Thursday, July 1, 2021

வழிமொழி திருவிராகம் - சம்பந்தர் இசையமுதம் பதிவு 6 பாடல் 6

#வழிமொழிதிருவிராகம்,
பதிவு: 6 பாடல்.6

🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♂️🙏

🗣️வாய்பேச்சுக் கோளாறு இன்றி நல்ல உரையாடல், குரல் வளம் நிச்சயம் கிடைக்க இப்பதிகம் உதவும்.
👱குழந்தைகளுக்கு அவசியம் கற்றுக்கொடுக்க வேண்டிய பாடல்
📚தமிழ் மொழி வளம் உயர்வு உணர்ந்து அறிய உதவும் அற்புத பதிகம் இது.

👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🌬️2. இப்பதிவுகளில் உள்ள தேவாரப் பாடல்களை குறைந்தபட்சம் இரண்டு முறைகளாவது வாய் விட்டு உச்சரித்து படித்தல் அவசியம்.

📚3. இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே. 

🛐🙏
🌀ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
இத்தகைய பாடல்கள் தமிழரின் இசை பொக்கிஷம்:
#திருவிராகம், 
#வண்ணகம் #முடுக்கியல் #அடுக்கியல் 
இவை பற்றி முன்பதிவுகளில் சிந்தித்தோம்.
#வழிமொழிதிருவிராகம் பதிகப் பாடலையும் அதன் விளக்கங்களயும், சிறப்புகளையும் தொடர்ந்து இப்பதிவில் பார்ப்போம்.

🅾️#வழிமொழிதிருவிராகம்:
⏺️இலக்கணம் :
⏏️குற்றெழுத்துப் பயின்று வரும் முடுகிய ஓசையுடையதாய் அடி முதற்சீரின் இரண்டாம் எழுத்து சீர்தோறும் ஒன்றி வழியெதுகையால் வரத் தொடுப்பது இவ்வகையாம்.
(முடுகிய என்பது வேகமாக ஓடும் தாள அமைப்பு எனக் கொள்ளலாம்)

🔸இதன் ஓசை அமைப்பில் பாடல் 

தனனதன  தனனதன  தனனதன  
              தனனதன    தனனதனனா

என அமைகிறது.

 🧿இப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில் (இறுதிப் பாடலில்) திருஞானசம்பந்தர் 'வழிமொழிகள் மொழி தகையவே' என்று குறிப்பிட்டு சிறப்பிப்பதாலே இந்தப் பதிகம் வழிமொழி திருவிராகம் என்னும் பெயர் சூட்டப்பட்டது.
🔵
🌟ஞானசம்பந்தர் அருளிய அற்புத இசைத் தமிழ் பதிகங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.

🔹சம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை: தலம்: திருப்பிரமபுரம்:
பதிகம்: 325  (67) 
பாடல்: 1-12 (714-725)
இந்தப் பதிகம் 12 பாடல்கள் கொண்டது.

🌟சீர்காழிப்பதியின் 12 பெயர்கள் வந்த வழியை -  வரலாற்றிணை - விளக்கத் தக்க வகையில் அமைந்துள்ளது.

🌀சாதாரி என்ற பண் வகையினது.
🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
பாடல் 6.
💠பூந்தாராய் : 
திருமால் வெள்ளைப் பன்றி உருவெடுத்து இரணியாக்கனைக் கொன்று பூமியைக் கொம்பிலேற்றி அவனை வருத்திய பழிபோகச் சிவனை வழிபட்ட புகழ்மிக்க பூந்தராய் என்னும் திருத்தலம்; பூந்தாராய் என்றும் இப்பதி.

✳️'ரா' என்னும் சீர் அமைப்பு அமைந்துள்ளது.

பாடல். 6. (719)

நிராமய     பராபர          புராதன  
பராவுசிவ  ராகஅரு ளென்று
இராவும்எ  திராயது      பராநினை 
புராணன்    அமராதிபதியாம்
அராமிசை   யிராதெழில்  தராயர        பராயண     வராக உருவா
தராயனை   விராயெரி      பராய்மிகு தராய்மொழி  விராயபதியே.

                                       -03.325:06 (719)
பொருள் :
ஈசன், எத்தகைய பிணிக்கும் ஆட்படாதவர்: நோய் அற்றவர்; மேலான கடவுள்: தொன்மைப் பழம்பொருளானவர்; பரவப்படும் சிவநாமத்தை இடையுடன் மொழிதலே அருள் ஈட்டுவதற்கு உரியதென, இரவும் பகலும் தியானத்தால் போற்றப்படும் புராணர். அப்பெருமான் அமரும் ஆதிபதியாவது, பாற்கடலில், அரவணையிலிருந்து எழுந்து அரநாமத்தைப் பாராயணம் செய்து, வெள்ளைப் பன்றியின் வடிவு தாங்கிய திருமால், இரணியாக்கதனைக் கொன்ற பழி தீரும் பொருட்டுப் பரவப்படுகின்ற பூந்தராய் என மொழியாப் பெறும் பதியே.

