காசிபநாதர் மரகதவல்லியம்மன் ஆலயம்.
அம்பாசமுத்திரம்
காசிபநாதர் மரகதவல்லியம்மன் ஆலயம்.
தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள, மிக பழமையான ஆலயம்.
- கிழக்குப் பார்த்த ஆலயம் 7 நிலை ராஜகோபுரம்.
-சப்தரிஷிகளில் ஒருவரான காஷிபமுனிவர் யாக நெருப்பிலிருந்து தோன்றிய லிங்கம் - காசிப லிங்கம்.
- நெல்லிமரம் - தலவிருட்சம்
- இரண்டு பிரகாரங்கள்
உள்பிரகாரத்தில் கோகில விநாயகர், முருகப்பெருமான், விசுவநாதர், விசாலட்சி, உள்ளனர்.
- 1000 வருடத்திற்கு முன் உள்ள கல்வெட்டுகள் உண்டு.
- நடராஜர் புனுகு சபாபதி - தைப்பூசம் வியக்கிழமையுடன் வரும் நாளில் புனுகு காப்பு சாற்றப்படும்.
- ஐப்பசி உத்திரம் நட்சத்திரத்தில் திருக்கல்யாணம் - நடைபெறுகிறது.
- பங்குனி பிரம்மோட்சவம் நடைபெறுகிறது.
- தலபுராணம் - அரிகேசநல்லூர் அரிகரமையர் அவர்களால் 20 சருக்கம் 1221 திருவிருத்தம் கொண்டது.
- தவறு செய்த அர்ச்சகர், சுவாமியால் சுட்டெரிக்கப்பட்டதும், தவம் செய்த அந்தனாரல் வேண்டி சுவாமி அதை ஏற்று அர்ச்சகரை உயிர்ப்பித்தார். இதனால் இறைவர் எரித்தாட் கொண்டார் என்று வணங்கப்படுகிறார்.
- அம்பாள் மரகதாம்பாள் கருணைக் கடலாய் அருளை வாரி வழங்குவதால் இவ்வூருக்கு அம்பாசமுத்திரம் என்ற பெயர்.
- கொடுக்கல், வாங்கல் பிரச்சனைகளுக்கு இவ்வாலயம் சென்று வழிபட்டால் இறை அருளால் தீர்க்கப்படுகிறது.
-மிகப்பழமையான ஆலயம் -புணரமைக்கப்பட்டு, திருக்குட நீராட்டு நடைபெறவேண்டி திருப்பணிகள் நடந்து கொண்டுள்ளது.
-தாமிரபரணி ஆறு ஆலயத்தின் அருகில் உள்ளது. ஏராமானோர் நீராடி ஆலயம் வணங்குகிறார்கள்.
17.8.25 Sunday அன்று தரிசனம்
#சுப்ராம்
#என்றும்_அன்புடன்
#சுப்ராம்_அருணாசலம்_காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#பிரதோஷக்குழுயாத்ரா
#நெல்லை
No comments:
Post a Comment