Friday, April 17, 2026

சின்ன ஆவுடையார் கோவில்(கொள்ளுக்காடு) ஆத்மநாதசுவாமி ஆலயம்மூலவர்: ஆத்மநாதசுவாமி, யோகாம்பாள் 12.04.26

சின்ன ஆவுடையார் கோவில்
(கொள்ளுக்காடு) ஆத்மநாதசுவாமி ஆலயம்
மூலவர்: ஆத்மநாதசுவாமி, யோகாம்பாள்.
அமைவிடம்⛳
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அதிராமபட்டினம்-மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) அமைந்துள்ளது சின்ன ஆவுடையார் கோவில் (கொள்ளுக்காடு) எனும் கிராமம்..

அதிராம்பட்டினத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்திலும்   பட்டுக்கோட்டையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

💥ஆலய சிறப்புகள்
திருப்பெருந்துறையில் யோகாம்பாள் உடனுறை ஆத்மநாதசுவாமி எனும் திரு நாமத்தில் அருள்பாலிக்கும்
சிவபெருமான் ஆலயம். திருப்பெருந்துறை போலவே  கொள்ளுக்காட்டில் உள்ளது
சிறப்பு மிகுந்த சின்ன ஆவுடையார் கோவில்
குறித்து தல ஆராய்ச்சி செய்த உ. வே. சா. அவர்கள் தனது நூலிலும் இந்த இடத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட ஆவுடையார்கோயிலின் (திருப்பெருந்துறை) ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பழமையான சிவன் கோயிலாகும். 
மேலும் தம்பிக்கோட்டை அருகில் உள்ள பரக்கலாக்கோட்டை ஆவூடையர் கோவில் அடுத்து, ராசாமடம் அருகில் உள்ள இந்த சின்ன ஆவுடையார்  சிவத்தலம், பெரிய ஆவுடையார் கோயிலின் சார்புத் தலமாகக் கருதப்படுகிறது. 

இக்கோயில் பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி, சிதிலமடைந்த நிலையில் இருந்து, பின் 28 ஜனவரி 2026 ல் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்றுள்ளது 

தலவரலாறு
மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியனிடம் முதன்மை அமைச்சராக இருந்தவர் வாதவூரர். இவர் மன்னனின் ஆணைப்படி குதிரை வாங்குவதற்காக பொற்காசுகளுடன் புறப்பட்டார். அப்படிச் சென்ற அவரை, வழியில் குருந்த மரத்தின் கீழ் அமர்ந்து குரு வடிவிலான இறைவன் ஆட்கொண்டு மாணிக்கவாசகர் ஆக்கிய தலம் திருப்பெருந்துறை. இது புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இந்த ஆலயம் ஆவுடையார் கோவில் என்றும், இத்தல இறைவன் ஆத்மநாதசுவாமி என்றும் அழைக்கப்படுகிறார். தன்னிடம் இருந்த பொற்காசுகளைக் கொண்டு, மாணிக்கவாசகரே எழுப்பிய ஆலயம் இது.

குதிரை வாங்கச் சென்ற வாதவூரர் என்னும் மாணிக்கவாசகர், காலம் கடந்தும் மதுரை திரும்பாததால் ஆத்திரமடைந்த அரிமர்த்தன பாண்டியன், தனது தளபதியை அனுப்பி பார்த்து வரச் சொன்னான். மன்னன் ஆள் அனுப்பியதை அறிந்த மாணிக்கவாசகர், ‘குதிரை வாங்க கொடுத்த பணம் கோவில் கட்ட செலவாகி விட்டதே. இப்போது என்ன செய்வது’ என்று நினைத்தவர் இறைவனிடம் தன்னுடைய நிலையை சொல்லி இறைஞ்சினார்.

இதையடுத்து இறைவன் ஒரு ஆவணி மூல நட்சத்திர நாளில் நரிகள் அனைத்தையும் பரி (குதிரை)களாக்கினார். அந்த இடம் இன்றும் நரிக்குடி என்று வழங்கப்படுகிறது. நரிகளாக மாறிய பரிகளுக்கு மாணிக்கவாசகர் கொள்ளு வாங்கிக் கொடுத்த இடம் ‘கொள்ளுக்காடு’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் திருப்பெருந்துறை பெரிய ஆவுடையார் கோவில் போன்று, சிறிய ஆவுடையார் கோவில் அமைந்திருக்கிறது.

ஆலய அமைப்பு🛕
திருப்பெருந்துறையைப் போலவே இத்தல இறைவனின் பெயரும் ஆத்மநாதர் தான். இறைவியின் திருநாமமும், யோகாம்பாள் என்பதே ஆகும். கொள்ளுக்காடு தலத்தில் ஆத்மநாதர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார்.
சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஆலயம்
6ம் நூற்றாண்டில் சோழரும் 7ம் நூற்றாண்டில் பாண்டியரும் ஆலயம் பராமரிக்க உதவிய செய்திகள் கல்வெட்டுகளில் உள்ளன.

