Thursday, October 22, 2020

#திருமுறைகளில்தமிழமுதம் வினாஉரை பதிகங்கள்

#திருமுறைகளில்தமிழமுதம்:
#சைவத்திருமுறைகள்:
🙏🏻🙆‍♀️⚛️❄️✡️🙇‍♂️🔱🕉️🔱🙇‍♀️⚛️🙆🏻‍♂️🙏🏻
#சம்பந்தர்அமுதம்:
💥பதிவு : 5.2.
4.வினாஉரை பதிகங்கள் : 
🙏🎪🙇‍♂️அன்பு வேண்டுகோள்:🙇‍♀️🎪🙏
             🙆ஆன்மீகமே தமிழ்🙆🏼‍♂️
👣1. பக்தியும், தமிழில் ஆர்வம் உள்ளவர்கள் தொடரவும்.

🎎2.இப்பதிவின் நோக்கம்: பழந்தமிழ் பக்தி இலக்கியப் பெருமையையும் தமிழின் சிறப்பையும் ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்பதே.                        
                    🙏🙇‍♂️ன்றி🙇‍♀️🙏🏻 
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
பதிவு: 5.2.1
4.வினாஉரை பதிகங்கள் : 
திருஞானசம்பந்தரின் அற்புத பதிக அமைப்பை ப்பற்றி தொடர்ந்து சிந்திப்போம்.
பாடல் குறிப்புக்களையும், சிறப்புகளையும் மிகச் சுருக்கமாகவே தந்துள்ளேன். ஒவ்வொரு பதிகமும் தனித்தனியாக  உணர்ந்து சிந்தித்தால் இறை பேராற்றலும், அருளும் உண்மை பொருளும் அவரவர் திறனறிவுக்கு நிச்சயம் கிட்டும். எனவே, இப்பதிவு ஒரு அறிமுகமே. பலன் பெற அன்புடன் வேண்டுகிறேன்.

பொருள் :

வினவுதல் வழி உரைத்தல்:
பாட்டுடைத் தலைவன் அருட்செயல்களை  பல்வேறு
கோணத்தில், கிண்டல், கேலி செய்வது போன்றும், எளிமை செய்தும் தலைவனின் ஆற்றல்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிட்டு அருளப்பட்ட பதிகங்கள்.

இந்த பதிவு : முதல் திருமுறையில் 
வரும் சில பாடல்கள் மட்டும்.
🙏
திருப்பதிகம்: 
முதலாம் திருமுறை:
பதிகம் : 4.
தலம்: - திருபுகலியும்திருவீழிமிழலையும்:
பண் : நட்டபாடை
பாடல் முதலடி:  
'மைம்மரு பூங்குழல்'.

பதிக சிறப்பு:
1. ஒவ்வொரு பாடலிலும்,
'புகலி நிலாவிய புண்ணியனே' என்று சிறப்பித்தும்,
'என் கொல் சொல்லாய்.'
என்று கேள்வி எழுப்பியும் அமைத்துள்ளார்.
🌹
2. பாடல்: 7 ல்
'காமன் எரிப்பிழம்பு ஆக நோக்கிக்
காம்பன தோளியோடும் கலந்து

பூமரு நான்முகன் போல்வார் ஏத்தப்
புகலி நிலாவிய புண்ணியனே

ஈம வனத்து எரியாட்டு உகந்தி
எம்பெருமான் இது என் கொல்சொல்லாய்

வீமரு தண்பொழில்சூழ் மிழலை
விண்ணிழி கோயில் விரும்பியதே.'

பொருள் சிறப்பு:
உலகத்தோர் திருமணத்திற்கும், இறைவன் இறைவி திருமணத்திற்கும் உள்ள வேறுபாடு.
காமன் இன்றி சிவசக்தி திருமணம் நடைபெற்றது சுட்டப்படுகிறது.

பூமரு = மலர்மேல் உறைபவன்
ஈமவனம் = இடுகாடு,
வீமரு = மலர்கள் சூழ்ந்த.
11வது பாடல் திருக்கடைக்காப்பில்:

விண்ணிழி கோயில் விரும்பி மேவும் 
வித்தகம் என் கொல் இது என்று சொல்லிப்

புண்ணிய ணைப்புகலிந்நிலாவு
பூங்கொடி யோடு இருந்தானைப் போற்றி

நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி
நான் மறைஞானசம் பந்தன் சொன்ன

பண்ணியல் பாடல்வல்லார்கள் இந்தப்
பாரொடு விண்பரி பாலகரே.