விளக்கம்:
நிராமய - நோயற்றவனே. 
பராபர - உயர்வுடையதும், உயர்வற்றதும் ஆனவனே ; 
புராதன - பழமையானவனே. 
பராவு - அனை வரும் துதிக்கின்ற. 
சிவ - சிவனே. 
ராக - விரும்பத்தக்கவனே. 
அருள் என்று - அருள் வாயாக என்று. 

இராவும் - இரவிலும். 
எதிராயது - பகலினும். 
பரா - பரவி. 
நினை - உயிர் அனைத்தும் தியானிக்கின்ற. 
புராணன் - பழமையானவனும். 
அமர ஆதி - தேவர்களுக்குத் தலைவனுமாகிய சிவபெருமானின். 
பதி - இடமாகும். 

அராமிசை - ஆதிசேடனாகிய பாம்பின்மேல். 
இராத - இல்லாத. ( இரணியாக்கனாற் கொள்ளப்பட்டுக் கடலிற் கிடந்த ) 
எழில் - அழகிய பூமியை. 
தரு - கொம்பினால் கொண்டு வந்த. 
ஆய - அத்தகைமை பொருந்திய. அரபராயண - சிவனைத் துதிக்கின்ற. வராக உரு - வெள்ளைப் பன்றி வடிவுகொண்ட. 

வாதராயனை - திருமாலை. 
விராய + எரி
விராய் - கலந்த. 
எரி - தீப்போன்ற பழி நீங்குதற்பொருட்டு. பராய் - அவனால் வணங்கப்பட்டு. ( அதனால் ) 
மிகு - புகழ்மிகுந்த. 
தராய் மொழி - பூந்தராய் என்னும் பெயர். விராய - கலந்த, 
பதி ஆம். 

🛐🙏🎪🙏🏻🎪🙏🏼🎪🙏🏽🎪🙏🏾🎪🙏🏿🎪🛐
🎶மிக அற்புதமான பாடல். மிக மிக முக்கியமானது. 

🌟இப்பாடலை திரும்பத் திரும்ப ஒதிக்கொண்டுவந்தால் நாவிற்கும் உள்ளத்திற்கும் அருமருந்து. 

⏺️சந்தப்பாக்களின் சீர்களில் ஒவ்வொர் உயிரும் ஓரசை என்பதால் ஓசை நயமும் தாளமும் நிறைய அமைத்துள்ளதை நாம் சிந்திக்க வேண்டும்.
⏺️ ஒவ்வொறு பாடலிலும் சீர்காழி பதியின் பெயரில் வரும் ஒரு தமிழ் எழுத்தை  பாடல் முழுதும் சிறப்புடன் சீர்  அமைத்துள்ளது மிகவும் அற்புதமானது. 

🔷இது போன்ற சந்தப் பாடல்களை கற்றுணர்ந்து அருணகிரியார் தம்முடைய திருப்புகழ் பாடல்களை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

🔹திருஞானசம்பந்தப்பிள்ளையாரை முருகனின் திரு அவதாரமாகக் கொண்டவர் அருணகிரிநாதர். இதைக் குறிப்பிட்டு தம்பாடல்களில் சிறப்பு செய்துள்ளார். 

✔️இராமலிங்கசுவாமிகளும் இக்கருத்தை ஏற்கிறார்.

💠பிற்கால இசைத் தமிழ் இலக்கியத்தின் அடிப்படையாக அமைந்தப் பாடல்கள்

♦️அருட் செல்வர் தமிழ் விரகனார், திருஞானசம்பந்தரின் இறையருள் பெற்ற இப் பதிகப் பாடல்களை போற்றி பரவுதல் செய்வோம்.

📚பாடல்,பொருள்,விளக்கம் பல நூல், தரவுகளிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளது.

🛡️சிந்தனைக்கும் எட்டாத ஞானசம்பந்தரின் அற்புதத் தமிழின் இசைப்பாடல் சிறப்பை உணருவோம். இதுவே,  தமிழரின்பொக்கிஷம்.

🙇‍♂️நன்றி🙏
🛐💚🕉️🧡☸️💜⚛️💙🔯💛🙏🙆🏼🙇🏼‍♂️
என்னமும் தகவல் ஆக்கமும், தொகுத்து வழங்குவது:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
பதிவு: ஒன்று பாடல் 1
https://m.facebook.com/story.php?story_fbid=5787884447953431&id=100001957991710
பதிவு : இரண்டு : பாடல் 2
https://m.facebook.com/story.php?story_fbid=5795841430491066&id=100001957991710
பதிவு : மூன்று : பாடல் 3
https://m.facebook.com/story.php?story_fbid=5800911013317441&id=100001957991710
பதிவு : நான்கு: பாடல் 4
https://m.facebook.com/story.php?story_fbid=5805963462812196&id=100001957991710
பதிவு : ஐந்து: பாடல் 5
https://m.facebook.com/story.php?story_fbid=5810152739059935&id=100001957991710

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...