மணிவாசகர் அக்னி நதியின் தென்புறம் உள்ள இந்த ஆலயத்தை வழிபட்டார் என்று தகவல் குறிப்பு உள்ளது

இந்த பழமையான ஆலயம்  முற்றிலும் சிதைந்து போன நிலையில்   பெரும் முயற்சி செய்து தற்போது முழு ஆலயமும் புதியதாக எழுப்பி பொலிவுடன் உள்ளது. 28.1.2026ல் குடமுழுக்கு செய்யப்பெற்றுள்ளது

கிழக்கு நோக்கிய ஆலயம் முன்புறம் தென் பகுதியில் தனி வினாயகர் சன்னதி  உள்ளது.
அடுத்து, கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம் கடந்தால், பிரகாரத்தில்  நந்தி தனி மன்டபத்தில் சுவாமி நோக்கி உள்ளார். நீண்ட முன்மண்டபம் சுவாமி அம்பாள்  இரண்டு கருவரைகளையும் இணைத்துள்ளது.முன் மண்டபத்தில் வடதுபுறமாக தென்முகம் நோக்கி யோகாம்பாளுக்கு தனி கருவரை மற்றும் கிழக்கு நோக்கிய கருவரையில் சுவாமி உள்ளனர். ஆலயத்தில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், முன் மண்டபம் ஆகியவற்றுடன் உள்ளன.
சுவாமி அம்பாள் கருவரை முன் துவார பாலகர்கள் உள்ளனர். சுவாமி கருவரை முன்பு இருபுறமும் சிறிய அனுங்கை விநாயகர் மற்றும் தண்டபாணி அமைத்துள்ளனர்.

ஆலய தென்புறம் கோஷ்ட்டத்தில் பெருமாள்  மற்றும் யோகதட்சினாமூர்த்தி முன் மன்டபத்துடன் உள்ளார்

பிரகாரத்தில்தென்மேற்கில் தனி  சன்னதியில் இரண்டு விநாயகர்கள் உள்ளனர்.
மற்றும் வட புறம் வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியரும் அருள்பாலிக்கின்றனர். 
மேலும், கோஷ்ட்டத்தில் லிங்கோத்பவர்   பிரும்மா, துர்க்கை தனி சண்டிகேஸ்வரர் உள்ளனர்.

வடக்கு பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய தனி சன்னதியில் குருந்தமரமும், அதன் கீழே மாணிக்கவாசகர் உபதேசம் பெறும் காட்சியும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்குப்புறத்தில் பைரவர் சூரியன் மற்றும் மேற்கு நோக்கி தனி சனீஸ்வரர் அமைக்கப்பட்டுள்ளது.

ஆலயம் சமீபத்தில் புனரமைப்பு செய்துள்ளதால் மிகவும் பொலிவுடன் உள்ளது. திருக்கோவிலின் எதிர் புறம் தீர்த்தக்குளம் ஒன்றும் உள்ளது. 

இங்கு கார்த்திகை சோமவார விழா சிறப்பாக நடைபெறும்.

பயணஅனுபவக்குறிப்புகள் 🕊️

ECR சாலையில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆலய வளாக முன்புறம் வாகனங்கள் நிறுத்த வசதி உள்ளது.
அருகில் பெரிய கடைகள் ஏதும் இல்லை.
சிற்றூர் என்பதால் நெருக்கடிகள் இல்லை  அமைதியான இடமாக உள்ளது

12.04.2026 சுப்ராம்🔱🇮🇳
நன்றி🙏
#என்றும்அன்புடன்
#சுப்ராம்அருணாசலம்காரைக்கால்
#ஆலயம்தொழுவதுசாலவும்நன்று
#TempleWorshipisTrulyVirtuous🙆🏼🔱
#ஆன்மீகபாரதம்அகிலத்தின்சிகரம்
#BharatisSpiritualZenith🕉️🏔️,
#ECRதலங்கள் - #பேராவூரணிஅருகில்

No comments:

Post a Comment

சின்ன ஆவுடையார் கோவில்(கொள்ளுக்காடு) ஆத்மநாதசுவாமி ஆலயம்மூலவர்: ஆத்மநாதசுவாமி, யோகாம்பாள் 12.04.26

சின்ன ஆவுடையார் கோவில் (கொள்ளுக்காடு) ஆத்மநாதசுவாமி ஆலயம் மூலவர்: ஆத்மநாதசுவாமி, யோகாம்பாள். அமைவிடம்⛳ தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்...