Thursday, October 1, 2020

#திருமுறைகளில்தமிழமுதம் #சைவத்திருமுறைகள் #திருஞானசம்பந்தர்அருட்பதிகங்கள் பகுதி - இரண்டு

#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️✡️❄️⚛️🙆🏻‍♂️🙏🏻
#சம்பந்தர்அமுதம்:
பகுதி - இரண்டு.
🙏🎪🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🎪🙏
             🙆ஆன்மீகமே தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                       
                     🙏🙇‍♂️நன்றி🙇‍♀️🙏🏻
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐

  1.          #திருஞானசம்பந்தர் :

🌀🌟கி.பி.6 ம் நூற்றாண்டு இறுதியில் சீர்காழிப் பதியில்  கருவிலே திருவுடையவராய் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் திருமகனாய் திருஞானசம்பந்தர் அவதரித்தார்.

💥மூன்று வயதில் இறையருள் பெற்று ஞானப்பால் உண்டவர். பல அருள் காரியங்கள் செய்தவர்.
இதனால், 
'சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானமும்;
'பவமதனை யற மாற்றும் பாங்கினில் ஓங்கிய ஞானமும்; '
'உணர்வரிய மெய்ஞ்ஞானமும் ஒருங்குணர்ந்தனர்.

✳️திருப்புகழ் என்றும்அருள் நூல் தந்த அருணகிரியார், அருட்பிரகாச வள்ளலார் முதலிய ஞானிகள், நம் அருட் செல்வர் ஞானசம்பந்தரை, முருகனின் அவதாரமாய்  போற்றி வணங்கி பாடல்களை அருளிச் செய்துள்ளனர்.

📑தம்மை தமிழ் விரகன், தமிழ் ஞானசம்பந்தன் என்றும் தன்னைக் கூறிக் கொண்ட, சிவனருட் பிள்ளையார்தாம் இயற்றிய பாடல்களில் தமிழின் ஒப்பற்ற உயர்வை, இலக்கண, இலக்கிய, இசை நுணுக்க சிறப்புகளை, தமிழனின் கலாச்சார செறுக்கை, பண்பாடுகளின் சிறப்பை வெளிப்படுத்தி, இழந்த தமிழரின் பக்தியுடன் கூடிய நல்ல பண்பாட்டை, இறையருள் நம்பிக்கைக் கொண்டு மீட்டு வளர்த்தார், என்றால் அது மிகையாகாது.

✳️இனிமையான இசை கலந்து அற்புத பாடல்களை பதிகங்களில் அமைத்துக் கொடுத்த இவரை இசைத்தமிழ் இறைவர் என்று போற்றுகிறார்கள்;

அவ்வழி நின்று நாமும் போற்றுவோமே
🙏🏻🕉️🙇‍♀️🙏🏻🙇‍♂️🙏🏽🙆‍♂️🙏🏼🙆‍♀️🙏🏻🙇‍♀️🙏🏻🙇‍♂️🕉️🙏🏾

      2.         #அருட்பதிகங்கள்:

📕இலக்கிய வகைகளில் :... 8, 10, 100 என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் பாடல்கள் அமைப்பதை பதிகம் என்பர்.

📝பதிகம் என்ற அமைப்பை முதன்முதலில் உருவாக்கியவர் காரைக்காலம்மையார். (திருவலாங்காட்டு மூத்த பதிகம்).

📃யாப்பு = அந்தாதி, தாண்டகம், வெண்பா, அகவல், விருத்தம், இரட்டைமணிமாலை, மும்மணிக்கோவை இன்னும் பிற.
இதில் 10, 11, 12 பாடல்கள் அமையுமாறு வைத்து பதிகமுறையில் பாடல்கள் அருளிச் செய்தவர்.

"மூவரருளிய தேவாரக் காலம் பிறகே சிற்றிலக்கியங்கள் எழுந்தன" - பேராசிரியர் மா.ச. அறிவுடை நம்பி.

⚡மேலும்  பதிகத்தின் மூலம் தமிழரின் பண்பாடு, கலாச்சாரம், நல்லொழுக்கம், சைவ நம்பிக்கை வளர்த்து, போலி சமயக் கொள்கை செருக்கழித்து, தமிழர் வாழ்வில் பல அற்புதங்களையும் செய்து இறைவரின் நற் கருணையையும் அருட்திறத்தையும் நிறுபித்துக்காட்டினர்.

🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️✡️❄️⚛️🙆🏻‍♂️🙏🏻

3.      🏵️#சம்பந்தர்பதிகப்பேறுகள்:

🔰சம்பந்தர் பதிகங்கள் மூன்று வகையான வழிபாட்டிணை வலியுறுத்துகிறது.
🔯குரு, ⚛️லிங்க, 🕉️சங்கம் (அடியார் திருக்கூட்டம்) இவை முதற் கொண்டு
⏺️மூர்த்தி,
⏺️தலம்,
⏺️தீர்த்தம்
ஆகியனவற்றை உணர்த்துகின்றன.
🔹தலவாசம் செய்தல்,
🔹தலத்தை வலம் செய்தல்,
🔹தீர்த்தம் ஆடுதல்,
🔹மூர்த்தியை வணங்குதல்
என அடியவர்களின் வழிபடும் நிலையை நன்கு உபேதசம் செய்வதாக அமைத்துள்ளார்.

📓திருமுறைகளில் திருஞானசம்பந்தர் அருளியத் திருப்பாடல்களை முதல் மூன்று திருமுறைகளாக அமைத்தனர். இதைத் திருக்கடைக் காப்பு என்று கூறிப் போற்றப்பட்டு  வருகிறது.

🎖️திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய பாடல்களில் தற்காலத்தில் நமக்குக் கிடைக்கப் பெற்றது 4146 பாடல்கள் மட்டுமே. இவை 226 தலங்கள் பற்றி 386 பதிகங்களில், 23 பண்களில் அமையப்பெற்ற 4146 பாடல்கள் மட்டுமே

⚛️இவை மொத்தம் 386 பதிகங்களாகும்.
🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️✡️❄️⚛️🙆🏻‍♂️🙏🏻
    4.          🔰#பதிகப்பலன்கள் :

1. அருட் சுரங்கம்,
2. இம்மை நல்வாழ்வு,
3. மறுமை வாணாள்வது
4. சிவ லோகம் சார்வது,
5. திருவடிப்பேறு பெறுவது
6. நோய் நீக்கம்
7. கல்வி
8. செல்வம்
9. ஆயுள்
இவை எல்லாம் நாம் பெற்றுவரும் பலன்களாகும்.

இது மற்றுமின்றி,
சிவானந்த அனுபவம்
சித்தாந்தத் தத்துவம்
தமிழ் இலக்கிய, இசை, சொல் வளம்
கற்றுணரலாம்.
💥🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆🎆💥

💥இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

🙇‍♀️🙆‍♀️

இதுபற்றி மேலும் சிந்திப்போம்

🙇‍♂️🙆‍♂️ 
                           🙏நன்றி🙏🏻  
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்🙏🏻
சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽🔱🎪🙏🏾
பதிவு : ஒன்று.
https://m.facebook.com/story.php?story_fbid=4497008673707688&id=100001957991710
🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️✡️❄️⚛️🙆🏻‍♂️🙏🏻

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...