Wednesday, December 23, 2020

கைலாச பயணம் - 2018

#சென்றுவந்தஆண்மீகதலம்:

மனம் விரும்பும் பயணப்பதிவுகள் 
எழுத எழுத அதுவும் ஆண்மீக பயணங்கள் அலுக்காது.

வாழ்க்கையில் மிகப் பெரும்பாலும் எல்லாமே ஏராளமான ஆண்மீக பயணங்கள்தான்.
அவன் அருளாளே அவன் தான் வணங்கி...

பாடல்பெற்ற தலங்கள் 276/276 ம் திவ்யதேசங்கள் 106/108 ம்  ஏராளமான
வைப்புத் தலங்கள், அபிமான சிவன் /பெருமாள்  தலங்கள், இன்னும் அடிக்கடி செல்லும் கிராம சிவன் | பெருமாள் ஆலயங்கள், ஆலய விழாக்கள், எல்லாம் ஒவ்வொரு முறையும், பல முறையும் தரிசனம் செய்யும் பாக்கியம் அவன் அருளாளே கிடைத்தது:

கிடைத்தும் வருகிறது. தலங்கள் எல்லாம் தரிசனம் பெற்றிருந்தும்
கைலாய தரிசனம் சென்றது வாழ்வின் பெரும் பாக்கியமே.
அதுபற்றிய மிகச்சுருக்கப் பதிவது:

கைலாசநாதர் சுந்தராம்பாள் அருளால் கைலாச தரிசன பயணம் இனிதாக நிறைவு பெற்றது.  

20.06. 2018. அன்று விமானம் மூலம் சென்னையிலிருந்து புறப்பட்டு லக்னோ சென்று கார் மூலம் நேப்பாள் கஞ்ச் சென்றடைந்து ஹோட்டல் சித்தார்த் தில் தங்கினோம்.

21. 06. 18. அன்று சிறிய ரக விமnனம் மூலம் சிமிகோட் சென்று  ஹேn ட்டல் மானசரோவரில் தங்கினோம். 

 22.06.18 அன்று ஹில்சா என்ற இடத்திற்கு ஹெலிகாப்டரில் சென்று பின் நேப்பாள் - திபெத் (சீனா)   நட்பு பாலம் தான்டி  பஸ் மூலம் . சீனா Immigration Office checking முடித்து தக்கல் கோட் சென்று  ஹேnட்டலில் தங்கினோம்.

23.06.2018. அன்று முழுதும் தக்கல் கோட்டில்  தங்கி கிரிவலம் செல்ல வேண்டிய பொருள்களை வாங்கிக் கொண்டோம். 

24.06.2018 அன்று கிழக்கு மற்றும்  தென்  முக தரிசனம் பெற்று மாண சரோவர் ஏரி நீரில் குளித்து விட்டு  பஸ்ஸில் 110 கி.மீ மாசை ரோவர் வலம் வந்து  அருகில் உள்ள சியு கொம்பு என்ற இடத்தில் இரவு தங்கினோம். (-10 டிகிரி).

25.06.2018 காலையில் மானசரோவரில்     ஹேnமம் (ஹோம தீப ஆராதணயில் நான் எடுத்தப் படத்தில் நடராஜர் தரிசனம் வீட்டில் வந்து பார்த்த போது தெரிந்தது) செய்து பூசை பின் அங்கிருந்து புறப்பட்டு சென்று கிழக்கு, தெற்கு முகதரிசனம் பெற்று தர்ச்சன் சென்றோம். 

அதிலிருந்து எமதுவார் என்ற இடம் சென்றடைந்தோம். கைலாய மலைக்கு தென்புறம் கிரிவலப் பாதை ஆரம்ப இடம். இங்கு குதிரை வாடகைக்கு பெற வேண்டும்.  குதிரை வாடகை தனி. நம்மிடம் உள்ள சிறிய ஷோல்டர் Bag எடுத்து வருவதற்கு தனி பணம். நம்மால் எதுவும் எடுத்து செல்ல முடியவில்லை.
உண்மையில் என் உடைகளைத் தாண்டி 1 லிட்டர் FLASK வெந்நீர் மற்றும் சிறிய பையில் ஒரு ஆப்பிள் சிறிய water Bottle. 2 சப்பாத்தி உணவுக்காக எடுத்துக் கொண்டேன். இதைக்கூட எடுத்துக் கொண்டு நடக்க சிரமமாக உள்ளது. காரணம் ஆக்ஸிஜன் குறைவதால் ஒரு 10 அடி தூரம் நடந்தவுடன் கழுத்தில் இருக்கும் FLASK ஐ எப்படn கழட்டலாம் என்றிருந்தது. எங்கள் கிரிவலம் முழுதும் மிக மிக நல்ல வானிலை வெயில் தரும் அற்புத வானிலை. இதமான குளிர்.

