Saturday, August 23, 2025

பாபநாசம் - பாபவிநாசகர் ஆலயம் - பிரதோஷக்குழு யாத்ரா 17.8.25

#பாபநாசம்
பாபநாசம். மீள் தரிசனம் 17.8.25

தாமிரபரணி உற்பத்தியாகி, முதன்முதலாக சமதளம் வரும் இடம்.

அகத்தியமா முனிக்கு சிவன் திருமண காட்சி கொடுத்த இடம்.

80 அடி உயரம் 7 அடுக்கு இராஜகோபுரம் கிழக்குப் பார்த்த ஆலயம்.

சுவாமி பாபவிநாசகர் சுயம்பு மூர்த்தி.

அம்பாள் உலகம்மன் கிழக்குப் பார்த்த தனி ஆலயம் சுவாமிக்கு வலது புறம் அமைந்துள்ளது.
இரண்டு பிரகாரங்கள்
உள்பிரகாரத்தில் நடராஜர், அகத்தியர், சுரதேவர், நாயன்மார்கள், கல்யாணசுந்தரர், உலகம்மை, முக்காள லிங்கர், ஆறுமுகம், சனிஸ்வரர், நவகிரகம், புனுகு சபாபதி உள்ளனர்.

வெளி பிரகாரத்தில், விநாயகர், அய்யனார் சன்னதிகள்.
பாண்டிய மன்னர் விக்கிரமசிங்கர் எழுப்பிய ஆலயம் என்பதால் இவ்வூருக்கு விக்கிரமசிங்கபுரம் என்றும் பெயர்.

தேவார வைப்புத் தலம். மற்றும் திருப்புகழ் தலம்.

கர்ப்பகிரக சுற்றுச் சுவர் மிக அழகிய அமைப்பில் தெய்வ சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.
ரிஷிகள், காளி, ஊர்த்துவ தாண்டவம், பிட்ஷாடனர், நிறுத்த கணபதி, திரிபுரசம்ஹாரம், திருமால், ஏகபாதமூர்த்தி, பிரம்மன், சுப்பிரமணியர், சங்குமாலையில் தேவி என பல நுணுக்கமான சிற்பங்கள் உள்ளன.

6 கால பூசை

ஆலய துண்களிலும் நிறைய சிற்பங்கள் உண்டு.

சூரியன் தலம்

ஆலயத்தில் எதிரில் தாமிரபரணி நதி தீர்த்தக்கட்டம் மிகவும் புனிதமான இடம்.

இங்கிருந்து மலைமேல் உள்ள அகத்தியர் அருவி முதலிய அருவிகளுக்குச் செல்ல வசதிகள் உண்டு.

உலகம்மன் சன்னதியில் மஞ்சள் இடித்து வழிபடும் முறை உண்டு.

பிரார்த்தனை ஸ்தலமாக உள்ளது.

தங்குவதற்கு தர்ம ஸ்தபனங்கள் தற்போது நிறைய.இடவசதி அமைத்துள்ளனர். தனியார் விடுதிகளும் உண்டு.
#பிரதோஷக்குழுயாத்ரா 

17.8.2025

#என்றும்_அன்புடன் 

#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால் 

#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று 

#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம் 

#சுப்ராம்

No comments:

Post a Comment

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு.

சுவாமிமலை முருகன் கோவில் (Arulmigu Swaminatha Swamy Temple) அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடு. ⛳தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காவிரி ...