Wednesday, December 2, 2020

அனுபவக் கருவியே மனம்

அனுபவக் கருவியே மனம்:

வாழ்வியல் அனுபவங்களை ஐம்புலன்களால் பெற்றுணர்ந்து, அதை வெளிப்படுத்துவதும், அதன்படி செயல்பட செய்யவும் உதவும் கருவியே மனம். 

வடிவமில்லாத இயந்திரம்.

இன்பம், துன்பம், நல்லவை, அல்லவை, எல்லாம் மனம் உணருவதே.
எண்ணங்கள் தருவது மனம். 

உணருவதும், உணரச் செய்வதும்,
சிந்திக்கவும், சிந்திக்கச் செய்வதும், செயல்படவும், செயல்பட செய்யவும், செய்யும் மனம்.

மன எண்ணங்களை செயல்படுத்துதலே வினை;
அதன் விளைவின் முடிவில் பெறுவதே அறிவு.

எல்லாம் செய்யும் மனமே.
இதைத் தருவது சிவமே.

சிவமே மனம்; மனமே சிவம் என்றுணர்வோம்.

No comments:

Post a Comment

வேலங்குடி பெருமாள் ஆலயம் 28.9.25

வேலங்குடி பெருமாள் ஆலயம் #வேலங்குடிபெருமாள் ஆலயம் 🛕  பெருமாள் ஆலயமும் அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரம், பிரகாரம்,  உள்ளே பெரிய மண்டபம். கருடன...