேரி பெருமானே!

பிரமதேவனால், வரம் பெற்று, உயர்ந்த படைகள் கொண்ட இராவணனின் வலிமை பொருந்திய தலைகள் பத்தும், இருபது கரங்களும் தெரியுமாறு செய்து, அருள் புரிந்தது உமது திருப்பாதமே.

சிறப்பு:
அழகும், வளமும் மிக்க பெண்கள் வசிக்கும் தலச்சிறப்பும்,
பத்து தலைகள், இருபது கரங்கள், கொண்ட இராவணனை நெரித்த ஆற்றலை வியந்தது.
🛐ஞானசம்பந்தரின் பதிகச் சிறப்பு
 ஒவ்வொரு பாடலும் 4 வரிகள், அதில் முதல் இரு வரிகளில், 
தலச்சிறப்பும், அடுத்த இரு வரிகளின் இறைவரின் அருட்சிறப்பும் வெளிப்படுத்தும் அற்புத பதிகம்.
முதல் இருவரிகளில் ......

1.திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்ற இறைவரை விளித்தது.

அடுத்த இருவரிகளில்
2.இறைவரின் அருட்பேராற்றலை குறிப்பிட்டு, வியந்து வினவுகிறார்.

💥இதுகாறும், திருமுறையில் தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வினாவுரை அமைப்பு பதிகங்களை சிந்தித்தோம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️

     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு:
https://m.facebook.com/story.php?story_fbid=5906357959439412&id=100001957991710

No comments:

Post a Comment

கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - (குலசேகரமுடையார்) - பிரதோஷக்குழு யாத்ரா 17.8.2025

#கல்லிடைக்குறிச்சி -  குலசேகரமுடையார் ஆலயம் 17.8.25 #கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - குலசேகரமுடையார் அம்பாள் = தர்மசவர்த்தினி (அறம...