Friday, April 17, 2026

அதிராம்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம் அபயவரதீஸ்வரர் கோயில் 12.04.26

அதிராம்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டம் 
அபயவரதீஸ்வரர் கோயில்  

இந்த கோயிலில் மூலவராக அபயவரதீஸ்வரர் இருக்கிறார். தாயார் சுந்தர நாயகி.

அமைவிடம்
நாகப்பட்டணம் - தூத்துக்குடி ECR சாலையில் உள்ளது.
தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தை அடையலாம்.

ஆலயம் அமைப்பு
ஆலயம் கிழக்குப் பார்த்த 3 நிலை ராஜகோபுரத்துடன் முன் திறந்த வெளி முற்றத்துடன் சிறப்பாக அமைந்துள்ளது.

முன் வெளி மண்டபத்தில், கொடிமரம் பலிபீடம், நந்தி அமைந்துள்ளது.

இதையடுத்து சுவாமி அபயவரதீஸ்வரர் கிழக்கு நோக்கிய கருவரை அமைப்பு. உள் மண்டபத்தில் சபாபதி மற்றும் தெற்கு நோக்கிய அமைப்பில் தனிக்கருவரையில் அம்மன். அம்மன் தெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்றும் அழைக்கப்படுகிறாள்.

பிரகாரத்தில் தட்சிணா மூர்த்தி முன் கல்லால் ஆன விதான முகப்புடன் உள்ளார். கிழக்கு நோக்கிய தனிவிநாயகர் கன்னி மூலையில், கோஷ்ட்டத்தில் மேற்கில் லிங்கோத்பவர், தலவிருட்சம், தனிசன்னதியில் தெற்கு நோக்கி ஆதி சுந்தர நாயகி அம்மன், மேலும் கிழக்கு நோக்கிய தனி சன்னதியாக வள்ளி தெய்வானையுடன் முருகன்.
மற்றும் வடமேற்கு மூலையில் மகாலெட்சுமி

வடக்கு கோஷ்ட்டத்தில் பிரம்மா, துர்க்கை சண்டிகேஸ்வரர்
வட கிழக்கு மூலையில் பைரவர், அடுத்து நவகிரகங்கள் மற்றும் தனி சனீஸ்வரர், சூரியன் அமைந்துள்ளது.

ஆலயம் தனி சிறப்புகள்

ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திர நாளன்றும் சித்தர்கள் இங்கு அரூப வடிவில் வந்து வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது.
திருவாதிரை நட்சத்திக்காரர்கள், ராகு, தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அனைவரும் வழிபட வேண்டிய கோயில் தான் இந்த அபய வரதீஸ்வரர். 
இந்த கோயில் எம பயம் நீக்கும் தலமாக விளங்குகிறது. எம பயம் கொண்டவர்கள், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட ஆயுள் வேண்டுபவர்கள் இந்த கோயிலில் வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் மற்றும் மிருத்யுஞ்சய ஹோமம் இங்கு செய்யப்படுகிறது. திருவாதிரை நட்சத்திரத்தைச் சேர்ந்த பெண்களுக்கு எந்த தோஷத்தினால் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், இந்த கோயிலில் வந்து வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.

தல சிறப்பு:
இந்த நட்சத்திரத்தில் பிறந்த மன்னர் அதிவீரராமபாண்டியன் இத்தல இறைவனான அபய வரதீஸ்வரரை வழிபட்டு திருப்பணிகளை செய்துள்ளார். இதனால், இந்த ஊர் முதலில் திரு ஆதிரைப்படினமாக இருந்து அதிவீரராமன் பட்டினமாகி தற்போது அதிராம்பட்டினமாக மாறிவிட்டது.

ஒரு காலத்தில் தேவர்கள், முனிவர்கள் ஆகியோர் அசுரர்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக திருவாதிரை நட்சத்திர மண்டபத்தில் தஞ்சம் அடைந்தனர். பிரதோஷ நாள் மற்றும் திருவாதிரை நட்சத்திர நாள் அன்றும் சிவபெருமான் உலா வரும் இடங்களில் திருவாதிரை நட்சத்திர மண்டலும் ஒன்று. இந்த மண்டபத்திற்குள் அசுரர்கள் யாராலேயும் உள்ளே வர முடியாது.
இந்த மண்டபத்திற்குள் வந்த தேவர்கள், முனிவர்களை அபயம் தந்து காப்பாற்றுவார். இதனால், சிவபெருமான் அபய வரதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். திருவாதிரை நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கோயிலில் திருவாதிரை நட்சத்திர நாளில் வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும். பைரவ மகரிஷி மற்றும் ரைவத மகரிஷி ஆகியோர் இந்த தலத்தில் திருவாதிரை நட்சத்திர நாளில் அபயவரதீஸ்வரரை வழிபாடு செய்துள்ளனர். 
விழாக்கள்
பங்குனி உத்திரம் அன்று இந்தக் கோயிலில் விழா கொண்டாடப்படுகிறது.

#பயணஅனுபவக்குறிப்புகள்🕊️
#சுப்ராம்🔱🇮🇳
அதிராம்பட்டிணம் ECR பிரதான சாலையின் கிழக்குப் பகுதியில் ஆலயம் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தூரம்தான்.
ஆலயம் முன்புறம் வாகன வசதிகள் நிறுத்த இடம் உள்ளது இருப்பிஉள்ளதால்னும் ஆலய பாதுகாப்பிற்காக முள்வேலி அமைத்துள்ளனர். 

ஆலயம் நகரின் மத்தியில் நல்ல பராமரிப்பில் உள்ளது

ஆலயம் 25.06.2026 வியாழன் அன்று குடமுழுக்கு செய்வதற்கான ஏற்பாடுகளில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.
 திருவாதிரை நட்சத்திரம் பெற்றவர்கள் மட்டுமின்றி வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் பலன் வேண்டி இந்த சிவலயத்தை அவசியம் தரிக்க வேண்டும்.

12.04.2026
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
ECR - தலங்கள் - பேராவூரணி அருகில்

No comments:

Post a Comment

சின்ன ஆவுடையார் கோவில்(கொள்ளுக்காடு) ஆத்மநாதசுவாமி ஆலயம்மூலவர்: ஆத்மநாதசுவாமி, யோகாம்பாள் 12.04.26

சின்ன ஆவுடையார் கோவில் (கொள்ளுக்காடு) ஆத்மநாதசுவாமி ஆலயம் மூலவர்: ஆத்மநாதசுவாமி, யோகாம்பாள். அமைவிடம்⛳ தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்...