பிரதோஷக்குழுயாத்ரா
17.8.25
17.8.25 தரிசனம்
மிகப் பழமையான சிவாலயம். எழுநிலை ராஜகோபுரம் அழிபட்டு, பின் சிறிய காட்சி கோபுரத்துடன் தற்போது காணப்படுகிறது.
முக மண்டபம் பெரியது, நடராஜர் சபை, அலங்கர மண்டபத்துடன் கற்றளியாக உள்ளது.
உள் கோபுரம் பிரகாரம் சுவாமி கருவரை கிழக்கு நோக்கியும், அம்பாள் தனி கருவரையும் உள்ளது.
சிதலமடைந்து விட்டிருந்த பெரிய ஆலயம் தற்போது முழுவதுமாக மீட்டு பரமரிப்பும், பூசை நடைமுறைகளும் நடைபெற்று வருகிறது.
தலவிருட்சம் - புன்னைமரம்
இரண்டு பிரகாரங்கள்
- கன்னி விநாயகர், முருகன், நாயன்மார்கள், சப்த கன்னியார், சூரியன், வைரவர், கலைமகள், காசிவிசுவநாதர் மற்றும் நவகிரகங்கள் உள்ளனர்.
உள் வெளி பிரகாரம், உள்ளடக்கிய சுற்று சுவர் உள்ளது.
புதிய தேர்கள் செய்யப்பட்டு ஆலயம் முன்பு உள்ளது.
ஆலயம் முன்புறம் பெரிய கற்குளம் தெப்ப மண்டபத்துடன் உள்ளது.
தேர் - தெப்பம் , திருக்கல்யாணம் முதலிய திருவிழாக்கள் சிறப்பாக நடை பெறுகிறது.
பூமிநாதர் பல்வேறு புராணங்களிலும், அரசர்களாலும் போற்றப்பட்டு வணங்கப்படுகிறார்.
எமன் சம்காரத்தால் எமன் கொடியாக மாறி இத்தலத்தில் கிடக்க, பூமி பாரம்தாங்க முடியாமல், பூமாதேவி இத்தலத்தில் சிவனை வழிபட்டு எமன் உயிர் பெற்றார். பூமாதேவிக்கும் அருள் கிட்டியது.
அதிவீர பாண்டிய மன்னன் கட்டிய ஆலயம் அதனால், இவ்வூர் அதி வீர நல்லூர் என்ற பெயர் பெற்றது.
பூமி பிரச்சனைகள், குழந்தை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்.
திருமண தடைகள் நீக்கம் முதலிய விஷயமாக தீர்த்து நல்லருள் பெற இவ்வாலயம் தொழுவீர்.
மார்கழி திருவாதிரை பிரம்மோட்சவம், ஐப்பசி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
#பிரதோஷக்குழுயாத்ரா
17.8.25
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#சுப்ராம்
No comments:
Post a Comment