Sunday, December 27, 2020

இலங்கை பயணம் 2018 பதிவு - 1. சென்னை - இலங்கை

✈️இறையருளால் கயிலாய தரிசனம் முடிந்ததும் இலங்கை சென்று பாடல் பெற்ற தலங்கலான திரிகோணமலை மற்றும் திரு கேதீஸ்வரம் தரிசனம் செய்தும், கதிர்காமம் முருகன் தலம் தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. 
சென்னையை சேர்ந்த SUJANA TOUR திரு S.R. பாலசுப்பிரமணியன் அவர்கள் ஆதரவில் இலங்கை முழுவதும் 8 நாட்கள் சுற்றி வந்து ஏராளமான இந்து மற்றும் பெளத்த புராண இடங்களை தரிசனம் செய்ய வாய்ப்புக் கிடைத்தது. 

13.12.2018 அன்று சென்னையிலிருந்து நன்பகல் புறப்பட்டு  மதியம் இலங்கை கொழும்பு Bandaranaike International Airport அடைந்தோம். அங்கிருந்து பயணம் முழுதும் AC பஸ் பயணம் Star Hotel தங்கல் நல்ல உணவுடன், அருமையான காலநிலை மற்றும் இறையருளால் எல்லா ஆலயங்களிலும் சிறப்பான தரிசனம் கிடைத்தது. வாழ்க்கையின் ஓர் அற்புத அனுபவம்.

கடந்த 13.12 2018ல் புறப்பட்டு 20.12.2018 வரை இலங்கையில் தரிசனம் செய்த இடங்களையும் அனுபவங்களையும் இனிய நம் நன்பர்களிடம் அவ்வப்போது பகிர்ந்து கொள்கிறேன்.  நன்றி. ✍️🙏https://m.facebook.com/story.php?story_fbid=4929169957158222&id=100001957991710

Wednesday, December 23, 2020

அகத்தியர் மலை / அகத்தியர் கூடம்.பயண அனுபவ குறிப்புகள் .(19.01.2019 முதல் 23.01.2019 வரை)

அகத்தியர் மலை / அகத்தியர் கூடம்.
பயண அனுபவ குறிப்புகள் .
(19.01.2019 முதல் 23.01.2019 வரை)

சிவாய நம . ஓம் அகத்தீசாய நமக

சிவபெருமான் அருள் பெற்ற அகத்திய மாமுனி தெற்கு புறம் வந்து இம்மலையில் தான் தவம் இருந்தார். இம்மலையின் அமைப்பு சிவலிங்கம் போன்றது. எப்புறம் இருந்து பார்த்தாலும் சிவகிரியாய் அற்புத காட்சி கிடைக்கும்.
உச்சி மலையில் பீடத்துடன் அகத்தியருக்கு சிலை உண்டு.
இம்மலையிலிருந்து தான் பல்வேறு ஆறுகள் மேற்கு புறத்திலும், கிழக்கு புறத்திலும் உற்பத்தி ஆகின்றது.

சுமார் 1700 மீட்டர் ( 6000 - 7000) அடி உயரம் உள்ளது.
கடுமையான காட்டு வழிகள், பல்வேறு நீர் அருவிகள், சரிவான சமவெளிப் பகுதிகள் இதை எல்லாவற்றையும் தாண்டி நடந்து சுமார் 18 கீ.மீ மலை ஏறினால் Base Camp அடையலாம். இரவு தங்கி மறுநாள் காலை புறப்பட்டு காலை சுமார் 10.30 க்குள் 7. கி.மீ ஏறி விட வேண்டும். 
உச்சி மலையில் செங்குத்து பகுதிகளில் கயிறு மூலம் ஏற வேண்டும். 

மலை உச்சியில் உள்ள அகத்தியர் தரிசனம் முடிந்த உடன் திரும்பி விட வேண்டும். மலை மீதுள்ள 6வது Base Camb வந்து இரவு தங்கி மீண்டும் மறுநாள் காலை புறப்பட்டு அடிவாரம் Bonacad Base point வந்து விட வேண்டும்

 ஒவ்வாரு மலைக்கும் மலை forest  Camp உண்டு forest officer / Staff உள்ளனர் கண்காணிப்பு உண்டு ஒரு நாளைக்கு 100 பேர் மட்டுமே ஏற அனுமதி இருப்பதால் எத்தனை பேர் எங்குள்ளார்கள் என்று கண்கானித்து கொள்கிறார்கள்.

மேற்கு தொடர்ச்சி மலையில் மிக உயரமான சிகரங்களில் ஒன்று.
தமிழ்நாடு கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது.
பாபநாசத்திற்கு மேலே சுமார் 40 கீ மீ யில் இருந்தாலும் இதற்கு இப்போது முறையான வழி கேரள அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.

ஜனவரி 15 முதல் மார்ச் சிவராத்திரி வரையில் இம்மலையில் ஏற அனுமதி உண்டு. ஜனவரி 5ம் தேதியில் Net மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இந்த ஆண்டு முதல் கேரள அரசின் விதிமுறைகள் .

கட்டணம் : ௹ 1000 ஒரு நபருக்கு . 
மலையில் எந்தவித பூசைகளுக்கும் அனுமதி கிடையாது.
பிளாஸ்டிக் பொருட்கள் அறவே எடுத்து செல்லக் கூடாது. தண்ணீர் பாட்டில் எண்ணெய் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் தவிர்க்க முடியாத பிளாஸ்டிக்  container எடுத்து செல்ல வேண்டும் என்றால்
ஒரு Container க்கு ரூ.100 காப்புக் கட்Lணம் கட்டி திரும்பி வரும்போது அந்த பிளாஸ்டிக் container காண்பித்து Deposit Refund பெறலாம். 
பெண்களுக்கும் இந்த ஆண்டு முதல் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 100 நபர் மட்டுமே அனுமதி .
குருப் லீடர் Declaration எழுத்து மூலம் உறுதி மொழி கொடுத்து Permit வாங்க வேண்டும். Camera வுக்கு தனி கட்டணம் உண்டு. 

திருவணந்தபுரம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து BONACAD என்ற ஊர் (50 கீ மீ) செல்லும் பேருந்தில் செல்ல வேண்டும். காலை 5.00 மணிக்கு பேருந்து புறப்படும். தவரவிட்டால் திருவனந்தபுரத்திலிருந்து Nedumangadu சென்று Vithura என்ற ஊர் சென்றால் அங்கிருந்து Bonacad சென்று விடலாம் AUTO மூலம் Forest Check point வரை செல்லலாம். (Rs .600/- VITHURA - Bonacad Chech point வரை).
கார், Two Wheeler, சிறிய வேன்கள் Checkpoint வரை செல்லலாம். Parking Charge தனிக் கட்டணம் உண்டு.

 காலை 10.00 மணிக்குள் Report செய்ய வேண்டும்.
திரும்பி வரும்போது
மாலை 2.30 . 5. 40 க்கு Bonacad விருந்து பஸ் உண்டு.   விட்டால் Auto பிடித்து தான் விதுரா வர முடியும்.  
 Bonacad மலை கிராமம். தங்க எந்த வசதியும் கிடையாது Hotel கிடையாது.

இன்னும் சில குறிப்புகள் அடுத்த பதிவில் தொடர்கிறது . 
ஓம் நமச்சிவாயா
கைலாசநாதர் போற்றி
சுந்தராம்பாள் போற்றி.

1.

2
அகத்தியர் மலை / அகத்தியர் கூடம்.
பயண அனுபவ குறிப்புகள் .
(19.01.2019 முதல் 23.01.2019 வரை)

சிவாய நம . ஓம் அகத்தீசாய நமக

கைலாசநாதர் சுந்தராம்பாள் அருள் பெற்று இந்த வாய்ப்பு க் கிடைத்தது. எங்கள் அருமையான நண்பர்கள் குழுவால் ( திருவாளர்கள் அன்பு சகோதரர்கள் ஆனந்து, முத்துசாமி, ரவிந்தரநாத் மற்றும் கந்தப்பன் சார் சுப்பிரமணியன் சார் இவர்களால் இந்த பயணம் இனிமையாகவும் அமைந்தது.
 ஒற்றுமையாகவும் மிகச் சிறந்த புரிதலோடும்
சிவனருளால் நல்ல பயணம் நல்ல தரிசனம் கிடைத்தது.. வாழ்வின் மறக்க முடியாத ஆண்மீகபயணம். சிவாய நம
ஓம் நமச்சிவாய 
திருச்சிற்றம்பலம்.

கைலாச பயணம் - 2018

#சென்றுவந்தஆண்மீகதலம்:

மனம் விரும்பும் பயணப்பதிவுகள் 
எழுத எழுத அதுவும் ஆண்மீக பயணங்கள் அலுக்காது.

வாழ்க்கையில் மிகப் பெரும்பாலும் எல்லாமே ஏராளமான ஆண்மீக பயணங்கள்தான்.
அவன் அருளாளே அவன் தான் வணங்கி...

பாடல்பெற்ற தலங்கள் 276/276 ம் திவ்யதேசங்கள் 106/108 ம்  ஏராளமான
வைப்புத் தலங்கள், அபிமான சிவன் /பெருமாள்  தலங்கள், இன்னும் அடிக்கடி செல்லும் கிராம சிவன் | பெருமாள் ஆலயங்கள், ஆலய விழாக்கள், எல்லாம் ஒவ்வொரு முறையும், பல முறையும் தரிசனம் செய்யும் பாக்கியம் அவன் அருளாளே கிடைத்தது:

கிடைத்தும் வருகிறது. தலங்கள் எல்லாம் தரிசனம் பெற்றிருந்தும்
கைலாய தரிசனம் சென்றது வாழ்வின் பெரும் பாக்கியமே.
அதுபற்றிய மிகச்சுருக்கப் பதிவது:

கைலாசநாதர் சுந்தராம்பாள் அருளால் கைலாச தரிசன பயணம் இனிதாக நிறைவு பெற்றது.  

20.06. 2018. அன்று விமானம் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்டு லக்னோ சென்று கார் மூலம் நேப்பாள் கஞ்ச் சென்றடைந்து ஹோட்டல் சித்தார்த் தில் தங்கினோம்.

21. 06. 18. அன்று சிறிய ரக விமnனம் மூலம் சிமிகோட் சென்று  ஹேn ட்டல் மானசரோவரில் தங்கினோம். 

 22.06.18 அன்று ஹில்சா என்ற இடத்திற்கு ஹெலிகாப்டரில் சென்று பின் நேப்பாள் - திபெத் (சீனா)   நட்பு பாலம் தான்டி  பஸ் மூலம் . சீனா Immigration Office checking முடித்து தக்கல் கோட் சென்று  ஹேnட்டலில் தங்கினோம்.

23.06.2018. அன்று முழுதும் தக்கல் கோட்டில்  தங்கி கிரிவலம் செல்ல வேண்டிய பொருள்களை வாங்கிக் கொண்டோம். 

24.06.2018 அன்று கிழக்கு மற்றும்  தென்  முக தரிசனம் பெற்று மாண சரோவர் ஏரி நீரில் குளித்து விட்டு  பஸ்ஸில் 110 கி.மீ மாசை ரோவர் வலம் வந்து  அருகில் உள்ள சியு கொம்பு என்ற இடத்தில் இரவு தங்கினோம். (-10 டிகிரி).

25.06.2018 காலையில் மானசரோவரில்     ஹேnமம் (ஹோம தீப ஆராதணயில் நான் எடுத்தப் படத்தில் நடராஜர் தரிசனம் வீட்டில் வந்து பார்த்த போது தெரிந்தது) செய்து பூசை பின் அங்கிருந்து புறப்பட்டு சென்று கிழக்கு, தெற்கு முகதரிசனம் பெற்று தர்ச்சன் சென்றோம். 

அதிலிருந்து எமதுவார் என்ற இடம் சென்றடைந்தோம். கைலாய மலைக்கு தென்புறம் கிரிவலப் பாதை ஆரம்ப இடம். இங்கு குதிரை வாடகைக்கு பெற வேண்டும்.  குதிரை வாடகை தனி. நம்மிடம் உள்ள சிறிய ஷோல்டர் Bag எடுத்து வருவதற்கு தனி பணம். நம்மால் எதுவும் எடுத்து செல்ல முடியவில்லை.
உண்மையில் என் உடைகளைத் தாண்டி 1 லிட்டர் FLASK வெந்நீர் மற்றும் சிறிய பையில் ஒரு ஆப்பிள் சிறிய water Bottle. 2 சப்பாத்தி உணவுக்காக எடுத்துக் கொண்டேன். இதைக்கூட எடுத்துக் கொண்டு நடக்க சிரமமாக உள்ளது. காரணம் ஆக்ஸிஜன் குறைவதால் ஒரு 10 அடி தூரம் நடந்தவுடன் கழுத்தில் இருக்கும் FLASK ஐ எப்படn கழட்டலாம் என்றிருந்தது. எங்கள் கிரிவலம் முழுதும் மிக மிக நல்ல வானிலை வெயில் தரும் அற்புத வானிலை. இதமான குளிர்.

நானும் சிலரும் நடந்து கிரிவலம் செல்ல முடிவெடுத்து,  எமதுவார் வணங்கி தென் முகதரிசனம் பெற்று பரிகிராமா துவங்கினோம். வழியில் மேற்கு முகதரிசனம் . 
அவ்விடத்தில் வரும் போது கையிலாய மலையின் முன்புறத்தில் உள்ள மலைகள் பல்வேறு காட்சியாய் அமைகிறது. யானை போன்றும், சப்தரிஷிகள் யோகத்தில் உள்ளது போன்றும் மலைகள் அமைப்பு அற்புதம் ஆச்சர்யமூட்டுகின்றன.

 சுந்தரப் பெருமானார் வெள்ளையானையில் கயிலாயம் சென்றது. ரிஷிகளைக் கண்டதாகக் சேக்கிழார் பெருமான் கூறியருளியிருக்கும் காட்சிபோல் இருந்தது. இதெல்லாம் மனபிரமை யில்லை உண்மையாகவே இருந்தது மிகவும் ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும் இன்றளவும் இருக்கிறது.

(என் அனுபவத்தில் கைலை மலை வலம் வரும் போது வடமேற்கு பகுதியில் யானை, ரிஷிகள் தவம் இருப்பது போன்ற மலையைப் பார்த்தது மிக அற்புதம்.  ஆந்திராவில் உள்ள தர்ஷாராம் என்ற ஆலய கருவறை சுற்றின் வடமேற்கு மேல்பகுதியில் யானை அமைப்பு ஒரு ஆச்சரிய ஒப்புமை இரண்டும் தரிசித்தவர்கள் உணருவார்கள்.

அடுத்து, அகத்தியர் மலை உச்சியில் இருந்து கிழக்கு புறம் பார்க்கும் போது, ரிஷிகள் தவம் செய்யும் கோலத்தில் அந்தப் பகுதியில் மலைகள் தெரியும்.
இதையும் ஒப்புமைக்காகத் நாங்கள் கண்டதைத் தெரிவிக்கின்றேன்.)

பிறகு சற்று திரும்பி மலை சுற்றும் பாதை சென்றால் வடக்கு முகதரிசனமும் கிடைக்கப்பெற்றது.  ஒரு புறம் கையிலாயம் அதைச் சுற்றி அடுக்கடுக்காக சிறிய சிறிய மலைகள் அதன் ஓரத்தில் பாதை அடுத்து நீர் ஓடை / ஆறு  போன்று அமைந்துள்ளது. 

 அன்று மnலை   தோராழிக் என்ற இடத்தை அடைந்தோம். அங்கு Hotel போன்று பெரிய கட்டிடம் உள்ளது. அங்கு சென்றதும் உணவு தருகிறார்கள். அங்கு சென்று தங்கினோம். மnலையில் வடக்கு முகதரிசனத்துடன் பிரதோஷ வழிபாடு செய்து இரவு தங்கினோம். இரவு கடுங் குளிர்.

26.06. 2018  அன்று விடியற்காலையில் பொன்னார் மேனியன் தரிசனம் கிடைக்கப்பெற்றேnம்.
தொடர் பரிகிராமா :

இதன் பின் வடக்கு முகத்திலிருந்து கிழக்கு புறம் கிரிவலம் செய்ய மிக மிகக் கடுமையான கட்டுப்பாடுகள். முதலில் எல்லோருக்கும் அனுமதி கிடையாது என்றனர்.
பரிகிராமn செய்ய வயது மற்றும் உடல் பரிசோதனை தனித்தனியாக செய்த பிறகுதான் மீதி - பரிகிராமா - மலை வலம் செல்ல அனுமதி அளிக்கிறார்கள். அனுமதிக்கப்படாதவர்கள்  அங்கிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இந்த இடத்தில் ஒரு விஷயம் சொல்லத் தோன்றுகிறது. இந்தியாவிலிருந்து வரும் எல்லா Travels ம் நேப்பாள Travels Agent  இடம்  நம்மை ஒப்படைத்துவிடுகிறார்கள். அவர்கள் HILSA என்ற இடம் வரை தான். 
அதற்கு பிறகு திபெத் முழுதும் சீனா கட்டுப்பாடுகள் உள்ளதால் அவர்கள் சீனா ஷர்ப்பா Agent விடம் ஒப்படைத்து விடுகிறார்கள். நம் ஒவ்வொருவரையும் ஷர்ப்பா நம் Tour முழுதும் கவனித்துக்கொண்டே இருக்கிறார்.

 எங்கள் டூர் Leader மிகவும் நல்லவர் Nepal Agent மூலம் ஷர்ப்பாவிடம் program வகுத்து அதன்படி  ஷர்பாவிடம்பேசி  எங்கள் குழுவில் 6 பேருக்கு மட்டும் கிரிவலம் வர (அடியேன் உட்பட) அனுமதி கிடைத்தது. 

26.6.2018
காலையில் 2 கி.மீ நடந்து மலையில் சென்று குதிரை மூலம் 7 கிமீ மலையேற்றம் செய்து 19000 அடி உயர முள்ள டோல்மா பாஸ் என்ற இடத்தை அடைந்தோம். மிகவும் கஷ்ட்டமான பாதை அமைப்பு மலைப்பாதையில் குதிரை மீது பயணம் செல்வதே கஷ்ட்டமாக இருந்தது. அங்கிருந்து ஏழு 
கீ.மீ. மலை இறக்கம்.  நடைபயணம் தான். யாராக இருந்தாலும் நடந்துதான் செல்ல முடியும். குதிரையில் முழு பரிகிராமா செய்பவர்கள் கூட இந்த இடத்தில் நடந்து தான் செல்ல முடியும்.

பௌத்தர்கள் (அபபிரதட்சனமாக) எதிர்புறமாக கிரிவலம் வருகிறார்கள்.

 வழியில் பார்வதிகுளம் என்ற கெளரி குன்ட் மற்றும் ஐஸ் கட்டி பாதையில் இங்கு போர்டு எச்சரிக்கை உள்ளது. ஐஸ்கட்டி உருகி பாதை போல் இருக்கிறது. சில நேரங்களில் ஐஸ் பாதை உருகி விட்டால் நாம் நடக்க முடியாது. நாங்கள் அந்த பாதையில் நடந்தோம். 
பிறகு கடுமையான மலை இறக்கம் மன்சரிவு பாதையில் நடந்தும் கிரிவலப் பாதையின் கிழக்கு புறத்தை அடைந்தோம். வரும் வழியில் கைலாசபர்வதத்தின் கிழக்கு புறம் மிக நீண்ட ஆவுடை பாகம் கண்டோம்.

மேலும், சுமார் 2 கீ.மீ. தூரம் சென்று கிழக்கு புறத்தில் உள்ள பாதையிலேயே நடந்து சென்றோம். கார் செல்லும் பாதை அடைந்து கார் மூலம் ஜூதுல் பாக் என்ற இடத்தை  அடைந்து பின்  தnர்ச் சன் சென்று தங்குமிடத்தை அடைந்தோம்

 எங்களில் எனது உடன் நண்பர் திரு பரணிதரன் மற்றும் திருபாலாஜி இளைஞர்கள் மட்டுமே முழு                பரிகிராமத்தையும் நடைபயணமாகவே வலம் வந்தார்கள். இரவு தார்ச்சன்தங்கினோம்.

