அரியநாதர் - பெரியநாயகி அம்மன், ஆலயம்
பிரதோஷக்குழுயாத்ரா
17.8.20 25தரிசனம்.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ளது.
பஞ்சகுரு ஸ்தலங்களில் ஒன்று.
- இது குபேரதலம்
சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது.
கிழக்குநோக்கிய ஆலயங்கள்
சுவாமி அம்பாள் தனித்தனி ஆலயமாக அருகருகே அமைந்துள்ளது.
ராஜகோபுரம் இல்லை.
முன்புறம் கல் மண்டபம் மற்றும் ஒரு அழகிய கற்குளம் அமைந்துள்ளது.
சுவாமி ஆலயம் அடுத்து இடது முன் புறம் அம்மன் பெரியநாயகி ஆலயம் தனியாக உள்ளது.
மிகப்பெரியவளாகமாக இருந்து பின் புனரமைக்கப்பட்ட வழிபாட்டுத்தலம்.
சிறப்பு பூசை பரிகாரம் முதலிய சிறப்புகள் நடைபெற்று வருகின்றன.
நல்ல பராமரிப்பில் உள்ள ஆலயம்.
சுவாமி கிழக்குப் பார்த்தும் அம்பாள் தனி ஆலயமாக கிழக்குப் பார்த்தும் தனித்தனி ஆலயமாக உள்ளது.
முழுவதும் கற்றளி
சுவாமி ஆலயம் கருவரை பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி கால் மடக்கிய நிலையில் கம்பீரமான அமைப்பில் சிறப்பாக உள்ளார்.
எதிர்புறத்தில் சப்தமாதர்கள். மற்றும் கோஷ்ட்ட தெய்வங்கள்
வெளிப்பிரகாரத்தில் தென்புறம்
ஜேஷ்ட்டா தேவி - மகன் மாத்தியுடன் தனி சன்னதியுடன், மகன்கள் மாந்தியுடன் பக்தர்கள் வேண்டுதலுக்கு அருள் தருகிறார்.
மாந்தி பரிகார பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றன.
ஆலய வடபுறம் தனியா குபேரன் சன்னதி.
குபேரன் வழிபாடு செய்து சிறப்பு பெற்ற வரலாறு.
குபேரனுக்கு தனி சிறப்பு. தீபாவளி அன்று மிகவும் சிறப்பு பூசைகள் உண்டு.
பிரார்த்தனை வழிபாடுகளுடன் ஆலயம் சிறப்பாக உள்ளது.
#பிரதோஷக்குழுயாத்ரா
17.8.2025 தரிசனம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#சுப்ராம்
No comments:
Post a Comment