Monday, July 5, 2021

வழிமொழிதிருவிராகம் - சம்பந்தர் இசையமுதம் - பதிவு 10 பாடல் 10.

#வழிமொழிதிருவிராகம்
பதிவு : பத்து பாடல்: 10
🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.

📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🛐🙏
🌀ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
இத்தகைய பாடல்கள் தமிழரின் இசை பொக்கிஷம்:
#திருவிராகம், #வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம் #முடுக்கியல் #அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடலையும் அதன் விளக்கங்களயும், சிறப்புகளையும் தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன தனனதன தனனதன  
              தனனதன தனனதனனா

என அமைகிறது.

 🧿இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில் (இறுதிப் பாடலில்) திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
🔵
🌟ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

🔹சம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை: தலம்: திருப்பிரமபுரம்:
பதிகம்: 325 (67) 
பாடல்: 1-12 (714-725)
இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

🌟சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை - வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🌀சாதாரி என்ற பண் வகையினது.

🎶மிக அற்புதமான பாடல். மிக மிக முக்கியமானது. 

🌟இப்பாடலை திரும்பத் திரும்ப ஒதிக்கொண்டுவந்தால் நாவிற்கும் உள்ளத்திற்கும் அருமருந்து. 

🗣️வாய்பேச்சுக் கோளாறு இன்றி நல்ல உரையாடல், குரல் வளம் நிச்சயம் கிடைக்கும்.

👱குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல்

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.
⏺️ ஒவ்வொறு பாடலிலும் சீர்காழி பதியின் பெயரில் வரும் ஒரு தமிழ் எழுத்தை பாடல் முழுதும் சிறப்புடன் சீர் அமைத்துள்ளது மிகவும் அற்புதமானது. 

🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு தம்பாடல்களில் சிறப்பு செய்துள்ளார். 

✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.

💠பிற்கால இசைத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாக அமைந்தப் பாடல்கள்

♦️அருட் செல்வர் தமிழ் விரகனார், திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற இப் பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

📚பாடல்,பொருள்,விளக்கம் பல நூல், தரவுகளிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.
🛡️சிந்தனைக்கும் எட்டாத ஞானசம்பந்தரின் அற்புதத் தமிழின் இசைப்பாடல் சிறப்பை உணருவோம். இவையே, தமிழரின்பொக்கிஷம்.

பாடல். 10
♦️காழி: ஆடலில் தோற்ற காளிக்கும் அருளிய காழி நகர்.

✳️'ழ' கரசீர் அமைப்பு.

பாடல்: 723

பாழியுறை வேழநிகர் பாழமணர் 
சூழும் உடல் ஆளர்உணரா

ஏழினிஇசை யாழின்மொழி ஏழையவள் வாழும்இறை தாழும்இடமாம்.

கீழிசைகொள் மேலுலகில் வாழரசு சூழரசு வாழஅரனுக்கு

ஆழியசில் காழிசெய ஏழுலகில் ஊழிவளர் காழிநகரே.

                                   - 3:325:10 (723)
பொருள் :
சமணர்களும் சாக்கியர்களும் ஈசனை உணராதவர்கள். ஏழிசையும், யாழின் இனிமையும் போன்ற மொழி பகரும் உமாதேவியை உடனாகக் கொண்டு மேவும் சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாவது, கீழ் உலகில் பெருமையுடன் வாழ்பவர்களும், மேல் உலகத்தில் அரச போகத்தில் வாழ்பவர்களும் மற்றும் சூழ்ந்து விளங்குபவர்களும் வாழும் பொருட்டு நடனம் புரிந்த ஈசன்பால், ஆடலில் தோற்று அப்பெருமானைப் பூசித்துத் தன் குற்றமானது நீங்குமாறு ஏத்திய காளிதேவிக்கு அருளிய காழி நகரே.

விளக்கம்:
பாழி உறை - பாழியில் தங்கும், 
வேழம் நிகர் - யானையை யொத்த, 
பாழ் அமணர் - பாழ்த்த அமணர்களும். சூழும் - கூட்டமாக உள்ள, 
உடல் ஆளர் - உடலைப் பாதுகாப்போராகிய பௌத்தர்களும், உணரா - உணராத, 

ஏழின் இசை - ஏழு சுரங்களையுடைய, யாழின்மொழி - யாழ் போற் பேசுகின்ற, ஏழையவள் - பெண்ணாகிய அம்பிகையுடன், 
வாழும் இறை - வாழ்பவராகிய சிவபெருமான், 
தாழும் - தங்கும், ( இடம் ஆம் ) 

கீழ் ( உலகில் ) கீழ் உலகில், 
சூழ் - சூழ்ந்த அரசு - அரசர்களும், இசைகொள் - புகழ்கொண்ட, 
மேல் உலகில் மேல் உலகத்தில், 
வாழ் - வாழ்கின்ற, 
அரசு - அரசனாகிய இந்திரனும் ; 
வாழ - ( காளியின் துன்புறுத் தலினின்று ) வாழும் பொருட்டு ( நடனம் ஆடுதலில் ) அரனுக்கு சிவபெருமானுக்கு,

ஆழிய - ஆழ்ந்த, தோற்ற, 
சில்காழி - சிலகோவைகளையுடைய மேகலாபரணம் அணிந்தவளாகிய அக்காளி, 
செய - தன் குற்றம் நீங்கும்படி வந்துபோற்ற, அருள் பெற்ற செயல் ஏழுலகில் - சப்த லோகங்களிலும், 
ஊழி - பல ஊழி காலமாக, 
வளர் - பெருகும்

🙇‍♂️நன்றி🙏
🛐💚🕉️🧡☸️💜⚛️💙🔯💛🙏🙆🏼🙇🏼‍♂️
என்னமும் தகவல் ஆக்கமும், தொகுத்து வழங்குவது:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=5829633637111845&id=100001957991710

No comments:

Post a Comment

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி -பிரதோஷக்குழுயாத்ரா 14.9.25 - கொங்குநாட்டுத்தலங்கள்

திருஆவினன்குடி - குழந்தை வேலாயுத சுவாமி திருஆவினன்குடி - குழந்தைவேலாயுத சுவாமி திரு என்ற இலக்குமி தேவியும், ஆ என்ற காமதேனுவும், இனன் என்ற சூ...