27.06.2018 காலை தார்ச்சனிலிருந்து புறப்பட்டு பஸ்ஸில் மானசரோவர் வழி சென்று மீண்டும் தக்கல் கோட் இமிகிரஷன் ஆபீஸ் சென்று China Entry pass மற்றும் Checking முடித்து  நேபாள் பnர்டர்  ஹில்சா   சென்று தங்கும் விடுதியில் தங்கினோம்.

இங்கு HILSA முதல் திபத் பகுதி எல்லாம் மனல் மலைகள் போன்று உள்ள அமைப்பு. எப்போது வேண்டுமானாலும் சருகிவிடும் அமைப்பு. HILSA: இங்கிருந்து தான் நேப்பாளத்தில் உள்ள
 SIMICOT என்ற இடத்திற்கு Helicopter மூலம் மட்டுமே வர போக முடியம் முக்கியமான Stratigic point . நேப்பாள் Chaina Border இடம் கொஞ்சம் கொஞ்சமாக Chaina இடம் பிடித்து வருவது தெரிகிறது. இங்கு இந்தியா நேப்பாள அரசுடன் கூட்டு நடவடிக்கை எடுத்து யாத்ரீகர்களுக்கு கட்டிடம் கட்டிக் கொடுக்கலாம். இன்னும் சில வருடங்களில் HILSA Chana வசம் போக வாய்ப்பிருக்கிறது.

28.06.2018 ஹில்சாவிலிருந்து சிமிகோட்  ஹெலி காப்டர் மூலம் தான் செல்ல முடியும். நாங்கள் HISA  சென்றபோது ஹெலிகாப்டர் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தினால் ஹில்சாவில்  நாள் தங்க வேண்டியதாயிற்று. 

28.06.2018  ஷில்சாவிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிமிகோட் அடைந்து ஹோட்டலில் தங்கினோம். கடுமையான வnணிலை மேக மூட்டத்தினnல் சிமி கோட்டில் தங்க வேண்டிய கட்டாயம். No     0ther transport except Mini Charted Flight.   

சிமிகோட் : சுமார் 500 பேர் தங்கலாம் ஆனால் கைலாஷ் போகிறவர்கள் திரும்பிவருபவர்கள் எல்லோருக்கும் இது Neck Point. சிறிய ஊர் ஆனால் அது ஒரு District head  என்கிறார்கள். இங்கிருந்து நேப்பாள் கஞ்ச் வரலாம் அல்லது காட்மண்ட் செல்லலாம். 
வானிலை காரணமாக சிமிகோட்டிலிருந்து எங்குமே போக முடியாத சூழல். Helicoptor Service மட்டும் Hilsa வுக்கு இருந்தது. இதனால் கைலாஷ் சென்றவர்கள்  Hilsa வழியாக  வர வர சிமிகோட் சிறிய மலை நகரம் என்பதால் தாங்கமுடியவில்லை.
 6 நn ட்கள் ஹோட்டலில் கட்டாயமாக தங்கியிருந்தோம்.  இந்த நாட்கள் மிகவும் பரபரப்பான செய்தியாகி இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் விவாதிக்கப்பட்டு அரசாங்கங்கள் உடனடி நடவடிக்கை எடுத்தார்கள்.

கைலாஷ் யாத்தரா சென்னையில் புறப்பட்டு பரிகிராமா முடித்து சிமி காட் வந்து தங்கும் வரையிலும் மற்றும் இறுதிவரையிலும் Super climate. No one got sick   All are good health. கிரிவலசுற்றுக்காக ஏரளமான எச்சரிக்கைகளில் மருந்து மாத்திரைகள், தின்பண்டங்கள் வாங்கியதை உபயோகப் படுத்தப்படவில்லை. திண்பண்டங்கள் கூட பிறகு எடுத்துக் கொண்டோம்.  இறையருள் இறுதிவரை அனைவருக்கும் துணையிருந்தது.

 3.07.2018 அன்று வானிலை சரியானதும் flight மூலம் நேபாள் கஞ்ச் அடைந்தோம். அங்கிருந்து லக்னோவிற்கு கார் மூலம் சென்று ஹேட்டலில் தங்கினோம்.

 வானிலையால் சிமிகாட்டில் 6 நாள் தங்க நேர்ந்தது. இது மிக இந்தியா, நேப்பாள் பகுதியில் மிகவும் பரபரப்பாகி, தமிழ்நாடு உட்பட, அனைத்து மாநிலம், மற்றும் மைய அரசும் நேபாள அரசும் மிகவும் அக்கரையும் ஆர்வமும் கொண்டு எங்களுக்கு உதவிட முழு ஆதரவு தந்தனர்.   லக்னோ வந்து அடைந்த போது அந்த ஹோட்டல் நிர்வாகத்தினர்கள் மிகுந்த உதவிகள் செய்தார்கள். மறக்க முடியாத அனுபவம்.

 04.07.2018 அன்று    மnலை  Air மூலம் Chennai Airport வந்து 5.07.2018 காலையில் இறைய ருளால் இல்லம் வந்து இனிதாக சேர்ந்தோம்.

(5.07.2018 காலை  காரைக்காலில் என் (சகோதரர்) மகனுக்கு காலை 9.30.க்கு திருமணம் முதல் நாள் வரவேற்பு.
நான் ஊர் சென்றவுடன் முதலில் கைலாசநாதர் ஆலயம் சென்று வணங்கிவிட்டு பிறகு திருமண விழா. எங்கள் குடும்பத்தினர் அனைவரும் என்னை ஆர்வத்துடன் வரவேற்றார்கள்)

பயணம் சிறக்க சென்னையை சார்ந்த மரியாதைக்குரிய  திரு S. பாலசுப்பிரமணியன், சுஜானா டூர்ஸ் மேற்கு மாம்பலம், சென்னை, அவர்கள் மிக அக்கரையுடனும் பாதுகாப்புடனும் வழி நடத்தினார். அவரின் அன்பான  சாதுவான மிக எளிமையான  பன்பு மிகவும் போற்ற தகுந்தது.  
குழுவில் என்னுடன் வந்த சகோதரர் பரணிதரன் மற்றும் அனைத்து சகோதர சகோதரிகளும் மிக மிக அன்பு, மரியாதை பொறுப்பு இருந்தது. ஒரு குடும்ப உறவு போல அமைந்தது இறையருள்.

இறைவனின் அளவற்ற கருணையினால் அற்புத தரிசனம் பெற்றோம். 

இறைவனின் கருணையினால் இனிய பயணமாக அமைந்தது. 
கைலாசநாதரே போற்றி போற்றி சுந்தரம்பாள் தாயே போற்றி போற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 என்றும் அன்புடன் 
சுப்ராம் அருணாசலம், 
காரைக்கால் 
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Aditional information :
1.
Way to Kailash: Chennai - Lucknow - Nepal Gunji - SIMILCOT - Only transportation is Mini Charted Flight from Nepal Gunji and Only by Helicoptor to reach HILSA-Neapal Tibet Border.
Small Hill town. Said to be the Biggest town in the Biggest District -HUMLA in NEPAL. People are very kind and Cooperative. Hard workers.
2.
Thkkalcot in TIBET (China occupied) - Also called Burang. Some Budda Madalayams are here.   A big town on the way to Kailash. Fully China Controlled.  China's Immigration Office is here. Big shops and hotels are here.  We can purchase some items needs for Parikrama.
3.
SIMICOT to HILSA (On the way to Kailash Manasoravar) ஹில்சா மிக முக்கியமான இடமாக இருக்கிறது. .சுமார் 15-16 ஆயிரம் அடி உயரம் உள்ளது. ஹெலிகாப்டர் மட்டும் தான் செல்கிறது. சைனா தீபத் - வழியாக பாதை அமைத்துள்ளது நேபாள் மற்றும் திபெத் (சைனா) இடையில் இருக்கிறது. கர்நாலி என்ற நதி இரண்டயும் பிரிக்கிறது. சைனா நட்பு பாலம் என்று மிக பெரிய இரும்பு பாலம் ஒன்றும் Truck பாலம் ஒன்றும் அமைத்து ஹில்சாவில் புகுந்துவருகிறது.statistic view வில் மிக நுட்பமான திட்டத்தில் சைனா வளைத்து வருவது போலவே தோணுகிறது. நமக்கு கைலாஷ் செல்வதற்கு மிக முக்கிய வழியாக இருப்பதால், இந்தியா இந்த இடத்தை பற்றி சிந்தனை கொள்வது மிக முக்கியமும் அவசியமும் ஆகிறது. இதனால் நேபாளதிற்கும் நமக்கும் நன்மை ஏற்படும். இந்தியா அரசு இப்போதைக்கு நேபாளத்துடன் MOU செய்து ஒரு நட்பு இல்லம் அமைத்து, இந்திய யாத்ரீகர்களுக்கு உதவவேண்டும். ஹில்சாவில் சைனா அதிகாரிகள் வருகை அதிகரித்து வருகிறது. பாலத்தை தாண்டியவுடன் எதிரில் சீனாவின் இமிக்ரேஷன் அலுவலகம் மிக பிரமாண்டமாக அமைத்துள்ளது குறுப்பிடதக்கது. சீனாவின் இமிக்ரேஷன் முடித்துவிட்டுதான் தக்கல்கோட் (சைனா occupied TIBET) செல்ல வேண்டும். இந்தியா அக்கறை செலுத்தவேண்டும். முக்கியம்

4.
Thkkalcot in TIBET (China occupied) - Also called Burang. Some Budda Madalayams are here. A big town on the way to Kailash. Fully China Controlled. China's Immigration Office is here. Big shops and hotels are here. We can purchase some items needs for Parikrama.


I

II.

Sunday, December 20, 2020

கொளஞ்சியப்பர் கோவில் விருத்தாச்சலம்

கொளஞ்சியப்பர் கோயில் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தின் மேற்கில் 2 கி.மீ.தூரத்தில் சேலம் போகும் பாதையில் வரும் ரயில்வே மேம்பாலம் தாண்டியதும் இடது புறத்தில் அமைந்துள்ளது. பிரார்த்தனை ஸ்தலம். பல குடும்பங்களுக்கு குல தெய்வ ஆலயம். எப்போதும் திறந்து இருக்கும். கார், சிறிய பஸ்கள் ஒரமாக பார்க்கிங் செய்ய வசதி இருக்கிறது.

கருவறையில் வினாயகர் சன்னதி மற்றும் சுயம்பு முருகன் சன்னதி. 
தனி உருவம் இல்லாத அமைப்பு. வேறு எந்த முருகன் தலமும் இப்படி இருக்காது.
குழந்தை வரம் தருவதால் எப்போதும் பக்தர்கள் கூட்டம். 
ஆலயம் சுற்றிலும் பல்வேறு குல தெய்வ சன்னதிகள். 
இங்குள்ள முனிஸ்வரர் சன்னதியில் பிராது எழுதி கட்டிவைத்தால் எண்ணங்களை நிச்சயம் ஏற்று நிறைவேற்றுவார் என்ற ஆண்மீக நம்பிக்கையில் பணம் கட்டி, தனித்தனியாக பிராது விண்ணப்பம் எழுதி கட்டி வழிபாடு செய்து ஏராளமானோர் பலன் பெறுகிறார்கள்.

விருத்தகிரிஸ்வரரை வணங்க வந்த ஞானசம்பந்தருக்கு குழந்தையாக முருகன் வந்து வழிகாட்டிய இடமாக புராணவரலாறு  கூறுகிறது.
- என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
(16.12.20)

Friday, December 18, 2020

நண்டாங்கோவில் 16.12.20

நண்டாங் கோவில்: ஸ்ரீ கற்கடேஸ்வரர் ஆலயம், திருவிசநல்லூர் அருகில்.

திருவரங்கம் - திருக்கோவிலூர் அருகில் 16.10.20

திருவரங்கம்:  திருக்கோவிலூர் - மனலூர்பேட்டை சென்று திருவரங்கம் பெண்ணை ஆறு கரையில் உள்ள ஸ்ரீ ரெங்கநாதர் ஆலயம். பகல் முழுதும் திறந்திருக்கும் ஆலயம். (இரவு 8 மணி வரை).  
பள்ளிகொண்ட பெருமாள் மிக பெரிய சுதை உருவம்.
தாயருக்குத் தனி சன்னதியுடன் கூடிய ஆலயம்.
இவ்வரிய பெருமாளை தரிசிப்போருக்கு மறுபிறவில்லை என்று பட்டாச்சாரியார் கூறி தரிசனம் செய்விக்கிறார்.

முன்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ இராமர் சன்னதியில் உள்ள ஸ்ரீஅனுமனின் பணிவு தோற்றம்  வியக்கத்தது.
ஆலய உள் நுழைவில் கிழக்குப் பார்த்த சிறிய முன் கோபுரம் (இராஜகோபுரம்) தாண்டி வடகிழக்கு மூலையில் அமைந்துள்ள  அந்தக்கால தானிய குதிர் அமைப்புக் கட்டிடம் கவனிக்கத்தக்கது.
மனலூர்பேட்டை யிலிருந்து Auto or சிற்றுந்தில் வரலாம். நல்ல பாதை அமைப்பு ஆலயம் வரை இருந்தும், அதிகம் பஸ் போக்குவரத்து கிடையாது. 
(15.12.2020)

அரகண்டநல்லூர் 16.12.20

அரகண்டநல்லூர்: திருக்கோவிலூர் வடகிழக்கில் 5 கி.மீ.
குன்றுக்கோவில், ஒப்பிலாமணீஸ்வரர். பாடல் பெற்ற தலம். சுவாமி மேற்கு நோக்கி தனி ஆலயம், 
செளந்தர அம்பாள் மிக அழகுடன் கிழக்கு நோக்கி தனி ஆலயம். 
இங்கிருந்து
 ஸ்ரீ ரமணர் முனிவர் திருவண்ணாமலையை தரிசித்த இடம்.
பெண்ணயாற்றின் வடகரையில் அமைந்துள்ளது. தென்புறம் பெரிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
சில சன்னதிகள் குடவரை அமைப்பின் உள்ளது.
சுவாமி சன்னதி, சுற்றுப் பிரகாரம், கல் மண்பம் உள்ளது.
சிறிய சாய்தள கற்பாறை அமைப்பில் ஏறி சிற்றுந்துகளில் ஆலயம் உள் வரை செல்கிறார்கள்.
(16.12.20)

திருக்கோவிலூர்: உலகளந்த பெருமாள். (16.10.20)

திருக்கோவிலூர். ஸ்ரீ திரிவிக்கிரமர் - 
ஸ்ரீ புஷ்பகவல்லி தாயார் ஆலயம்.
உலகளந்த பெருமாள். ஆலயம்.
மிக உயரமான ராஜகோபுரம் அமைந்த மிகப்பெரிய ஆலயம். பல பகுதிகள் ஆக்கிரமிப்பில் சென்றாலும் புராதானம் மிகுந்த பெரிய தலம். 108 ல் ஒன்று.
இராஜகோபுரம் தாண்டி உள்ளே சென்றால், தாயாருக்கு தனி ஆலயம் பெருமாளுக்கு வலதுபுறம் அமைந்துள்ளது. பெருமாள் ஒரு காலை ஊன்றி மற்றொரு காலை தென்புறம் உயரத்தில் காட்டும்  தோற்றம்.  அருகில் பூமாதேவி. ஊன்றிய கால்பாதத்தைப் பற்றிய படி பக்தர் அமர்ந்துள்ளார்.
அபூர்வ தோற்றம். நிறைய புராணங்கள் உள்ளதும், பலர் வழிபட்டு அருள் பெற்ற,
வைணவர்கள் போற்றும் அற்புத ஆலயம்.
(16.12.20)

எலவனார் சூர்கோட்டை 16.10.20

எலவனார்சூர்கோட்டை :
திருக்கோவிலூர் - கள்ளக் குறிச்சி பிரதான சாலையில் அமைந்துள்ள ஊர். மிக வித்தியாசமான அமைப்பில் உள்ள சிவன் ஆலயம். இரண்டடுக்கு மாடக்கோவில். சுவாமி மேற்கு பார்த்தும். எல்லா நந்திகளும் மேற்கு பார்த்தும் அமைந்துளது.  மேற்கு பார்த்த பெரிய இராஜ கோபுரம் எல்லா சுவற்றிலும் பெரிய எழுத்துகளில் கல்வெட்டுகள் உள்ளது. 
கிழக்குப் பார்த்து அம்பாள் தனிக்கோவில்.
அடுத்து பெரிய கொடிமரம். கொடிமரம் பார்த்து சிறிய மண்டத்தில் நந்திபகவான்.
அடுத்து 3 அடுக்கு இராஜகோபுரம் உள்ளது இங்கும் முழுவதும் கல்வெட்டு எழுத்துகள். உள்ளே நீண்ட மண்டம் எதிரில் கம்பீரமான தனி சன்னதியில் நம்மை நோக்கும் நந்திபகவான். நமக்கு இடது புரம் மண்டபத்தில் கிழக்கு பார்த்து ஒரு சிவலிங்கம். அடுத்தடுத்து பிரகாரத்தின் சுற்றில் பெருமாள்,  முருகன், சன்னதிகள். உள்
நுழைந்து வலது புறத்தில் பெரிய உருவத்தில் தென்மேற்கு மூலையில் வினாயகர்.
சுவாமி கருவரை இரண்டாம் அடுக்கில் உள்ளது. கீழ்பகுதியிலிருந்து இரண்டு பக்கமும் கற்படிகள் ஏறுவதற்கு உள்ளன. மேலே ஏறியதும் நீண்ட மண்டப தூண்கள் முழுதும் அழகான கற்சிற்பங்களில் கவணிக்கத்தக்கவை.
மண்டபம் தாண்டி, உள்புறம் உள்ள மண்டம் நந்திபகவான் நம்மை நோக்கியபடி. அதன் மீது உள்ள தனி மண்டபத்தில் கருவரையில் மிக கம்பீரமான பெரிய அற்புத லிங்கம் வடிவில் சுவாமி. ஆலயம்
கோட்டை அமைப்பில் உள்ளதால் கோட்டைக் கோவில் என்று குறிப்பிடுகிறார்கள்.
சூரர்களை அழித்து கோட்டையில் அருள் தருகிறார். 
கருவரை மேல் கலச பகுதியின் 4 புறமும் நந்திபகவான் ஒரேபுரம் நோக்கிய அமைப்பு.
படியிறங்கி கருவறை கோட்டையை சுற்றில் சண்டிகேஸ்வரர், தட்சினாமூத்தி சன்னதிகள் தரிசித்து அதே வழியில் ஆலயம் முன்புறம் வர வேண்டும்.
வெளிபுற பிரகாரத்தில் தனியாக அம்பாள் சன்னதியும் ஆலயமும் உள்ளது. வட புறத்தில் தனியாக பெரிய மண்டபம் மற்றும் மூலையில் சிறிய கல் படித்துறையுடன் பெரிய தீர்த்தக் கிணறும் உள்ளது
மீண்டும் படி இறந்

பகலில் திறந்தே வைத்திருக்கிறார்கள். எப்போதும் தரிசிக்கலாம். பங்குனி உத்திரத்தில் பிரம்மோர்ச்சவம். புதிய தேர் உள்ளது. ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன.
 விருத்தாச்சலத்திற்கு 27 கி.மீயில்.
(16.12.20)

Saturday, December 12, 2020

சிவபோகசாரம் (98)

சிவபோகசாரம் (98) வினையே அனுதினம் அனுபவம்.

Wednesday, December 9, 2020

சிவபோகசார சிந்தனைகள் (129)

சிவானந்தம் என்பதனை உண்மை மாத்திரையானும் கனவிலும் அறியார்;

அதனை அறிந்தநுபவிக்கும் அநுபூதிமான்களையும் அடையார்;

அதுவேயுமன்றி  
அப்பெரியோர்கள் மேல் இல்லாத குற்றங்களை ஏற்றி எங்கும் தூற்றுவார்;

 இவை அவர்கட்கு விதியாய் அமைந்தன.

