Thursday, October 1, 2020

சிந்தனை வளம் - இறை உணர்வு

சிந்தனைவளம்:  இறை உணர்வு 
  🙏🔯☸️🕉️🙇‍♀️🙆‍♀️🙇‍♂️🙆‍♂️🕉️☸️🔯🙏

'என்செயலே என்றென்றி யற்றுவதும் என் செயலும்

உன்செயலே என்றென்று உணர்த்துவதும் - நின் செயல்

தாகுமே என்ன அடியேற் குணர்த்தலும் நீ

ஆகுமே சொக்கநாதா.'

- 76. சொக்கநாத வெண்பா.
ஸ்ரீ குருஞானசம்பந்தர் அருளியது.

🛐🙏🔯☸️🕉️🙇‍♀️🙆‍♀️🙇‍♂️🙆‍♂️🕉️☸️🔯🙏🛐

பொருள் :
'சொக்கநாதப் பெருமானே, எதைச் செய்தாலும் அதை நான் என் செயலாகவே மயங்கிச் செய்தலும் அவ்வாறின்றி, "எல்லாம் உன் செயலே" என நான் உணர்வது மட்டுமின்றிப் பிறர்க்கும் உணர்த்துவதும் உனது அருளால் ஆவனவே என்பதை அடியேன் உணர்கின்றேன். அவ்வுணர்வைத் தருபவனும் நீயேயன்றோ.'

- மகாவித்வான்
அருணை வடிவேல் முதலியார்.

🛐🙏🔯☸️🕉️🙇‍♀️🙆‍♀️🙇‍♂️🙆‍♂️🕉️☸️🔯🙏🛐
நன்றியுடன் பகிர்வு :
என்றும் அன்புடன்

சுப்ராம் அருணாசலம்
காரைக்கால்.
🛐🙏🔯☸️🕉️🙇‍♀️🙆‍♀️🙇‍♂️🙆‍♂️🕉️☸️🔯🙏

No comments:

Post a Comment

வேலங்குடி பெருமாள் ஆலயம் 28.9.25

வேலங்குடி பெருமாள் ஆலயம் #வேலங்குடிபெருமாள் ஆலயம் 🛕  பெருமாள் ஆலயமும் அழகுற அமைந்துள்ளது. ராஜகோபுரம், பிரகாரம்,  உள்ளே பெரிய மண்டபம். கருடன...