நானும் சிலரும் நடந்து கிரிவலம் செல்ல முடிவெடுத்து,  எமதுவார் வணங்கி தென் முகதரிசனம் பெற்று பரிகிராமா துவங்கினோம். வழியில் மேற்கு முகதரிசனம் . 
அவ்விடத்தில் வரும் போது கையிலாய மலையின் முன்புறத்தில் உள்ள மலைகள் பல்வேறு காட்சியாய் அமைகிறது. யானை போன்றும், சப்தரிஷிகள் யோகத்தில் உள்ளது போன்றும் மலைகள் அமைப்பு அற்புதம் ஆச்சர்யமூட்டுகின்றன.

 சுந்தரப் பெருமானார் வெள்ளையானையில் கயிலாயம் சென்றது. ரிஷிகளைக் கண்டதாகக் சேக்கிழார் பெருமான் கூறியருளியிருக்கும் காட்சிபோல் இருந்தது. இதெல்லாம் மனபிரமை யில்லை உண்மையாகவே இருந்தது மிகவும் ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும் இன்றளவும் இருக்கிறது.

(என் அனுபவத்தில் கைலை மலை வலம் வரும் போது வடமேற்கு பகுதியில் யானை, ரிஷிகள் தவம் இருப்பது போன்ற மலையைப் பார்த்தது மிக அற்புதம்.  ஆந்திராவில் உள்ள தர்ஷாராம் என்ற ஆலய கருவறை சுற்றின் வடமேற்கு மேல்பகுதியில் யானை அமைப்பு ஒரு ஆச்சரிய ஒப்புமை இரண்டும் தரிசித்தவர்கள் உணருவார்கள்.

அடுத்து, அகத்தியர் மலை உச்சியில் இருந்து கிழக்கு புறம் பார்க்கும் போது, ரிஷிகள் தவம் செய்யும் கோலத்தில் அந்தப் பகுதியில் மலைகள் தெரியும்.
இதையும் ஒப்புமைக்காகத் நாங்கள் கண்டதைத் தெரிவிக்கின்றேன்.)

பிறகு சற்று திரும்பி மலை சுற்றும் பாதை சென்றால் வடக்கு முகதரிசனமும் கிடைக்கப்பெற்றது.  ஒரு புறம் கையிலாயம் அதைச் சுற்றி அடுக்கடுக்காக சிறிய சிறிய மலைகள் அதன் ஓரத்தில் பாதை அடுத்து நீர் ஓடை / ஆறு  போன்று அமைந்துள்ளது. 

 அன்று மnலை   தோராழிக் என்ற இடத்தை அடைந்தோம். அங்கு Hotel போன்று பெரிய கட்டிடம் உள்ளது. அங்கு சென்றதும் உணவு தருகிறார்கள். அங்கு சென்று தங்கினோம். மnலையில் வடக்கு முகதரிசனத்துடன் பிரதோஷ வழிபாடு செய்து இரவு தங்கினோம். இரவு கடுங் குளிர்.

26.06. 2018  அன்று விடியற்காலையில் பொன்னார் மேனியன் தரிசனம் கிடைக்கப்பெற்றேnம்.
தொடர் பரிகிராமா :

இதன் பின் வடக்கு முகத்திலிருந்து கிழக்கு புறம் கிரிவலம் செய்ய மிக மிகக் கடுமையான கட்டுப்பாடுகள். முதலில் எல்லோருக்கும் அனுமதி கிடையாது என்றனர்.
பரிகிராமn செய்ய வயது மற்றும் உடல் பரிசோதனை தனித்தனியாக செய்த பிறகுதான் மீதி - பரிகிராமா - மலை வலம் செல்ல அனுமதி அளிக்கிறார்கள். அனுமதிக்கப்படாதவர்கள்  அங்கிருந்து திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இந்த இடத்தில் ஒரு விஷயம் சொல்லத் தோன்றுகிறது. இந்தியாவிலிருந்து வரும் எல்லா Travels ம் நேப்பாள Travels Agent  இடம்  நம்மை ஒப்படைத்துவிடுகிறார்கள். அவர்கள் HILSA என்ற இடம் வரை தான். 
அதற்கு பிறகு திபெத் முழுதும் சீனா கட்டுப்பாடுகள் உள்ளதால் அவர்கள் சீனா ஷர்ப்பா Agent விடம் ஒப்படைத்து விடுகிறார்கள். நம் ஒவ்வொருவரையும் ஷர்ப்பா நம் Tour முழுதும் கவனித்துக்கொண்டே இருக்கிறார்.