- சிவபோகசாரம் (129)
பொருளுரை: மகாவித்வான் அருணை வடிவேல் முதலியார்.

Wednesday, December 2, 2020

வினாவுரை பதிகம் மூன்றம் திருமுறை பதிகம்.

பதிவு: 5.4.
4. #வினாஉரை_பதிகங்கள் 
#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️⚛️🙆🏻‍♂️🙏🏻
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : 5.4.
4. #வினாஉரை_பதிகங்கள் : 
🙏🎪🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🎪🙏
          🙆#ஆன்மீகமே_தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                        
                 🙏🙇‍♂️நன்றி🙇‍♀️🙏🏻 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
பதிவு: 5.4.
4. #வினாஉரை_பதிகங்கள் : 
திருஞானசம்பந்தரின் அற்புத பதிக அமைப்பை ப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
பாடல் குறிப்புக்களையும், பொருளையும், சிறப்புகளையும் மிகச் சுருக்கமாகவே தந்துள்ளேன். ஒவ்வொரு பாடலும் தனித்தனியாக  உணர்ந்து சிந்தித்தால் இறை பேராற்றலும், அருளும் உண்மை பொருளும் அவரவர் திறனறிவுக்கு நிச்சயம் கிட்டும். எனவே, இப்பதிவு ஒரு அறிமுகமே. பலன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.

பொருள் :
#வினாஉரை_பதிகங்கள் =
வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை  பல்வேறு கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்.

இந்த பதிவு : மூன்றாம் திருமுறையில் 
வரும் பதிகம்: 296 பாடல் பற்றியது.
🙏
மூன்றாம் திருமுறை:
பதிகம்: 296
தலம்: திருக்கண்டியூர் வீரட்டம்.
பண் : கொல்லி
பதிகம் முதலடி : 'வினவினேன் அறியாமையில் '
 பாடல் சிறப்பு:
1. வினாவுரைத் திருப்பதிகம்.
மாணிக்கவாசகர் திருச்சாழல் பதிகத்தை ஒப்புநோக்கத்தக்கது. மிகச்சிறப்பான பாடல்கள் அமைந்தது.
2.  இறைவரின் பேராற்றலை, அவர்தம் அடியார்களிடம், வினாவுரையாக அமைத்த அற்புத பதிகம்.
3. ஒவ்வொரு பாடலின்
முதலடியும் அடியாரிடம் அவர் பெருமை கூறி இறைவன் செயல் காரணம் வினவுகிறார்.
4.இரண்டாவது வரி தலப் பெருமை கூறுவது.
5.மூன்றாவது வரி இறைவன் சிறப்பை உணர்த்தியது.
4. கடைசி வரியில், இறைவரின்
 அருட்பேராற்றலை வியந்தது.

இப்பதிகத்தின் 11 பாடல்களின் பொருள் விளக்கத்தை சிறிது சிந்திப்போம்.
1️⃣
முதல் பாடல் :
1. அடியவர் பெருமை அமைத்து கேள்வி கேட்கும் விதம்: 'வினவினேன் அறியாமையில் உரை 
செய்ம்மினீர் அருள் வேண்டுவீர்'
2.. தலப் பெருமை:
'கனவிலார் புனல் காவிரிக்கரை மேய கண்டியூர் வீரட்டன் '
3. இறைவர் பெருமை:
'தனமுனே தனக்கு இன்மையோதமர்
ஆயினார் அண்டம் ஆளத்தான்'.
4. பேரருட் திறன் வியப்பு
'வனனில் வாழ்க்கை கொண்டு ஆடிப்பாடி இவ்
வையமாப்பலி தேர்ந்ததே '
பொருள் :
1.முதல்வரி:
ஈசனைத் தொழுது போற்றி அருள் நாடும் அன்பர்களே. அறியாமையால் வினவுகிறேன். உரைசெய்யுங்கள்.
2. இரண்டாவது வரி:
ஆரவாரமிகுந்து செல்லும் காவிரியின் கரையில் மேவும் கண்டியூர் வீரட்டன்
3. மூன்றாவது வரி:
தனக்கு இணையாக ஒருவரும் இல்லாதவரான ஈசன்
4. நான்காம் வரி:
பேராற்றல் வியப்பு: தனக்குவமையில்லாத, இறைவர்
மயானத்தில் ஆடியும் பாடியும் இவ்வுலகில் கபாலம் ஏந்தி பிச்சை கொண்டு விளங்குவது கண்டு வியத்தல்.
2️⃣
பாடல். 2.
1. 'உள்ள வாறெனக்கு உரை செய்மின் உயர்
வாய மாதவம் பேணுவீர்.
2. கள்ள விழிபொழில் சூழும்கண்டியூர்
வீரட்டத்துறை காதலான்.
3. பிள்ளைவான் பிறை செஞ்சடைம் மிசை வைத்ததும் பெரு நீரொலி
4. வெள்ளத் தாங்கியது என் கொலோமிகு
மங்கையான் உடனாகவே '.
பொருள் :
1.உயர்வாகிய மாதவத்தைப் பேணுகின்றவர்களே! உள்ளவாறு உரைப்பீரே.
2.தேன் கமழும் பொழில் சூழும் கண்டியூரில் வீற்றிருக்கும் வீரட்டநாதன், 
3.பிறை சந்திரனை சடையின் மீது வைத்ததும்,
4.பெருநீராகிய கங்கையைத் தாங்கியதும் என் கொல் !
என்று வினவுகிறார்.
3️⃣
பாடல் 3.
1. 'அடியர் ஆயினீர் சொல்லுமின் அறிகின்றிலேன் அரன் செய்கையைப் '
2. 'படியெலாம் தொழுது ஏத்து கண்டியூர் வீரட்டத்துறை பான்மையான்'
3. 'முடிவுமாய் முதலாய் இவ்வைய முழுதுமாய் அழகாயதோர்'
4. 'பொடியதார் திரு மார்பினிற்புரி
நூலும் பூண்டெழு பொற்பதே'

பொருள் :
1.அடியவர்கள் ஆகியவர்களே அரனின் செய்கையைச் சொல்லுங்கள்.
2. உலகமெல்லாம் தொழுது ஏத்துகின்ற கண்டியூரில் வீரட்டானத்தில் உறைகின்ற பெருமான், 
3.அந்தமாக, முதற் பொருளாய் உலகம் முழுதும் ஆகி இருப்பவர்;
4. திருவெண்ணீற்றினைத் திருமார்பில் பூசி, முப்புரி நூல் அணிந்து மேவும் பொற்பு தான் யாது? என்று வினவுகிறார்.
4️⃣
பாடல் 4.
1. 'பழைய தொண்டர்கன் பகருமின் பல
வாயவேதியன் பான்மையைக் '
2. கழையுலாம் புனல் மல்கு காவிரி
மன்னு கண்டியூர் வீரட்டன்.
3. குழையொர் காதினிற் பெய்து கந்தொரு குன்றின் மங்கை வெருவுறப்
4 புழைநெடுங்கைநன் மாவுரித்தது
போர்த்து உகந்த பொலிவதே. 

பொருள் :
1. வாழையடியாக வந்த திருக்கூட்ட  தொண்டர்களே பலவாகிய தன்மைகள் உடைய ஈசன் பாங்கினை பகருங்கள்.
2. காவிரி வளம் பெருகி மேவும் கண்டியூர் வீரட்டன்
3. குழையணிந்த காதிணன், மலைமகளான உமையவளுடன் இருப்பவர் ஈசன்.
 4. மலைமகள்  வெறுவுமாறு யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டது ஏன் என்று வினவுகிறார்.
5️⃣
பாடல்.5.
1. 'விரவிலாது உமைக் கேட்கின்றேன் ஈசன் அடி விரும்பி ஆட் செய்வீர் விளம்புமின்
2. கரையெலாம் திரை மண்டு காவிரிக் கண்டியூர் உறை வீரட்டன்
3. முரவமொந்தை முழாவொலிக்க முழங்கு பேயொடும் கூடிப்போய்ப்
4. பரவுவானவர்க்காக வார் கடல் நஞ்சம் உண்ட பரிசதே'.

பொருள்.
1. ஈசனடி போற்றும் தொண்டர்களே விளம்புங்கள்.
2. காவிரியின் அலைகள் பெருக மேவும் கண்டியூர் உறையும் வீரட்டனார்
3. மொந்தை, முழவு, வாத்தியங்கள் முழங்க பேய் பூத கணங்களும் சூழ நிற்கும் ஈசன்.
4. வாணவர்க்காக கடலில் தோன்றிய நஞ்சினை உடன் பரிசு என் கொல். என்றார்.
6️⃣
பாடல். 6.
1. 'இயலுமாறு எனக்கு இயம்புமின் இறைவனுமாய்
(வன்னுமாய்)  நிறை செய்கையைக்
2. கயல் நெடுங்கண்ணி னார்கள் தம்பொலி
கண்டியூர்உறை வீரட்டன்
3.புயல் பொழிந்திழி வானுளோர்களுக்
காக அன்றயன் பொய்ச்சிரம் 
4. அயல்நகவ்வது அரிந்து மற்றதில்
ஊணுகந்த அருத்தியே'.

பொருள் :
1. ஈசன் திருவடி வணங்கும் பக்தர்களே, நான் அறிந்து கொள்வதற்கு இயலுமாறு இயம்புவீர்
2. கயல் போன்ற கண்ணுடைய மகளிர் பொலிந்து வாழும் கண்டியூரில் உறையும் வீரட்டன்.
3. உலகில் மழை பெய்வித்து நலம்புரியும் தேவர்களுக்காக பிரமனுடைய (ஆணவத்தை) சிரத்தை கொய்த அருட் திறன். 
4. பிரம்மன் தலையைக் கொண்டு, பிச்சை ஏற்று உண்ணும் விருப்பத்தைக் கொண்டது ஏன் என்று வினவுகிறார்.
7️⃣
பாடல்: 7
1. திருந்து தொண்டர்கள் செப்புமின் மிகச்
செல்வன்றன்னது திறமெலாம்
2.கருந்தடங் கண்ணி னார்கள் நாம் தொழு 
கண்டியூர் உறை வீரட்டன்
3.இருந்து நால்வரோடு ஆல்நிழல் அறம் உரைத்ததும்மிகு வெம்மையார்
4. வருந்தவன்சிலை யால் அம்மாமதில்
மூன்றுமாட்டிய வண்ணமே.

பொருள்:
1. நன்கு சிவஞானத்தை உணர்ந்த சிவதொண்டர்களே, சிவபெருமானின் திறம் நன்கு உரை செய்வீராக.
2. மகளிர் கூடி தொழும் கண்டியூரில் உறையும் சிவன்
3. சனகாதி முனிவர்களாகிய நால்வருக்குக் கல்லால மரத்தின் நிழலில் இருந்து அறப்பொருள் உரைத்த திறன்.
4. முப்புர அரசுகளும், அவர்கள் கோட்டை மதில்களும் எரியுமாறு
மேருமலையை வில்லாக கொண்ட திறன் சிறப்பைக் கூறுக.
8️⃣
பாடல் : 8
1. நாவிரித்தரன் தொல்புகழ் பல
பேணுவீர் இறை நல்குமின்
2.  காவிரித்தடம் புனல்  செய்கண்டியூர்
வீரட்டத்துறை கண்ணுதல்
3. கோவிரிப்பயன் ஆன் அஞ்சு ஆடிய
கொள்கையும் கொடி வரை பெற
4. மாவரைத்தலத் தால் அரக்கனை வலியை  வாட்டிய மாண்பதே.

பொருள். 
1. நாவினால் ஈசன் புகழ் போற்றும் அன்பர்களே விடை கூறுங்கள்.
2. காவிரியின் நீர் வளம் பெருகும் கண்டியூர் சிவன்.
3. பசுவிலிருந்து பெறும் பஞ்ச கெளவியத்தை பூசிக்கும் பொருளாக ஏற்றவர்.
4. இரவணன் கயிலைமலையால் நெரியுமாறு விரலை ஊன்றி, வலிமையை அழித்து விளங்கிய மாண்பு யாது என வினவுகிறார்.
9️⃣
 பாடல் : 9
1. பெருமையேசர ணாக வாழ்வுறு மாந்தர்காள் இறை பேசுமின்
2. கருமையார்பொழில் சூழுந்தண்வயற்
கண்டியூர் உறை வீரட்டன்
3. ஒருமையால் உயர் மாலும் மற்றை
மலரவன் உணர்ந்து ஏத்தவே
4. அருமையால் அவருக்கு உயர்ந்து எரி
யாகிநின்ற அத் தன்மையே.

பொருள் :
1. சிவனார் பெரும்புகழ் பரவி சரன் புகுந்து அருளில் திளைக்கும் பக்தர்காள் பகர்வீராக.
2. வளமையான பொழில் சூழ்ந்தும், குளிர்ச்சியான வயல்களும் உடைய கண்டியூர் உறையும் வீரட்டன்.
3.திருமாலும், பிரமனும் ஏத்தி நிற்பவன்.
4. மாலுக்கும், பிரம்மனுக்கும் எட்டாதவனாய் உயர்ந்து, தீத்திரளாய் நின்ற தன்மை தான் யாது?
🔟
பாடல்: 10
1. நமர் ஏழுபிறப்பு அறுக்கு மாந்தர்காள்
நவிலுமின் உமைக் கேட்கின்றேன்
2. கமரழிவயல் சூழுந்தண்புனற்
கண்டியூர் உறை வீரட்டன்
3. தமரழிந்தெழு சாக்கியச் சமண்
ஆதர்ஓதும் அதுகொளா
4. தமரர் ஆனவர் ஏத்த அந்தகன்
தன்னைச் சூலத்தில் ஆய்ந்ததே.

பொருள் :
1. தம்மைச் சார்ந்து விளங்கும் சுற்றத்தினரின் பிறவிப் பிணியை அறுக்கும் அடியவர்களாகிய மெய்த்தொண்டர்களே
2.வரட்சி இல்லாத குளிர்ந்த நீர் பெருகும் வயல்கள் சூழ்ந்த கண்டியூரில் உறையும் ஈசன்.
3. சமணர், சாக்கியர்தம் சொற்களைக் கருத்துடையதாகக் கொள்ளாதது.
4. அந்தகனைச் சூலத்தால் சம்ஹாரம் செய்த அருள்திறன்
என் கொல்.
1️⃣1️⃣
பாடல்.11
1. கருத்தனைப் பொழில் சூழுங் கண்டியூர்
வீரட்டத்துறை கள்வனை
2. அருத்தனைத்திறம் அடியார்பால்மிக்க மிகக்
கேட்டு கந்த விளைவுரை
3. திருத்தமா திகழ் காழி ஞானசம் பந்தன் செப்பிய செந்தமிழ்
4.ஒருத்தராகிலும் பலர்களாகிலும்
உரைசெய்வார்  உயர்ந்தார்களே.

பொருள் :
1. அன்பர்தம் கருத்தாக விளங்கி, கண்டியூரில் உறையும் ஈசன், பிறரால் காணப்பெறாது, மனத்தைக் கவரும் கள்வராகவும்,
சொல்லின் பொருளாகவும் இருப்பவர். அப்பெருமானின் திறத்தினை அடியவர்களிடம் வினாவுரையாகக் கேட்டு மகிழ்ந்த, திருத்தமாய்த் திகழும் காழியின் ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழாகிய இதனை, ஒருவராகத் தனித்தும், பாராகச் சேர்த்தும் பாடுபடுபவர்கள், உயர்ந்தவர்கள் ஆவார்கள்.
சிறப்பு:
திருத்தமாந்திகழ்காழி ஞானசம்பந்தன்:

திருஞானசம்பந்தர், ஈசன் 
அருட்திறத்தை நன்கு உணர்ந்தவர் என்பது இவ்வரிகளால் உணரலாம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர் ,பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽
முன்பதிவு :
https://m.facebook.com/story.php?story_fbid=4670461403029080&id=100001957991710
மற்றும்
https://subbramarunachalam.blogspot.com/2020/10/53.html?m=1
❤️🙏🔱🔯🕉️📿🕊️🇮🇳🛐☸️🏵️📚🌹

உயிரின் பயணம்

எண்ணமே வாழ்வு

அனுபவக் கருவியே மனம்

அனுபவக் கருவியே மனம்:

வாழ்வியல் அனுபவங்களை ஐம்புலன்களால் பெற்றுணர்ந்து, அதை வெளிப்படுத்துவதும், அதன்படி செயல்பட செய்யவும் உதவும் கருவியே மனம். 

வடிவமில்லாத இயந்திரம்.

இன்பம், துன்பம், நல்லவை, அல்லவை, எல்லாம் மனம் உணருவதே.
எண்ணங்கள் தருவது மனம். 

உணருவதும், உணரச் செய்வதும்,
சிந்திக்கவும், சிந்திக்கச் செய்வதும், செயல்படவும், செயல்பட செய்யவும், செய்யும் மனம்.

மன எண்ணங்களை செயல்படுத்துதலே வினை;
அதன் விளைவின் முடிவில் பெறுவதே அறிவு.

எல்லாம் செய்யும் மனமே.
இதைத் தருவது சிவமே.

சிவமே மனம்; மனமே சிவம் என்றுணர்வோம்.

Friday, October 30, 2020

வினாஉரை_பதிகங்கள் #திருமுறைகளில்தமிழமுதம்: பதிவு: 5.3

பதிவு: 5.3.
4. #வினாஉரை_பதிகங்கள் 
#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️⚛️🙆🏻‍♂️🙏🏻
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : 5.3.
4. #வினாஉரை_பதிகங்கள் : 
🙏🎪🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🎪🙏
          🙆#ஆன்மீகமே_தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                        
                    🙏🙇‍♂️நன்றி🙇‍♀️🙏🏻 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
பதிவு: 5.3.
4. #வினாஉரை_பதிகங்கள் : 
திருஞானசம்பந்தரின் அற்புத பதிக அமைப்பை ப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
பாடல் குறிப்புக்களையும், சிறப்புகளையும் மிகச் சுருக்கமாகவே தந்துள்ளேன். ஒவ்வொரு பதிகமும் தனித்தனியாக  உணர்ந்து சிந்தித்தால் இறை பேராற்றலும், அருளும் உண்மை பொருளும் அவரவர் திறனறிவுக்கு நிச்சயம் கிட்டும். எனவே, இப்பதிவு ஒரு அறிமுகமே. பலன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.

பொருள் :

வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை  பல்வேறு
கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்.

இந்த பதிவு : இரண்டாம் திருமுறையில் 
வரும் சில பாடல்கள் மட்டும்.
🙏1.
இரண்டாம் திருமுறை
 பதிகம்:2.137
தலம் : பூந்தாராய் 
பாடல் முதலடி: 'செந்நெல்' 
பண்: இந்தளம்
பதிக சிறப்பு:
I' 'சொலீர்' என்று அனத்துப் பாடலிலும் கேள்வி வைத்துள்ளார்.
1.செஞ்சடையில் பாம்பு வைத்தது,
2.இடப வாகனம் ஏறியது,
3.யானை தோல் உரித்தது,
அங்கத்தில் பங்கமாக அர்த்தநாரியாக இருப்பது,
4.காமனை சாம்பல் பொடியாக்கியது,
5. கங்கையை சடையில் வைத்தது,
6. காதில் குழையும், தோடும் அணிந்தது.
7. அரக்கன் ஆற்றலை அழித்தருள் செய்தது;
8. மாலும், அயனும் தேடியும் 
காணதது.
9. பிறமதத்தவர், பொருளற்றதை
உரைப்பது ஏன்.
இவ்வாற்றலுக்கும், அருளுக்கும் என்ன காரணம் என்பதாக  'சொலீர்' என்று ஒவ்வொரு திருப்பாடலிலும் வினா
கேட்டுபாடல் அமைத்துள்ளார்.

