Thursday, July 8, 2021

வழிமொழிதிருவிராகம் - சம்பந்தர் இசையமுதம் - பதிவு - 12 பாடல் 12

#திருமுறைகளில்_தமிழமுதம்
#சம்பந்தர்இசைஅமுதம்
#வழிமொழிதிருவிராகம்
பதிவு : 12

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

🗣️வாய்பேச்சுக் கோளாறு இன்றி நல்ல உரையாடல், குரல் வளம் நிச்சயம் கிடைக்க இப்பதிகம் உதவும்.
👱குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல்
📚தமிழ் மொழி வளம் உயர்வு உணர்ந்து அறிய உதவும் அற்புத பதிகம் இது.

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.

📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🛐🙏
🌀ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
இத்தகைய பாடல்கள் தமிழரின் இசை பொக்கிஷம்:
#திருவிராகம், #வழிமொழிதிருவிராகம்,
#வண்ணகம் #முடுக்கியல் #அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடலையும் அதன் விளக்கங்களயும், சிறப்புகளையும் தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன  தனனதன  தனனதன  
              தனனதன    தனனதனனா

என அமைகிறது.

 🧿இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில் (இறுதிப் பாடலில்) திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
🔵
🌟ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

🔹சம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை: தலம்: திருப்பிரமபுரம்:
பதிகம்: 325  (67) 
பாடல்: 1-12 (714-725)
இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

🌟சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை -  வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🌀சாதாரி என்ற பண் வகையினது.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல் 12.
💠கழுமலம்: உரோமச முனிவர் பூசித்து உலக உயிர்களின் மலங்களைக் கழுவும் (நீக்கும்) வரம் பெற்ற தலம்.

🎶மிக அற்புதமான பாடல். மிக மிக முக்கியமானது. இப்பாடலை திரும்பத் திரும்ப ஒதிக்கொண்டுவந்தால் நாவிற்கும் உள்ளத்திற்கும் அருமருந்து. வாய்பேச்சுக் கோளாறு இன்றி நல்ல உரையாடல், குரல் வளம் நிச்சயம் கிடைக்கும்.
👱குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல்.

✳️தமிழின் சிறப்பு எழுத்தாகிய 'ழ' கரத்தைக் கொண்டு சீர் அமைத்துள்ளார்.

♦️இப்பாடலில் தான்  'வழிமொழிகள் மொழி தகையவே' என்று இப்பதிகத்தின் பண் இசை அமைப்புக்கு அவரே பெயர் சூட்டியருளிய பாடல்.

⏹️இதுவே வழிமொழி திருவிராகம் என்ற இசை அமைப்பு பாடல் முறைக்கு ஆதாரப் பாடல் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

⚜️பிற்கால தமிழ் இலக்கியத்தின் இவ்வகைப் பாடல்களுக்கு மிக முக்கியமான அடிப்படையாக அமைத்தருளிய திருக்கடைக்காப்பு பதிகம்.

🔹மூன்றாம் திருமுறை: பதிகம்: 325 
பாடல். 725:

ஒழுகலரிது   அழிகலியில்   உழியுலகு பழிபெருகு    வழியை       நினையா

முழுதுடலில்     எழுமயிர்கள்   தழுவுமுனி குழுவினொடு  கெழுவுசிவனைத்

தொழுதுலகில்  இழுகுமலம்  அழியும்வகை 
கழுவுமுரை  கழுமலரநகர்ப்

பழுதிலிறை  யெழுதுமொழி தமிழ்விரகன் 
வழிமொழிகள்   மொழி தகையவே.

பொருள்:

நல்லொழுக்கத்தில் நிற்றல் அரிதாகி அழிகின்ற கலிகாலத்தில் உலகில் பழிபெருகுதலை நினைந்து வருந்தி, உடல் முழுவதும் முடி முளைத்துள்ள உரோமச முனிவர் தம் குழுவினருடன் அங்குத் தங்கி, சிவபெருமானைத் தொழுது, உலக இச்சைக்கு இழுக்கின்ற மலங்கள் நீங்கிச் சிவஞான உபதேசம் பெற்றதால் கழுமலம் எனப் போற்றப்படும் திருத்தலத்தினை வணங்குவோரின் குற்றம் இல்லையாகச் செய்கின்ற தலைவனும், எழுதும் வேதமெனப் போற்றப்படும் தமிழ் வல்லவனுமாகிய ஞானசம்பந்தன் அருளிய இந்த வழிமொழித் திருவிராகப் பாசுரங்கள் பாடிப் பயன்பெறும் தன்மை உடையன.

விளக்கம்:
அழிகலியில் - அறம் அழிகின்ற கலியுகத்தில், 
உலகு உழி - உலகினிடத்தில், 
ஒழுகல் அரிது - அறவழியில் ஒழுகுவது அரியது ( என்றும் ) 
பழிபெருகு வழியை - பாவம் பெருகுகின்ற வழியையும், 
நினையா - நினைந்து. 

முழுது உடலின் - உடல் முழுவதும், 
எழும் மயிர்கள் - முளைத்த
உரோமங்களைக்கொண்ட, 
முனி - உரோமச முனிவர், 
குழுவினொடு - தமது கூட்டத்தொடு. ( வந்து ) 
கெழுவு - அங்கே தங்கிய. 
சிவனை - சிவபெருமானை 

தொழுது - வணங்கி, 
உலகில் - உலக இச்சையில், 
இழுகும் - வழுக்கச் செய்கின்ற. 
மலம் அழியும் வகை - பாசங்கள் நீங்கும் விதம். 
கழுவும் - போக்கிய, 
உரை - வார்த்தையை ( புகழை ) யுடைய. கழுமலநகர் - கழுமலமென்னும் பதியின்,

பழுதில் இறை - வணங்குவோரின் குற்றம் இல்லையாகச் செய்கின்ற தலைவனும், எழுதும் மொழி - எழுதக்கூடிய வேதமொழியாகிய 
தமிழ் விரகன் - தமிழில் வல்லவனுமாகிய திருஞான சம்பந்தனேன். 
வழி மொழிகள் - வழிமொழித் திருவிராகப் பாசுரங்கள். 
மொழி தகையவே - பாடிப்பயன்பெறும் தன்மை உடையனவாம்.

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐

💠பிற்கால தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாகவும்,
✳️திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார் முதலிய ஞானிகள் போற்றிய 
♦️அருட் செல்வர் திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

🙏நன்றி
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 
🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
முன்பதிவு:
https://m.facebook.com/story.php?story_fbid=5839149982826877&id=100001957991710

No comments:

Post a Comment