 எங்கள் டூர் Leader மிகவும் நல்லவர் Nepal Agent மூலம் ஷர்ப்பாவிடம் program வகுத்து அதன்படி  ஷர்பாவிடம்பேசி  எங்கள் குழுவில் 6 பேருக்கு மட்டும் கிரிவலம் வர (அடியேன் உட்பட) அனுமதி கிடைத்தது. 

26.6.2018
காலையில் 2 கி.மீ நடந்து மலையில் சென்று குதிரை மூலம் 7 கிமீ மலையேற்றம் செய்து 19000 அடி உயர முள்ள டோல்மா பாஸ் என்ற இடத்தை அடைந்தோம். மிகவும் கஷ்ட்டமான பாதை அமைப்பு மலைப்பாதையில் குதிரை மீது பயணம் செல்வதே கஷ்ட்டமாக இருந்தது. அங்கிருந்து ஏழு 
கீ.மீ. மலை இறக்கம்.  நடைபயணம் தான். யாராக இருந்தாலும் நடந்துதான் செல்ல முடியும். குதிரையில் முழு பரிகிராமா செய்பவர்கள் கூட இந்த இடத்தில் நடந்து தான் செல்ல முடியும்.

பௌத்தர்கள் (அபபிரதட்சனமாக) எதிர்புறமாக கிரிவலம் வருகிறார்கள்.

 வழியில் பார்வதிகுளம் என்ற கெளரி குன்ட் மற்றும் ஐஸ் கட்டி பாதையில் இங்கு போர்டு எச்சரிக்கை உள்ளது. ஐஸ்கட்டி உருகி பாதை போல் இருக்கிறது. சில நேரங்களில் ஐஸ் பாதை உருகி விட்டால் நாம் நடக்க முடியாது. நாங்கள் அந்த பாதையில் நடந்தோம். 
பிறகு கடுமையான மலை இறக்கம் மன்சரிவு பாதையில் நடந்தும் கிரிவலப் பாதையின் கிழக்கு புறத்தை அடைந்தோம். வரும் வழியில் கைலாசபர்வதத்தின் கிழக்கு புறம் மிக நீண்ட ஆவுடை பாகம் கண்டோம்.

மேலும், சுமார் 2 கீ.மீ. தூரம் சென்று கிழக்கு புறத்தில் உள்ள பாதையிலேயே நடந்து சென்றோம். கார் செல்லும் பாதை அடைந்து கார் மூலம் ஜூதுல் பாக் என்ற இடத்தை  அடைந்து பின்  தnர்ச் சன் சென்று தங்குமிடத்தை அடைந்தோம்

 எங்களில் எனது உடன் நண்பர் திரு பரணிதரன் மற்றும் திருபாலாஜி இளைஞர்கள் மட்டுமே முழு                பரிகிராமத்தையும் நடைபயணமாகவே வலம் வந்தார்கள். இரவு தார்ச்சன்தங்கினோம்.

27.06.2018 காலை தார்ச்சனிலிருந்து புறப்பட்டு பஸ்ஸில் மானசரோவர் வழி சென்று மீண்டும் தக்கல் கோட் இமிகிரஷன் ஆபீஸ் சென்று China Entry pass மற்றும் Checking முடித்து  நேபாள் பnர்டர்  ஹில்சா   சென்று தங்கும் விடுதியில் தங்கினோம்.

இங்கு HILSA முதல் திபத் பகுதி எல்லாம் மனல் மலைகள் போன்று உள்ள அமைப்பு. எப்போது வேண்டுமானாலும் சருகிவிடும் அமைப்பு. HILSA: இங்கிருந்து தான் நேப்பாளத்தில் உள்ள
 SIMICOT என்ற இடத்திற்கு Helicopter மூலம் மட்டுமே வர போக முடியம் முக்கியமான Stratigic point . நேப்பாள் Chaina Border இடம் கொஞ்சம் கொஞ்சமாக Chaina இடம் பிடித்து வருவது தெரிகிறது. இங்கு இந்தியா நேப்பாள அரசுடன் கூட்டு நடவடிக்கை எடுத்து யாத்ரீகர்களுக்கு கட்டிடம் கட்டிக் கொடுக்கலாம். இன்னும் சில வருடங்களில் HILSA Chana வசம் போக வாய்ப்பிருக்கிறது.