II. மேலும், முதல் இருவரிகளில் தலத்தின் சிறப்பை  விளக்கும் முகமாக அதன் இயற்கை வளத்தையும், வனப்பத்தையும், மிக அழகாக சுட்டிக் காட்டி, இப்படிப் பட்ட பூந்தாராய் என்னும் தலத்தில் வசிக்கும் இறையே என்று குறிப்பையும் கூறி வியக்க வைக்கும் பாடல்கள் சிறப்பு வாய்ந்தது.
Ill.  திருக்கடைக்காப்பில்
"மகர வார் கடல் வந்தனவும் மணற் கானல்வாய்ப்

புகலி ஞானசம்பந்தன் எழில்மிகு பூந்தாராய்ப்

பகவனாரைப் பரவு சொல்மாலைப் பத்தும் வல்லார்

அகல்வர்  தீவினை நல்வினை யோடுடன் ஆவரே."

பொருள் :
சுறாமீன் விளங்கும் கடல் மணல் சேரும் சோலைகளுடைய புகலியின் சம்பந்தன், எழில்மிகு பூந்தராய் பதியின் இறைவரைப் போற்றிய இத் தமிழ் சொல் மாலையாக விளங்கும் பாடல்களை பாட தீவினை அகன்று நல்வினை பெறலாமே; என்று பதிகப் பலனையும் கூறிப்பிட்டுள்ளமையும் சிறப்பே.

2.🌺🌷
இரண்டாம் திருமுறை 
பதிகம்:138
தலம் : திருவலஞ்சுழி 
பாடல் முதலடி: 'விண்டெலாமர்'
பண் : இந்தளம்
பதிகச் சிறப்பு:
1. ஒவ்வொறு பாடலின் முதல் இருவரிகளும் திருவலஞ்சுழி தலத்தின் சிறப்பை, வனப்பத்தை, வளத்தை, இயற்கையோடு இணைந்து வாழும் உயிரினங்களின் காட்சிகளை ஓவியமாகக் காண்பித்து, இப்படிப்பட்ட தலத்தில் வாழுகிறார் நம் இறைவன்; என்று நமக்கு உணர்த்துவதையும், நாம் உணர வேண்டும்.

2. சொலீர்....என்று எல்லாப் பாடல்களிலும் இறைவனை நோக்கி வினா எழுப்புகிறார்.

3. இறை அருட் செயலான, பிரம்ம கபாலம் ஏந்த விரும்பியது, பலி கொண்டது, ஏன் என்று இறைவனை  வேண்டியருளுகிறார். 

மேலும். 
4.திருக்கடைக்காப்பில்.
"வீடு ஞானமும் வேண்டுதிரேல்            விரதங்களால்
வாடின் ஞானமென்னாவதும்
எந்தை வலஞ்சுழி
நாடி ஞானசம்பந்தன் 
செந்தமிழ் கொண்டு இசை
பாடு ஞானவல்லார் அடி
சேர்வது ஞானமே."

பொருள் :
வெறும் விரதங்களால் வீடு பேறு, முக்தி அடையமுடியாது. தமிழ் ஞானசம்பந்தர் பாடலை செந்தமிழ் கொண்டு இசையோடு பாடினால், ஞானம் கிடைக்கும்  முத்தி அடை முடியும் என்கிறது சிறப்பு.

3.🌹🌷🌺
 இரண்டாம் திருமுறை பதிகம்.2.139
தலம் - திருத்தெளிச்சேரி 
பாடல் முதலடி:  'பூவலர்ந்தன
பண்: இந்தளம்
பதிகச் சிறப்பு.

1. ஒவ்வொரு பாடல்களின் முதல் இரு வரிகளிலும், 
திருத்தளிச்சேரி தலத்தின் இயற்கை வளம் பக்திச் சிறப்பும், மனிதர் மான்பும், குறிப்பிட்டு இப்பதியில் வசிப்பவரே - திருத்தெளிச்சேரியீர் என்று
இறைவரை விளித்து அவர்தம் அருட்பேராற்றலை வியந்து வினவுகிறார்.
1. பன்றி வடிவ அரக்கனை அழித்து, வேடுவத்திருக்கோலம் பூண்டு உமாதேவியுடன் நின்றது
2.காமனை பாணம் எய்து காய்ந்தது.
3. உமாதேவியுடன் காட்சியளித்தது.
4. உமாதேவியரை ஒரு பாகத்தில் வைத்தது.
5. பிச்சை ஏற்க நடந்தது
6. யானையைத் கையால் தாக்கி அழித்தது.
7. கொன்றைமலர் சூடியது
8. அரக்கன் தலைகளையும், கரங்களையும், நெறித்த திறன் மற்றும்,
9.9 வது பாடலில்
'காலெடுத்த திரைக்கை
கரைக்கெறி கால் சூழ்
சேலடுத்த வயற்பழ
னத்தெளிச் சேரியீர்
மால டித்தல மாமலரான் முடி தேடியே
ஓலமிட்டிட எங்ஙனம் ஓருருக் கொண்டதே'.
(கால் = காற்று)
கடற்காற்றானது அலைகளாகிய கைகளால் கரைக்கு நீரை அள்ளிவீசுகிறது = கவிநயம் வியந்துணரத்தக்கது.

திருமால் உனது திருவடியும், பிரமன் உமது திருமுடியும் தேடியும் காணப்பெறாமல் ஓலம் இட்டு வருந்தி நிற்குமாறு, ஓர் உருவத்தைக் கொண்டு விளங்கியது எங்ஙனம் என்று வினவுகிறார்.
10. சாக்கியர், சமணர்களின் பயனற்ற திறத்தினை நீக்கியது.

மேலும்.
திருக்கடைக்காப்பில் வரும்
'திக்குலாம் பொழில் சூழ்தெளிச்
சேரி எம் செல்வனை

மிக்க காழியுண் ஞானசம் பந்தன் விளம்பிய

தக்க பாடல்கள் பத்தும்வல்
லார்கள் தடமுடித் 

தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே,'

என்றார்.
பொருள்:

பொழில் சூழ்ந்த தெளிச்சேரியில் வீற்றிருக்கும் பரமனை, காழி ஞானசம்பந்தன் விளம்பிய தகைமை பொருந்திய இத் திருப்பதிகத்தினை மனதார நாவினால் சொல்லினாலே தேவர் சூழ இருப்பார் என்று உரைத்தார்.

4. 🌹🌷🌺🍁
இரண்டாம் திருமுறை
பதிகம்:140
தலம் :-திருவான்மியூர் 
பண் : இந்தளம்
பாடல் முதலடி : 'கரையுலாங் கடலிற்'
பாடல் சிறப்பு:
1. பாடல்களின் முதல் இருவரிகள் தலத்தின் இயற்கை வளம், உயிர் காட்சிகள், மனிதர்கள், குறிப்பாக மங்கையர் பக்திப்பாங்கு, இவற்றின் சிறப்பைக் குறிப்பிட்டு, இத்தலத்தில் வசிக்கும் இறைவரை அழைத்து வினாவுகிறார்..
1. ஒவ்வொறு பாடலிலும் 'சொலீர்.'.. என்று குறிப்பிட்டு
வினவுகிறார்.

1. அம்மை அப்பராக - அர்த்தநாரியாக விளங்குவதன் பொருள்;
2. செம்மையான திருமேனி கொள்ளச் செய்தது;
3. யாணையை உரித்து தோலைப் ஆடையாகப் போர்த்தியது, நெருப்பை கரத்தில் கொண்டு நடனம் புரிந்தது
4.நஞ்சுண்டு வானவர்க்கு இன்னருள் புரிந்தது.
5. செஞ்சடையில் விண்பிறை வைத்தது
6. முப்புரத்தை எரியூட்டிய வல்லமை
7. சனகாதி முனிவர்கட்கு வேதப் பொருளுரைத்தது.
8. பூதகணங்கள், பேய்கள் சூழ நடனம் ஆடுவதும்
9. தாருகாவனத்து மாதர்கள் இல்லம் சென்று பலியேற்றது
10. சமணர், சாக்கிய, பிற 
மதத்தவர் பொய்யுரை பகர்வது

இவை எல்லாம் ஈசன் அருளியது ஏன் என்று வினாவின் வழி அறிவுருத்தும் பாடல்களாக அமைத்தருளியுள்ளார்.
மேலும், 
திருக்கடைக்காப்பில்,
'மாதொர் கூறுடைநற்றவ
ணைத்திரு வான்மியூர்

ஆதியெம்பெருமானருள்
செய்ய வினாவுரை

ஒதியன்றெழு காழியுண்
ஞானசம் பந்தன் சொல்

நீதியால் நினைவார் நெடு
வானுலகு ஆள்வரே. '
என்றார்.
பொருள் :
'எம்பெருமானை, அருள் செய்யும் பொருட்டு வினாவுரையாக ஓதும் காழியாரின் இப்பதிகம் ஒதுவார், வானுலகை ஆள்வார்கள்'. என்று அமைத்துள்ளார்.

5-🌸🏵️💮🌼🌷
இரண்டnம் திருமுறை
பதிகம்:165 
தலம் - திருப்புகலி
பாடல் முதலடி - 'முன்னிய'
பண் : இந்தளம்
பாடல் சிறப்பு :
1. திருவிராகப் பதிகம்.

2. இது  12 பெயர்கள் கொண்ட
சீர்காழி தலத்தின் ஒரு  பெயரான திருப்புகலி என்னும் தலப் பெருமையையும் கூறும் பதிகம்.

3.முதல் இரண்டு வரிகள் இறைவன் பெருமையையும், அருட்சிறப்பையும் வைத்து, ஈசன் வாழும் இடம் (எது) என்று வினாவாகவும், அடுத்துவரும் இருவரிகளில் தலப் பெருமை உரைத்து திருப்புகலியாமே என்று  என்ற பதில் அமைப்பில் பாடல் அமைத்துள்ளமை சிறப்பு.
பொருள் :
மூவுலகிலும் சிறப்பு வாய்ந்த தலைவர் வசிக்கும் பதியாது என்றும்,
பாடும் பக்தர்கள் விரும்பிடும் இடம்; 
இறைவன் உமையோடு வீற்றிருக்கும் பதி; 
அறுவகை சமயத்திற்கும் அருள்புரியும் ஈசன் பதி;  
நஞ்சினை உண்டவன் உறையும் பதி;
 வல்வினை தீர்த்தருளும் மைந்தன் இடம்;
 இராவணை அடக்கியருள் செய்த அண்ணல் இடம்;
 பிறையும், அரவமும் வைத்தாடும் ஈசன் உறையும் பதி;
பிற சமய மொழிகளை ஏற்காத அரும் ஞானிகள் வாழும் ஊர் எது என்றும் இறைவரின் அருள்செயல்களை விவரித்து அவர் வசிக்கும் ஊர் எது என்பது வினாவாகவும்,

இதற்கு விடையாக, பதியின் சிறப்புகளாக
தேவர்கள் துதி செய்து வணங்கும் திருப்புகலி என்றும்
தாமரை மலரின் வளம் நீர் வளம், சோலைகளின் மண் வளம் நிறைந்த ஊர்,
சிவகணத்தவர் கூடியிருந்து போற்றும் ஊர்,
செழுமையான வயல்கள் நிறைந்த ஊர்.
தென்னைமரத்திலிருந்து தேன் பெருகும் வளம் மிக்க ஊர்,
செல்வ செழிப்பு மிகுந்தவூர்.

திருப்புகலியாமே என்று;
ஒவ்வொரு பாடல்களிலும், இறைவரின்  சிறப்பை உணர்த்தி அவர் உறையும் இடம் எது என்று வினாவி, அதற்கு பதில் தரும் வகையில்  தலத்தின் இயற்கை வளம், உயிர்வளம், தலப் பெருமையை விளக்கி அது திருப்புகலியாமே என்று விடையாக அமைத்திடுவார்.
திருக்கடைக்காப்பில்,

'செந்தமிழ் பரப்புறு 
திருப்புகலி தன் மேல்

அந்தமுதலாகி நடுவாய பெருமானைப்

பந்தனுரை செய்தமிழ்கள் 
பத்தும்இசை கூர

வந்தவணம் ஏத்துமவர்
வானமுடையாரே ''

என்று பதியின் சிறப்பு போற்றி வினா விடையமைப்பு பதிகம் அருளியுள்ளார்.

6.🍂🍀🍁🌻🌸🌹
இரண்டாம் திருமுறை
பதிகம்: 170
தலம் : திருப்பழுவூர்
பாடல் முதலடி : 'முத்தன்மிகு '
பண் : இந்தளம்.
பாடல் சிறப்பு:
1. இது திருவிராக அமைப்புடைய பதிகம்.
2. இந்தப் பதிகம் பழுவூர் என்ற பதியின் சிறப்பை வினா விடையாக ஏற்றி அருள்செய்துள்ளார்.
3. முதல் இரண்டு வரிகள் இறைவன் பெருமை வைத்து, அவ்வீசன் வாழும் இடம் (எது) என்று வினாவாகவும், மற்ற இருவரிகளில் பதியின்  சிறப்பு அமைத்து அப்பதி பழுவூரே என்ற பதிலமைத்து பாடல்களை தந்தருளியுள்ளார்.
பொருள்:
1.திரிசூலம் கொண்ட ஈசன் உரையும் இடம்?
சித்தர் வாழும் பழுவூரே.

2.முடியில்அரவம் வைத்த பெருமான் இடம்?
மாளிகையில் வசிக்கும் மகளிர் பாடல் இசைக்கும் பழுவூரே.

3..முப்புரம் எரித்தவர் இடம்?
மகளீர் மகிழ்ந்து நடனமாடுமூர்.

4.எண் எழுத்து, இசைக்கு முதற்
பொருளானவர் வசிக்குமிடம் ?
மலையாளர் தொழுது எத்தும் பழுவூரே.
5. மயானத்தில் நடனம் புரிபவர் இடம்?
வேத மொழி சொல்லும் மறையாளர் வாழும் ஊர். 

6.முப்புரம் எரித்தவர், யானையுரித்தவர்  இடம்?
பாவையர்கள் கற்பொரு பொலிந்த  ஊர்.
7. தக்கன் யாகம் அழித்தவர் இடம்?
மாதர்கள் தழையப் பெருகி வழிபடும் ஊர்.

8.கண்டத்தில் விடம் வைத்த,
இராவணனை அடக்கிய அப்பன் இடம்?
சோலைகளும், வயல்களும் நிறைந்த பழுவூர்.
9.மாலும், நான் முகனும் தேடியும் தோன்றாதவன் தழலாய் ஓங்கியவன் உறையும் இடம்?
வேதம் நாலும் உணர்ந்தவர் கூடி மகிழுமூர்.
10. சமனர், பெளத்தர்கள் சொல்கின்ற பொருத்தமில்லா மொழிகளை வெறுக்கும் ஈசன் உறைவிடம்
தாழை, தென்னை, பாக்கு செழித்தோங்கும் ஊர்.
மேலும்,
11. திருக்கடை காப்புப் பாடலில்...

'அந்தணர்கள் ஆனமலை யாளர் அவர் ஏத்தும்.

பந்தமலி கின்ற பழு வூர் அரணை ஆரச்

சந்தமிகு ஞானமுணர் பந்தனுரை பேணி

வந்த வணம் ஏத்துமவர் வானமுடையாரே.'

மலைநாட்டவர் பக்தியுடன் வந்து வழிபடுகின்ற ஈசனை ஞானம் உணர்ந்த ஞானசம்பந்தன் சொல்லி உரைத்தவாறு ஏத்தி வழிபடுகின்றவர்கள் தேவர்களாவர்; என்று உரைத்தார்.
🌸 🏵️🙏🙇‍♀️🌼🙇🌼🙏🏵️🌸📚🌹
💥இதுகாறும், இரண்டாம் திருமுறையில் தமிழ் ஞானசம்பந்தர் அருளிய வினாவுரை அமைப்பு பதிகங்களை சிந்தித்தோம்.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர்; பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:
என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽

Thursday, October 22, 2020

#திருமுறைகளில்தமிழமுதம் வினாஉரை பதிகங்கள்

#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️⚛️🙆🏻‍♂️🙏🏻
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : 5.2.
4.வினாஉரை பதிகங்கள் : 
🙏🎪🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🎪🙏
             🙆ஆன்மீகமே தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                        
                    🙏🙇‍♂️ன்றி🙇‍♀️🙏🏻 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
பதிவு: 5.2.1
4.வினாஉரை பதிகங்கள் : 
திருஞானசம்பந்தரின் அற்புத பதிக அமைப்பை ப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
பாடல் குறிப்புக்களையும், சிறப்புகளையும் மிகச் சுருக்கமாகவே தந்துள்ளேன். ஒவ்வொரு பதிகமும் தனித்தனியாக  உணர்ந்து சிந்தித்தால் இறை பேராற்றலும், அருளும் உண்மை பொருளும் அவரவர் திறனறிவுக்கு நிச்சயம் கிட்டும். எனவே, இப்பதிவு ஒரு அறிமுகமே. பலன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.

பொருள் :

வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை  பல்வேறு
கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்.

இந்த பதிவு : முதல் திருமுறையில் 
வரும் சில பாடல்கள் மட்டும்.
🙏
திருப்பதிகம்: 
முதலாம் திருமுறை:
பதிகம் : 4.
தலம்: - திருபுகலியும்திருவீழிமிழலையும்:
பண் : நட்டபாடை
பாடல் முதலடி:  
'மைம்மரு பூங்குழல்'.

பதிக சிறப்பு:
1. ஒவ்வொரு பாடலிலும்,
'புகலி நிலாவிய புண்ணியனே' என்று சிறப்பித்தும்,
'என் கொல் சொல்லாய்.'
என்று கேள்வி எழுப்பியும் அமைத்துள்ளார்.
🌹
2. பாடல்: 7 ல்
'காமன் எரிப்பிழம்பு ஆக நோக்கிக்
காம்பன தோளியோடும் கலந்து

பூமரு நான்முகன் போல்வார் ஏத்தப்
புகலி நிலாவிய புண்ணியனே

ஈம வனத்து எரியாட்டு உகந்தி
எம்பெருமான் இது என் கொல்சொல்லாய்

வீமரு தண்பொழில்சூழ் மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.'

பொருள் சிறப்பு:
உலகத்தோர் திருமணத்திற்கும், இறைவன் இறைவி திருமணத்திற்கும் உள்ள வேறுபாடு.
காமன் இன்றி சிவசக்தி திருமணம் நடைபெற்றது சுட்டப்படுகிறது.

பூமரு = மலர்மேல் உறைபவன்
ஈமவனம் = இடுகாடு,
வீமரு = மலர்கள் சூழ்ந்த.
11வது பாடல் திருக்கடைக்காப்பில்:

விண்ணிழி கோயில் விரும்பி மேவும் 
வித்தகம் என் கொல் இது என்று சொல்லிப்

புண்ணிய ணைப்புகலிந்நிலாவு
பூங்கொடி யோடு இருந்தானைப் போற்றி

நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி
நான் மறைஞானசம் பந்தன் சொன்ன

பண்ணியல் பாடல்வல்லார்கள் இந்தப்
பாரொடு விண்பரி பாலகரே.

பொருள் சிறப்பு:
இறுதி வரியில், 
'வையத்துள் வாழ்வாங்குவாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' என்ற குறள் தெளிவு.
🌷

2.
முதல் திருமுறை: பதிகம்: 1.6.
தலம்: - திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்
பண் : நட்டபாடை
பாடல் முதலடி:   'அங்கமும் வேதமும்'

பாடலில் வரும்  சிறப்பு: 
1 ஒவ்வொரு பாடலிலும் 'மைந்த சொல்லாய்'  என்றமைந்துள்ளது.
2. திருமருகலில் இருந்த சம்பந்தரைச் சந்தித்த சிறு தொண்டர் தம்  பதிக்கு வருமாறு கோர, சம்பந்தருக்கு செங்காட்டங்குடி கணபதீஸ்வரர் காட்சி தந்த போது அருளிய பதிகம்.
🌺
3.
முதல் திருமுறை - பதிகம்:1.07.
தலம் : திருநள்ளாறும், திருவாலவாயும்
பண் : நட்டபாடை
பாடல் முதலடி : 'பாடக மெல்லடி'

பதிக சிறப்பு
மதுரையில் அனல் வாதத்தில் 'போகமார்த்த' என்னும் திருப்பதிகம் பெற்ற திருத்தலமாகிய திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை, ஆலவாயில் அமர்ந்தததை வினவும் வினா உரையாக உடையது.

