Saturday, August 23, 2025

திருக்குற்றாலம்பராசக்தி உடனுறை குற்றாலீஸ்வரர் ஆலயம் குற்றாலம் பிரதோஷக்குழு யாத்ரா 16.8.2025

#திருக்குற்றாலம்
பராசக்தி உடனுறை குற்றாலீஸ்வரர் ஆலயம்
#குற்றாலம்
சுமார் 1000-2000 வருடங்களுக்கு மேல் மிக பழமை வாய்ந்த,பாண்டியநாட்டு தலங்களில் 13 வது தலமாக விளங்கும்

திருக்கயிலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடக்கிறது. இதை தரிசிக்க பிரம்மா, விஷ்ணு, முப்பத்துமுக்கோடி தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் ஆகியோர் வந்துள்ளனர். இதனால் பூமியின் வடதிசை தாழ்ந்து, தென் திசை உயர ஆரம்பிக்கிறது. இதை சமப்படுத்த சிவன் அகத்தியரை அழைத்து,""நீ ஒருவன் மட்டும் தென்திசை சென்றால் போதும், உலகம் சமநிலைக்கு வந்துவிடும். அத்துடன் இதுநாள் வரை குற்றாலத்தில் விஷ்ணுவாக அருள்பாலித்து வந்த என்னை, சிவலிங்கமாக்கி மகுடாகமப்படி பூஜை செய்தால் எங்களது திருமணத்தை இங்கிருந்தபடியே தரிசிக்கலாம்,'' எனக்கூறி அனுப்பிவைக்கிறார்.

சிவனின் கட்டளைப்படி அகத்தியர் குற்றாலம் வந்து, விஷ்ணு வடிவில் அருள்பாலிக்கும் சிவனை தரிசிக்க செல்கிறார். ஆனால் அங்கிருந்த துவாரபாலகர்கள் சைவ சமயத்தை சேர்ந்த அகத்தியரை கோயிலுக்குள் விடவில்லை. இதனால் வருத்தமடைந்த அவர் இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள இலஞ்சிக்குமாரர் கோயிலுக்குச் சென்றார். அங்கு வெண்மணலில் லிங்கம் பிடித்து, சிவனை வழிபட்டார்.

தான் குற்றாலத்தில், சிவதரிசனம் செய்ய அருளும்படி வேண்டினார். அவருக்கு காட்சி தந்த முருகன், ""அகத்தியரே! தாங்கள் சிவக்கோலத்தை கலைத்துவிட்டு, வைணவக்கோலத்துடன் கோயிலுக்குள் சென்று பெருமாளை சிவலிங்கமாக்கி வழிபாடு செய்யுங்கள்,''என யோசனை கூறுகிறார்.

முருகனின் யோசனைப்படி அகத்தியரும் நெற்றியில் திருமண் இட்டு, கழுத்தில் துளசி மாலை அணிந்து கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்கிறார். உடனே திருமாலின் கையில் சங்கு இருந்த இடத்தில் மான், துளசி இருந்த இடத்தில் சந்திரன், பொட்டு இருந்த இடத்தில் நெற்றிக்கண், ரத்தினம் இருந்த இடத்தில் பாம்பு என அனைத்தும் மாறியது.

அத்துடன் உயரமாயிருந்த திருமாலின் தலையில் கைவைத்து, திருமேனி குறுக குறுக என சிவனை வேண்டி பிரார்த்தனை செய்ய, நெடிய திருமால் குறுகிய சிவனாக மாறி விடுகிறார். அந்த இடத்திலேயே அகத்தியருக்கு திருமண காட்சி கிடைக்கிறது. இன்றும் கூட இத்தலத்தில் பகலில் தேவர்களும், இரவில் அகத்தியரும் பூஜை செய்வதாக கூறப்படுகிறது. அகத்தியர் தன் கைவிரல்களால் சிவலிங்கத்தில் தலையில் வைத்து அழுத்தியதால் இன்றும் கூட லிங்கத்தின் மேல்பகுதியில் விரல்களின் தடம் இருப்பதை காணலாம்.

