Wednesday, December 2, 2020

அனுபவக் கருவியே மனம்

அனுபவக் கருவியே மனம்:

வாழ்வியல் அனுபவங்களை ஐம்புலன்களால் பெற்றுணர்ந்து, அதை வெளிப்படுத்துவதும், அதன்படி செயல்பட செய்யவும் உதவும் கருவியே மனம். 

வடிவமில்லாத இயந்திரம்.

இன்பம், துன்பம், நல்லவை, அல்லவை, எல்லாம் மனம் உணருவதே.
எண்ணங்கள் தருவது மனம். 

உணருவதும், உணரச் செய்வதும்,
சிந்திக்கவும், சிந்திக்கச் செய்வதும், செயல்படவும், செயல்பட செய்யவும், செய்யும் மனம்.

மன எண்ணங்களை செயல்படுத்துதலே வினை;
அதன் விளைவின் முடிவில் பெறுவதே அறிவு.

எல்லாம் செய்யும் மனமே.
இதைத் தருவது சிவமே.

சிவமே மனம்; மனமே சிவம் என்றுணர்வோம்.

No comments:

Post a Comment

KERALAYATRA2024பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள்பதிவு - 15.#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️11.08.2024 /குலசேகரபுரம்.18திருகுலசேகரபுரம் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவில்,

#KERALAYATRA2024 பகுதி - 3 - திருவஞ்சைக்களம் அருகில் உள்ள ஆலயங்கள் பதிவு - 15. #பயணஅனுபவக்குறிப்புகள்🕊️ 11.08.2024 / குலசேகரபுரம். 18 திருக...