'...நள்ளாறுடைய நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்'
என்றும்,
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
என்றும்  ஒவ்வொரு பாடலிலும் அமைத்துள்ளார்.
10வது பாடலில் 
'தடுக்குடைக் கையரும் சாக்கியரும்
சாதியில் நீங்கிய அத்  தவத்தர்
நடுக்குற நின்ற நள்ளாறுடைய நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்னாள் விழவும் இரும்பலி இன்பனோடு எத்திசையும்
அடுக்கும் பெருமை சேர் மாடக்கூடல்
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே'

பொருள் சிறப்பு:
அடியவர்கள் வேண்டுதலின் பொருட்டும், மற்றும் சுபகாரிய களை மேற்கொள்ளவும் 'எடுக்கும் விழவு' எனவும், இறைவன் திருநட்சத்திரங்களில், நாள்களில் 
(திருவாதிரை, பூசம் மற்றும்  பிரதோஷம் போன்ற நாட்கள்) நடத்தும் திருவிழாக்கள் மக்களைக் காத்தலையொட்டி நடைபெறுவதால் . இரும்பலி இன்பினோடு' எனப்பட்டது. காத்தல் செய்யும் திருவிழாக்கள் இன்பம் தரவல்லது என்பதாம்.

(பொருள் : சாதியில் நீங்கிய = பாரம்பரியத்திலிருந்து மாறிய
நடுக்குற = அதிர்ச்சியுற, 
இரும்பலி இன்பினோடு = இன்பத்தின் அளவு மிகுந்த இன்பம் இரு = பெரிய  பலி = காக்கும் தன்மை   அடுக்கும் பெருமை = பெருமைகளின் திரட்சி)

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர் ,பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽

Tuesday, October 6, 2020

#திருமுறைகளில்தமிழமுதம் #சைவத்திருமுறைகள் #அமைப்பு_சிறப்புக்கள் பதிவு : மூன்று

#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
🙏🏻🙆‍♀️⚛️❄️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️❄️⚛️🙆🏻‍♂️🙏🏻
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : மூன்று
🙏🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🙏
          🙆ஆன்மீகமே தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                        
          🙏🙇‍♂️நன்றி🙇‍♀️🙏🏻 
🛐🙏🎪🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
   
        🌈#அமுதப்பதிகங்கள்   
              #அமைப்புச்சிறப்புகள்

 🔯திருஞானசம்பந்தரின் பதிக அமைப்பு முறை பற்றிய பொதுவான சில குறிப்புகள்:

🔱திருஞானசம்பந்தர் தம் திருப்பதிகப் பாடல்களில் ஒரு பக்கம் இறையருளின்அருட்செயல்பாடுகளை,அற்புதங்களை உணர்த்தியவர்;  மறுபுறம், 
தமிழ் இலக்கியத்திற்கு பல்வேறு புதுமைகளையும் சிறப்புகளையும் கொண்ட புதுமையான பாடல்கள் அமைப்பையும் முதன்முதலில் கொண்டுவந்தார் என்பதும் வரலாறு.

திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய பாடல்களில் தற்காலத்தில் நமக்குக் கிடைக்கப் பெற்றது 4146 பாடல்கள் மட்டுமே. 
இவை 226 தலங்கள் பற்றியருளியது.
மொத்தம் 386 பதிகங்கள்.
ஒரு பதிகத்தில் 10, அல்லது 11 அல்லது 12 பாடல்கள் அமையப்பெற்றிருக்கின்றன.
23 பண்களில் அமைக்கப் பெற்றுள்ளது.

🙏🛐🙆‍♀️⛺🏔️🎎⛰️🕉️🙇‍♀️🔱🙆🏻‍♂️🛐🙏

📚
#பாடல்_பொருள்_அமைப்பு:

📚தமிழ் ஞானசம்பந்தர் தம் பதிகங்களில்பெரும்பாலும் 10 முதல் 12 பாடல்களை கொண்டு ஒவ்வொரு பதிகமும்  அமைந்துள்ளார் என்று அறிந்தோம்.

அதில் ஏழாவது  பாடல்களில் பதியின் சிறப்பு, தல சிறப்பும் பெருமையைக் கூறியும்,

 ஏழு அல்லதுபத்தாவது பாடல்களில் பிற மதங்களில் குறிப்பாக சாக்கிய, சமன, மதங்களின் இழிந்தக் கொள்கை, சைவத் தமிழர் வாழ்விற்கு ஏற்க முடியாத அவர்தம் பண்பாடுகள் பற்றியது.
அவர் தம் மதச் செருக்கை அடக்கியது குறித்தது.

எட்டாவது பாடலில் இறைவன் இராவணை  ஆணவத்தை அடக்கி அருள் புரிந்தது பற்றியும்; 

ஒன்பதாவது பாடலில் நான்முகன் மற்றும் திருமாலின் சிவ பக்தியையும்; அவர்கள் சிவன் அடி முடி தேடியதும்,

பத்தாவது அல்லது பதினொன்றாம் பாடல்களில், அல்லது பதிகத்தின் கடைசி பாடலில் பதிக பயன் பொருளும் அருளும் கொண்டு அமைத்துள்ளார்.

சம்பந்தர் தம் ஒவ்வொரு பதிகத்தின் கடைசிப் பாடலை #திருக்கடைக்காப்பு என்று சிறப்பிக்கப்பட்ட பாடலாகக் கொள்வர் அறிஞர்கள்.

🙆‍♂️🙇‍♀️🔱🔯✡️⚛️🕉️🔱⚛️✡️🔱🙇‍♂️🙆‍♀️
  
#திருக்கடைக்காப்பு:

ஒவ்வொரு பதிகத்திலும்,
பத்தாவது அல்லது பதினொன்றாம் பாடல்களில், அல்லது பதிகத்தின் கடைசி பாடலில் 
பதிக அமைப்பு, 
பாடல் பயன் பொருளும் 
சிவஅருள் பெறும் முறையும் 
கொண்டு, அமைத்திருப்பது மிகச்சிறப்பு.

#திருக்கடைக்காப்பு பாடலாக
"கடவுள் வழிபாட்டின் பயனைத் தமது    அனுபவத்தின் வைத்து ஆசிரியர் செவ்விதினுரைத்தார்''* 
 
'ஒவ்வொரு பதிகத்தின் இறுதிப் பாட்டின்கண் சம்பந்தப்பெருமான் தமது திருப்பெயரை நிறுவியது, காரணம்:

'ஒரு திருப்பதிகத்தையேனுங் கற்பார்க்குந் தமது சிவானுபவப் பயனை நன்கு அறிவுறுத்தக் கருதிய பெருங் கருணையே அன்றி தம்புகழ் விளக்கவன்றும் இறைவர் புகழை ஞால முழுதும் விளக்கக் கருதியே அருளினார்.' 

என்பதும்,

'இதனைத் தற்புகழ்ச்சியாகக் கூறுவோர் தமது அறியாமையைப் புலப்படுத்தியவராவர்'.  என்பதும் அறிஞர்கள் முடிவு.

மேலும்,

'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்பதால் ஊர்தோறுஞ் சென்று திருப்பதிகமருளிச் செய்தமையால் ஒவ்வொரு திருப்பதிகத்தையே கற்றவர்க்கும் உண்மை விளங்குதற் பொருட்டு ஒவ்வோர் பதிகத்துஞ் சித்தாந்தப் பொருளையுந் தமது அனுபவப் பயனையும் அறிவுறுத்தினார்", 

🙆‍♂️🙇‍♀️🔱🔯✡️⚛️🕉️🔱⚛️✡️🔱🙇‍♂️🙆‍♀️
🕉️
#சைவசித்தாந்தப்பொருளுணர்வு :

சம்பந்தர் பதிகங்கள் ஞான அருள் தரும் சைவசித்தாந்தத்தின் அங்கமாக, பொருள்கள் நுண்ணுணர்வாக உணர்த்தப்  பெற்றுள்ளது என்று ஞான ஆசிரியர்கள் கணிப்பு.

'சித்தாந்த சிவஞானபோதத்தில் பெறப்படும்
1. பிரமாணவியல்
2. இலக்கணவியல்
3. சாதனவியல்
4. பயனியல்
என்ற நான்கியற் பொருள்களும் உணர்த்தப்பட்டுள்ளது' 

என்பார் தமிழியல் ஆராய்ச்சியாளரும், சட்ட நூற் புலமையும் பெற்றவருமான பேராசிரியர்
திரு.கா. சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள்.
💥🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆💥
🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

🙏நன்றி🙇‍♂️     

🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🎪🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🎪🛐
பதிவு : ஒன்று:
https://m.facebook.com/story.php?story_fbid=4497008673707688&id=100001957991710
பதிவு : இரண்டு :
https://m.facebook.com/story.php?story_fbid=4525547420853813&id=100001957991710

Friday, October 2, 2020

காந்திக்கு அஞ்சலி

🙏காந்திக்கு அஞ்சலி செய்வோம்🙏 
      🇮🇳🌐🔯🇮🇳🌐🇮🇳🔱🌐🔯🇮🇳🌐🇮🇳

☸️அஹிம்சையால் அதிகாரத்தை
⚡அகற்ற முடியும் என்று

🌐அகிலத்திற்கே உணர்த்திய
🕉️ஆன்மீக அரசியல் தலைவர்.

🔥தகனம் செய்யப்பட்டது
     உடல் மட்டுமா?

🌠உயிர்த்தெழுந்தால் ... ஏற்போமா?
    
       🙏👣👥👣👤🐾👥👣👤🐾👥🙏
  🌻(உடல் தகனம் செய்யப்பட்ட இடம் 🌻 (2015 ல் தரிசித்த போது)
                     🎭🙈🙉🙊🐵🎭


🙏🙇🏻‍♀️🙏🙆‍♂️🙏🙆‍♀️🙏🙇‍♂️🙏
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🙏🙇🏻‍♀️🙏🙆‍♂️🙏🙆‍♀️🙏🙇‍♂️🙏

Thursday, October 1, 2020

#திருமுறைகளில்தமிழமுதம் #சைவத்திருமுறைகள் #திருஞானசம்பந்தர்அருட்பதிகங்கள் பகுதி - இரண்டு

#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️✡️❄️⚛️🙆🏻‍♂️🙏🏻
#சம்பந்தர்அமுதம்:
பகுதி - இரண்டு.
🙏🎪🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🎪🙏
             🙆ஆன்மீகமே தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                       
                     🙏🙇‍♂️நன்றி🙇‍♀️🙏🏻
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

  1.          #திருஞானசம்பந்தர் :

🌀🌟கி.பி.6 ம் நூற்றாண்டு இறுதியில் சீர்காழிப் பதியில்  கருவிலே திருவுடையவராய் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் திருமகனாய் திருஞானசம்பந்தர் அவதரித்தார்.

💥மூன்று வயதில் இறையருள் பெற்று ஞானப்பால் உண்டவர். பல அருள் காரியங்கள் செய்தவர்.
இதனால், 
'சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானமும்;
'பவமதனை யற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானமும்; '
'உணர்வரிய மெய்ஞ்ஞானமும் ஒருங்குணர்ந்தனர்.

✳️திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார், அருட்பிரகாச வள்ளலார் முதலிய ஞானிகள், நம் அருட் செல்வர் ஞானசம்பந்தரை, முருகனின் அவதாரமாய்  போற்றி வணங்கி பாடல்களை அருளிச் செய்துள்ளனர்.

📑தம்மை தமிழ் விரகன், தமிழ் ஞானசம்பந்தன் என்றும் தன்னைக் கூறிக் கொண்ட, சிவனருட் பிள்ளையார்தாம் இயற்றிய பாடல்களில் தமிழின் ஒப்பற்ற உயர்வை, இலக்கண, இலக்கிய, இசை நுணுக்க சிறப்புகளை, தமிழனின் கலாச்சார செறுக்கை, பண்பாடுகளின் சிறப்பை வெளிப்படுத்தி, இழந்த தமிழரின் பக்தியுடன் கூடிய நல்ல பண்பாட்டை, இறையருள் நம்பிக்கைக் கொண்டு மீட்டு வளர்த்தார், என்றால் அது மிகையாகாது.

✳️இனிமையான இசை கலந்து அற்புத பாடல்களை பதிகங்களில் அமைத்துக் கொடுத்த இவரை இசைத்தமிழ் இறைவர் என்று போற்றுகிறார்கள்;

அவ்வழி நின்று நாமும் போற்றுவோமே
🙏🏻🕉️🙇‍♀️🙏🏻🙇‍♂️🙏🏽🙆‍♂️🙏🏼🙆‍♀️🙏🏻🙇‍♀️🙏🏻🙇‍♂️🕉️🙏🏾

      2.         #அருட்பதிகங்கள்:

📕இலக்கிய வகைகளில் :... 8, 10, 100 என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் பாடல்கள் அமைப்பதை பதிகம் என்பர்.

📝பதிகம் என்ற அமைப்பை முதன்முதலில் உருவாக்கியவர் காரைக்காலம்மையார். (திருவலாங்காட்டு மூத்த பதிகம்).

📃யாப்பு = அந்தாதி, தாண்டகம், வெண்பா, அகவல், விருத்தம், இரட்டைமணிமாலை, மும்மணிக்கோவை இன்னும் பிற.
இதில் 10, 11, 12 பாடல்கள் அமையுமாறு வைத்து பதிகமுறையில் பாடல்கள் அருளிச் செய்தவர்.

"மூவரருளிய தேவாரக் காலம் பிறகே சிற்றிலக்கியங்கள் எழுந்தன" - பேராசிரியர் மா.ச. அறிவுடை நம்பி.

⚡மேலும்  பதிகத்தின் மூலம் தமிழரின் பண்பாடு, கலாச்சாரம், நல்லொழுக்கம், சைவ நம்பிக்கை வளர்த்து, போலி சமயக் கொள்கை செருக்கழித்து, தமிழர் வாழ்வில் பல அற்புதங்களையும் செய்து இறைவரின் நற் கருணையையும் அருட்திறத்தையும் நிறுபித்துக்காட்டினர்.

🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️✡️❄️⚛️🙆🏻‍♂️🙏🏻

3.      🏵️#சம்பந்தர்பதிகப்பேறுகள்:

🔰சம்பந்தர் பதிகங்கள் மூன்று வகையான வழிபாட்டிணை வலியுறுத்துகிறது.
🔯குரு, ⚛️லிங்க, 🕉️சங்கம் (அடியார் திருக்கூட்டம்) இவை முதற் கொண்டு
⏺️மூர்த்தி,
⏺️தலம்,
⏺️தீர்த்தம்
ஆகியனவற்றை உணர்த்துகின்றன.
🔹தலவாசம் செய்தல்,
🔹தலத்தை வலம் செய்தல்,
🔹தீர்த்தம் ஆடுதல்,
🔹மூர்த்தியை வணங்குதல்
என அடியவர்களின் வழிபடும் நிலையை நன்கு உபேதசம் செய்வதாக அமைத்துள்ளார்.

📓திருமுறைகளில் திருஞானசம்பந்தர் அருளியத் திருப்பாடல்களை முதல் மூன்று திருமுறைகளாக அமைத்தனர். இதைத் திருக்கடைக் காப்பு என்று கூறிப் போற்றப்பட்டு  வருகிறது.

🎖️திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய பாடல்களில் தற்காலத்தில் நமக்குக் கிடைக்கப் பெற்றது 4146 பாடல்கள் மட்டுமே. இவை 226 தலங்கள் பற்றி 386 பதிகங்களில், 23 பண்களில் அமையப்பெற்ற 4146 பாடல்கள் மட்டுமே

⚛️இவை மொத்தம் 386 பதிகங்களாகும்.
🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️✡️❄️⚛️🙆🏻‍♂️🙏🏻
    4.          🔰#பதிகப்பலன்கள் :

1. அருட் சுரங்கம்,
2. இம்மை நல்வாழ்வு,
3. மறுமை வாணாள்வது
4. சிவ லோகம் சார்வது,
5. திருவடிப்பேறு பெறுவது
6. நோய் நீக்கம்
7. கல்வி
8. செல்வம்
9. ஆயுள்
இவை எல்லாம் நாம் பெற்றுவரும் பலன்களாகும்.

இது மற்றுமின்றி,
சிவானந்த அனுபவம்
சித்தாந்தத் தத்துவம்
தமிழ் இலக்கிய, இசை, சொல் வளம்
கற்றுணரலாம்.
💥🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆💥

💥இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

🙇‍♀️🙆‍♀️

இதுபற்றி மேலும் சிந்திப்போம்

🙇‍♂️🙆‍♂️ 
                           🙏நன்றி🙏🏻  
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்🙏🏻
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾
பதிவு : ஒன்று.
https://m.facebook.com/story.php?story_fbid=4497008673707688&id=100001957991710
🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️✡️❄️⚛️🙆🏻‍♂️🙏🏻

சிந்தனை வளம் - இறை உணர்வு

சிந்தனைவளம்:  இறை உணர்வு 
  🙏🔯☸️🕉️🙇‍♀️🙆‍♀️🙇‍♂️🙆‍♂️🕉️☸️🔯🙏

'என்செயலே என்றென்றி யற்றுவதும் என் செயலும்

உன்செயலே என்றென்று உணர்த்துவதும் - நின் செயல்

தாகுமே என்ன அடியேற் குணர்த்தலும் நீ

ஆகுமே சொக்கநாதா.'

- 76. சொக்கநாத வெண்பா.
ஸ்ரீ குருஞானசம்பந்தர் அருளியது.

🛐🙏🔯☸️🕉️🙇‍♀️🙆‍♀️🙇‍♂️🙆‍♂️🕉️☸️🔯🙏🛐

பொருள் :
'சொக்கநாதப் பெருமானே, எதைச் செய்தாலும் அதை நான் என் செயலாகவே மயங்கிச் செய்தலும் அவ்வாறின்றி, "எல்லாம் உன் செயலே" என நான் உணர்வது மட்டுமின்றிப் பிறர்க்கும் உணர்த்துவதும் உனது அருளால் ஆவனவே என்பதை அடியேன் உணர்கின்றேன். அவ்வுணர்வைத் தருபவனும் நீயேயன்றோ.'

- மகாவித்வான்
அருணை வடிவேல் முதலியார்.

🛐🙏🔯☸️🕉️🙇‍♀️🙆‍♀️🙇‍♂️🙆‍♂️🕉️☸️🔯🙏🛐
நன்றியுடன் பகிர்வு :
என்றும் அன்புடன்

சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🛐🙏🔯☸️🕉️🙇‍♀️🙆‍♀️🙇‍♂️🙆‍♂️🕉️☸️🔯🙏

சிந்தனை வளம் - மூப்பின் வலி

சம்பந்தர்அமுதம் - மூப்பின் வலி

🛐🏔️🏰⛺🙏🏻🙇‍♂️🙆‍♂️🙆‍♀️🙇🏻‍♀️🙏🏔️🏰🗻⛺🛐

🚶இளையோர் ஏற்க,
👵முதியோர் உணர:

🛌மூப்பு எய்தி உடல் சோர்வுற்றிருக்குங்காலை
⛺திருக்கோயிலுக்குச் செல்வதும்,
🗣️திருநாமங்களைச் சொல்வதும்,
👂செவிமடுப்பதும்,
🙆‍♂️தரிசித்து மகிழ்வதும்,
😖இடர்பாடு உண்டாதலை உணர்த்தி சரியை வழிபாட்டு நிலை
🚶இளமைக் காலத்தில் வலியுறுத்திய பாடல்:
🛐🙏🏼🙇‍♂️🙆‍♀️🙆‍♂️🙇‍♀️🙏🏻🛐
🕉️ஞானசம்பந்தர் அருளியது.