28.06.2018 ஹில்சாவிலிருந்து சிமிகோட்  ஹெலி காப்டர் மூலம் தான் செல்ல முடியும். நாங்கள் HISA  சென்றபோது ஹெலிகாப்டர் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தினால் ஹில்சாவில்  நாள் தங்க வேண்டியதாயிற்று. 

28.06.2018  ஷில்சாவிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிமிகோட் அடைந்து ஹோட்டலில் தங்கினோம். கடுமையான வnணிலை மேக மூட்டத்தினnல் சிமி கோட்டில் தங்க வேண்டிய கட்டாயம். No     0ther transport except Mini Charted Flight.   

சிமிகோட் : சுமார் 500 பேர் தங்கலாம் ஆனால் கைலாஷ் போகிறவர்கள் திரும்பிவருபவர்கள் எல்லோருக்கும் இது Neck Point. சிறிய ஊர் ஆனால் அது ஒரு District head  என்கிறார்கள். இங்கிருந்து நேப்பாள் கஞ்ச் வரலாம் அல்லது காட்மண்ட் செல்லலாம். 
வானிலை காரணமாக சிமிகோட்டிலிருந்து எங்குமே போக முடியாத சூழல். Helicoptor Service மட்டும் Hilsa வுக்கு இருந்தது. இதனால் கைலாஷ் சென்றவர்கள்  Hilsa வழியாக  வர வர சிமிகோட் சிறிய மலை நகரம் என்பதால் தாங்கமுடியவில்லை.
 6 நn ட்கள் ஹோட்டலில் கட்டாயமாக தங்கியிருந்தோம்.  இந்த நாட்கள் மிகவும் பரபரப்பான செய்தியாகி இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலும் விவாதிக்கப்பட்டு அரசாங்கங்கள் உடனடி நடவடிக்கை எடுத்தார்கள்.

கைலாஷ் யாத்தரா சென்னையில் புறப்பட்டு பரிகிராமா முடித்து சிமி காட் வந்து தங்கும் வரையிலும் மற்றும் இறுதிவரையிலும் Super climate. No one got sick   All are good health. கிரிவலசுற்றுக்காக ஏரளமான எச்சரிக்கைகளில் மருந்து மாத்திரைகள், தின்பண்டங்கள் வாங்கியதை உபயோகப் படுத்தப்படவில்லை. திண்பண்டங்கள் கூட பிறகு எடுத்துக் கொண்டோம்.  இறையருள் இறுதிவரை அனைவருக்கும் துணையிருந்தது.

 3.07.2018 அன்று வானிலை சரியானதும் flight மூலம் நேபாள் கஞ்ச் அடைந்தோம். அங்கிருந்து லக்னோவிற்கு கார் மூலம் சென்று ஹேட்டலில் தங்கினோம்.

 வானிலையால் சிமிகாட்டில் 6 நாள் தங்க நேர்ந்தது. இது மிக இந்தியா, நேப்பாள் பகுதியில் மிகவும் பரபரப்பாகி, தமிழ்நாடு உட்பட, அனைத்து மாநிலம், மற்றும் மைய அரசும் நேபாள அரசும் மிகவும் அக்கரையும் ஆர்வமும் கொண்டு எங்களுக்கு உதவிட முழு ஆதரவு தந்தனர்.   லக்னோ வந்து அடைந்த போது அந்த ஹோட்டல் நிர்வாகத்தினர்கள் மிகுந்த உதவிகள் செய்தார்கள். மறக்க முடியாத அனுபவம்.

 04.07.2018 அன்று    மnலை  Air மூலம் Chennai Airport வந்து 5.07.2018 காலையில் இறைய ருளால் இல்லம் வந்து இனிதாக சேர்ந்தோம்.