இலஞ்சியில் அகத்தியர் பூஜித்த சிவன், "இருவாலுக நாயகர்' என்ற பெயரில் அருளுகிறார். குற்றாலநாதரை தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், முதலில் இந்த சிவனை தரிசித்துவிட்டு இங்கு வருவது விசேஷ பலனைத் தரும். இக்கோயில் திருமால் தலமாக இருந்தபோது, சங்கு வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. தற்போதும் இக்கோயில் சங்கின் வடிவில் இருப்பதைக் காணலாம். திருக்குற்றால மலையிலுள்ள செண்பகாதேவி, கோயிலுக்குச் செல்லும் வழியில், அருவியின் மேற்பரப்பில் இருந்து இந்த வடிவத்தை பார்க்கலாம்.

மகாலட்சுமியின் அம்சமான சங்கு, ஆற்றலின் வடிவமாகும். இதன் ஒலி, சக்தியைத் தருவதாகும். எனவேதான், சிவபூஜையில் சங்கு ஒலிக்கும் வழக்கம் உண்டு. இதன் அடிப்படையிலும், இக்கோயில் சங்கின் அமைப்பில் அமைந்திருப்பதாகச் சொல்வர். இங்கு 8 கால பூஜையிலும், சிவன் சன்னதியில் சங்கு ஊதுகின்றதலமாக திகழும்

திருஞானசம்பந்தர், பட்டினத்தார், அருணகிரிநாதர் மற்றும் மாணிக்கவாசகரால் பதிகம் பாடப் பெற்ற தலமாகவும் விளங்கும்

... இணையத்திலிருந்து 🙏

#திருக்குற்றாலம்

மீள் தரிசனம் 16.8.25

குற்றாலநாதர், திரிகூடநாதர் - சுயம்பு லிங்கம்
கடல் மட்டத்திலிருந்து 5000 அடி உயரம்.

கிழக்குப் பார்த்த ஆலயம், சங்கு அமைப்பில் உள்ளது. 

அம்பாள் தனி சன்னதி
உள்பிரகாரத்தில் - வல்லப கனபதி, முருகர், தட்சிணாமூர்த்தி, சப்த கன்னியர், பஞ்சபூத லிங்கங்கள், அகத்தியர், ஆனந்தக் கூத்தர், 63 நாயன்மார்கள் முதலிய சன்னதி.

முழுவதும் கற்றளி . ஆலயத்தின் உள்பிரகாரத்தில் குறிப்பிட்ட இடத்திலிருந்து , விநாயகர், லிங்கம், , கோபுரம், மலை, அருவி ஆகிய பஞ்ச தரிசனம் செய்யலாம். 

தனி ஆலயமாக சித்திரசபை 1 கி.மீ. தூரத்தில் உள்ளது.
திருமுறை தலம் 13வது பாண்டி தலம்
சம்பந்தர் 2 பதிகம், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் பாடியது
கபிலர், பட்டினத்தார். திருப்புகழ் பாடல் பெருமையுடையது.
திரிகூடராசப்பகவி பாடியது.

86 கல்வெட்டுக்கள் உண்டு

மிகப் பழமையான ஆலயம்.

அர்த்தஜாமம் பள்ளியரை பூசை இரவு 8.00 மணி அளவில் நடைபெறுகிறது. (16.8.25 அன்று தரிசனம் கிடைக்கப்பெற்றது)

#பிரதோஷக்குழுயாத்ரா 

#சுப்ராம்

#என்றும்_அன்புடன் 

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்

No comments:

Post a Comment

கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - (குலசேகரமுடையார்) - பிரதோஷக்குழு யாத்ரா 17.8.2025

#கல்லிடைக்குறிச்சி -  குலசேகரமுடையார் ஆலயம் 17.8.25 #கல்லிடைக்குறிச்சி - வம்ச விருத்திஸ்வரர் - குலசேகரமுடையார் அம்பாள் = தர்மசவர்த்தினி (அறம...