"பல் நீர்மை குன்றிச் செவி கேட்பிலா
படர் நோக்கில் கண் பவளந் நிற

நல்நீர்மை குன்றித் திரை தோலொடு
நரை தோன்றும் கால நமக்காதன் முன்

பொன் நீர்மை துன்றப் புறந்தோன்று நற்
புனல்பொதிந்த புன்சடையினான் உறையும்

தொல் நீர்க் கடந்தைத் தடங்கோயில் சேர்
தூங்கானை மாடம் தொழுமின்களே.
                                                               (639)

-முதல் திருமுறை
59 - திருத்தூங்கானை மாடம் (திருப்பெண்ணாகடம்)
பாடல் 6.
🛐🙏🏼🙇‍♂️🙆‍♀️🙆‍♂️🙇‍♀️🙏🏻🛐
☸️பொருள் :

♿பலவிதமான சிறப்புக்கள் குறைவுபடத் தோன்றுமாறு
👂செவிகளின் கேட்கும் திறம் குறையவும், 

👁️கண்கள் மங்கிப் பார்க்கும் திறன் தளர்ச்சி கொண்டும், 

🛌உடல் வலிமை குன்ற

👴 நரையும்,
👓👀திரையும் தோன்றவும்,
ஆகிய யாவும் மூப்பின் வலிமையல் நிகழ்கின்றது.

🙆‍♀️இந்நிலைக்கு ஆளாகும் முன்  🏔️பொன் மயமாய்ப் பொருந்தி காட்சி நல்கும், 

🗻கங்கை தரித்த சடையை உடையவனாகிய ஈசன் உறையும், 

🏞️நீர்மல்கு கடந்தை நகரில் 

⛺தடங்கோயில் சேர் தூங்கானை மாடம் சார்ந்து தொழுமின்கள்.🙇‍♂️🙆‍♀️
🛐🏔️🏰⛺🙏🏻🙇‍♂️🙆‍♂️🙆‍♀️🙇🏻‍♀️🙏🏔️🏰🗻⛺🛐
             முதியோர் தின வாழ்த்துக்கள்:
                            (01.10.2020)
                     🛐🙏🏼🙇‍♂️🙆‍♀️🙆‍♂️🙇‍♀️🙏🏻🛐
என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🛐🏔️🏰⛺🙏🏻🙇‍♂️🙆‍♂️🙆‍♀️🙇🏻‍♀️🙏🏔️🏰🗻⛺🛐

Wednesday, September 23, 2020

#திருமுறைகளில்_தமிழமுதம் #சைவத்திருமுறைகள் - #திருமுறை_பொக்கிஷங்கள் பதிவு : ஒன்று.

#திருமுறைகளில்தமிழமுதம்:
பதிவு : ஒன்று.

🙏🎪🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🎪🙏
             🙆ஆன்மீகமே தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                       
                     🙏🙇‍♂️நன்றி🙇‍♀️🙏🏻
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

#சைவத்திருமுறைகள்:

🔱கி.பி. 300 முதல் கி.பி. 600 வரையில் சைவசமயம் பல்லவர், சோழர் காலத்தில் கோலோய்ச்சியது. இந்தக் காலகட்டத்தில் இறையருள் பெற்ற ஞானிகளான அப்பரும், சம்பந்தரும் தோன்றி சைவ சமயம் பரவ வழி செய்தார்கள்.

💥#பிறமத_செருக்கு_நீக்கம்:

🔱 இவர்களின் வருகைக்கு முன்புவரை,  பிற மதங்கள் குறிப்பாக சாக்கியம், சமணம் போன்ற  இறையுணர்வை மறுத்தும், வேறுபட்ட  கொள்கைகளையும் கொண்ட, பிற மத ஆதிக்க கலாச்சார பண்புகள் பரவி, சீர்கேடுகள் நிறைந்தும் இருந்து வந்தன.  இதனால் நமது பாரம்பரிய தமிழ் கலாச்சாரங்களும், சைவ இறை நம்பிக்கைகளும் பக்தியும் உயர் பண்புகளும் கெட்டு தமிழகம் ஒரு பிற்போக்கான சூழலில் அமைந்திருந்தது.

🎪பிற மதங்களின் பொய்யுரைகளும், போலி வாதங்களையும் கேட்டு அதற்கு கட்டுண்டு கிடந்த மன்னர்களின் அறிவற்ற  அரச நெறிகளையும் நமது பாரம்பரிய தமிழரின் கலாச்சாரங்களும் பண்பாடுகளும் சிதைந்து இருந்ததை மீட்டு சீர்திருத்தியவர்கள் தேவார ஆசிரியர்களே.

#தமிழ்வேத_மந்திரங்கள்:

📚தேவார ஆசிரியர்கள் நம் ஒப்பற்ற தெய்வத் தமிழ்ப் பதிகங்கள் பல இயற்றி, பிறமத ஆதிக்கங்களை வெளிப்படையாக எதிர்த்து, அவர்தம் மதச் செருக்கு அடக்கி, மக்களுக்கு அற்புதங்கள் பல நிகழ்த்தி சைவத் திருவருட் செயலாக்கத்தின் மேன்மையை, உலகத்தாருக்கு அழகு தமிழில் புதிய பண், பாடல் வகையில், இசை அமைப்பில் பதிகங்கள் இயற்றி பாடிஉணர்த்தி சைவை சமயத்தை அமுதத் தமிழால் போற்றியவர்கள்.

❄️எனினும், காலச்சூழலில், இந்த சைவத் திருமுறைகள் தமிழ் வேத மந்திர நூல்களாகவே எண்ணி பாதுகாத்து, மறைத்து வைக்கப்பட்டு விட்டது.

🗃️#திருமுறைபொக்கிஷம்:

📦இராஜ இராஜ சோழர் காலத்தில், உண்மை உணர்ந்து,  இந்த தமிழ்  திருமுறைகளை மீட்டெடுக்கப்பட்டது.  இறையருள் பெற்ற சைவத் தமிழ் பொக்கிஷமாகப் போற்றப்பட்டது. மேலும் இதன் சிறப்புகளை பெருமைகளை  கருதி இது போன்று ஏராளமான இறை அருளாளர்களின் சைவத் தமிழ் பாடல்கள் அனைத்தும் தொகுத்து பன்னிரு திருமுறைகளாக வகுத்து, பாதுகாத்து, சிறப்பு செய்து, தமிழ் பரவ, தமிழர் பண்பாடு, கலாச்சாரம் மிகவும் சிறப்புற, அனைத்து ஆலய வழிபாடுகளிலும் தமிழ் வேதத் திருமுறைகள் ஓதப்பட்டு, தமிழகம், பக்தி இலக்கிய காலமாய் திகழ்ந்து, தமிழகம் ஒரு பொற் காலமாக விளங்கிற்று. இதுவே, வரலாற்று உண்மை.

#தமிழ்அமுதமறைகள்:

💥திருமுறைகள் மூலம், தமிழின் ஒப்பற்ற உயர்வை, இலக்கண, இலக்கிய, இசை நுணுக்க சிறப்புகளை, தமிழனின் கலாச்சார செருக்கை, பண்பாடுகளின் சிறப்பை வெளிப்படுத்தி, இழந்த தமிழரின் பெருமையை, பக்தியுடன் கூடிய நல்ல பண்பாட்டை, நம் நல்லத் தமிழ் இறை அருளாலர்கள்,  இறையருள் நம்பிக்கைக் கொண்டு மீட்டு வளர்த்தார்கள், என்றால் அது மிகையாகாது.

📚இன்றும், இந்த சைவத்தமிழமுத திருமுறைப் பாடல்கள்   அனைத்தையும் முறையாகப் பரவ வழிசெய்து, போற்றி வழிபாடு செய்யப்படும் அளவில், தமிழகமும், தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும், மேம்பாடும், மேலும், மேலும் வளரும்; என்பது வரலாற்றின் மூலம் நிறுபிக்கப்பட்ட உண்மையாகும்.
🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️✡️❄️⚛️🙆🏻‍♂️🙏🏻

மூல நூல்கள்:
***(34. திருஞானசம்பந்த நாயனார் புராணம்.
6. வம்பறா வரிவண்டுச் சருக்கம்.
இரண்டாம் காண்டம்)
திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம்**
*1.சமயக்குரவர் நால்வர் வரலாறு
- பேராசிரியர் கா.சுப்ரமணியம் பிள்ளை
**2. திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் -
பேராசிரியர் புலவர் அ. மாணிக்கம் -  உரையாசிரியர்.
மேலும், பல்வேறு வலைதளத்தில் கிடைக்கப்பெற்ற ஒப்பற்ற பல பேராசிரியர்கள் நூல்கள், கட்டுரைகளிலிருந்தும் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டு வழங்கப்பெறுகிறது.

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

🙏நன்றி🙇‍♂️    
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

Wednesday, September 2, 2020

சம்பந்தர் அமுதம் - கோமூத்திரி_அந்தாதி பாடல் பொருள் விளக்கம்.

#சம்பந்தர் அமுதம்
#கோமூத்திரி _ அந்தாதி

பாடல் பொருள் விளக்கம்.

#திருக்கோமூத்திரி -அந்தாதி:

தேவாரம் இரண்டாம் திருமுறை
பதிகம்: 74
தலம்: திருப்பிரமபுரம் :

#ஆதிவிகற்பங்கள் என்று சேக்கிழார் கருதும் பதிகங்களில் இத்திருப்பதிகம் அடங்கியவை என்று அறிஞர்கள் கூறுகின்றனர். 

இந்த பதிகமும் பன்னிரண்டு திருப் பாடல்களை உடையது. 

சீர்காழி தலத்தின் பன்னிரு பெயர்களையும் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

'இந்த பாடலில் சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களும் சொல்லப்பட்டுள்ள வரிசை, 
'விளங்கிய சீர்' என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடல் (2.73.1)
 'பிரமனூர்' என்று தொடங்கும் பதிகத்தின் முதல் பாடல் (2.70.1) 
மற்றும் 'எரியார் மழு' என்று தொடங்கும் பதிகத்தின் பாடல்கள் (1.63)   உள்ள வரிசையில் அமைந்திருப்பதை நாம் காணலாம். 
இதே பதிகத்தின் மற்ற பாடல்களில் அந்த வரிசை பின்பற்றப்படவில்லை'. 

தேவாரப் பதிகங்களில் அந்தாதி வகையைச் சார்ந்த பாடல் தொகுப்பு ஏதும் இல்லை.  ஞானசம்பந்தர் அருளிய இந்த பதிகம், கோமூத்திரி அந்தாதி வகையில் அமைந்துள்ளது. 

இந்த பதிகம் #கோமூத்திரி என்ற சித்திரக்கவி வகையைச் சார்ந்தது என்று கூறுவார்கள். 

'பசுமாடு ஒன்று     சாலையில் நடந்து செல்வதைப்
பார்த்திருக்கிறீர்களா; இனிமேல் அதனைக் கூர்ந்து கவனியுங்கள்.
அப்பசுமாடு நடந்து போகும் போது கோமயம் விடுவதாக,
அதாவது இயற்கைக் கழிவான சிறுநீர் கழிப்பதாக இருந்தால்
அந்நீர் வளைவு வளைவாக தரையில் பட்டிருக்கும். அதாவது
மேல் மேடு ஒன்று - கீழ்ப்பள்ளம் ஒன்று என அவ்வளைவு
அமையும். அதுவே இரண்டு மாடுகள் கழிப்பதாக இருந்தால் இரு
எதிர் எதிர் வளைவுகள் கிடைக்கும். அவ்வமைப்பைச் செய்யுளில்
அமைப்பது #கோமூத்திரி என்னும் #சித்திரகவியாகும். (கோ =
பசுமாடு ; மூத்ரி = மூத்திரம்)

'ஒரு செய்யுளின் முதலடியில் உள்ள
எழுத்துகளும், இரண்டாம் அடியில்
உள்ள எழுத்துகளும் ஒன்று இடையிட்டு
ஒன்று நேர் எதிர் இணைப்பினவாக
அமையும் முறை கோமூத்திரி என்னும்
சித்திர கவியாகும்'

#வழிமுடக்கு_மாவின்_பாய்ச்சல்:

மேலே குறிப்பிட்ட வகையில் ஞானசம்பந்தர் அருளிய இந்த பதிகத்தின் பாடல்கள் #கோமூத்திரி_அந்தாதி என்ற அமைப்பில் அமையவில்லை. எனினும் இந்த பாடலை #கோமூத்திரி_அந்தாதி என்று அறிஞர்கள் அழைக்கின்றனர்.  ஆனால் ஞானசம்பந்தர் இந்த பாடலுக்கு #வழிமுடக்கு_மாவின்_பாய்ச்சல் என்ற பெயரினையே அளித்துள்ளார்.

ஒரு பாடலின் இறுதியில் வைத்தெண்ணப்பெற்ற பெயர் அடுத்த பாடற்கு முதலாக மீண்டும் மடித்தெண்னப் பெறும் நிலையில் அமைந்த இப்பதிகம், முடக்காக வளைந்த வழியிலே சென்ற மாடானது மீண்டும் வந்த வழியே மடங்கிச் சென்றாற்போலும் நடை அமைப்பினை உடையது ஆகும் .

'அதாவது அந்தாதி போன்று முந்திய பாடலின் கடைச் சொல்லினை அடுத்த பாடலின் முதற் சொல்லாக கொள்ளாது, முந்திய பாடலில் கடைச் சொல்லுக்கு முன்னர் அமைந்துள்ள சொல்லினை அடுத்த பாடலின் முதற் சொல்லாக கொண்டு அமைந்துள்ள தொகுப்பு.   இப்படி ஒரு வித்தியாசமான தொகுப்பினை ஞானசம்பந்தர் அருளியிருப்பது அவரது தமிழ்ப் புலமையை நமக்கு உணர்த்துகின்றது'. 

'#வழிமுடக்கு_மாவின்_பாய்ச்சல் என்று பெயரிட்டு இந்த பதிகத்தின் தன்மையை மிகவும் அழகாக உணர்த்துகின்றார்.  ஒரு மாடு பாய்ந்து செல்லும் போது அதன் காற்தடங்கள் வளைந்து செல்லும் பாதையைத் தானே காட்டும்.  அந்த தன்மையே இங்கே கூறப்படுகின்றது'. 

'#கோமூத்திரி என்ற சொல்லினை விடவும் #வழிமுடக்கு_மாவின்_பாய்ச்சல் என்ற தொடர் சொல்வதற்கும் கேட்பதற்கும் இனிமையாக உள்ளது அல்லவா.'*

'விளக்கம்:இப்பதிகப் பாடல் ஒவ்வொன்றிலும் பிரமபுரத்திற்குரிய பன்னிரு திருப்பெயர்களும் எண்ணப்பெற்றுள்ளன. ஒரு பாடலின் இறுதியில் வைத்தெண்ணப்பெற்ற பெயர் அடுத்த பாடற்கு முதலாக மீண்டும் மடித்தெண்னப் பெறும் நிலையில் அமைந்த இப்பதிகம்,

முடக்காக வளைந்த வழியிலே சென்ற மாவானது மீண்டும் வந்த வழியே மடங்கிச் சென்ருற்போலும் நடை அமைப்பினேயுடையதாதல் இங்கு நோக்கத் தகுவதாகும்.'

இனி பாடல் பொருள் விளக்கம் காண்போம்.
தேவராம் :இரண்டாம் திருமுறை
பதிகம்: 74 திருக்கோமூத்திரி அந்தாதி
தலம்: திருப்பிரமபுரம் பண் : காந்தாரம் :

பாடல் 1:
பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர் குறைவிலாப் புகலிபூமேன்
மாமகளூர் வெங்குருநற் றோணிபுரம் பூந்தராய் வாய்ந்தவிஞ்சிச்
சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை புகழ்ச்சண்பை காழிகொச்சை
காமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர் கழுமலநாங் கருதுமூரே.

பாடல் - 2
கருத்துடைய மறையவர்சேர் கழுமலமெய்த் தோணிபுரங் கனகமாட
உருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா யுலகாருங் கொச்சைகாழி
திருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர் செங்கமலத் தயனூர்தெய்வத்
தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை முடியண்ணல் தங்குமூரே.

பாடல் 3
ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை யொளிமருவு காழிகொச்சை
கார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த் தோணிபுரங் கற்றோரேத்துஞ்
சீர்மருவு பூந்தராய் சிரபுரமெய்ப் புறவமய னூர்பூங்கற்பத்
தார்மருவு மிந்திரனூர் புகலிவெங் குருக்கங்கை தரித்தோனூரே

பாடல் 4.
தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த் தோணிபுரந் தரியாரிஞ்சி
எரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந் தராய்புகலி யிமையோர்கோனூர்
தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி சண்பைசெழு மறைகளெல்லாம்
விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ னூருலகில் விளங்குமூரே

பாடல் 5

விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை வேணுபுர மேகமேய்க்கும்
இளங்கமுகம் பொழிற்றோணி புரங்காழி யெழிற்புகலி புறவமேரார்
வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச் சிரபுரம்வன் னஞ்சமுண்டு
களங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா மன்னுடலங் காய்ந்தோனூரே.

பாடல் 6

காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர் கழுமலமாத் தோணிபுரஞ்சீர்
ஏய்ந்தவெங் குருப்புகலி யிந்திரனூ ரிருங்கமலத் தயனூரின்பம்
வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந் தராய்கொச்சை காழிசண்பை
சேந்தனைமுன் பயந்துலகிற் றேவர்கடம் பகைகெடுத்தோன் றிகழுமூரே.

பாடல் 7

திகழ்மாட மலிசண்பை பூந்தராய் பிரமனூர் காழிதேசார்
மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம் வயங்கொச்சை புறவம்விண்ணோர்
புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங் குருவெம்போர் மகிடற்செற்று
நிகழ்நீலி நின்மலன்றன் னடியிணைகள் பணிந்துலகி னின்றவூரே.

பாடல் 8
நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி புரநிகழும் வேணுமன்றில்
ஒன்றுகழு மலங்கொச்சை யுயர்காழி சண்பைவளர் புறவமோடி
சென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூந் தராய்புகலி தேவர்கோனூர்
வென்றிமலி பிரமபுரம் பூதங்க டாங்காக்க மிக்கவூரே.

பாடல் 9

மிக்ககம லத்தயனூர் விளங்குபுற வஞ்சண்பை காழிகொச்சை
தொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்சேரூர்
மைக்கொள்பொழில் வேணுபுர மதிற்புகலி வெங்குருவல் லரக்கன் றிண்டோள்
ஒக்கவிரு பதுமுடிக ளொருபதுமீ டழித்துகந்த வெம்மானூரே.

பாடல் 10.

எம்மான்சேர் வெங்குருச்சீர்ச் சிலம்பனூர் கழுமலநற் புகலியென்றும்
பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந் தரனூர்நற் றோணிபுரம்போர்க்
கைம்மாவை யுரிசெய்தோன் காழியய னூர்தராய் சண்பைகாரின்
மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய் விளங்கியவெம் மிறைவனூரே.

பாடல் 11

இறைவனமர் சண்பையெழிற் புறவமய னூரிமையோர்க் கதிபன்சேரூர்
குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி புரங்குணமார் பூந்தராய்நீர்ச்
சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர் கொச்சைகழு மலந்தேசின்றிப்
பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள் பரிசறியா வம்மானூரே.

பாடல் 12
அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங் குருக்கொச்சை புறவமஞ்சீர்
மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி தோணிபுரந் தேவர்கோனூர்
அம்மான்மன் னுயர்சண்பை தராயயனூர் வழிமுடக்கு மாவின்பாச்சல்
தம்மானொன் றியஞான சம்பந்தன் றமிழ்கற்போர் தக்கோர்தாமே.