(5.07.2018 காலை  காரைக்காலில் என் (சகோதரர்) மகனுக்கு காலை 9.30.க்கு திருமணம் முதல் நாள் வரவேற்பு.
நான் ஊர் சென்றவுடன் முதலில் கைலாசநாதர் ஆலயம் சென்று வணங்கிவிட்டு பிறகு திருமண விழா. எங்கள் குடும்பத்தினர் அனைவரும் என்னை ஆர்வத்துடன் வரவேற்றார்கள்)

பயணம் சிறக்க சென்னையை சார்ந்த மரியாதைக்குரிய  திரு S. பாலசுப்பிரமணியன், சுஜானா டூர்ஸ் மேற்கு மாம்பலம், சென்னை, அவர்கள் மிக அக்கரையுடனும் பாதுகாப்புடனும் வழி நடத்தினார். அவரின் அன்பான  சாதுவான மிக எளிமையான  பன்பு மிகவும் போற்ற தகுந்தது.  
குழுவில் என்னுடன் வந்த சகோதரர் பரணிதரன் மற்றும் அனைத்து சகோதர சகோதரிகளும் மிக மிக அன்பு, மரியாதை பொறுப்பு இருந்தது. ஒரு குடும்ப உறவு போல அமைந்தது இறையருள்.

இறைவனின் அளவற்ற கருணையினால் அற்புத தரிசனம் பெற்றோம். 

இறைவனின் கருணையினால் இனிய பயணமாக அமைந்தது. 
கைலாசநாதரே போற்றி போற்றி சுந்தரம்பாள் தாயே போற்றி போற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
 என்றும் அன்புடன் 
சுப்ராம் அருணாசலம், 
காரைக்கால் 
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Aditional information :
1.
Way to Kailash: Chennai - Lucknow - Nepal Gunji - SIMILCOT - Only transportation is Mini Charted Flight from Nepal Gunji and Only by Helicoptor to reach HILSA-Neapal Tibet Border.
Small Hill town. Said to be the Biggest town in the Biggest District -HUMLA in NEPAL. People are very kind and Cooperative. Hard workers.
2.
Thkkalcot in TIBET (China occupied) - Also called Burang. Some Budda Madalayams are here.   A big town on the way to Kailash. Fully China Controlled.  China's Immigration Office is here. Big shops and hotels are here.  We can purchase some items needs for Parikrama.
3.
SIMICOT to HILSA (On the way to Kailash Manasoravar) ஹில்சா மிக முக்கியமான இடமாக இருக்கிறது. .சுமார் 15-16 ஆயிரம் அடி உயரம் உள்ளது. ஹெலிகாப்டர் மட்டும் தான் செல்கிறது. சைனா தீபத் - வழியாக பாதை அமைத்துள்ளது நேபாள் மற்றும் திபெத் (சைனா) இடையில் இருக்கிறது. கர்நாலி என்ற நதி இரண்டயும் பிரிக்கிறது. சைனா நட்பு பாலம் என்று மிக பெரிய இரும்பு பாலம் ஒன்றும் Truck பாலம் ஒன்றும் அமைத்து ஹில்சாவில் புகுந்துவருகிறது.statistic view வில் மிக நுட்பமான திட்டத்தில் சைனா வளைத்து வருவது போலவே தோணுகிறது. நமக்கு கைலாஷ் செல்வதற்கு மிக முக்கிய வழியாக இருப்பதால், இந்தியா இந்த இடத்தை பற்றி சிந்தனை கொள்வது மிக முக்கியமும் அவசியமும் ஆகிறது. இதனால் நேபாளதிற்கும் நமக்கும் நன்மை ஏற்படும். இந்தியா அரசு இப்போதைக்கு நேபாளத்துடன் MOU செய்து ஒரு நட்பு இல்லம் அமைத்து, இந்திய யாத்ரீகர்களுக்கு உதவவேண்டும். ஹில்சாவில் சைனா அதிகாரிகள் வருகை அதிகரித்து வருகிறது. பாலத்தை தாண்டியவுடன் எதிரில் சீனாவின் இமிக்ரேஷன் அலுவலகம் மிக பிரமாண்டமாக அமைத்துள்ளது குறுப்பிடதக்கது. சீனாவின் இமிக்ரேஷன் முடித்துவிட்டுதான் தக்கல்கோட் (சைனா occupied TIBET) செல்ல வேண்டும். இந்தியா அக்கறை செலுத்தவேண்டும். முக்கியம்

4.
Thkkalcot in TIBET (China occupied) - Also called Burang. Some Budda Madalayams are here. A big town on the way to Kailash. Fully China Controlled. China's Immigration Office is here. Big shops and hotels are here. We can purchase some items needs for Parikrama.


I

II.

No comments:

Post a Comment

பதிவு - 13 நாள் - 7 ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total 86 Kms. 9 - 10 hrs. நாள் - 7 - 01.06.24 - சனி

பதிவு - 13 நாள் - 7  மிக முக்கிய நாள் ஆதிகைலாஷ் தரிசனம் Gunji to Jolingkong (4630mts.) Adikailash and back to Budhi (2740mts.) Total  86 Kms...