பொருள் சிறப்பு:
இறுதி வரியில், 
'வையத்துள் வாழ்வாங்குவாழ்பவர்கள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' என்ற குறள் தெளிவு.
🌷

2.
முதல் திருமுறை: பதிகம்: 1.6.
தலம்: - திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்
பண் : நட்டபாடை
பாடல் முதலடி:   'அங்கமும் வேதமும்'

பாடலில் வரும்  சிறப்பு: 
1 ஒவ்வொரு பாடலிலும் 'மைந்த சொல்லாய்'  என்றமைந்துள்ளது.
2. திருமருகலில் இருந்த சம்பந்தரைச் சந்தித்த சிறு தொண்டர் தம்  பதிக்கு வருமாறு கோர, சம்பந்தருக்கு செங்காட்டங்குடி கணபதீஸ்வரர் காட்சி தந்த போது அருளிய பதிகம்.
🌺
3.
முதல் திருமுறை - பதிகம்:1.07.
தலம் : திருநள்ளாறும், திருவாலவாயும்
பண் : நட்டபாடை
பாடல் முதலடி : 'பாடக மெல்லடி'

பதிக சிறப்பு
மதுரையில் அனல் வாதத்தில் 'போகமார்த்த' என்னும் திருப்பதிகம் பெற்ற திருத்தலமாகிய திருநள்ளாற்றில் வீற்றிருக்கும் ஈசனை, ஆலவாயில் அமர்ந்தததை வினவும் வினா உரையாக உடையது.

'...நள்ளாறுடைய நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்'
என்றும்,
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே
என்றும்  ஒவ்வொரு பாடலிலும் அமைத்துள்ளார்.
10வது பாடலில் 
'தடுக்குடைக் கையரும் சாக்கியரும்
சாதியில் நீங்கிய அத்  தவத்தர்
நடுக்குற நின்ற நள்ளாறுடைய நம்பெருமான் இது என் கொல்சொல்லாய்
எடுக்கும் விழவும் நன்னாள் விழவும் இரும்பலி இன்பனோடு எத்திசையும்
அடுக்கும் பெருமை சேர் மாடக்கூடல்
ஆலவாயின் கண் அமர்ந்தவாறே'

பொருள் சிறப்பு:
அடியவர்கள் வேண்டுதலின் பொருட்டும், மற்றும் சுபகாரிய களை மேற்கொள்ளவும் 'எடுக்கும் விழவு' எனவும், இறைவன் திருநட்சத்திரங்களில், நாள்களில் 
(திருவாதிரை, பூசம் மற்றும்  பிரதோஷம் போன்ற நாட்கள்) நடத்தும் திருவிழாக்கள் மக்களைக் காத்தலையொட்டி நடைபெறுவதால் . இரும்பலி இன்பினோடு' எனப்பட்டது. காத்தல் செய்யும் திருவிழாக்கள் இன்பம் தரவல்லது என்பதாம்.

(பொருள் : சாதியில் நீங்கிய = பாரம்பரியத்திலிருந்து மாறிய
நடுக்குற = அதிர்ச்சியுற, 
இரும்பலி இன்பினோடு = இன்பத்தின் அளவு மிகுந்த இன்பம் இரு = பெரிய  பலி = காக்கும் தன்மை   அடுக்கும் பெருமை = பெருமைகளின் திரட்சி)

🙏 இது ஒரு அறிமுக பதிவே மேற்படி மூல நூல்களையும் , கட்டுரைகளையும் தயவு செய்து மேலும் கற்றறிந்து தமிழின் சுவையை பக்தியோடு முழுமையாக உணர்வோம்.

☸️இவைகளில் சில பதிகங்களின் சிறப்பு பற்றித் தனித்தனியாக சிலக்குறிப்புகளுடனும், பொருள் விளக்கமுடனும் அடியேன் சிந்தைக்கு எட்டியவரை பல்வேறு அறிஞர்கள், சான்றோர்கள் நூல்களிலிருந்து தொகுத்து சில துளிகளாக அவ்வப்போது வழங்கப்படுகிறது. 
பருக விரும்புவோர் ,பொறுமையுடன் சென்று முன்பதிவுகளைப் பார்க்கவும்.

🔯படித்துப் பலன் பெறுங்கள்.
 தமிழின் வளத்தை, சிறப்பை, பக்திப் பெருமையை உணருங்கள்; உலகுக்கு உணர்த்துங்கள்.

 தொடர்ந்து சிந்திப்போம்..... ......

🙏நன்றி🙇‍♂️     
🛐🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏾🛐
✍️எண்ணமும் ஆக்கமும்:

என்றும் அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்
காரைக்கால்🙇‍♂️🙏🙇‍♂️
     🙏🔱🎪🙏🏻🔱🎪🙏🏼🔱🎪🙏🏽

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...