பொருள் விளக்கம்:
பாடல் 1.
பூமகனூர் புத்தேளுக்கு இறைவன் ஊர் குறைவிலாப் புகலிபூமேல்

மாமகளூர் வெங்குரு நல் தோணிபுரம் பூந்தராய் வாய்ந்தஇஞ்சிச்

சேமம் மிகு சிரபுரம் சீர்ப் புறவ நிறை புகழ்ச் சண்பை காழி கொச்சை

காமனை முன் காய்ந்த நுதல் கண்ணவன் ஊர் கழுமலம் நாம்கருதும் ஊரே

விளக்கம்:

பூமகன்=தாமரை மலரினைத் தனது இருப்பிடமாகக் கொண்ட பிரமன்; பிரமனூர் என்ற பெயர் பூமகனூர் என்று மாற்றப்பட்டுள்ளது. 

தான் மேற்கொண்டுள்ள படைத்தல் தொழில் ஒழுங்காக நடைபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் உபநிடதங்களை முறையாக ஓதி பிரமன் வரம் பெற்றதால் இந்த தலத்திற்கு பிரமபுரம் என்ற பெயர் வந்தது என்று தலபுராணம் கூறுகின்றது. 

புத்தேள்=தேவர்கள்; 

சூரபதுமனுக்கு பயந்து இந்திரன் இங்குள்ள மூங்கிலில் மறைந்து கொண்டமையால் வேணுபுரம் என்ற பெயர் சீர்காழி தலத்திற்கு வந்தது. அப்போது இந்திரனுடன் வந்த தேவர்கள் இறைவனை வணங்கிய செய்தி இங்கே புத்தேளுக்கு இறைவனூர் என்ற தொடரால் குறிப்பிடப்படுகின்றது. 

மாமகள்=செல்வத்தை தரும் இலக்குமி தேவி; 
இஞ்சி=மதில்; 
சேமம்=பாதுகாப்புடன், க்ஷேமம் என்ற வடமொழியின் தமிழாக்கம்:

பாடல் 1.
பொழிப்புரை:

தாமரை மலரினில் உறையும் பிரமனால் வழிபடப்பட்டதால் பிரமபுரம் என்றும், சூரபதுமனுக்கு பயந்துகொண்டு மூங்கில் காட்டினில் இந்திரன் ஒளிந்துகொண்ட போது தேவர்களும் இந்திரனுடன் சேர்ந்து இறைவனை வழிபட்டதால் வேணுபுரம் என்றும், குறைவில்லாத வளம் கொண்ட புகலி நகரம் என்றும், உலகில் உள்ள மற்ற நகரங்களினும் செல்வச் சிறப்பினை அதிகமாக உடைத்ததாக இலக்குமி தேவி உறையும் வெங்குரு என்றும், நல்ல தோணிபுரம் என்றும், பூந்தராய் என்றும், வலிமையான மதில் சுவர்களைக் கொண்டு பாதுகாப்பாக விளங்கும் சிரபுரம் என்றும், சிறப்பினை உடைய புறவம் என்றும், நிறைந்த புகழினை உடைய சண்பை நகரம் என்றும், காழி என்றும், கொச்சைவயம் என்றும், தனது நெற்றிக் கண்ணினைத் திறந்து காமனை அழித்த இறைவனின் ஊர் கழுமலம் என்றும் பன்னிரண்டு பெயர்களை உடைய சீர்காழி தலமே, அடியேன் எப்போதும் கருத்தினில் கொள்ளும் தலமாகும்.

பாடல் 2:

கருத்து உடைய மறையவர் சேர் கழுமலம் மெய்த் தோணிபுரம் கனக மாட

உருத் திகழ் வெங்குருப் புகலி ஓங்கு தராய் உலகாரும் கொச்சை காழி

திருத் திகழும் சிரபுரம் தேவேந்திரனூர் செங்கமலத்து அயன் ஊர் தெய்வத்

தருத் திகழும் பொழில் புறவம் சண்பை சடைமுடி அண்ணல்தங்கும் ஊரே

விளக்கம்:

கனகம்=பொன்; திரு=இலக்குமி தேவி; தரு=மரம்; 
தெய்வத்தரு=தெய்வத்தன்மை வாய்ந்த கற்பக மரம்; 
மெய்=பிரளயத்திலும் அழியாது நிலைத்து நிற்கும்;

பொழிப்புரை:

சிவஞானக் கருத்துகள் உடையவர்களாக விளங்கும் மறையவர் சேர்ந்து வாழும் கழுமலம் என்றும், பிரளய வெள்ளத்திலும் அழியாது நிலைத்து நிற்கும் தோணிபுரம் என்றும், பொன் போன்று அழகிய மாடங்கள் கொண்ட மாளிகைகள் கொண்டு வெங்குரு என்றும், புகலி என்றும், ஓங்கிய புகழினை உடைய பூந்தராய் என்றும், பரந்த உலகினில் சிறப்புடன் திகழும் கொச்சைவயம் என்றும், காழி என்றும், செல்வ வளத்துடன் விளங்கும் சிரபுரம் என்றும், தேவேந்திரனின் ஊர் என்பதை உணர்த்தும் வேணுபுரம் என்றும் சிவந்த தாமரை மலரில் உறையும் பிரமன் வழிபட்ட பிரமனூர் என்றும், தெய்வத்தன்மை பொருந்திய கற்பகம் முதலான மரங்கள் நிறைந்த சோலைகள் உடைய புறவம் என்றும் சண்பை என்றும் அழைக்கப்படும் சீர்காழி தலம் நமது தலைவனும் சடைமுடி உடையவனும் ஆகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடமாகும்.

பாடல் 3:

ஊர் மதியைக் கதுவ உயர் மதில் சண்பை ஒளி மருவு காழிகொச்சை

கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம் மெய்த் தோணிபுரம்கற்றோர் ஏத்தும்

சீர் மருவு பூந்தராய் சிரபுரம் மெய்ப் புறவம் அயனூர் பூங்கற்பகத்

தார் மருவும் இந்திரன் ஊர் புகலி வெங்குருக் கங்கை தரித்தோன்ஊரே

விளக்கம்:

கதுவ=பற்ற; ஊர்மதி=விண்ணில் ஊர்ந்து செலும் சந்திரன், கார்=மேகங்கள்;

பொழிப்புரை:

வானில் ஊர்ந்து செல்லும் சந்திரனைப் பற்றும் வண்ணம் உயர்ந்த மதில்களை உடைய சண்பை என்றும், ஒளியுடன் திகழும் காழி என்றும், கொச்சை வயம் என்றும், மேகங்கள் தவழும் அழகிய சோலைகளால் சூழப்பட்ட கழுமலம் என்றும், பிரளய வெள்ளத்தில் மூழ்கி அழியாமல் மிதந்து நிலையாக நின்ற தோணிபுரம் என்றும், கற்றோர்கள் புகழும் சிறப்பினை உடைய பூந்தராய் என்றும், சிரபுரம் என்றும், என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும் புறவம் என்றும், அயன் என்று அழைக்கப்படும் பிரமனின் ஊர் என்பதை உணர்த்தும் பிரமனூர் என்றும், அழகிய கற்பக மரங்களை உடைய இந்திரன் வழிபட்ட வேணுபுரம் என்றும், புகலி என்றும், வெங்குரு என்றும் அழைக்கப்படும் சீர்காழி நகரம், கங்கை நதியினைத் தனது சடையினில் மறைத்த சிவபெருமானின் ஊர் ஆகும்.

பாடல் 4:

தரித்த மறையாளர் மிகு வெங்குருச் சீர் தோணிபுரம் தரியார் இஞ்சி

எரித்தவன் சேர் கழுமலமே கொச்சை பூந்தராய் புகலி இமையோர்கோன் ஊர்

தெரித்த புகழ்ச் சிரபுரம் சீர் திகழ் காழி சண்பை செழுமறைகள்எல்லாம்

விரித்த புகழ்ப் தொகுக்கப்பட்டவிரைக் கமலத்தோன் ஊர் உலகில் விளங்கும்ஊரே

விளக்கம்:

தரித்த=வேதங்களை நாவில் தரித்த; தரியார்=பொறுக்க முடியாதவர்கள், தேவர்களும் மனிதர்களும் நிம்மதியாக வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் அவர்களுக்கு தொடர்ந்து துன்பம் இழைத்த திரிபுரத்து அரக்கர்கள்; 
இஞ்சி=கோட்டை, மதில்; 
விரை=நறுமணம்; தெரித்த=விளங்கிய; 
கமலத்தோன் ஊர் என்று பிரமபுரம் எனப்படும் தலத்தின் பெயரை சற்று மாற்றி, சம்பந்தர் இந்த பாடலில் கையாண்டுள்ளார். பிரமபுரம் என்ற பெயர் வந்ததன் காரணத்தை நாம் முதல் பாடலின் விளக்கத்தில் கண்டோம்.

பொழிப்புரை:

இடைவிடாது வேதங்கள் ஓதுவதால், தங்களது நாவினில் வேதங்களை தரித்தவர்களாக விளங்கும் அந்தணர்கள் மிகுந்த வெங்குரு என்றும், சிறப்பு வாய்ந்த தோணிபுரம் என்றும், தேவர்களும் மனிதர்களும் நிம்மதியாக வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் அவர்களுக்கு தொடர்ந்து துன்பம் இழைத்து அனைவர்க்கும் பகைவர்களாக திகழ்ந்த திரிபுரத்து அரக்கர்களின் வலிமை வாய்ந்த மூன்று பறக்கும் கோட்டைகளையும் ஒருங்கே எரித்த இறைவனாகிய சிவபெருமான் சேரும் இடமாகிய கழுமலம் என்றும், கொச்சைவயம் என்றும், பூந்தராய் என்றும், புகலி என்றும், வானவர்களின் தலைவனாகிய இந்திரன் ஒளிந்து கொண்டதால் வேணுபுரம் என்று பெயரினை பெற்ற தலம் என்றும் விளங்கிய புகழினை உடைய சிரபுரம் என்றும், சிறப்புகள் பொருந்தி திகழும் காழி என்றும், சண்பை என்றும், செழுமை வாய்ந்த வேதங்களால் புகழ் விரித்து சொல்லப்படும் புறவம் என்றும், நறுமணம் வாய்ந்த தாமரை மலரில் உறையும் பிரமன் வழிபட்டதால் பிரமபுரம் என்றும், அழைக்கப்படும் சீர்காழி நகரம் உலகினில் சிறந்து விளங்குகின்றது.

பாடல் 5:

விளங்கு அயனூர் பூந்தராய் மிகு சண்பை வேணுபுரம் மேகம்ஏய்க்கும்

இளம் கமுகம் பொழில் தோணிபுரம் காழி எழில் புகலி புறவம்ஏரார்/

வளம் கவரும் வயல் கொச்சை வெங்குரு மாச் சிரபுரம் வன் நஞ்சம்உண்டு

களங்கம் மலி களத்தவன் சீர்க் கழுமலம் காமன் உடலம்காய்ந்தோன் ஊரே

விளக்கம்:

ஏய்க்கும்=ஒன்றி நிற்கும்; ஏற=அழகு; 
ஏரார்=அழகுநிறைந்த; 
காய்ந்தோன்=கோபம் கொண்டு; தனது தவத்தினைக் கலைக்க முயற்சி செய்த மன்மதன் பால் கோபம் கொண்டு, நெற்றிக் கண் திறந்து மன்மதனை எரித்த செயல் இங்கே குறிப்பிடப்படுகின்றது.
கமுக மரம்=பாக்கு மரம்; வன்னஞ்சம்=வலிமை வாய்ந்த கொடிய ஆலகால விடம்; 
களங்கம்=குற்றம், இங்கே கறை என்று பொருள் கொள்ள வேண்டும். களம்=கழுத்து; 
அயனூர்=பிரமபுரம்;

பொழிப்புரை:

சிறப்புடன் விளங்கும் பிரமபுரம் என்றும், பூந்தராய் என்றும், புகழ் மிகுந்த சண்பை என்றும், வேணுபுரம் என்றும், மேகங்களுடன் ஒன்றி நிற்கும் வண்ணம் உயர்ந்த பாக்கு மரங்கள் நிறைந்த சோலைகள் உடைய தோணிபுரம் என்றும், காழி என்றும், எழிலுடன் விளங்கும் புகலி என்றும், புறவம் என்றும், செழுமையும் அழகும் கலந்து தோன்றும் வயல்கள் நிறைந்த கொச்சைவயம் என்றும், வெங்குரு என்றும், பெருமை வாய்ந்த சிரபுரம் என்றும், கொடிய ஆலகால விடத்தினைத் தனது கழுத்தினில் தேக்கியதால் கருமை கறை படிந்த கழுத்தினை உடையவனாக விளங்கும் சிவபெருமான் உறையும் சிறந்த தலமாகிய கழுமலம் என்றும் அழைக்கப்படும் இந்த தலம், தனது தவத்தினைக் கலைக்க முயற்சி செய்த மன்மதன் பால் கோபம் கொண்டு, நெற்றிக்கண்ணை விழித்து மன்மதனின் உடலை பொடியாக்கிய பெருமான் உறையும் தலம் ஆகும்.

பாடல் 6:

காய்ந்து வரும் காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலம் மாத்தோணிபுரம் சீர்

ஏய்ந்த வெங்குருப் புகலி இந்திரனூர் இருங்கமலத்து அயனூர்இன்பம்

வாய்ந்த புறவம் திகழும் சிரபுரம் பூந்தராய் கொச்சை காழி சண்பை

சேந்தனை முன் பயந்து உலகில் தேவர்கள் தம் பகை கெடுத்தோன்
திகழும் ஊரே

விளக்கம்:

காய்ந்து=கோபத்துடன்; முன்னமே குறிப்பிடப்பட்ட நேரத்தில் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரை எடுக்க வந்த காலன், சிறுவன் சிவபூஜை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து மேலும் கோபம் கொண்டு அவனது கழுத்தினில் பாசக் கயிறு வீசிய நிகழ்ச்சி இங்கே, காய்ந்து வரும் காலன் என்ற தொடர் மூலம் குறிப்பிடப்படுகின்றது. 
சீர்=சிறப்பு; ஏய்ந்த=பொருந்திய; 
இந்திரனூர்= வேணுபுரம்; 
இரும்=பெரிய; 
சேந்தன்=முருகப்பெருமான்;
பயந்து=பெற்றெடுத்து; முருகப்பெருமான்சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய நெருப்புப் பொறிகளால் உருவானவன் என்பதால், ஒரு தாயின் கருவிலிருந்து உருவாகாதவன் என்பதை குறிப்பிடும் வண்ணம், முருகனைப் பெற்றவன் சிவபெருமான் என்று இங்கே ஞானசம்பந்தர் கூறுகின்றார். தேவர்களுக்கு பகைவனாக விளங்கிய சூரபதுமனை கொல்வதற்காக முருகப்பெருமானை தோற்றுவித்தார் என்ற கருத்து உணரப்படும் வண்ணம், முருகனை தோற்றுவித்து தேவர்கள் பகையினை கெடுத்த சிவபெருமான் என்றும் இந்த பாடலில் குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

பண்டைய நாளில், மிகுந்த கோபத்துடன் சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரினைப் பறிக்க வந்த காலனை உதைத்து வீழ்த்திய சிவபெருமானின் ஊர் கழுமலம் என்றும், சிறப்பு வாய்ந்த தோணிபுரம் என்றும், சிறப்புகள் பொருந்திய வெங்குரு என்றும், புகலி என்றும், இந்திரனின் ஊர் எனப்படும் வேணுபுரம் என்றும், சிறந்த தாமரைப் பூவினில் அமர்ந்துள்ள பிரமனின் ஊர் எனப்படும் பிரமபுரம் என்றும் இறையுணர்வு மற்றும் செல்வச் செழிப்பு காரணமாக அனைவரும் இன்பமுடன் வாழும் புறவம் என்றும், வளமையுடன் திகழும் சிரபுரம் என்றும், பூந்தராய் என்றும் கொச்சைவயம் என்றும் காழி என்றும் சண்பை என்றும், தேவர்களின் பகையாகிய சூரபதுமனை அழிக்கும் ஆற்றல் வாய்ந்த முருகப்பெருமானைப் பெற்றெடுத்த சிவபெருமான் திகழும் சீர்காழி தலம் அழைக்கப் படுகின்றது.

பாடல் 7:

திகழ் மாட மலி சண்பை பூந்தராய் பிரமனூர் காழி தேசார்

மிகு தோணிபுரம் திகழும் வேணுபுரம் வயம்கொச்சை புறவம்விண்ணோர்

புகழ் புகலி கழுமலம் சீர்ச் சிரபுரம் வெங்குரு வெம்போர் மகிடற்செற்று

நிகழ் நீலி நின்மலன் தன் அடியிணைகள் பணிந்து உலகில்நின்ற ஊரே

விளக்கம்:

மலி=மலிந்த; தேசு=ஒளி; 
தேசார்=ஒளி பொருந்திய; 
சூரபதுமனுக்கு அஞ்சிய தேவர்கள் சிவபெருமானிடம் சரணடைந்த இடம் என்பதால் புகலி என்று பெயர் வந்ததாக கூறுவார்கள். 

பொழிப்புரை:

பொலிவுடன் திகழும் மாடங்கள் நிறைந்த சண்பை என்றும், பூந்தராய் என்றும், பிரமனூர் என்றும், காழி என்றும், மிகவும் அதிகமான ஒளி பொருந்திய தோணிபுரம் என்றும், சிறப்புடன் திகழும் வேணுபுரம் என்றும், கொச்சைவயம் என்றும், புறவம் என்றும், விண்ணோர்களால் புகழப்படும் புகலி என்றும், கழுமலம் என்றும், சிறப்பு வாய்ந்த சிரபுரம் என்றும், வெங்குரு என்றும், அழைக்கப்படுவது, கடுமையான போரின் முடிவினில் மகிடாசுரனை வெற்றி கொண்ட நீலி என்று அழைக்கப்படும் காளி,

மகிடனைக் கொன்றதால் ஏற்பட்ட பழியினை நீக்கிக் கொள்ளும் பொருட்டு, பணிந்து வணங்கும் திருவடிகளை உடைய நின்மலனாகிய சிவபெருமான் உறையும் ஊராகிய சீர்காழி ஆகும்.

பாடல் 8:

நின்ற மதில் சூழ்தரு வெங்குரு தோணிபுரம் நிகழும் வேணுமன்றில்

ஒன்று கழுமலம் கொச்சை உயர் காழி சண்பை வளர் புறவம்மோடி

சென்று புறம் காக்கும் ஊர் சிரபுரம் பூந்தராய் புகலிதேவர்கோனூர்

வென்றி மலி பிரமபுரம் பூதங்கள் தாம் காக்க மிக்க ஊரே

விளக்கம்:

பூதங்கள்=ஐந்து பூதங்கள்; பஞ்ச பூதங்களில் ஒன்றாக குறிப்பிடப்படும் நீரினை உணர்த்தும் பிரளய வெள்ளத்திலும் அழியாமல் மிதந்த நிலையினை பூதங்கள் காக்க நின்ற ஊர் என்று இங்கே குறிப்பிடுகின்றார். 
மோடி=துர்க்கை, காளி; 

பொழிப்புரை:

மதில்கள் சூழ்ந்து விளங்கும் வெங்குரு என்றும், தோணிபுரம் என்றும், பொலிவுடன் விளங்கும் மன்றில் கொண்ட வேணுபுரம் என்றும், ஒப்பற்ற கழுமலம் என்றும், கொச்சைவயம் என்றும், உயர்ந்த காழி என்றும், வளர்ந்த புகழ் உடைய புறவம் என்றும், காளிதேவி ஊர் எல்லையில் கோயில் கொண்டு காக்கும் சிரபுரம் என்றும், பூந்தராய் என்றும், புகலி என்றும், தேவர்களின் தலைவனாகிய இந்திரனின் ஊர் வேணுபுரம் என்றும், வெற்றிகள் வழங்கும் பிரமபுரம் என்றும் அழைக்கப்படும் சீர்காழி நகரம், ஐந்து பூதங்களும் சேர்ந்து எப்போதும் அழியாமல் நிலையாக இருக்கும் வண்ணம் காக்கும் நகரமாகும்.

பெருமானிடம் நடனப் போட்டியில் தோற்ற காளி, ஊர் எல்லையில் சென்று அமர்ந்ததாக சீர்காழி தலபுராணம் கூறுகின்றது. 
அரக்கன் தாரகனை வென்ற பின்னரும் தனது கோபம் அடங்காமல், கோபத்தினால் அனைத்து உயிர்களையும் துன்புறுத்தியது தனது தவறு என்பதை உணர்ந்த காளி, தனது குற்றம் நீங்கும் பொருட்டு சிவபெருமானை வழிபட்டதை குறிப்பிடும் வகையில் காழி என்ற பெயர் அமைந்தது

பாடல் 9:

மிக்க கமலத்து அயனூர் விளங்கு
சண்பை புறவம் காழி கொச்சை

தொக்க பொழில் கழுமலம் தூத் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன்சேர் ஊர்

மைக்கொள் பொழில் வேணுபுரம் மதில் புகலி வெங்குரு வல்லரக்கன்திண்தோள்

ஒக்க இருபது முடிகள் ஒருபதும் ஈடழித்து உகந்த எம்மான் ஊரே

விளக்கம்:

மிக்க=சிறப்பு மிக்க; அயனூர்=பிரமபுரம்; 
தொக்க=இணைந்த; 
ஈடு=வலிமை;

சிலம்பன்- = சுவர்பானு அரக்கன் - ராகு
சிலம்பனூர் - சிரபுரம் : நாகநாதர்

 இந்த பாடலில் சிலம்பன் சேர் ஊர் என்று ஞானசம்பந்தர் குறிப்பிடுகின்றார். இந்த பதிகத்தின் பாடல் தோறும் சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களை குறிப்பிட்டு வருவதால், இந்த பாடலிலும் பன்னிரண்டு பெயர்கள் இருக்க வேண்டும் என்பதை உணரலாம்.
சிரபுரம் என்ற பெயர் மேற்கண்ட பாடலில் இல்லாமல் இருப்பதால், சிலம்பன் சேர் ஊர் என்பது சிரபுரம் என்ற பெயரை குறிப்பதாகவே நாம் பொருள் கொள்ள வேண்டும். இதே போன்று, பன்னிரண்டு பெயர்களையும் குறிக்கும் பல பாடல்களில் (1.70.5, 1.73.2, 1073.3, 1.73.4, 1.73.5, 1.73.8, 1.73.9, 1.73.10. 1.74.10) சிரபுரம் என்ற பெயருக்கு பதிலாக சிலம்பனூர் என்ற பெயர் காணப்படுகின்றது. சிலம்பன் என்ற சொல்லுக்கு அபிதான சிந்தாமணி, குறிஞ்சி நிலத் தலைவன் என்றும் முருகப் பெருமான் என்று பொருள் உரைத்தாலும், அந்த பொருள்கள் சிரபுரம் என்ற பெயரின் காரணத்திற்கு பொருத்தமாக படவில்லை. சில அறிஞர்கள் சிலம்பன் என்பதற்கு நாகநாதன் என்று பொருள் கொண்டு, நாகனாதனாகிய இறைவன் உறையும் இடம் என்று பொருள் கூறுகின்றனர். இராகு வழிபட்டதால் சிரபுரம் என்று பெயர் வந்ததாக தலபுராணம் குறிப்பிடுகின்றது. இராகுவை பாம்பின் அம்சமாக கொண்டு, இராகு வழிபட்டதால் இராகுக்கு நாதனாக, தலைவனாக, திகழ்ந்த பெருமான் என்று பொருள் கொள்வது பொருத்தமாக உள்ளது.

மேலும் சிலம்பன் என்ற சொல் அரக்கன் ஒருவனை குறிப்பதாக சிவக்கவிமணியார் விளக்கம் அளிக்கின்றார். எனவே இராகு கிரகமாக மாறுவதற்கு முன்னர், சுவர்பானுவாக இருந்த அரக்கனே சிலம்பன் என்று ஞானசம்பந்தரால் குறிப்பிடப்படுகின்றது என்ற சிவக்கவிமணியாரின் விளக்கம் பொருத்தமாக உள்ளது. சுவர்பானு என்ற அரக்கன், பாற்கடலிலிருந்து பொங்கி வந்த அமுதத்தை, மோகினியாக வந்த திருமால், வஞ்சகமாக தேவர்களுக்கு மட்டும் அளித்து வந்ததைக் கண்டு, தானும் தேவர்களின் நடுவே அமர்ந்து அமுதம் பெறுவதற்கு முயற்சி செய்தான். தங்களின் இடையே அமர்ந்து அவன் அமுதம் பெற்றதை உணர்ந்து, சூரியனும் சந்திரனும், திருமாலிடம் அவன் வரிசை மாறி அமர்ந்ததை சுட்டிக் காட்டி உணர்த்தியதால், மோகினி வடிவத்தில் இருந்த திருமால், தான் வைத்திருந்த கரண்டியால் அவனது தலையினை வெட்டினார். ஆனால் அமுதம் உள்ளே சென்றதால் சுவர்பானு உடனே இறக்கவில்லை. அவனது தலை சீர்காழி சென்று இறைவனிடம் இறைஞ்சி முறையிட, அரக்கனது உடலுடன் பாம்பின் தலையை பொருத்தியும், அரக்கனது தலையுடன் பாம்பின் உடலை பொருத்தியும் பெருமான் வாழ்வளித்தார். அவர்கள் இருவரும் முறையே இராகு என்றும் கேது என்று அழைக்கப்பட்டனர். இந்த சுவர்பானு எனப்படும் அரக்கனே சிலம்பன் என்று தேவாரப் பாடல்களில் அழைக்கப்படுகின்றான். சுவர்பானுவின் தலை சென்று இறைவனை வழிபட்டமையால் சிரபுரம் என்ற பெயரும் தலத்திற்கு வந்தது. இராகு என்ற பாம்பு வழிபட்டமையால், நாகநாதன் என்று பெருமானும் அழைக்கப் படுகின்றார். எனவே சிலம்பன் என்ற சொல் பெருமானை வழிபாட்டு அருள் பெற்ற சுவர்பானுவை குறிப்பதாகவும், நாகநாத சுவாமி என்ற பெயரினை பெற்ற பெருமானை குறிப்பதாகவும் இரண்டு விதமாக விளக்கம் அளிக்கப்படுகின்றது. இந்த பாடலில் சிரபுரம் என்ற சொல் இல்லாமல் இருப்பதன் பின்னணியில், சிலம்பனூர் என்ற சொல்லுக்கு சிரபுரம் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது. 
- ==

தெய்வத்தரு=கற்பக மரம். கற்பக மரம் தனது நிழலில் அமர்வோர் நினைத்ததை அளிக்கும் என்று கூறுவார்கள். சீர்காழி தலத்தில் உள்ள மரங்கள் செழிப்புடன் வளர்ந்து மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதால், கற்பக மரங்களுக்கு ஒப்பாக இங்கே குறிப்பிடப்படுகின்றன. 

வேணுபுரம் என்ற பெயர் இந்திரன் வந்து பெருமானை வழிபட்டதால் வந்த பெயர். எனவே தேவேந்திரன் ஊர் என்று வரும் இடங்களில் வேணுபுரம் என்று பொருள் கொள்வது பொருத்தம். ஒண்பா=சிறந்த பாடல்கள்; உருவளர்=புகழ் வளரும்; சான்றோர்கள் மேலும் மேலும் இறைவனைப் புகழ்ந்து பாடுவதால், பெருமானின் சிறப்பும் தலத்தின் சிறப்பும் மேலும் மேலும் வளர்கின்றது என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார். உயர்ந்த தேவர்=பிரமன் திருமால் இந்திரன் உள்ளிட்ட உயர்ந்த தேவர்கள்; வெருவளர்=அச்சம் வளரும் நிலை; மேற்கண்ட விளக்கத்திற்கு பொருத்தமான பாடல் ஒன்றினை (2.73.2) நாம் இங்கே காண்போம்.

திரு வளரும் கழுமலமே கொச்சை தேவேந்திரன் ஊர் அயனூர்தெய்வத்

தரு வளரும் பொழில் புறவம் சிலம்பனூர் காழி தரு சண்பைஒண்பா

உரு வளர் வெங்குருப் புகலி ஓங்கு தராய் தோணிபுரம் உயர்ந்ததேவர்

வெருவ வளர் கடல் விடம் அது உண்டு அணி கொள் கண்டத்தோன் விரும்பும் ஊரே

பொழிப்புரை:

சிறப்பு மிகுந்த தாமரை மலரைத் தனது இருப்பிடமாகக் கொண்ட பிரமனின் பெயரால் அழைக்கப் படும் பிரமபுரம் என்றும், சிறந்த புகழுடன் விளங்கும் புறவம் என்றும், சண்பை என்றும், காழி என்றும், கொச்சை வயம் என்றும், சோலைகள் இணைந்த கழுமலம் என்றும், தூய்மை நிறைந்த தோணிபுரம் என்றும், பூந்தராய் என்றும், சிலம்பன் சேர்ந்த சிரபுரம் என்றும், இருள் படரும் வண்ணம் அடர்ந்து காணப்படும் சோலைகள் நிறைந்த வேணுபுரம் என்றும், மதில்கள் உடைய வெங்குரு என்றும் அழைக்கப்படும் ஊர், வலிமை வாய்ந்த அரக்கன் இராவணனின் திண்மையான இருபது தோள்களும் பத்து தலைகளும் ஒன்று சேர்ந்து வலிமை இழக்கும் வண்ணம் கயிலை மலையின் கீழே அழுத்திய எமது பெருமானாகிய சிவபெருமானின் ஊர்.

பாடல் 10:

எம்மான் சேர் வெங்குருச் சீர்ச் சிலம்பனூர் கழுமலம் நல் புகலி
என்றும்

பொய்ம் மாண்பிலோர் புறவம் கொச்சை புரந்தரனூர் நல்தோணிபுரம் போர்க்

கைம்மாவை உரி செய்தோன் காழி அயனூர் தராய் சண்பைகாரின்

மெய்ம் மால் பூமகன் உணரா வகை தழலாய் விளங்கிய எம்இறைவன் ஊரே

விளக்கம்:

மாண்பு=புகழ்; பொய்ம்மாண்பு=நிலையற்ற புகழ்; கைம்மா=கை உடைய விலங்கு, யானை; கார்=மேகம்; காரின் மெய்ம் மால்=மேகம் போன்ற மேனியை உடைய திருமால்; சிலம்பனூர்= சிரபுரம் (விளக்கம் சென்ற பாடலில் அளிக்கப்பட்டது); புரந்தரன்=இந்திரன்; அயனூர்=பிரமபுரம்;

பொழிப்புரை:

எமது பெருமான் சென்று சேர்ந்து உறையும் வெங்குரு என்றும், சிறப்புகள் வாய்ந்த சிரபுரம் என்றும், கழுமலம் என்றும், அடியார்களுக்கு பல நன்மைகள் பயக்கும் புகலி என்றும், நிலையான புகழினை உடைய சான்றோர்கள் போற்றும் புறவம் என்றும், கொச்சைவயம் என்றும், தேவேந்திரனின் ஊர் என்று சொல்லப்படும் வேணுபுரம் என்றும், நன்மைகள் நல்கும் தோணிபுரம் என்றும், போர்க்குணம் கொண்டதும் துதிக்கை உடையதும் ஆகிய யானையினை அடக்கி அதன் தோலை போர்வையாக போர்த்துக் கொண்ட இறைவனது ஊராகிய காழி என்றும், பிரமபுரம் என்றும், பூந்தராய் என்றும், சண்பை என்றும் அழைக்கப்படும் சீர்காழி நகரம், கருமேகத்தைப் போன்று கருமையான மேனி கொண்ட திருமாலும் பூமகன் என்று அழைக்கப்படும் பிரமனும் காண்பதற்கு அரியவனாக நெடிய தீப்பிழம்பாக நின்ற எமது இறைவனாகிய சிவபெருமானின் ஊராகும்

பாடல் 11

இறைவன் அமர் சண்பை எழில் புறவம் அயனூர் இமையோர்க்குஅதிபன் சேரூர்

குறைவில் புகழ்ப் புகலி வெங்குருத் தோணிபுரம் குணமார் பூந்தராய்நீர்ச்

சிறை மலி நல் சிரபுரம் சீர்க்காழி வளர் கொச்சை கழுமலம் தேசுஇன்றிப்

பறிதலையோடு அமண் கையர் சாக்கியர்கள் பரிசு அறியாஅம்மானூரே

விளக்கம்:

அம்மான்=தாய் போன்று கருணை உள்ளம் கொண்டவன்; இமையோர்க்கு அதிபன், தேவர்களின் தலைவன், இந்திரன்; சிறை=அணை; தேசு=ஒளி; கையர்=கீழ்த்தன்மை உடைய சமணர்கள்; அணிகள் மிகுந்து காணப்படும் ஆறு என்று குறிப்பிட்டு, காவிரி நதியின் நீர் வளத்தினை சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

இறைவனாகிய சிவபெருமான் அமர்ந்து உறையும் சண்பை என்றும், அழகு வாய்ந்த புறவம் என்றும், பிரமனூர் என்றும், தேவர்களின் தலைவனாகிய இந்திரன் வந்து சேர்ந்து இறைவனை வழிபட்ட வேணுபுரம் என்றும், குறைவற்ற புகழினை உடைய புகலி என்றும், வெங்குரு என்றும், தோணிபுரம் என்றும், நற்குணங்கள் நிறைந்த மாந்தர்கள் உறையும் பூந்தராய் என்றும், ஆற்றில் அணைகள் மிகுந்த நல்ல சிரபுரம் என்றும், சிறப்புகள் வாய்ந்தகாழி என்றும், என்றும் வளரும் புகழினை உடைய கொச்சைவயம் என்றும், கழுமலம் என்றும் அழைக்கப்படும் சீர்காழி ஊரானது, உடலில் ஒளியேதும் இன்றி முடிகள் பறிக்கப்பட்டு மொட்டைத் தலையோடு திரியும் கீழ்த்தன்மை வாய்ந்த சமணர்களும் புத்தர்களும் தனது (சிவபெருமானது) தன்மையை அறியமுடியாமல் இருக்கும் சிவபெருமான் உறையும் ஊராகும்.

பாடல் 12

அம்மான் சேர் கழுமலம் மாச் சிரபுரம் வெங்குருக் கொச்சைபுறவம் அஞ்சீர்

மெய்ம்மானத்து ஒண் புகலி மிகு காழி தோணிபுரம் தேவர்கோனூர்

அம்மான் மன்னுயர் சண்பை தராய் அயனூர் வழிமுடக்கு மாவின்பாச்சல்

தம்மான் என்று ஒன்றிய ஞான சம்பந்தன் தமிழ் கற்போர் தக்கோர்"தாமே

விளக்கம்:

பெருமான் உறையும் தலங்களின் பெயர்களும் பெருமானின் திருநாமங்கள் போன்று புனிதமான மந்திரங்கள் என்று கருதப்படுவதால், தலத்தின் பெயர்களை பலமுறை திரும்பத் திரும்பச் சொல்வது மந்திர ஜெபம் செய்வதற்கு ஒப்பாகும். அதனால் தான் திருஞான சம்பந்தரும் இந்த பதிகத்தை ஓதுவோர் தவம் செய்தவராவர் என்று பதிகத்தின் கடைக்காப்புப் பாடலில் குறிப்பால் உணர்த்துகின்றார். இறைவனைக் குறித்து தவம் செய்வோர் தாமே அவனது அருளினை பெறுவதற்கு தகுதியானவர்கள். மா=பெருமை, செல்வம்; அஞ்சீர்=அம்+சீர், அழகும் சிறப்பும் வாய்ந்த; மானம்= பெருமை; மெய்ம்மானம்=உண்மையான பெருமை; முடக்கு=மாறி மாறிப் பாயும்;

பொழிப்புரை:

தாய் போன்று கருணை உள்ளத்துடன் அருள் புரியும் தலைவனாகிய பெருமான் சென்று சேர்ந்து உறையும் கழுமலம் என்றும், செல்வமும் பெருமையும் உடைய சிரபுரம் என்றும், வெங்குரு என்றும், கொச்சைவயம் என்றும், அழகும் சிறப்பும் சேர்ந்ததால் நிலையான பெருமையுடன் மிளிரும் புகலி என்றும், சிறப்புகள் மிகுந்த காழி என்றும், தோணிபுரம் என்றும், தேவர்களின் தலைவனாகிய இந்திரன் வழிபட்ட வேணுபுரம் என்றும், இறைவனாகிய பெருமான் நிலையாக தங்குவதால் உயர்ந்த புகழினை உடைய சண்பை என்றும், பூந்தராய் என்றும், பிரமபுரம் என்றும், சீர்காழி தலத்தின் பன்னிரண்டு பெயர்களையும் குறிப்பிட்டு, மாறி மாறி குதித்து பாய்ந்து ஓடும் பசுவின் பாய்ச்சல் வழி போன்ற அமைப்பினில், கோமூத்திரி அமைப்பில் அந்தாதியாக, தனது இறைவன் சிவபெருமான் என்ற உணர்வுடன் ஒன்றி ஞானசம்பந்தன் பாடிய இந்த தமிழ் மாலையை ஓதும் அடியார்கள், புகழுக்கும் இறைவனின் கருணைக்கும் தகுந்தவர்களாக விளங்குவார்கள். 

முடிவுரை:

சீர்காழி நகரின் பன்னிரண்டு பெயர்களையே திரும்ப திரும்ப உணர்த்தும் பாடல்கள் கொண்ட பதிகமாக இருப்பினும், பெருமானின் சிறப்பையும், தல வரலாற்றையும், தலத்தின் சிறப்பையும் இடையிடையே புகுத்தி அழகிய தமிழில், கோமூத்திரி அந்தாதி எனப்படும் புதிய வகையில், ஞானசம்பந்தர் அமைத்துள்ள இந்த பதிகத்தினை, மந்திரமாக பாவித்து ஓதி இறைவனின் கருணைக்கு தகுதி படைத்தவர்களாக நாமும் மாறுவோமாக.🙏🙇‍♂️🙏

இப்பதிவிற்கு உதவிய நூல்கள்:

1. நால்வர் வரலாறு : பேராசிரியர் கா.சுப்ரமணியம் பிள்ளை.
2. பன்னிரு திருமுறைகள்: பேராசிரியர் வ.த.இராமசுப்பிரமணியம்.
3. வித்வான் முத்து. ச. மாணிக்கவாசக முதலியார், வி.ச.குருசாமி தேசிகன்.
http://www.thevaaram.org/thirumurai_1/songview.php?Song_idField=20740&limitPerPage=1&padhi=074&sortBy=&sortOrder=DESC&startLimit=0&thiru=2
4. தமிழ் விந்தை கோமுத்திரி: சா.நாகராஜன்.
5. என். வெங்கடேஸ்வரன்
(damalvenkateswaran@gmail.com
https://vaaramorupathigam.wordpress.com/vaaramorupathigam/2nd-thirumurai/2-074-poomaganoor-puththelukku/)
6.http://www.tamilvu.org/courses/diploma/a021/a0214/html/a02146l3.htm
7..  மேலும், ஒரே கருத்துக்களை கொண்டு
பல்வேறு வலைதளங்களில் பல்வேறு ஆசிரியர்கள் தொகுத்த இலக்கிய கட்டுரைகளில் காணப்பெற்றவைகளின் சுருக்கம் இப்பதிவு.

8. இது ஒரு அறிமுகப் பதிவே.  மூலநூல்களையும், கட்டுரைகளையும் கற்றுணர்ந்து கொள்வதும் அவசியம்.

நன்றி.

என்றும் அன்புடன்

சுப்ராம் அருணாசலம்

காரைக்கால்.

🔱🕉️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🙇‍♂️🙏🕉️🔱